Thursday, August 18, 2011

நாடு தழுவிய மக்கள் ஐ.மு.கூ.ஆட்சியை அடிபணிய வைத்துள்ளனர்.

அன்னா ஹசாரே அறிவிக்கும் "பட்டினிப் போராட்டத்தை" அரசாங்க அனுமதி பெற்று, அரசாங்கம் சொல்லும் எண்ணிக்கைக்கு உட்பட்ட மக்கள்தான் கலந்து கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, அரசாங்கம் அதாவது டில்லி காவல்துறை சொல்லும் நாட்கள் மட்டுமே நடத்த வேண்டும் என்ற கட்டளைகளை மீறியதால், "கைது" செய்யப்பட்டார். அதை எதிர்த்து "நாடெங்கும் மக்கள் எதிர்ப்பு அலை" வீசியது. சென்னையிலும், தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் கூட, மக்கள் தெருவிற்கு வந்தனர். இது அன்னா ஹசாரே என்ற தனிநபருக்காக வந்த கூட்டமல்ல. மாறாக "ஊழலை எதிர்க்க வேண்டும்" என்ற உத்வேகத்திர்காக வந்த கூட்டம். முழுமையாக "பிற்போக்குத்தனம்" கொண்ட ஒருவர் என்று அவரது நெருக்கமானவர்களால் வர்ணிக்கப்பட்ட ஒரு மனிதர் அப்படி "கூட்டத்திற்கு" வந்திருந்தார். ஏன் என்று ஆராய்ந்தால், அவர் உட்பட ஒவ்வொரு மனிதனும் தனது "அறிவுக்கு" உட்பட்டு ஒவ்வொரு கருத்தை நம்புகின்றனர். ஆனால் அவர்களது இதயத்தில், " தாய்நாட்டு பற்றும், ஜனநாயக உணர்வும்" ஒவ்வொருவருக்கும் ததும்பிக்கொண்டு இருக்கிறது. அதனாதான் எல்லா மட்டங்களிலிருந்தும் மனிதர்கள் இந்த "ஊழல் எதிர்ப்பில்" கலந்துகொள்ள வருகிறார்கள்.

அப்படிப்பட்ட மக்கள் எழுச்சி, நாடெங்கும் வந்ததை தாங்கிக்கொள்ள முடியாத மத்திய ஆட்சியாளர்கள், " அன்னா ஹசாரே மக்கள் கூடிய ராமலீலா மைதானத்திலேயே" பட்டினி போராட்ட்டம் நடத்தட்டும் என்றும், மூன்று நாள்தான் அனுமதி எண்பதை, ஐந்து நாள், எழு நாள், பத்து நாள், கடைசியாக பதினைத்து நாள் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். எத்தனை மக்கள் வேண்டுமானாலும் கலந்து கொள்ளட்டும் என்று அறிவித்துள்ளனர். அதாவது இந்திய அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமையான, யாரும் எங்கும், எப்போதும் போராடலாம் என்ற அடிப்படை உரிமையை அமைதியாக மறுதலித்து, தாங்கள் அனுமதி கொடுத்தால்தான், பட்டிப் போராட்டம் கூட நடத்த வேண்டும் எண்பதை "பதிவு" செய்வதில் ஆள்வோர் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் எழுச்சிக்கும் ஒரு " வடிகால்" என்பதாக அந்த பட்டினி போரை அனுமதித்துள்ளனர்.

ஆனால், சிதம்பரம் கூறிய " காவல்துறைக்கு கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறிய வார்த்தைகள் பொய்த்து விட்டன. அதேபோல பிரதமர் கூறியபடி, " உச்ச நீதிமன்றத்திற்கு" அன்னா ஆதரவாளர்கள் செல்வதால், டில்லி காவல்துறை, நீதிமன்றம் போய் "விடுதலை" உத்தரவு பெற்றனர் என்ற கூற்றை, மறுத்து சிதம்பரம் "தான்தான் இல்லை காவல்துறையிடம்" விடுதலை செய்ய ஆலோசனை வழங்கினேன் என்ற சொல் "பொய்யாகிவிட்டது". இது சிதம்பரம் போன்ற " கொடூரமான பாசிஸ்டுகளுக்கு" கிடைத்த பதிலடிதான்.

Tuesday, August 16, 2011

மரண தண்டனையை ரத்து செய்ய பேரணி.

மரண தண்டனையை ரத்து செய்ய பேரணி.
இன்று மதியம் பெரியார் திராவிடக் கழகத் தலைவர் தோழர் குளத்தூர் மணி, பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் "உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு" சார்பாக, கூட்டமைப்பின் அமைப்பாளர் தோழர் வேளுசாமியுடன் "ஊடவியலாலர்களை" சந்தித்தனர். அப்போது " பேரறிவாளன், சாந்தன், முருகன்" ஆகியோரின் மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டு, உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் பரிந்துரையின் பேரில், குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், "கருணை மனுவை" நிராகரித்த கொடுமையை கண்டிக்க "போராட்டங்களை" அறிவித்தனர். அதில் முதலில், ஆகஸ்டு 19 ஆம் நாள் காலை, பதினோரு மணிக்கு, சென்னை கடற்கரை சாலையில், "கலங்கரை விளக்கிலிருந்து" புறப்பட்டு, "உழைப்பாளர் சிலை" வரை "வேண்டுகோள் பேரணி" ஒன்று நடத்தப்படும் என்று கூறினர். அதில் "தமிழக அரசு" தனது பரிந்துரை மூலம் "மரண தண்டனையை" ரத்து செய்ய ஆளுநருக்கு ஆலோசை அனுப்பினால், அந்த "மூன்று தமிழகளின்" உயிர்கள் பதுகாகப்படுமேன்றனர். அதற்கு முன் உதாரணங்கள்" இருக்கின்றன என்றனர. சீ.ஏ.பாலன் வழக்கில், கேரள நம்பூதிரிபாட அமைச்சர்வை கொடுத்த "ஆலோசனையை" ஏற்று மத்திய அரசு "தன்ப்டனையை ஆயுள் தண்டனையாக" குறைத்தது என்று கூறினர். அதேபோல "தயா சிங் " வழக்கில் கருணை மனு குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட பிறகு, உச்சநீதி மன்றம் தணடனையை குறைத்தது என்றனர். மேற்கண்ட கோரிக்கைகாக அடுத்து "ரயில் மறியல்" போராட்டம் வரை திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.மேற்கண்ட "வேண்டுகோள் பேரணிக்கு" திரண்டு வரக் கோரினர். .

Friday, August 12, 2011

அவசரச்செய்தி. கிழக்கு மாகாணத்தில்.. சொல்லமுடியாத.....

அவசரச்செய்தி. கிழக்கு மாகாணத்தில்.. சொல்லமுடியாத.....
இப்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்தில் இருந்தும், மட்டக்கிளப்பு மாவட்டத்தில் இருந்தும், தமிழ்ப் பெண்களிடம் இருந்து வரும் செய்திகள் "ஆரோக்கியமாக" இல்லை. இரவில் "தமிழர் வீடுகளில்" சிங்கள காடையர் புகுந்து தமிழ் பெண்களை "பாலியல் வன்முறைக்கு" உட்படுத்துகிறார்கள். அந்த "சிங்கள காடையர்கள்" முகங்களில் "கிரீஸ்" என்று சொல்லப்படும் எண்ணையை தடவிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் சில நாட்களாக , " திரிகோணமலை" மாவட்டத்திலும், "மாட்டகிலப்பு" மாவட்டத்திலும் "தமிழர் வீடுகளில்" இரவு நேரத்தில் திடீரெனப் புகுந்து பேகல் மீது வன்முறை செய்கிறார்கள். அதனால் அலறிப்போன தமிழ்ப் பெண்கள், இரவுகளை "தூக்காமல்" கழ்க்கின்றனர். இந்த "கொடுமை" கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. " யாராவது தடுப்பீர்களா?" என்று அங்கிருந்து தமிழ் பெண்கள் அலறுகிறார்கள்.

Thursday, August 11, 2011

மரண தண்டனையில் "அரசியல் சதி" நடத்தும் ப.சிதம்பரம்?

மரண தண்டனையில் "அரசியல் சதி" நடத்தும் ப.சிதம்பரம்?
சிவகங்கை சீமான் "சின்னப்பையன் சிதம்பரம்" என்று கலைஞரால் ஒருமுறை வர்ணிக்கப்பட்டவர், வழமையாக "அறிவிக்கப்பட்ட மரணதண்டனைகளை" வைத்துக்கொண்டு "சித்து விளையாட்டு" விளையாடுவதில் கெட்டிக்காரர். ஏற்கனவே அவர் "அபசல்குறு"வின் மரணதண்டனையை "அமுல்படுத்தப்பாவ்கிறோம்" என்று அறிவித்து, அதன்மூலம் "பாகிஸ்தானை" தங்கள வழிக்கு கொண்டுவர மிரட்டியதில் "பிரபலமானவர்". பாகிஸ்தானுக்கும், அப்சல்குருவிற்கும் என்ன சம்பந்தம் என்று நாம் கேட்கலாம். உண்மைதான். எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் "இந்திய-பாகிஸ்தான்" விவகாரத்தில் அல்லது "சண்டையில்" தொடர்ந்து இரண்டு நாட்டு அரசாங்கமும், இதுபோன்ற " போட்டி" விளையாட்டுகளை, சாதாரணமாக "காய்" நகர்த்துவார்கள். இதே சிதம்பரம் ஏற்கனவே "பாகிஸ்தான்" அரசாங்கம், "இந்திய குடிமகனான சர்பஜத்சிங்" கிற்கு கொடுக்கப்பட்ட "மரணதண்டனையை" நிறைவேற்ற போகிறோம் என்று ஒரு "பூச்சாண்டி" காட்டியபோது, அடஹ்ர்கு பதிலடி கொடுப்பதாக காட்ட, "அப்சல்குரு"விற்கு தாங்கள் மரணதண்டனையை நிறைவேற்றப் போகிறோம் என்று கூறினார். அதன்பிறகு இரண்டு நாடுகளும் "சமாதானம்" ஆகி பேச்சுவார்த்தைக்கு வந்துவிட்டனர்.

அப்சல்குரு காஷ்மிர்காரர். அவரை "நாடாளுமன்ற கட்டிடம்" மேல் நடந்த "தாக்குதலில்" சம்பந்தப்பட்டவர் என்று இந்திய நீதிமன்றம் "தண்டனை" கொடுத்திருக்கிறது. அவரை "காஷ்மீர் சுதந்திரத்திற்கு" போராடுபவர்கள் ஆதரிப்பது புரிய முடியும். ஆனால் "காஷ்மீர்" பிரச்சனையை வைத்து அரசியல் நடத்தும் பாகிஸ்தான் அரசும், அதேபோல "காஷ்மீர் தேசிய இனப்பிரச்சனையை" முஸ்லிம் பிரச்சனை என்று " திரித்து" விளையாடும் அரசியல்வாதிகளும் "கையாள்வது" அசிங்கமானது. அப்படி கையாண்டு வருவதன் விளைவு "அபசல்குருவை" தூகிலடக்கூடாது என்பது "முஸ்லிம் "பிரச்சனை" போலவும், "சர்பஜத்சிங்கை" தூகிலடக்கூடாது என்பது "இந்து மத" பிரச்சனை போலவும் இந்த அரசியல்வாதிகள் அல்லது "ஆளும் வர்க்க" அரசியல்வாதிகள் ஆக்கிவிட்டார்கள் அதற்காகவே ஒரு ஆளும்வர்க்க கட்சியை இவர்கள் "இந்துமதவெறி" கட்சியாக தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த "பா..ஜ.க.".கட்சி எப்போதும் "சர்பஜத்சிங்" பக்கம் பேசும். டில்லி இமாம் போன்றவர்கள் எப்போதும், "அப்சல்குரு" பக்கம் பேசுவார்கள். ஆனால் இந்த "இரண்டு கும்பல்களுக்கும்" அந்த இரண்டு "மரண தண்டனை " விதிக்கப்பட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.


இப்படி ஆளும்வர்க்க கட்சிகள் நடத்தும் சித்து விளையாட்டில் நாம் எப்போதும் மாட்டிக்கொள்வது உண்டு. இப்போதும் "இரண்டு நாட்கள்" முன்பு "பாகிஸ்தான் அரசு" சர்பஜத்சிங் மரணதண்டனை விசயமாக ஒரு காய் நகர்த்தலை செய்தது. உடனே நமது "உள்துறையும்" அப்சல்குருவின் மரணதண்டனை விசயமாக "கருணை மனுவை" தள்ளுபடி செய்யச்சொல்லி "குடியரசு தலைவருக்கு" அறிக்கை அனுப்பியது. அதையொட்டியே, "ராஜீவ் கொலையில்" மரணதண்டனை வித்திக்கப்பட்ட " பேரறிவாளன், முருகன், சாந்தன்" ஆகியோருக்கும் "கருணை மனுக்களை" தள்ளுபடி செய்யச்சொல்லி "குடியரு தலைவருக்கு" உள்துறை அறிக்கை அனுப்பியதாக செய்தி வந்துள்ளது. அப்சல்குரு விஷயம் "பாகிஸ்தான்-இந்தியா" அரசுகளின் அடரசியல் பிரச்சனை என்றால், "ராஜீவ் கொலை மரணதண்டனை" என்பது எந்த அரசியல் பிரச்சனை என்று நாம் கேட்கவேண்டும். அதுவும் அப்படித்தான். இது, "மத்திய-மாநில" அரசுகளுக்குள் உள்ள அரசியல் பிரச்சனை. அதுவும் "சிதம்பரம்_ஜெயலலிதா" அரசியல் பிரச்சனை.அது எப்படி? என்று வினா எழலாம். ஜெயலலிதாவும், சிதம்பரமும் "ராஜீவ் கொலை" விசயத்தில் ஒரே கருத்தை கொண்டவர்கள்தானே? அவர்களுக்குள் அந்த விசயத்தில் எப்படி அரசியல் பிரச்சனை வரும்?


இப்போது நடக்குமரசியலில், "கடந்தகால" அரசியல் விளையாடுகிறது. இப்போது "ஜெயலலிதா" உலகத் தமிழர்களால் பாராட்டப்படுகிறார். அதை "மத்தியஅரசோ" காங்கிரஸ் கட்சியோ விரும்பவில்லை. குறிப்பாக "ஜெயலலிதா" கான்க்கியர்ஸ் தலைமையை எதிர்த்து "காய்" நகர்த்துகிறார். அடஹ்ர்கு "தான் கேட்டும்" கீட அளவு "நிதியை" மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதே முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு ஓடிக்கொண்டிருக்கும் " தமிழினப் பிரச்சனை" ஒரு தந்திரமாகக் கூட பயன்படத்தான் செய்யும். இந்த நேரத்தில், "உலகத் தமிழர்" மத்தியில் கருணாநிதியின் "தலைமை நாற்காலி" பறிக்கப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறது. அந்த "நாற்காலியை" ஜெயலலிதா பறித்துக் கொள்ளக்கூடாது என்பதில் மத்திய அரசுக்கு அக்கறை உண்டு. அதை உள்துறை மூலம் தான் அவர்கள் செய்யவேண்டும். அதேநேரம் ஜெயலலிதா சிதம்பரத்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார். சிதம்பரமும் விடுவதாக இல்லை. சமீபத்தில் சென்னையில் கைது செய்யப்ப்பட்ட ஒரு திமுக முன்னால் எம்.எல்.ஏ. விடமிருந்து, அதாவது "சிதம்பரத்தின் முன்னால் பினாமி" இடமிருந்து, சிதம்பரம் சம்பந்தப்பட்ட பல " ரகசிய காணொளி குறுந்தகடுகள்" பிடிபட்டுள்ளன என்று கசிந்த செய்தி காரணமாக இருக்கலாம். இப்போது ஜெயலலிதாவிற்கு "பெருகி வரும்" தமிழின ஆதரவை உடைக்கவேண்டிய பொறுப்பு சிதம்பரத்திடம் உள்ளது.

கோத்தப்பாய் இந்த நேரம் பார்த்து உளறிக்கொட்டி, ஜெயலலிதாவின் புகழை "தமிழர்கள்" மத்தியில் உயர்த்திவிட்டான். அதை எப்படி உடைப்பது? "ராஜீவ் கொலையாளிகள்" என்று அறிவிக்கப்பட்டவர்கள் மேல் உள்ள "மரண தண்டனையை" இப்போது நிறைவேற்றப் போகிறோம் என்று கிளப்பி விட்டால், "தமிழின உணர்வாளர்கள்" ஜெயலலிதாவை பாராட்டும் வேலையை விட்டுவிட்டு, "ராஜிவ்கொலை" பற்றி பேசுவார்கள். அந்த சிக்கலில், "ராஜ்விகொலையை வைத்து " அரசியல் செய்வதில் சளைக்காத ஜெயலலிதா, "தமிழின உணர்வாலர்களிடமிருந்து" தனிமைப் படுவார். ஆகவே அந்த "ஆயுதத்தையும்" எடுக்க சிதம்பரம் துணிந்து விட்டார். ஆகவே இப்போது அதிகமாக பேசவேண்டியவர்கள், "மனித உரிமை" ஆர்வலர்கள்தான். "உலகப் போது மன்னிப்பு சபை" மற்றும் பி.யு.சீ.எல். ஆகிய பிரபல மனித உரிமை அமைப்புகள் "மரண தண்டனைக்கு" எதிராக "தொடையை" தட்டிக் கொண்டு போராடி வருகின்றன. "பேரறிவு, முருகன், சாந்தன்" பிரச்சனை வெறும் "தமிழினப்" பிரச்சனை அல்ல. அது "ஒரு மனித உரிமை "பிரச்சனை" சிதம்பரமே அரசியல் செய்யாதே. "மனிதர்களின் உயிர்களில்" உனது அரசியல் சதுரங்கத்தை ஆடாதே என்று நாம் குரல் எழுப்பவேண்டும்.

Tuesday, August 9, 2011

ஈழத்திற்குள் புகுந்து, படம் எடுத்து, விவரம் பதித்த "தமிழ் நங்கை"

ஈழத்திற்குள் புகுந்து, படம் எடுத்து, விவரம் பதித்த "தமிழ் நங்கை"
இன்று { 09 -08 -11 } இரவு 07 .30 மணிக்கும், 09 .30 மணிக்கும் " ஹெட்லைன்ஸ் டுடே" காட்சி ஊடகத்தில் , "போருக்கு பிறகு" தமிழீழப் பகுதிகளில் "நேரடியாக" ஒரு ஊடகவியலாளர் சென்று, " இலங்கை அரசாங்க அனுமதியோ" அல்லது அவர்கள் நிபந்தனை விதிப்பதைப் போல " பாதுகாப்பு அமைச்சக அனுமதியோ" பெறாமல், அதனாலேயே "சுதந்திரமாக" யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கும், அங்குள்ள " இடம் பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களுக்கும்" சென்று அவர்களது நேர்காணல்களையும், காநோளிகளையும் "கைகேமரா" மூலம் பதிவு செய்து வந்துள்ளவற்றை காணலாம். சென்னையில் உள்ள அந்த காட்சி ஊடகத்தின் பெண் ஊடகவியலாளரான" பிரியம்வதா" அந்த சாதனையை செய்துள்ளார். எந்த நேரத்திலும் "பிடிபட்டு" துன்புறுத்தப்படலாம் என்று தெரிந்தும், எந்த சமயத்திலும் " கொள்ளப்படலாம்" என்று புரிந்தும், அந்த இளம் ஊடகவியலாளர் அத்தகைய செயலை செய்து, "தமிழர்களின்" நிலைமையை உலகறியச் செய்துள்ளார். "ரசாயன குண்டுகள்" எறியப்பட்ட ஆதாரங்கள் அதில் கிடைத்துள்ளன. இனியும் "போர்குற்றங்கள்" நடைபெறவில்லை என்கிறார்களா?

Monday, August 8, 2011

ஜெயலலிதாவை தாக்கிய கோதபாயேவை என்ன செய்ய?

இலங்கை அரசத்தலைவரின் தம்பியும், இலங்கை பாதுகாப்பு செயலாளரும், பசில் ராஜபக்சேவின் சகோவும், ஜமால் ராஜபக்சே என்ற பேரவைதளைவரின் தம்பியும், நமால் ராஜபக்சேவின் சித்தச்ப்பாவுமான, தமிழின இரத்தம் குடித்த காட்டுமிராண்டி, அமெரிக்க குடியுரிமை பெற்ற கோதபாயே ராஜபக்சே, இந்திய காட்சி ஊடகமான "ஹெட்லைன்ஸ் டுடே" ஆசிரியருக்கு கொடுத்த நேர்காணலில்,[ இன்று இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பு } தமிழக முதல்வர் பற்றி " அதிகப்பிரசிங்கித்தனமாக" தாக்கி பேசியுள்ளான். "இலவச ஆலோசனைகளை" ஜெயலலிதாவிற்கு கொடுத்துள்ளான்.
'
தமிழக சட்டப்பேரவை "சென்ற சட்டப்பேரவை" போல இல்லாமல், முதல்வர் முன்முயற்சியிலேயே "ஒரு தனி தீர்மானம்" மூலம் அந்த இரத்தவெறி இலங்கை சிங்கள கும்பலை "போற்குற்றவாளிகல" என்றும், அவர்கள் மீதான "பொருளாதாரத் தடை" விதிக்கவும், "ஏகமனதான தீர்மானத்தை" நிறைவேற்றியது, இலங்கை அரசை அச்சப்படுத்தியது. அந்த தீர்மானத்தின் அமுலாக்கலில் மத்திய அரசை "நிர்ப்பந்தம்" செய்ய எடுக்கப்படும் முயற்சிகள், அந்த இரத்தவெறி இன அழிப்புவாதிகளை " அசிங்கமாக " பேசவைத்துள்ளது. உலகத் தமிழர்கள் மத்தியில் செல்வி.ஜெயலலிதாவிற்கு ஆதரவு கூடுவதும், அவரை அவர்கள் எதிர்பார்த்து நிற்பதும் "தமிழின விரோதிகளுக்கு" ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.

அதவிளைவே, இந்த "கோத்தப்பாய் பேட்டி". அதில் "ஜெயா தனது வேலையை பார்க்கட்டும்" என்கிறான் அந்த கொடுங்கோலன். ஜெயாவிற்கு "தமிழர்கள் மீது அக்கறை " இருப்பதாக சொல்கிறாரே, முதலில் தனது "தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை, இலங்கை மீனவர்கள் செல்வாக்கின் கீழ் இருக்கும் கடல் பகுதிக்குள் வரவேண்டாம்" என்று சொல்லட்டும். என்பதாக திரிக்கிறான். ஏ.கோத்தப்பாய், இரண்டு கரைகளின் தமிழ் மீனவர்களும், 1983 ஆம் ஆண்டிற்கு முன்பு, கரையின் இருபுறமும் "போகவர இருந்து மீன் பிடித்துவந்தார்கள்" என்பது உனக்கு தெரியுமா? உன் அறிவுக்கு எட்டுமா? கடலில் அதுவும் இந்த பதினெட்டு மைல் அகலக் கடலில், இருபுறமும் உள்ள "மீனவர்களுக்கு எல்லை கிடையாது" எனபது உனக்கு விளங்குமா? "மீன்பிடி தொழிலில்" இப்படி குறுகிய தூரத்தில் உள்ளவர்கள் மத்தியில் "எல்லை போடமுடியாது" என்பதாவது உனக்கு புரியமுடியுமா? இந்திய மத்திய அரசு வேண்டும் என்றே "கடலில் எல்லை" என்ற இல்லாத பிரச்னையை கிளப்பி வருவதால், அவர்களது "ஆலோசனையில்" நீ இதை கூறுகிறாயா?

அடுத்து, "எங்கள் தமிழக முதல்வரைப்" பார்த்து, "அடுத்த நாட்டு பிரச்சனையில் உங்கள் தலையை நுழைக்காதீர்கள்" என்று கூறுகிறாயே? உனக்கு எவ்வளவு "நெஞ்ச ழுத்தம்" இருந்தால், தமிழ்நாட்டின் ஏழரைக் கோடி மக்களின் தலைவரை, இன்று உலகத்தமிழினம் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு தலைமையைப் பார்த்து இந்த "வார்த்தையை" கூறுவாய்?" எது அடுத்தநாட்டு பிரச்சனை? ஒன்றரை லட்சம் தமிழர்களை நீயும் உன் சகோதரர்களும் சேர்ந்து கொல்வீர்கள்? அது "அடுத்தநாட்டு பிரச்சனை" என்று நாங்கள் சும்மா இருக்க வேண்டுமா? நீ எங்கள் நாட்டு மீனவர்கள் "ஐநூற்று நாற்பத்தி மூன்று" பேரை நடுக்கடலில் "கொலை" செய்வாய்? நாங்கள் அடுத்தநாட்டு பிரச்சனை என்று கைகட்டி நிற்கவேண்டுமா? அது, கருணாநிதி என்ற உனது "சகா" ஆண்ட காலத்தோடு முடிந்துவிட்டது.

உனக்கு ''தைரியம்" கொடுத்தது 'டில்லிதான்" என்பது எங்களுக்கு தெரியும். அதே டில்லி "உன்னையும் உன் சகோகளையும்" தமிழ்நாட்டில் பெரும் அளவு செல்வாக்குடன் "ஜெயலலிதா வெற்றி" பெற்று வந்துவிட்டார், அதனால் அவரை எபப்டியாவது "ந'அத்பு கொள்ளுங்கள் என்று கூறியதே? அப்போது நீயும் உன் தம்பியும் "டில்லியிடம் பேசி, தமிழக முதல்வரை சந்திக்க பல முயற்சிகளை எடுத்தீர்களே? இப்போது "அது எதுவும் பலிக்காத நிலையில்" டில்லி உங்களிடம் "கை விரித்துவிட்டதே?" தமிழக அரசை "''பகைத்துக்கொள்" என்று கூறிவிட்டதே? அதற்குபிறகு நீ சிங்கள ஆன்மிக பயணிகள்" என்ற பெயரில் " உன் ஒற்றர்களை" அனுப்பி சென்னையில் "'சட்ட ஒழுங்கை கெடுக்க முயற்சி செய்தாயே? அதையும் இங்கே உள்ள தமிழக அரசு முறியடித்து" விட்டதே? அதற்கு பிறகு டில்லி" கொடுத்த "தைர்யத்திதானே" இப்படி நேர்காணலில், கண்டபடி உளறுகிறாய்? இதை தமிழ்மக்கள் சந்திப்பார்கள்.

Thursday, August 4, 2011

தமிழக சட்ட-ஒழுங்கை கெடுக்க சிங்கள முயற்சி.

சிங்களம் அடிபட்ட "பாம்பை" போல இப்போது உணர்கிறது. நாலாவது வன்னிப் போர் நடக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் தங்களுக்கு "எதிரான" குரல் எழுப்பப்பட வில்லை என்று "இறுமாந்திருந்த" வேளையில் எல்லாமே இப்போது தங்களுக்கு எதிராக நடப்பதாக "சிங்களம்" கணக்கு போடுகிறார்கள். " புலிகளை பயங்கரவாதிகள்" என்று முத்திரை குத்தியபோது, உலகம் ஒத்துழைத்தது. "அப்பாவி மக்களும் புலிகளுடன் சேர்ந்த போராளிகள்தான்" என்று சிங்களம் முத்திரை குத்திய போதும், உலகம் கண்டுகொள்ளவில்லை. "வெள்ளைக் கொடியுடன் சரனைந்த புலிகளை" படுகொலை செய்தபோதும், உலகம் "பெரிதாக கண்டுகொள்ளவில்லை". இப்போது என்ன வந்துவிட்டது? "தமிழக சட்டமன்றமும், இந்திய நாடாளுமன்றமும்" சிங்களத்திற்கு எதிராக முனு, முணுக்கின்றன? இதுதான் சிங்களம் இன்று கேட்கும் கேள்வி.

உண்மைதான். அப்பாவி ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோதும், பகிரங்க இன அழிப்பு நடந்தபோத்யும், புலிகளை எதிர்த்து "ரசாயனக் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும்" பயோன்படுத்திய போதும, தமிழக மக்களை அடக்கி ஆள ஒரு கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த சூழலின் "மௌனத்தை" உடைக்க "முத்துக் குமார்" என்ற தம்பி "உயிராயுதமாக" தன்னைத்தானே ஆக்கிக்கொண்டு, பெரும் "தீப்பொறியை" கிளப்பி விட முயன்றான். அதயும் அடக்க "ஜாபர் சேட்" போன்றோர் முயன்று வெற்றி பெற்றனர். இப்போது "பீனிக்ஸ் பறவை" போல மீண்டும் தமிழன்" எழுகிறான்.இந்த முறை "ஜெயலலிதா" முகம் "தமிழ் முகமாக" மாறி, "தமிழர் எழுச்சிக்கு" பயன்படுகிறது. இது அடுக்குமா? என்று சிங்களம் அலறுகிறது. "எத்தனையோ தேசிய இனப் பிரச்சனைகளை" எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாங்கள். எங்களிடமே இந்த தமிழினம் விளையாடுகிறதா?"" என்று மத்திய உளவு நிறுவனமான "ரா' வேலை செய்கிறது. திட்டம் தீட்டுகிறது. சூழ்ச்சி செய்கிறது.


அதன் விளைவே "திடீரென சிங்கள எம்.பி.களை " நாடாளுமனரதிற்கு அழைப்பதும், அவர்களுக்கு "எதிர்ப்பு" கொடுத்தால், அதற்காக " வந்தவர்களிடம் "மன்னிப்பு" கேட்பதும் , அதன்மூலம் "இந்தியாவின் மானத்தை கப்பலேட்டிரிவிடுவதும்" வட இந்திய நாடாளுமன்ற முறைகளாக இருக்கலாம். அதுவும் "திட்டமிட்டு" நடத்தப்பட்டதாக தெரிகிறது. "டில்லிக்கு சொல்லாமல் தமிழக சட்டப்பேரவை போர்க்குற்றவாளி, மற்றும் பொருளாதார தடை" என்று "தீர்மானம்" போட்டதை , மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும், வெளிவிவகாரத் துறையும், "ரசிக்கவில்லை". அந்த "தீர்மானங்களை" வைத்து ஹிலாறி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்த்தித்தையும், அவர்கள் வரவேற்கவில்லை. இலங்கை எம்.பி.கள் "நாடாளுமன்றம் வந்தபோது, அதிமுக உறப்பினர்கள் எதிர்ப்பு முழக்கம் இட்டதையும்" டில்லி வெறுப்பாகவே பார்க்கத் தொடங்கி உள்ளது. அவற்றிற்கு எல்லாம் பதில் கொடுக்க டில்லி நினைக்கிறது.

தமிழ்நாட்டில் "ஈழப்ப் பிரச்சனையை"' ஒட்டி சட்ட-ஒழுங்கை குலைத்தால், தானாகவே அதிமுக அரசு தனது " சட்ட-ஒழுங்கை 'பாதுகாக்க " தமிழின உணர்வாளர்கள்" மீது "நடவடிக்கை" எடுப்பார்கள் என்று டில்லிக்கு கொழும்பு ஆலோசனை கூறியுள்ளது. இது "பழைய" அதிகாரிகள் சிலர் மூலமும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஒட்டி, கொழும்பு தனது உளவுத் துறையான "என்.ஐ.பி." மூலம் "ஐம்பது சிங்கள இளைஞர்களை" இந்தியா வந்திருப்பவர்களை சென்னைக்கு அனுப்பி, அவர்களை "பகிரங்க ஊர்வலமாக" வெளியே தெரியும்படி "பவனி வர" ஏற்பாடு செய்தது. புதன்கிழமை காலை அந்த திட்டம் செயலுக்கு வந்தது. சென்றல் ரயில் நிலையத்திலிருந்து "ஐம்பது சிங்கள இளைஞர்கள் சிங்கள எழுத்துக்கள் கொண்ட பனியன்களை மாட்டிக்கொண்டு" ஊர்வலம் போல நடந்துவந்தனர். அவர்களது கைகளில் "சிறிய சிங்களக் கொடிகளை" பிடித்துக் கொண்டு வந்தனர். அத்தகைய ஊர்வலத்திற்கு காவல்துறை இங்குள்ள "தமிழர்களுக்கே கூட" அனுமதி கொடுப்பதில்லை. அப்படி "காவலர் அனுமதி இல்லாமல்" அந்த சிங்கள படையெடுப்பு சென்னை நகரில் பகிரங்கமாக நடந்தது.

அந்த சிங்கள ஊர்வலம் நேராக "புரசவாக்கத்தை: அடைந்து "ஏ.ஜே.விடுதி" என்ற வட இந்தியர் விடுதிக்கு போய் சேர்ந்தது. சிங்களமும் டில்லியும் சேர்ந்து போட்ட "சதி" நடைபெறாமல், அந்த "சிங்களப் பொடியன்களுக்கு" உள்ளேயே "ஜே.வி.பி. என்றும், ராஜபக்சே ஆள்" என்றும் சண்டை அவ்ந்துவிட்டது. அந்த சண்டை "புரசைவாக்கம் கடைவீதியை" அசிங்கப்ப்டுத்தியது. அதுகண்ட "தமிழ் இளைஞர்கள்" எங்கள் ஊருக்கு வந்து என் சட்ட-ஒழுங்கை குலைகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டது குற்றமாகிப் போனதால், செய்தி அறிந்த "கொழும்பு" தலையிட்டு, "டில்லியை" உசுப்பி விட்டு, அதமூலம் "தமிழ் இளைஞர்களை" கைது செய்ய வைத்திருகிறார்கள். இது "அந்நிய சதியால்" தமிழக சட்ட'-ஒழுங்கை கெடுக்க" எடுக்க[ப்பட்ட முயற்சியே. வம்பு செய்த "சிங்கள இளைஞர்கள்" ஏன் வந்தார்கள்?, என்று வந்தார்கள்?, எதற்கு வந்தார்கள்?, என "காவல்துறை" புலனாய்வு செய்து, "தூண்டிவிட்ட" அந்நிய உளவுப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.