டிசம்பர் பத்து உலக மனித உரிமை நாள். அன்று சென்னையில் "கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக" பட்டினி போராட்டம் நடத்தப்பட்டது பொருத்தமானதே. ஆனால் கூவம் கரை ஓரம் இடம் ஒத்துக்கிய மாநகர காவல்துறையை திட்டாதவர்களே இல்லை. இரண்டு நாள் முன்பே மனோ தகராஜ் ஊடகங்களுக்கு கூட்டம் நடத்தினார். அதில் அவருடன் இடிந்தகரை இவாரிஸ், ஆர்ம்ச்டிரான்க், பாதிரியார் ராஜன், ஆவின் பாபு, சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதேபோல சென்ற இருபத்தி ஆறாம் நாள், வணிகர் சங்க பேரவை வெள்ளையன், உலக தமிழர் பேரமைப்பு பொருளாளர் சந்திரேசன், மனித நேய மக்கள் கட்சி போது செயலளார் அப்துல் சமது, இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி, மக்கள் சிவி உரிமை கழக டி.எஸ்.எஸ்.மணி, மீனவர் சங்க மாறன், மகேஷ், தமிழர் பண்பாட்டு நடுவம் ராஜ்குமார் பழனிசாமி,போன்றோர் கலந்துகொண்டு,"சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்ற பெயரில், விஞ்ஞானி வி.டி.பி. மூலம் பவர் பாயிண்ட்விளக்கம் கொடுத்தனர். இப்போது பட்டினி போர் நடத்தினர். .
இந்த போராட்டம் சென்னை கூட்டமைப்பு என்றும், அணு சக்தி எதிர்ப்பு என்றும் பெயர் பெற்று இருந்தது. இதில் சென்னை களம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். மனோ, இவாரிஸ், கண்ணன், ஆர்ம்ஸ், ஆண்டன் கோமேஸ், வெள்ளையன், கலை,சமுத்திராதேவி, காஞ்சனை சீனிவாசன், தொல்.திருமாவளவன், உதுயகுமார், மைபா, சலபதி, கில்பர்ட், வழக்கறிஞர் சுந்தரராஜன், பொறியியலாளர் ரவி, எஸ்.எம்.பாக்கர், அப்துல் சமது, சதீஷ்குமார், அருண்ஷோரி,மருத்துவர் புகழேந்தி, டி.எஸ்.ஏ.ஸ்.மணி, அருள் எழிலன்,எஸ்.யு.சீ.அய். தோழர்கள், ஜெ.சிதம்பரநாதன், மீத.பாண்டியன்,ஏ.எஸ்.குமார்,திருமுருகன்,மக்கள்மன்றம் மகேஷ், மேகலா, நாத்திகன், என்று பலரும் கலந்து கொண்டனர். கட்சி தலைவர்கள் பலரும்தங்கள் தொண்டர்களுடன் வந்து பேசிவிட்டு செல்வதாக இருந்தனர்.
தென் மாவட்டங்களை சேர்ந்த மீனவ சகோதரர்கள் இடிந்தகரை, கூத்தான்குழி, உட்பட ஒரு ஐம்பது பேர் சென்னை வாழ் மீனவர்களாக வந்திருந்தனர். கில்பர்ட் ஏற்பாட்டில் காஞ்சி மாவட்ட கடலோர பெண்கள் இயக்கம் ஒரு எழுபது பெண்களும், சமுத்திராதேவி ஏற்பாட்டில் மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ஒரு அறுபது மீனவ பெண்களும் கலந்துகொண்டது பெறும் எழுச்ச்சியை தந்தது. தங்கள் அடையாளமாக அவர்கள் " சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்று பெயர் பட்டையை சட்டைகளில் அணிந்து இருந்தனர். சென்னை மீனவ சங்கங்களான தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் மாறன் உடன் டி.பாண்டியன் உட்பட, ஆவின் பாபுவின் "இந்திய மீனவர் பேரவை" சலபதியின் மீனவ தொழிலாளர் சங்கம்", மகேசின் "அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்" என்று சென்னைவாழ்மீனவர்களும்கலந்துகொண்டதுசிறப்பு. பங்கெடுத்தவர்களில் மீனவர்களின் எண்ணிக்கையே சரிபாதிக்கு மேல் இருந்தது. அவர்கள் அறிவித்துக் கொள்ளவில்லை. ஆண்டன் கோமெசின் அழைப்பின் பேரில் அவர்கள் வந்திருந்தனர்.
எஸ்.எம்.பாக்கர் பேசும்போது "பட்டினி போராட்டங்கள் பயன்படாது என்றும், முற்றுகை போராட்டமே அணு உலைக்கு பொருத்தமானது "என்றும்பேசிய உடனே கூடங்குளம் வட்டார மக்கள் ஊராட்சி தலைவர் சாண்டல் முத்துராஜ் தலைமையில் கூடங்குளம் அணு உலை முன்பு "முற்றுகை" இடும் செய்தி வந்தது. அங்கேயே சமைக்கவும் தொடங்கி விட்டார்கள் என்றும், பெண்கள் முன்னாள் நின்று அங்கு முற்றுகை போர் நடக்கிறது என்பதும் சிறப்பு செய்திகளாக இருந்தது. கோமாளிகள் போல அமைச்சர் நாராயணசாமியும், அப்துல் கலாமும், பேசிவருவது விமர்சிக்கப்பட்டது.வேய்நாட்டு பணம் விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டை, "தற்காப்பு பாணியில் பதில் சொல்ல கூடாது" என்றும், தாக்கும் பாணியில் பதில் கூற வேண்டும் என்றும் கூறப்பட்டது. அது என்ன? என்றால், வெளிநாட்டு பணமான அமெரிக்கா பணம் அணு உலை ஒப்பந்தம் போட்டதற்கு ஆதரவாக "அணு உலை ஆதரவு குழுவிற்கு வருகிறது" என்பது விளக்கப்பட்டது. அதேபோல "அணு சக்தி துறை", தேசிய மின்சக்தி கார்பரேசன் ஆப் இந்தியா" ஆகியவற்றுடன் "கூடங்குளம் அணு மின் உலை திட்டம்" இணைத்து அந்த நிதியை செலவழிக்கிறது என்றும் அங்கே குற்றம் சாட்டப்பட்டது.
மேற்கண்ட செலவுகளை செய்ய கணக்கு கேட்க முடியாது என்பதும் விளக்கப்பட்டது. அதாவது 1962 ஆம் ஆண்டு சட்டப்படி, அணு உலை ரகசியங்களை அந்த அணுசக்தி துறை தலைவரும், பிரதமரும் "கமுக்கமாக" வைத்து கொள்ளலாம் என்றும், அதை அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ, கூறவேண்டிய அவசியம் இல்லை என்பதாகவும், அவர்கள் அதற்காக செலவழிக்கும் பணத்திற்கு "கணக்கு காட்டவேண்டாம்" எனவும் அந்த சட்டத்தில் இருப்பது சுட்டி காட்ட பட்டது. ஆகவே அணு உலை ஆதரவு கும்பல்களுக்கு செலவு இவ்வாறு அதிகம் செய்யப்படுகிறது என்பதும், மக்கள் போராட்டத்தை பணம் பற்றி பேசி "கொச்சை படுத்தாதே" எனவும் அங்கே கூறப்பட்டது. மாலையில் சேவ் தமிழ்ச சார்பாக பேரணி எடுக்கப்பட்டது. சன்னியும் எழுந்துவிட்டது என்பதை அது காட்டியது.
Sunday, December 11, 2011
Wednesday, December 7, 2011
அணை பாதுகாப்பாய் உள்ளது என கூறிய மலையாள நிபுணர்கள்.
ஏதோ முழு மலையாள நாட்டவர்களும், அரசியல் சந்தர்ப்பவாதம் செய்யும் சக்திகளுடன் இணைந்துகொண்டு "அணை உடையும் என்று பீதியை" கிளப்புவதாக ஒரு தவறான புரிதல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதுவே தமிழ்நாட்டில் உள்ள மலையாள வணிகர்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நேரத்தில் தமிழக முதல்வர்தான் தெளிவாக" எந்த அளவுக்கு மலையாளிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு தமிழர்கள் கேரளாவில் இருக்கிறார்கள்" என்றும் அமைதி காக்க வேண்டும் என்றும், பீதியை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயல்வதை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதைகூட கேரள அரசியல்வாதிகள் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
நாம் ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ள புள்ளிவிவரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே "முல்லைபெரியார் உடையாது.அப்படியே உடைந்தாலும் இடுக்கி அணை அந்த நீரை தாங்கிக் கொள்ளும்" என்பதை கூறியிருந்தோம். இப்போது அதையே கேரள நிபுணர்கள் கொர்ரியுள்ளனர் என்பது இனிப்பான செய்திதானே? அதுவும் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்கள் என்பது மேலும் "அழுத்தமான" செய்தி.
நேற்று செவ்வாய் கிழமை கேரள உயர்நீதிமன்றம் முன்னால் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது அந்த வழக்கின் முக்கிய "கவலை"பகுதியான "தாக்குபிடிக்குமா இடுக்கி அணை?" என்ற விசயத்தில் ஆய்வு நடத்த கூறி ஏற்கனவே அங்குள்ள நீதியரசர்களால் உத்திரவிடப்பட்டு, அங்குள்ள ஒரு "மலையாள நிபுணர்களை" கொண்ட குழு தனது ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளது.
உயர்நீதிமன்ற பெஞ்சில், தலைமை நீதியரசர் பொறுப்பில் இப்போது உள்ள மஞ்சுஆளா செல்லூர் மற்றும் நீதியரசர் பி.கே. ராமச்சந்திர மேனன் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் "அணை பாதுகாப்பு நிபுணர்களான" எம்.கே.பரமேச்வரன் நாயர் உட்பட நிபுணர்கள் குழு தன்கள் ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளனர்.ஒரு "பேரழிவு" வருமானால் மக்களது உயிர்களை பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்து வரும்படி அந்த நீதிமன்றம் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி, அவர்கள் அந்த அறிககையை முன்வைத்தனர். அதில், முல்லைபெரியார் சிறப்பு குழுவின் நிபுணர் எம்.கே.பரமேஸ்வரன் நாயரும் இருப்பதால் அந்த அறிக்கைமேலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
அந்த அறிக்கை இடுக்கி அணைக்கட்டின் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவு பற்றி தனது முன்வைப்பை கூறவேண்டும். அப்படியே அந்த நிபுணர் குழுவும் செய்தது. அதில் இடுக்கி அணையின் அடித்தள கட்டுமானம் ஆய்வு செய்யப்பட்டதை எடுத்து சொல்லியுள்ளார்கள். அந்த அணை எந்த ஒரு " நில அதிர்வையும்" தாங்கும் பக்குவத்தில் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இடுக்கி நீர்தேக்கத்தின் முகப்பகுதிக்கும், முல்லைபெரியார் நீர்தேக்கத்திளிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறது என்றும் கேட்டிருந்தனர். அதற்கும் அந்த அறிக்கை விளக்கம் கூறியிருந்தது. அந்த அணையிலிருந்து இந்த நாய்க்கு நீரின் வேகம் எவ்வளவு என்றும் கேட்டிருந்தார்கள்.வெய்யில் காலங்களில் எவ்வளவு நீர் தேக்கப்படும், என்றும், எவ்வளவு தண்ணீர் " மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்" என்றும் கேட்டிருந்தார்கள். இவ்வாறு கேரள மக்களின் உண்மையான டேஹ்வைகளை ஒரு உயர்நீதிமன்றம் ஆய்வு செய்து, நிபுணர்கள் மூலம் கேட்டு அறியும் போது, இந்த அரசியல்வாத சந்தற்ற்ப்பவாதிகள் கிளப்பும் "பொய்கள்" எத்தனை நாட்கள் நிற்கும்?
நாம் ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ள புள்ளிவிவரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே "முல்லைபெரியார் உடையாது.அப்படியே உடைந்தாலும் இடுக்கி அணை அந்த நீரை தாங்கிக் கொள்ளும்" என்பதை கூறியிருந்தோம். இப்போது அதையே கேரள நிபுணர்கள் கொர்ரியுள்ளனர் என்பது இனிப்பான செய்திதானே? அதுவும் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்கள் என்பது மேலும் "அழுத்தமான" செய்தி.
நேற்று செவ்வாய் கிழமை கேரள உயர்நீதிமன்றம் முன்னால் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது அந்த வழக்கின் முக்கிய "கவலை"பகுதியான "தாக்குபிடிக்குமா இடுக்கி அணை?" என்ற விசயத்தில் ஆய்வு நடத்த கூறி ஏற்கனவே அங்குள்ள நீதியரசர்களால் உத்திரவிடப்பட்டு, அங்குள்ள ஒரு "மலையாள நிபுணர்களை" கொண்ட குழு தனது ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளது.
உயர்நீதிமன்ற பெஞ்சில், தலைமை நீதியரசர் பொறுப்பில் இப்போது உள்ள மஞ்சுஆளா செல்லூர் மற்றும் நீதியரசர் பி.கே. ராமச்சந்திர மேனன் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் "அணை பாதுகாப்பு நிபுணர்களான" எம்.கே.பரமேச்வரன் நாயர் உட்பட நிபுணர்கள் குழு தன்கள் ஆய்வு அறிககையை முன்வைத்துள்ளனர்.ஒரு "பேரழிவு" வருமானால் மக்களது உயிர்களை பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்து வரும்படி அந்த நீதிமன்றம் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி, அவர்கள் அந்த அறிககையை முன்வைத்தனர். அதில், முல்லைபெரியார் சிறப்பு குழுவின் நிபுணர் எம்.கே.பரமேஸ்வரன் நாயரும் இருப்பதால் அந்த அறிக்கைமேலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
அந்த அறிக்கை இடுக்கி அணைக்கட்டின் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவு பற்றி தனது முன்வைப்பை கூறவேண்டும். அப்படியே அந்த நிபுணர் குழுவும் செய்தது. அதில் இடுக்கி அணையின் அடித்தள கட்டுமானம் ஆய்வு செய்யப்பட்டதை எடுத்து சொல்லியுள்ளார்கள். அந்த அணை எந்த ஒரு " நில அதிர்வையும்" தாங்கும் பக்குவத்தில் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இடுக்கி நீர்தேக்கத்தின் முகப்பகுதிக்கும், முல்லைபெரியார் நீர்தேக்கத்திளிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறது என்றும் கேட்டிருந்தனர். அதற்கும் அந்த அறிக்கை விளக்கம் கூறியிருந்தது. அந்த அணையிலிருந்து இந்த நாய்க்கு நீரின் வேகம் எவ்வளவு என்றும் கேட்டிருந்தார்கள்.வெய்யில் காலங்களில் எவ்வளவு நீர் தேக்கப்படும், என்றும், எவ்வளவு தண்ணீர் " மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்" என்றும் கேட்டிருந்தார்கள். இவ்வாறு கேரள மக்களின் உண்மையான டேஹ்வைகளை ஒரு உயர்நீதிமன்றம் ஆய்வு செய்து, நிபுணர்கள் மூலம் கேட்டு அறியும் போது, இந்த அரசியல்வாத சந்தற்ற்ப்பவாதிகள் கிளப்பும் "பொய்கள்" எத்தனை நாட்கள் நிற்கும்?
Tuesday, December 6, 2011
பா.ஜ.கவும், காங்கிரசும் ஒன்றுதான் எனபது கேரளாவிலும் காணலாம்.
காங்கிரஸ் கட்சிதான் இந்த முல்லைபெரியார் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி, பொய்யை கிளப்பி அதில் மீன் பிடிக்க, எர்நாகுல்கம் மாவட்ட, பிரவம் தொகுதிக்கான இடைதேர்தல் ஒத்திகையை பார்க்கிறது என்றால், அதற்கு போட்டி போட்டு அச்ச்தானந்தனும் அந்த தொகுதியை கைப்பற்ற அதே நாடகத்தை நடத்துகிறார்கள் என்றால், பா.ஜா.காவிற்கு எண்ண இழவு வந்தது? அவர்கள் பங்கிற்கு கோட்டயம் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற "ஐயப்ப சாமிகள்" வரும்போது அவர்களை வழி மறித்து, அதில் இரண்டு "சாமிகளுக்கு" செருப்பு மாலை போட்டிருக்கிறார்கள். அதில்தான் தொடங்கியது மோதல்.
ஆமாம். இந்த பா.ஜ க .தான் "சாமி"களை வைத்து அரசியல் செய்யும் கட்சிதானே? இவர்களே தமிழ்நாட்டு சாமிகளை கேவலப்படுத்தினால், இவர்களுக்கு உண்மையில் "சாமி நம்பிக்கை" கிடையாது என்பதும், அது வெறும் அரசியலுக்கு தான் என்பதும் இதிலிருந்து புரிகிறதே? கேரள மாநில மனித உரிமை ஆணையம் இந்த மோதலையும், அணை உடையும் என்ற பரப்புரையையும், "ஊடக, அரசியல்வாதிகளின் " கூட்டு சேட்டை என்று தெளிவாக கூறி விட்டதே? கேரள அரசு வழக்கறிஞரும் முல்லை பெரியார் அணை பலமாக உள்ளது என்று தெளிவாக நீதிமன்றத்திலேயே கூறி விட்டாரே? இவர்களும் மலயாளிகல்தானே? உண்மை சொல்லும் மலையாளி, பொய் சொல்லும் மலையாளி என்று வேண்டுமானால் பிரித்து பார்க்கலாம்.இது காங்கரஸின் திட்டமிட்ட சதி என்பது அம்பலமாகிவிட்டது.
செல்வி. ஜெயலலிதா மீது "கூடங்குளம்" விசயத்திலும் இன்ன அபிர விசயங்களிலும் மோதல் போக்கை கையாளும், டில்லிக்காரர்கள் இந்த முல்லை பெரியார் பிரச்சனையை பெரிதாக்குவதில் முழுமையாக கேரளா பக்கம் நின்று செயல்படுகிறார்கள். கடலுக்கு சென்று வீணாகும் "தண்ணீரை" கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்க தயாரில்லாத கேரள அரசியல்வாதிகள் எப்படி இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவானவர்கள்? இந்த கேள்வியை எல்லோரும் கேட்க வேண்டும்.டில்லிகாரனை பொறுத்தவரை "நீ கூடங்குளத்தில் மக்களின் அச்சத்தை" போக்க சொன்னாயல்லவா? நான் கேரள மக்கள் மத்தியில் இப்போது முல்லை பெரியார் இடையும் என்ற அச்சத்தை கிளப்புகிறேன் பார் எனபதுதான் டில்லியின் தந்திரம்.
2006 ஆம் ஆண்டு இதே டில்லியில் இருக்கும் உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியார் வழக்கில் தலைமை நீதியரசர் "சபர்வால்" கொடுத்த தீர்ப்பில் " 142 அடி உயர்த்தலாம்" என்று மட்டும் கொடுக்க வில்லை. கேரளா பயப்படுவ்பது போல முல்லை பெரியார் அணை உடைந்தால், அதிலிருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு "பதினோரு டி.எம்.சீ. தண்ணீர்தான்". அந்த தண்ணீர் இடிக்கி அணிக்கு வரும். இடிக்கி அணையின் கொள்ளளவு "எழுபது டி.எம்.சீ.". அதில் பெருமழை வந்த காலங்களிலேயே "ஐம்பத்தி ஏழு டி.எம்.சீ" தண்ணீர்தான் நிரம்புகிறது. அதாவது பெருமழை காலங்களிலேயே இடிக்கி அணையில் " பதினேழு டி.எம்.சீ." க்கு இடம் இருக்கிறது. முல்லை பெரியார் உடைந்தாலுமே " பதினோரு" டி.எம்.சீ.தான் வெளிவரும் என்பதால் இடிக்கி அணை தாங்கி கொள்ளும். இந்த தகவலை "அமணை பற்றிய ஆராய்ச்சியை" செய்த உச்சநீதிமன்றம் கணக்கெடுத்து கூறியுள்ளது. இது அந்த சபரிவாலது தீர்ப்பில் உள்ள செய்திகள்.
இவ்வாறு கூறிய உச்சநீதிமன்றம் நியமித்த "முன்னாள் நீதியரசர் ஆனந்த் " தலைமையிலான குழு வருகிற "ஜனவரியில்" தங்கள் "அறிககையை" வைக்க போகிறார்கள் என்று தெரிந்த கேரள காங்கிரஸ்காரர்கள் இப்போது அவசர , அவசரமாக "அணை 999 " என்று சினிமாவை வெளியிட்டு அதன்மூலம் கேரள மக்களை "பீதி" அடைய செய்கிறார்கள். இவ்வாறு செய்வதே அணை அருகே " ஆக்கிரமிப்பு செய்தவர்களும், உல்லாச விடுதி" நடத்துபவர்களுமான அரசியல் வாதிகள்தான் என்றும் செய்தி வருகிறது. புதிய அணை கட்டவும், பழைய அணையை உடைக்கவும் "ஒப்பந்தம்" எடுக்க திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் வருகின்றன. ஆக மொத்தத்தில் கேரள மக்களை ஏமாற்றும் கேரள அரசியல்வாதிகள்தான் உண்மையான "வில்லன்கள்".
ஆமாம். இந்த பா.ஜ க .தான் "சாமி"களை வைத்து அரசியல் செய்யும் கட்சிதானே? இவர்களே தமிழ்நாட்டு சாமிகளை கேவலப்படுத்தினால், இவர்களுக்கு உண்மையில் "சாமி நம்பிக்கை" கிடையாது என்பதும், அது வெறும் அரசியலுக்கு தான் என்பதும் இதிலிருந்து புரிகிறதே? கேரள மாநில மனித உரிமை ஆணையம் இந்த மோதலையும், அணை உடையும் என்ற பரப்புரையையும், "ஊடக, அரசியல்வாதிகளின் " கூட்டு சேட்டை என்று தெளிவாக கூறி விட்டதே? கேரள அரசு வழக்கறிஞரும் முல்லை பெரியார் அணை பலமாக உள்ளது என்று தெளிவாக நீதிமன்றத்திலேயே கூறி விட்டாரே? இவர்களும் மலயாளிகல்தானே? உண்மை சொல்லும் மலையாளி, பொய் சொல்லும் மலையாளி என்று வேண்டுமானால் பிரித்து பார்க்கலாம்.இது காங்கரஸின் திட்டமிட்ட சதி என்பது அம்பலமாகிவிட்டது.
செல்வி. ஜெயலலிதா மீது "கூடங்குளம்" விசயத்திலும் இன்ன அபிர விசயங்களிலும் மோதல் போக்கை கையாளும், டில்லிக்காரர்கள் இந்த முல்லை பெரியார் பிரச்சனையை பெரிதாக்குவதில் முழுமையாக கேரளா பக்கம் நின்று செயல்படுகிறார்கள். கடலுக்கு சென்று வீணாகும் "தண்ணீரை" கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்க தயாரில்லாத கேரள அரசியல்வாதிகள் எப்படி இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவானவர்கள்? இந்த கேள்வியை எல்லோரும் கேட்க வேண்டும்.டில்லிகாரனை பொறுத்தவரை "நீ கூடங்குளத்தில் மக்களின் அச்சத்தை" போக்க சொன்னாயல்லவா? நான் கேரள மக்கள் மத்தியில் இப்போது முல்லை பெரியார் இடையும் என்ற அச்சத்தை கிளப்புகிறேன் பார் எனபதுதான் டில்லியின் தந்திரம்.
2006 ஆம் ஆண்டு இதே டில்லியில் இருக்கும் உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியார் வழக்கில் தலைமை நீதியரசர் "சபர்வால்" கொடுத்த தீர்ப்பில் " 142 அடி உயர்த்தலாம்" என்று மட்டும் கொடுக்க வில்லை. கேரளா பயப்படுவ்பது போல முல்லை பெரியார் அணை உடைந்தால், அதிலிருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு "பதினோரு டி.எம்.சீ. தண்ணீர்தான்". அந்த தண்ணீர் இடிக்கி அணிக்கு வரும். இடிக்கி அணையின் கொள்ளளவு "எழுபது டி.எம்.சீ.". அதில் பெருமழை வந்த காலங்களிலேயே "ஐம்பத்தி ஏழு டி.எம்.சீ" தண்ணீர்தான் நிரம்புகிறது. அதாவது பெருமழை காலங்களிலேயே இடிக்கி அணையில் " பதினேழு டி.எம்.சீ." க்கு இடம் இருக்கிறது. முல்லை பெரியார் உடைந்தாலுமே " பதினோரு" டி.எம்.சீ.தான் வெளிவரும் என்பதால் இடிக்கி அணை தாங்கி கொள்ளும். இந்த தகவலை "அமணை பற்றிய ஆராய்ச்சியை" செய்த உச்சநீதிமன்றம் கணக்கெடுத்து கூறியுள்ளது. இது அந்த சபரிவாலது தீர்ப்பில் உள்ள செய்திகள்.
இவ்வாறு கூறிய உச்சநீதிமன்றம் நியமித்த "முன்னாள் நீதியரசர் ஆனந்த் " தலைமையிலான குழு வருகிற "ஜனவரியில்" தங்கள் "அறிககையை" வைக்க போகிறார்கள் என்று தெரிந்த கேரள காங்கிரஸ்காரர்கள் இப்போது அவசர , அவசரமாக "அணை 999 " என்று சினிமாவை வெளியிட்டு அதன்மூலம் கேரள மக்களை "பீதி" அடைய செய்கிறார்கள். இவ்வாறு செய்வதே அணை அருகே " ஆக்கிரமிப்பு செய்தவர்களும், உல்லாச விடுதி" நடத்துபவர்களுமான அரசியல் வாதிகள்தான் என்றும் செய்தி வருகிறது. புதிய அணை கட்டவும், பழைய அணையை உடைக்கவும் "ஒப்பந்தம்" எடுக்க திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் வருகின்றன. ஆக மொத்தத்தில் கேரள மக்களை ஏமாற்றும் கேரள அரசியல்வாதிகள்தான் உண்மையான "வில்லன்கள்".
பேராசிரியர் கல்யாணி என்ன தவறு செய்தார்?
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில், மண்டபம் ஊரில்
நான்கு இருளர் பழங்குடி பெண்களை "பாலியல் சித்திரவதை" செய்ததாக புகார்
வந்தது. அதை கல்விமணி கல்யாணி எடுத்து பதிவு செய்தார். அதற்காக
விருத்தாசலத்தை சேர்ந்த தங்கமணி என்ற பழங்குடி கட்சி ஓரை வைத்திருப்பவர்
ஏன் "ஆத்திரப்படவேண்டும்?".
அந்த தங்கமணியை ஆதரித்து அவருக்கு தங்க இடம் கொடுத்த
சீ.பி.எம். கட்சியின் விழுப்புரம் அலுவலகம் இந்த விவகாரத்தில் ஒன்றுமே
தெரியாமல் ஆதரித்து விட்டார்களா? அதிமுக கொடுத்த தொகுதி என்பதால்
விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்று விட்டோமே, அந்த வட்டாரத்தில்
கட்சி பலமாக இல்லையே என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு நடந்த தவறா?
ஆத்திரப்பட்ட தங்கமணி கல்யாணி மீதும், பழங்குடி தலைவர் ரமேஷ் மீதும்
வழக்கு பதிவு செய்வது முறையா?
அந்த அவ்ழக்குகளை காவல்துறை பதிவு செய்யலாமா? முதல்வர்
அறிவித்த ஐந்து லட்சம் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்களுக்கு போய் சேர்வதை
ஏன் இந்த தங்கமணி எதிர்க்க வேண்டும்? பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை
என்று ஏன் அறிக்கை கொடுக்க வேண்டும்? பாலியல் வன்புணர்ச்சி வேறு, பாலியல்
பலாத்காரம் வேறு என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை?
வடக்குமண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு, அறிவித்ததும், உதல்வர்
அறிவித்ததும் முதல் கட்ட விசாரணையில் அந்த நான்கு பெண்களை விதிகளை மீறி
காவல் நிலையத்தில் வைத்திருந்தது தவறு என்றுதானே ஐந்து காவல் அதிகாரிகளை
இடை நீக்கம் செய்தார்கள்? காட்டிற்குள் கூட்டி போனதாக அந்த பழங்குடி
பெண்கள் கூறும்போது, கூட்டி சென்ற காவலர்களை தண்டிக்க வேண்டியது
தேவைதானே?
முதல்வர் அறிவிப்பையே எதிர்க்கும் வேலையை அரசியல்வாதிகள்
"கூட்டணி குழப்பத்தில்" செய்யலாம். காவல்துறையும் செய்கிறதே? அதற்கு
தனியாக தண்டனை உண்டா?
நான்கு இருளர் பழங்குடி பெண்களை "பாலியல் சித்திரவதை" செய்ததாக புகார்
வந்தது. அதை கல்விமணி கல்யாணி எடுத்து பதிவு செய்தார். அதற்காக
விருத்தாசலத்தை சேர்ந்த தங்கமணி என்ற பழங்குடி கட்சி ஓரை வைத்திருப்பவர்
ஏன் "ஆத்திரப்படவேண்டும்?".
அந்த தங்கமணியை ஆதரித்து அவருக்கு தங்க இடம் கொடுத்த
சீ.பி.எம். கட்சியின் விழுப்புரம் அலுவலகம் இந்த விவகாரத்தில் ஒன்றுமே
தெரியாமல் ஆதரித்து விட்டார்களா? அதிமுக கொடுத்த தொகுதி என்பதால்
விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்று விட்டோமே, அந்த வட்டாரத்தில்
கட்சி பலமாக இல்லையே என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு நடந்த தவறா?
ஆத்திரப்பட்ட தங்கமணி கல்யாணி மீதும், பழங்குடி தலைவர் ரமேஷ் மீதும்
வழக்கு பதிவு செய்வது முறையா?
அந்த அவ்ழக்குகளை காவல்துறை பதிவு செய்யலாமா? முதல்வர்
அறிவித்த ஐந்து லட்சம் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்களுக்கு போய் சேர்வதை
ஏன் இந்த தங்கமணி எதிர்க்க வேண்டும்? பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை
என்று ஏன் அறிக்கை கொடுக்க வேண்டும்? பாலியல் வன்புணர்ச்சி வேறு, பாலியல்
பலாத்காரம் வேறு என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை?
வடக்குமண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு, அறிவித்ததும், உதல்வர்
அறிவித்ததும் முதல் கட்ட விசாரணையில் அந்த நான்கு பெண்களை விதிகளை மீறி
காவல் நிலையத்தில் வைத்திருந்தது தவறு என்றுதானே ஐந்து காவல் அதிகாரிகளை
இடை நீக்கம் செய்தார்கள்? காட்டிற்குள் கூட்டி போனதாக அந்த பழங்குடி
பெண்கள் கூறும்போது, கூட்டி சென்ற காவலர்களை தண்டிக்க வேண்டியது
தேவைதானே?
முதல்வர் அறிவிப்பையே எதிர்க்கும் வேலையை அரசியல்வாதிகள்
"கூட்டணி குழப்பத்தில்" செய்யலாம். காவல்துறையும் செய்கிறதே? அதற்கு
தனியாக தண்டனை உண்டா?
Tuesday, November 29, 2011
பல்டியா? பரிசீலனையா?
பல்டியா? பரிசீலனையா?
ஜெ ஆட்சி பரமக்குடி துப்பாக்கி சூடி நடத்தி ஏழு தேவேந்திரகுல மக்களை சுட்டு கொன்றது. இறந்தவர்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. சட்டமன்றத்தில் அந்த நிகழ்வை " இன மோதல்" என்று முதல்வர் வர்நித்ததுவே அவரது ஒரு சார்பு நிலையை வெளிப்படுத்துகிறது. ம.நடராசன்கூட "செந்தில்வேல் அய்.பி.எஸ்." பற்றி குறை கூறியும் அரசு அசையவில்லை. ஒய்வு பெற்ற நீதிபதி சம்பத் ஐயரை நியமித்த அரசு, கருப்பு கொடிகளையே எதிர்கொண்டது. ஆனாலும்கூட தேவேந்திர மக்கள் வாக்குகள் ராமநாதபுரத்தில் அதிமுகவிற்கே உள்ளாட்சியிலும் விழுந்தது.இத்தனையும் நடந்தும்கூட அசையாத அரசு இப்போது முதல்வர் பார்மகுடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு கூடுதலாக நான்கு லட்சம் என்றும் காயம் பட்டவர்களுக்குகூடுதளாக பதினைந்தாயிரம் என்றும் அறிவித்துள்ளார்.
நிதி மட்டுமே அறிவித்தார் என்று பார்க்க முடியாமல் இறந்தவர் குடும்பங்களின் அடுத்த வாரிசுக்கு "அரசு வேலை" என்றும் அறிவித்துள்ளார். இது உண்மையிலேயே மக்களை திருப்தி செய்யும். இவையெல்லாம் நீதிமன்றம் சென்றதால் வந்ததா? ஒவ்வொருவரும் அப்படி பெருமை பட்டு கொள்ளலாம். ஆனால் நீதிமன்றத்திற்கு அப்படி பணியக் கூடிய அதுவும் முன்கூட்டியே பணியக் கூடியவர் அரசு என்று நாம் பார்க்க முடியவில்லை. நடக்கும் ஒவ்வொரு மனித உரிமை மீறலும், விலைவாசி ஏற்றமும் மக்கள் மத்தியில் "எதிர்கட்சிகளுக்கு" செவி மடுக்கும் செயல்பாட்டிற்கு கொண்டு செல்கிறது என்ற உளவு துறை செய்தியை கேட்டிருப்பார்கள்.ஆகா. வாக்கு வங்கியை விட்டு விடக்கூடாதே என்று "மறு பரிசீலனை" வந்திருக்கிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தல் கட்சிகளுக்கு "வாக்கு வங்கிகள்"தான் முக்கியம். இதை உணர்ந்தே நாம்கூட கடந்த நாட்களில் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில், காட்சி ஊடக நமது நிகழ்வில், "மாவீரர் நாள்" அனுமதி மறுப்பையும், கைதையும், பரமக்குடி துப்பாக்கி சூட்டையும், விழுப்புரம் திருக்கோவிலூர் இருளர் பழங்குடி மீதான "பாலியல் வன்புணர்ச்சி" செய்த காவல்துறை தப்பிப்பதையும், சுட்டி காட்டி, "ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை" என்று இடித்து உரைத்தோம். அதுகூட உஅரித்திருக்கலாம். ஏன் என்றால் "இருளர் பழங்குடி" பெண்கள் பாதிப்பு பற்றி "முரசொலியை" படித்து காட்டி நேற்று நாம் நமது நிகழ்வில் பேசிய பின், வடக்கு மண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு "ஐந்து காவலர்களை" இடை நீக்கம் செய்ததை சில்லி பார்ரட்டிர்யிருந்தோம். அதனால் ஊடகங்களின் பார்வளியிலும் "கேட்ட பெயர்" வாங்காமல் இருக்கவோ, எதிர்கட்சிகளின் போராட்ட அறிவிப்புகளுக்கு தலைவனங்கியோ, அதை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதை எண்ணியோ, "மறு பரிசீலனைக்கு" ஆரசு உள்ளாகி இருக்கலாம். அதை "பல்டி' என்று நாம் சொல்ல வேண்டியது இல்லை. மக்கள் கூறினால் நாம் ஒன்றும் கூற முடியாது.
வாக்கு வங்கியை குறிவைக்கும் அரசியல்வாதிகள், " இருளர் பழங்குடி பெண்கள்" மீதான காவலர் பாலியல் வன்புணர்ச்சியை இன்னமும் நீருபணம் ஆகாவிடினும், முதல்கட்ட விசாரணையில், இரவு நேரம் பெண்களை காவல் நிலையத்தில் "வைத்திருந்தது" தெரிந்தவுடன் அய்.ஜி எடுத்த நடவடிக்கை அங்கீகரிக்க தக்கது. அதை ஒட்டி இப்போது, முதல்வர் அந்த " இருளர் பழங்குடி பெண்களுக்கு தலா ஐந்து லட்சம்" அறிவித்திருப்பதும், காவல்துரையின் "கருப்பு ஆடுகளுக்கு" ஒரு தலைவலிதான். இவாறு செய்துவந்தால் நாங்கள் ஏன் குறை சொல்கிறோம்?
அதேபோல "மாவீரர் நாளை" அனுமதி மறுப்பு கொடுத்த அதிகாரிகளிடம் மீண்டும் மாவீரர் நாள் கடைப்பிடிக்க "பொதுக்கூட்டங்கள்" நடத்த சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அனுமதி கொடுத்தால் பாராட்டலாம். மீண்டும் நாங்கள் பல்டி என்று கூற மாட்டோம். மறு பரிசீலனை என்றே கூறுவோம்.
அதேபோல உயர்நீதிமன்றத்தில் "சாந்தன், பேரறிவாளன், முருகன்" வழக்கில் தமிழக அரசு "தள்ளுபடி" செய்ய சொன்னது என்ற செய்தி "தவறு" என்றும், "இப்போது வைகோவிற்கு திருப்தியா" என்றும் அரசு தரப்பு கேட்டதே அதையும் "நல்ல மறுபரிசீலனை" என்றே கூறத் தயார். எப்படியோ எங்களுக்கு வேலை நடக்க வேண்டும். டேஹ்ர்தல் கட்சிகள் திருந்தப் ப்கிரார்கள் என்றோ, திருந்தி விடுவார்கள் என்றோ மனப்பால் குடிக்க தயாராயில்லை. அதேபோல நேற்று இரவு "சட்ட எரிப்பு நாளையும்", பரமக்குடி துப்பாக்கி சூட்டையும் வைத்து பெரியார் திக திருவல்லிகேணியில் நடத்திய போது கூட்டத்தில் "கொளத்தூர் மணி"பேச அவ்ரும்போது காவல்துறை தடுத்து நேர காரணம் கூறி கூட்டத்தை முடித்ஹ்டு கொண்டார்களே, அந்த கூட்டத்தில் உண்மையான பெரியார் தொண்டர்களை காவல் நிலையத்தில், "ரவுடிகள்" என்று குரித்ஹ்டு வைக்கும் போக்கையும் எடுத்ஹ்டு சொன்னார்களே அதையும் மாற்றி "மனித உரிமை ஆர்வலர்களுக்கு" பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷ்,ஜெசி,உமா போன்ற பெண் ஆர்வலர்கள் மீது போடப்படும் வழக்குகளை இல்லாமல் செய்யவேண்டும். காவல் அதிகாரி "காத்திருந்தோம், இப்போது வந்துவிட்டீர்கள். இனி மக்கள் மன்றத்தை பார்த்து கொள்கிறோம்" என்று ஊடகவியலாளர்களிடம் வசனம் பேசும் பாணியை நிறுத்த வேண்டும். செய்வார்களா? மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு "ஆபத்து" கூடும் நேரத்தில், எந்த நேரமும் நாடாளுமன்ற தேர்தலில் வரலாம் என்ற எண்ணத்தில், நாற்பது தொகுதியையும் கைப்பட்டார் வேண்டும் என்றால் இந்த "மறு பரிசீலனைகள்" வந்துவிடுமோ? சரி. போற்குற்றங்களுக்கு துணை போனவர் என்று அவரை தமிழ்நாட்டு மக்கள் விரட்டினாலும், இவர்களது ஆட்சிமுரையிலேயே, அவருக்கு மீண்டும் உயிர் கொடுத்து வளர்த்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று நாம் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் கூறியது காரணம் என்று நாம் பெருமை படவில்லை. இவையெல்லாமே "தானே" நடந்தவைதான்.
ஜெ ஆட்சி பரமக்குடி துப்பாக்கி சூடி நடத்தி ஏழு தேவேந்திரகுல மக்களை சுட்டு கொன்றது. இறந்தவர்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. சட்டமன்றத்தில் அந்த நிகழ்வை " இன மோதல்" என்று முதல்வர் வர்நித்ததுவே அவரது ஒரு சார்பு நிலையை வெளிப்படுத்துகிறது. ம.நடராசன்கூட "செந்தில்வேல் அய்.பி.எஸ்." பற்றி குறை கூறியும் அரசு அசையவில்லை. ஒய்வு பெற்ற நீதிபதி சம்பத் ஐயரை நியமித்த அரசு, கருப்பு கொடிகளையே எதிர்கொண்டது. ஆனாலும்கூட தேவேந்திர மக்கள் வாக்குகள் ராமநாதபுரத்தில் அதிமுகவிற்கே உள்ளாட்சியிலும் விழுந்தது.இத்தனையும் நடந்தும்கூட அசையாத அரசு இப்போது முதல்வர் பார்மகுடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு கூடுதலாக நான்கு லட்சம் என்றும் காயம் பட்டவர்களுக்குகூடுதளாக பதினைந்தாயிரம் என்றும் அறிவித்துள்ளார்.
நிதி மட்டுமே அறிவித்தார் என்று பார்க்க முடியாமல் இறந்தவர் குடும்பங்களின் அடுத்த வாரிசுக்கு "அரசு வேலை" என்றும் அறிவித்துள்ளார். இது உண்மையிலேயே மக்களை திருப்தி செய்யும். இவையெல்லாம் நீதிமன்றம் சென்றதால் வந்ததா? ஒவ்வொருவரும் அப்படி பெருமை பட்டு கொள்ளலாம். ஆனால் நீதிமன்றத்திற்கு அப்படி பணியக் கூடிய அதுவும் முன்கூட்டியே பணியக் கூடியவர் அரசு என்று நாம் பார்க்க முடியவில்லை. நடக்கும் ஒவ்வொரு மனித உரிமை மீறலும், விலைவாசி ஏற்றமும் மக்கள் மத்தியில் "எதிர்கட்சிகளுக்கு" செவி மடுக்கும் செயல்பாட்டிற்கு கொண்டு செல்கிறது என்ற உளவு துறை செய்தியை கேட்டிருப்பார்கள்.ஆகா. வாக்கு வங்கியை விட்டு விடக்கூடாதே என்று "மறு பரிசீலனை" வந்திருக்கிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தல் கட்சிகளுக்கு "வாக்கு வங்கிகள்"தான் முக்கியம். இதை உணர்ந்தே நாம்கூட கடந்த நாட்களில் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில், காட்சி ஊடக நமது நிகழ்வில், "மாவீரர் நாள்" அனுமதி மறுப்பையும், கைதையும், பரமக்குடி துப்பாக்கி சூட்டையும், விழுப்புரம் திருக்கோவிலூர் இருளர் பழங்குடி மீதான "பாலியல் வன்புணர்ச்சி" செய்த காவல்துறை தப்பிப்பதையும், சுட்டி காட்டி, "ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை" என்று இடித்து உரைத்தோம். அதுகூட உஅரித்திருக்கலாம். ஏன் என்றால் "இருளர் பழங்குடி" பெண்கள் பாதிப்பு பற்றி "முரசொலியை" படித்து காட்டி நேற்று நாம் நமது நிகழ்வில் பேசிய பின், வடக்கு மண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு "ஐந்து காவலர்களை" இடை நீக்கம் செய்ததை சில்லி பார்ரட்டிர்யிருந்தோம். அதனால் ஊடகங்களின் பார்வளியிலும் "கேட்ட பெயர்" வாங்காமல் இருக்கவோ, எதிர்கட்சிகளின் போராட்ட அறிவிப்புகளுக்கு தலைவனங்கியோ, அதை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதை எண்ணியோ, "மறு பரிசீலனைக்கு" ஆரசு உள்ளாகி இருக்கலாம். அதை "பல்டி' என்று நாம் சொல்ல வேண்டியது இல்லை. மக்கள் கூறினால் நாம் ஒன்றும் கூற முடியாது.
வாக்கு வங்கியை குறிவைக்கும் அரசியல்வாதிகள், " இருளர் பழங்குடி பெண்கள்" மீதான காவலர் பாலியல் வன்புணர்ச்சியை இன்னமும் நீருபணம் ஆகாவிடினும், முதல்கட்ட விசாரணையில், இரவு நேரம் பெண்களை காவல் நிலையத்தில் "வைத்திருந்தது" தெரிந்தவுடன் அய்.ஜி எடுத்த நடவடிக்கை அங்கீகரிக்க தக்கது. அதை ஒட்டி இப்போது, முதல்வர் அந்த " இருளர் பழங்குடி பெண்களுக்கு தலா ஐந்து லட்சம்" அறிவித்திருப்பதும், காவல்துரையின் "கருப்பு ஆடுகளுக்கு" ஒரு தலைவலிதான். இவாறு செய்துவந்தால் நாங்கள் ஏன் குறை சொல்கிறோம்?
அதேபோல "மாவீரர் நாளை" அனுமதி மறுப்பு கொடுத்த அதிகாரிகளிடம் மீண்டும் மாவீரர் நாள் கடைப்பிடிக்க "பொதுக்கூட்டங்கள்" நடத்த சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அனுமதி கொடுத்தால் பாராட்டலாம். மீண்டும் நாங்கள் பல்டி என்று கூற மாட்டோம். மறு பரிசீலனை என்றே கூறுவோம்.
அதேபோல உயர்நீதிமன்றத்தில் "சாந்தன், பேரறிவாளன், முருகன்" வழக்கில் தமிழக அரசு "தள்ளுபடி" செய்ய சொன்னது என்ற செய்தி "தவறு" என்றும், "இப்போது வைகோவிற்கு திருப்தியா" என்றும் அரசு தரப்பு கேட்டதே அதையும் "நல்ல மறுபரிசீலனை" என்றே கூறத் தயார். எப்படியோ எங்களுக்கு வேலை நடக்க வேண்டும். டேஹ்ர்தல் கட்சிகள் திருந்தப் ப்கிரார்கள் என்றோ, திருந்தி விடுவார்கள் என்றோ மனப்பால் குடிக்க தயாராயில்லை. அதேபோல நேற்று இரவு "சட்ட எரிப்பு நாளையும்", பரமக்குடி துப்பாக்கி சூட்டையும் வைத்து பெரியார் திக திருவல்லிகேணியில் நடத்திய போது கூட்டத்தில் "கொளத்தூர் மணி"பேச அவ்ரும்போது காவல்துறை தடுத்து நேர காரணம் கூறி கூட்டத்தை முடித்ஹ்டு கொண்டார்களே, அந்த கூட்டத்தில் உண்மையான பெரியார் தொண்டர்களை காவல் நிலையத்தில், "ரவுடிகள்" என்று குரித்ஹ்டு வைக்கும் போக்கையும் எடுத்ஹ்டு சொன்னார்களே அதையும் மாற்றி "மனித உரிமை ஆர்வலர்களுக்கு" பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷ்,ஜெசி,உமா போன்ற பெண் ஆர்வலர்கள் மீது போடப்படும் வழக்குகளை இல்லாமல் செய்யவேண்டும். காவல் அதிகாரி "காத்திருந்தோம், இப்போது வந்துவிட்டீர்கள். இனி மக்கள் மன்றத்தை பார்த்து கொள்கிறோம்" என்று ஊடகவியலாளர்களிடம் வசனம் பேசும் பாணியை நிறுத்த வேண்டும். செய்வார்களா? மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு "ஆபத்து" கூடும் நேரத்தில், எந்த நேரமும் நாடாளுமன்ற தேர்தலில் வரலாம் என்ற எண்ணத்தில், நாற்பது தொகுதியையும் கைப்பட்டார் வேண்டும் என்றால் இந்த "மறு பரிசீலனைகள்" வந்துவிடுமோ? சரி. போற்குற்றங்களுக்கு துணை போனவர் என்று அவரை தமிழ்நாட்டு மக்கள் விரட்டினாலும், இவர்களது ஆட்சிமுரையிலேயே, அவருக்கு மீண்டும் உயிர் கொடுத்து வளர்த்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று நாம் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் கூறியது காரணம் என்று நாம் பெருமை படவில்லை. இவையெல்லாமே "தானே" நடந்தவைதான்.
Monday, November 28, 2011
கொலைவெறி எழுத்துக்களுக்கு கொடுப்பினை எது?
எழுத்துக்கள் புத்தகங்களில், ஏடுகளில், இணைய தளங்களில், வரும்போது, சில சிலருக்கு எரிச்சலை உண்டுபண்ணும். சில சிலருக்கு உற்சாகத்தை டஹ்ரும். சில சிலருக்கு தென்றலாய் தெரியும். இப்படி எழுத்துக்களில் பலவகை உள்ளது. அதில் பலரையும் பாதிக்கக்கூடிய எழுத்துக்களை சில நேரங்களில், வக்கிரபுத்தி எழுத்துக்கள் எனவும், "கொலைவெறி" எழுத்துக்கள் எனவும் குறிப்பிடலாம். அப்படி எழுத்தியவற்றிற்கு சில நேரங்களில் "பதில்" என்பது வெவேறு வகைகளில் கிடைக்கும். அப்படி ஒன்று இரண்டு நாட்கள் முன்னால் நடந்தது. அந்த தமிழ் ஏடு பிரபல ஏடு. அந்த ஏட்டில் தொடர்ந்தது "தமிழர்" பிரச்சனைகளில் "எதிர் சார்பு" நிலையையே எடுத்து வருவது கண்கூடு.
"புலவர்கள் பெண்களை பூ எனச் சொன்னான் , புலியாய் மாற்றினார் அண்ணன்.புலவர்கள் பெண்களை மான் எனச் சொன்னார். நெருப்பாய் மாற்றினார் அண்ணன்" என்ற பாடல் வரிகளுக்கு அந்த நான்கு பெண்களும் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். "பூ" எனும்போதும், "மான்" எனும்போதும் விரல் அசைவுகளில் நடன நளினம் அந்த இளம் தமிழ் பெண்களுக்கு ஓடி வந்தது. அண்ணன் பிரபாகரன் பற்றி நவம்பர் 26 ஆம் நாள் பிறந்த நாளிலும், நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளிலும் அந்த பாடல்கள் நடனங்களாக நாம் இருப்பது கிளிநோச்சியிலா என வியக்கும் அளவுக்கு விழித்த கண்களை மூடமுடியாமல் நாம் அமர்ந்திருந்தோம். அந்த நான்கு பெண்களின் நடனத்தில் ஒரு இளம் தோழியை காணவில்லையே? ஆம். அதுதான் "செங்கொடி". செங்கொடியின் விரல்கள் பூ என விரிந்து காட்டும். மான் என மடங்கி காட்டும். அந்த நளினம் நம் கண்களை விட்டு அகலவில்லை. அன்று "செங்கொடியின் நினைவு மண்டபம்" திறந்தார்கள்.அதற்கான நிகழ்ச்சி மேடையில்தான் இந்த நடனம்.
அவ்வாறு நிகழ்வு சென்று கொண்டிருக்கும் போது, மேடையின் எதிரே நாம் அமர்ந்து இருந்தோம். எங்களுக்கு இடதுபுறம், கூட்டத்தை எல்லாம் தாண்டி திடீரென ஒரு சல,சலப்பு. ஒரு "சாமி வேடம்" போட்டவர் ஓடிக்கொண்டிருந்தார். அவரை சிலர் துரத்தி கொண்டு ஓடினர். திருப்பதிக்கோ, பழனிக்கோ போகும் நபர் இங்கு எண்ண "தவறு"செய்து விட்டு "ஓடுகிறார்" என்று கேட்டேன்.எதற்காக அவர் இங்கே அதுவும், காஞ்சி மாவட்டம் மேலக் கதிர்புரின், மனகல்ம்பாடி என்ற "சென்கொடியூரில்" உலகிடை கிராமத்தில் ஓடவேண்டும் என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு "திருடன்" மாட்டிக் கொண்டதுபோல "தலை தெறிக்க" ஓடுகிறானே? பின்னால் ஓடுபவர்கள் ஏன் துரத்த வேண்டும்? குக்கிராமத்திற்குள் வந்து ஒருவன் ஓடவேண்டும் என்றால் அவன் "தவறு செய்து விட்டு: அதை உணர்ந்து தானே ஓடவேண்டும்? எல்லோரும் உட்காருங்கள் என்றனர். பொதுமக்கள் மேடை நிகழ்வில் மீண்டும் மூழ்கிப் போனோம். எதிராய் இருந்தாலும் அடிக்கவேண்டாம் என்று முன்னால் ச.ம.உ.வேல்முருகன் கூறினார். இங்கே எதற்கு எதிரி வருகிறான் என்று நாம் கேட்டுக் கொண்டு அம்ர்தந்து விட்டோம்.
அதற்கு பிறகு ஓடியவன் அந்த "தமிழ் ஏட்டின் நிருபர்" என்றனர். ஊடகமா என விசாரிக்க போனேன். ஆமாம். அவன் வந்திருந்தான். அவனை ஏற்கனவே காஞ்சிபுரம் கார்களுக்கு தெரியும். அவன்தான் செங்கொடி மரணத்தை தழுவிய மறுநாள் அவர்கள் ஏட்டிலே "வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொண்டுவந்து போட்டார்கள் என்று எழுதியவன். ஏன் இப்போது இங்கே வந்தாய் என ஒரு பையன கேட்டான். நான் ஊடகம் என்றான். அப்படியானால் அன்று ஏன் செங்கொடி பற்றி பொய்யாக எழுதினாய் இன்னொருவன் கேட்டான். ஆராய்ந்துதான் எழுதினேன் என "திமிறாய்" பதில் சொன்னான். டேய் என ஒரு பையன சொல்ல, "ஓடத்" தொடங்கிவிட்டான். நின்றிருந்தால்கூட யாரும் அடிக்க முனைய மாட்டார்கள். ஓடத் தொடங்கியவனை சிலர் "துரத்த" தொடங்கினர். இது சாதாரண மக்கள் பழக்கம். ஊடகக்காரன் எங்காவது பேசும்போதே "ஓடுவானா?". அவனுக்கு அப்படி "நடக்க" சொல்லிக்கொடுத்து "அனுப்பி இருக்கிறார்களா?". தெரியவில்லை.
அடித்து விட்டு சிலர் வந்து விட்டார்கள். வந்தவனும் ஓடிவிட்டான். அந்த குக்கிராமத்தில், காஞ்சியிலிருந்து எட்டு கிலோ மேட்டார் தூரம் கொண்ட மன்கலபாடியில், அவனை குறி வைத்து அடிக்க யாரும் எண்ணியிருந்தால், அவனை மீண்டும் ஓடிப்போ என விட வேண்டிய அவசியம் இல்லையே? இத்தனை தூரம் காவல்துறை யோசீக்காதா? அங்கே நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் அது தெரியுமே? அப்படி இருக்கும் போது, ஏன் மறுநாள் வந்து மக்கள் மன்றம் "மகேஷ் உட்பட, ஜெசி, உமா" என்ற பெண்களுடன் பதின்மூன்று பேரை காவல்துறை அள்ளி சென்று வேலூர் சிறையில் அடைக்கவேண்டும்? அந்த நிகழ்வு நடக்கும்போது மக்கள்மன்றம் மகேஷ், ஜெசி, உமா போன்றோர் எங்களுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்? அவர்களுக்கும் அந்த "ஓட்டமும், விரட்டலும்" ஆச்சர்யமாக இருந்ததே? எப்படி அவர்களை காவல்துறை "கைது" செய்ய முடியும்?
மேலிருந்து வந்த உத்தரவாமே? யார் அந்த மேலிருந்து ? ஓகோ. அதுதான் அந்த "தமிழ் ஏட்டின்" முதலாளியா? அவர்தானே "செங்கொடி" பற்றி மோசமாக எழுதி தமிழ்நாட்டில் "கலவரம்" உருவாக்க காரணமானவர்? அவர்தானே "மூன்று தமிழர் உயிர் காக்க" சட்டமன்ற தீர்மானம் போட்டும்கூட, "தூக்கு போடவேண்டும்" என்று எழுதி, தமிழ்நாட்டில் "கலவரம்" உருவாகாதா? என்று காத்து கிடந்தவர்? வேண்டும் என்றே அந்த ஏட்டின் முதலாளிகள் இந்த மக்கள் மாற நிகழ்ச்சியை "பாழ்" படுத்த அப்படி ஒரு ஆளை அனுப்பி இருப்பார்கள் என்று ஒரு சென்னையின் மூத்த ஊடகத்தார் என்னிடம் கூறினார். இப்படி எழுதுவதும், அதன் பிறகு அத்தனை தூரம் உள்ள கிராமத்திற்கு இப்படி ஆளை "திட்டமிட்டு" அனுப்புவதும், அங்கே போய் "கூட்டம் முன்னால் ஓடச்ச்சொவதும்" எல்லாமே சென்னையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட "நாடகம்" என்று தெரிய வந்துள்ளது.
மூன்று தமிழர் உயிரை "பறிக்க" எண்ணும் சக்திகள் அந்த கொலைவெறி எழுத்துகளுக்கு பின்னால் நின்றுகொண்டு, இன்று "கண்டனம்" வேறு கொடுக்கின்றனவே? கொலைவெறி எழுத்தில் மட்டுமல்ல, நாடகத்தை திட்டமிடுவதிலும், அதை அரங்கேற்றி மக்கள் மன்றத்தை முடக்க நினைப்பதிலும், அதை ஒட்டி தனது ஆதரவு சக்திகளை அணிதிரட்டுவதிலும், தொடர்வது ஏன்? மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸியும்,மற்ற தோழர்களுடன் சேர்ந்து கொண்டு, தமிழ்நாட்டில் "கடைக்கோடியில்" இருக்கும் இதுவரை எழுந்துவராத, எளிதில் எழுப்ப முடியாமால் பிறர் "தோற்றுப் போன" இருளர் மக்களை "பொறுமையாக" கிராமம், கிராமமாக சென்று பேசி, அணிதிரட்டி, அவர்கள் வீட்டு குழந்தளைகளை படிக்க வைத்து, உணர்வுள்ளவர்களாக, கல்வி கற்பவர்களாக, நடனம் ஆடவும், பாட்டு பாடவும், பழகி கொடுத்து சமூகத்தில் ஒரு "மரியாதையை" அவர்களுக்கு வாங்கி கொடுக்க உதவி விட்டார்களே? என்ற ஆதங்கம், "இரண்டாயிரம் ஆண்டுகளாக" அவர்களை போட்டு கடைசி மட்டத்தில் "ஒடுக்கி" வைத்திருந்த சக்திகளுக்கு "கோபத்தை" உருவாக்கத்தானே செய்யும்?
இத்தகைய "ஆதிக்க சக்திகளின்" "கொலைவெறி அரசியலையும்" அவர்களது "நாடக நடிப்பையும்" நாம் அடையாளம் காணவேண்டும். அவர்களது ஏட்டில்அவர்களது நிருபர் அடிபட்டதாக போட்ட "படமே"அதை அமபலப்படுத்தும். ஒரு "சுண்டு விரலில்" கட்டு போட்டுக் கொண்டு அவர் படத்திற்குமுகம் காட்டுவது நகைப்பை உருவாக்கும். இத்தகைய வழக்குகளை மேலிருந்து என்று கூறாமல், காவல்துறை "சரியாக ஆராய்ந்து" பார்க்குமானால் காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கை வரும். இல்லாவிட்டால் அவர்களும், "வரலாற்றின் குப்பை மேடுகளை" தேடிச் செல்வர்.
"புலவர்கள் பெண்களை பூ எனச் சொன்னான் , புலியாய் மாற்றினார் அண்ணன்.புலவர்கள் பெண்களை மான் எனச் சொன்னார். நெருப்பாய் மாற்றினார் அண்ணன்" என்ற பாடல் வரிகளுக்கு அந்த நான்கு பெண்களும் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். "பூ" எனும்போதும், "மான்" எனும்போதும் விரல் அசைவுகளில் நடன நளினம் அந்த இளம் தமிழ் பெண்களுக்கு ஓடி வந்தது. அண்ணன் பிரபாகரன் பற்றி நவம்பர் 26 ஆம் நாள் பிறந்த நாளிலும், நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளிலும் அந்த பாடல்கள் நடனங்களாக நாம் இருப்பது கிளிநோச்சியிலா என வியக்கும் அளவுக்கு விழித்த கண்களை மூடமுடியாமல் நாம் அமர்ந்திருந்தோம். அந்த நான்கு பெண்களின் நடனத்தில் ஒரு இளம் தோழியை காணவில்லையே? ஆம். அதுதான் "செங்கொடி". செங்கொடியின் விரல்கள் பூ என விரிந்து காட்டும். மான் என மடங்கி காட்டும். அந்த நளினம் நம் கண்களை விட்டு அகலவில்லை. அன்று "செங்கொடியின் நினைவு மண்டபம்" திறந்தார்கள்.அதற்கான நிகழ்ச்சி மேடையில்தான் இந்த நடனம்.
அவ்வாறு நிகழ்வு சென்று கொண்டிருக்கும் போது, மேடையின் எதிரே நாம் அமர்ந்து இருந்தோம். எங்களுக்கு இடதுபுறம், கூட்டத்தை எல்லாம் தாண்டி திடீரென ஒரு சல,சலப்பு. ஒரு "சாமி வேடம்" போட்டவர் ஓடிக்கொண்டிருந்தார். அவரை சிலர் துரத்தி கொண்டு ஓடினர். திருப்பதிக்கோ, பழனிக்கோ போகும் நபர் இங்கு எண்ண "தவறு"செய்து விட்டு "ஓடுகிறார்" என்று கேட்டேன்.எதற்காக அவர் இங்கே அதுவும், காஞ்சி மாவட்டம் மேலக் கதிர்புரின், மனகல்ம்பாடி என்ற "சென்கொடியூரில்" உலகிடை கிராமத்தில் ஓடவேண்டும் என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு "திருடன்" மாட்டிக் கொண்டதுபோல "தலை தெறிக்க" ஓடுகிறானே? பின்னால் ஓடுபவர்கள் ஏன் துரத்த வேண்டும்? குக்கிராமத்திற்குள் வந்து ஒருவன் ஓடவேண்டும் என்றால் அவன் "தவறு செய்து விட்டு: அதை உணர்ந்து தானே ஓடவேண்டும்? எல்லோரும் உட்காருங்கள் என்றனர். பொதுமக்கள் மேடை நிகழ்வில் மீண்டும் மூழ்கிப் போனோம். எதிராய் இருந்தாலும் அடிக்கவேண்டாம் என்று முன்னால் ச.ம.உ.வேல்முருகன் கூறினார். இங்கே எதற்கு எதிரி வருகிறான் என்று நாம் கேட்டுக் கொண்டு அம்ர்தந்து விட்டோம்.
அதற்கு பிறகு ஓடியவன் அந்த "தமிழ் ஏட்டின் நிருபர்" என்றனர். ஊடகமா என விசாரிக்க போனேன். ஆமாம். அவன் வந்திருந்தான். அவனை ஏற்கனவே காஞ்சிபுரம் கார்களுக்கு தெரியும். அவன்தான் செங்கொடி மரணத்தை தழுவிய மறுநாள் அவர்கள் ஏட்டிலே "வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொண்டுவந்து போட்டார்கள் என்று எழுதியவன். ஏன் இப்போது இங்கே வந்தாய் என ஒரு பையன கேட்டான். நான் ஊடகம் என்றான். அப்படியானால் அன்று ஏன் செங்கொடி பற்றி பொய்யாக எழுதினாய் இன்னொருவன் கேட்டான். ஆராய்ந்துதான் எழுதினேன் என "திமிறாய்" பதில் சொன்னான். டேய் என ஒரு பையன சொல்ல, "ஓடத்" தொடங்கிவிட்டான். நின்றிருந்தால்கூட யாரும் அடிக்க முனைய மாட்டார்கள். ஓடத் தொடங்கியவனை சிலர் "துரத்த" தொடங்கினர். இது சாதாரண மக்கள் பழக்கம். ஊடகக்காரன் எங்காவது பேசும்போதே "ஓடுவானா?". அவனுக்கு அப்படி "நடக்க" சொல்லிக்கொடுத்து "அனுப்பி இருக்கிறார்களா?". தெரியவில்லை.
அடித்து விட்டு சிலர் வந்து விட்டார்கள். வந்தவனும் ஓடிவிட்டான். அந்த குக்கிராமத்தில், காஞ்சியிலிருந்து எட்டு கிலோ மேட்டார் தூரம் கொண்ட மன்கலபாடியில், அவனை குறி வைத்து அடிக்க யாரும் எண்ணியிருந்தால், அவனை மீண்டும் ஓடிப்போ என விட வேண்டிய அவசியம் இல்லையே? இத்தனை தூரம் காவல்துறை யோசீக்காதா? அங்கே நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் அது தெரியுமே? அப்படி இருக்கும் போது, ஏன் மறுநாள் வந்து மக்கள் மன்றம் "மகேஷ் உட்பட, ஜெசி, உமா" என்ற பெண்களுடன் பதின்மூன்று பேரை காவல்துறை அள்ளி சென்று வேலூர் சிறையில் அடைக்கவேண்டும்? அந்த நிகழ்வு நடக்கும்போது மக்கள்மன்றம் மகேஷ், ஜெசி, உமா போன்றோர் எங்களுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்? அவர்களுக்கும் அந்த "ஓட்டமும், விரட்டலும்" ஆச்சர்யமாக இருந்ததே? எப்படி அவர்களை காவல்துறை "கைது" செய்ய முடியும்?
மேலிருந்து வந்த உத்தரவாமே? யார் அந்த மேலிருந்து ? ஓகோ. அதுதான் அந்த "தமிழ் ஏட்டின்" முதலாளியா? அவர்தானே "செங்கொடி" பற்றி மோசமாக எழுதி தமிழ்நாட்டில் "கலவரம்" உருவாக்க காரணமானவர்? அவர்தானே "மூன்று தமிழர் உயிர் காக்க" சட்டமன்ற தீர்மானம் போட்டும்கூட, "தூக்கு போடவேண்டும்" என்று எழுதி, தமிழ்நாட்டில் "கலவரம்" உருவாகாதா? என்று காத்து கிடந்தவர்? வேண்டும் என்றே அந்த ஏட்டின் முதலாளிகள் இந்த மக்கள் மாற நிகழ்ச்சியை "பாழ்" படுத்த அப்படி ஒரு ஆளை அனுப்பி இருப்பார்கள் என்று ஒரு சென்னையின் மூத்த ஊடகத்தார் என்னிடம் கூறினார். இப்படி எழுதுவதும், அதன் பிறகு அத்தனை தூரம் உள்ள கிராமத்திற்கு இப்படி ஆளை "திட்டமிட்டு" அனுப்புவதும், அங்கே போய் "கூட்டம் முன்னால் ஓடச்ச்சொவதும்" எல்லாமே சென்னையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட "நாடகம்" என்று தெரிய வந்துள்ளது.
மூன்று தமிழர் உயிரை "பறிக்க" எண்ணும் சக்திகள் அந்த கொலைவெறி எழுத்துகளுக்கு பின்னால் நின்றுகொண்டு, இன்று "கண்டனம்" வேறு கொடுக்கின்றனவே? கொலைவெறி எழுத்தில் மட்டுமல்ல, நாடகத்தை திட்டமிடுவதிலும், அதை அரங்கேற்றி மக்கள் மன்றத்தை முடக்க நினைப்பதிலும், அதை ஒட்டி தனது ஆதரவு சக்திகளை அணிதிரட்டுவதிலும், தொடர்வது ஏன்? மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸியும்,மற்ற தோழர்களுடன் சேர்ந்து கொண்டு, தமிழ்நாட்டில் "கடைக்கோடியில்" இருக்கும் இதுவரை எழுந்துவராத, எளிதில் எழுப்ப முடியாமால் பிறர் "தோற்றுப் போன" இருளர் மக்களை "பொறுமையாக" கிராமம், கிராமமாக சென்று பேசி, அணிதிரட்டி, அவர்கள் வீட்டு குழந்தளைகளை படிக்க வைத்து, உணர்வுள்ளவர்களாக, கல்வி கற்பவர்களாக, நடனம் ஆடவும், பாட்டு பாடவும், பழகி கொடுத்து சமூகத்தில் ஒரு "மரியாதையை" அவர்களுக்கு வாங்கி கொடுக்க உதவி விட்டார்களே? என்ற ஆதங்கம், "இரண்டாயிரம் ஆண்டுகளாக" அவர்களை போட்டு கடைசி மட்டத்தில் "ஒடுக்கி" வைத்திருந்த சக்திகளுக்கு "கோபத்தை" உருவாக்கத்தானே செய்யும்?
இத்தகைய "ஆதிக்க சக்திகளின்" "கொலைவெறி அரசியலையும்" அவர்களது "நாடக நடிப்பையும்" நாம் அடையாளம் காணவேண்டும். அவர்களது ஏட்டில்அவர்களது நிருபர் அடிபட்டதாக போட்ட "படமே"அதை அமபலப்படுத்தும். ஒரு "சுண்டு விரலில்" கட்டு போட்டுக் கொண்டு அவர் படத்திற்குமுகம் காட்டுவது நகைப்பை உருவாக்கும். இத்தகைய வழக்குகளை மேலிருந்து என்று கூறாமல், காவல்துறை "சரியாக ஆராய்ந்து" பார்க்குமானால் காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கை வரும். இல்லாவிட்டால் அவர்களும், "வரலாற்றின் குப்பை மேடுகளை" தேடிச் செல்வர்.
Friday, November 25, 2011
சென்னையில் அணு உலை எதிர்ப்பு களம்
எல்லோரும் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது சரியா? இல்லையா? என்று சர்ச்சை செய்துவரும் வேளையில் சென்னையில் இன்று " சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்ற அமைப்பை அறிவித்து,பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன், உணவு பொருள்கள் விநியோக சங்கங்களின் தலைவர், மற்றும் உலக தமிழர் பேரமைப்பின் பொருளாளர், தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபரும், நில உடமையாலருமான சென்னை வாழ் பிரமுகர் சந்தரேசன், அறிவியலாளரும், திருவனந்தபுரம் பிரமுகரும், அணு உலைகளின் ஆய்வுகள் மூலம் அணு பாதிப்பு கதிர்வீச்சை கருவி கொண்டு அளந்து விளக்கும் விஞ்ஞானியும், கர்நாடகாவில் கிகா அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் இப்போது ஈடுபட்டு வருபவரும், இருபத்தைந்து ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துடன் தன்னை இணைத்து கொண்டவருமான வி.டி.பத்மநாபனும், முதலில் பேசினர்.
வி.டி.பத்மநாபன் தான் தயாரித்த "பவர் பாயிண்ட் பிரசெண்டேசனை" சென்னை பத்திரிகையாளர் மத்தியில் திரையில் போட்டு காண்பித்தார். அதில் அணு உலைகள் கூடங்குளத்தில் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்றும் விளக்கினார். அணு உலைகளுக்கு எப்படி எரிபொருளான யுரேனியும் முக்கியமோ, அதுபோல நல்ல சுத்தமான தண்ணீரும் முக்கியம் என்றார். அதாவது அயோடின் இல்லாத,கணிமதன்மை இல்லாத தண்ணீரை "குளிரூட்ட" அணு உலைகளுக்கு சுற்றி ஓடவிடும் போது மட்டும்தான் "அணு உலைகளிலிருந்து" வெளிவரும் வெப்பமான "கதிர்வீச்ச்சு" கட்டுப்படும் என்ற உண்மையை போட்டு உடைத்தார். இதையே கூறித்தான் அணு உலைக்கு ஆதரவான விஞ்ஞானிகளும் நம்மை பயமுறுத்த, அந்த குளிரூட்டல் தஹ்டுக்கப்பட்டால் இப்போதே கூடங்குளத்தில் விபரீதம் ஏற்படுத்தப்படும் என்று அறிக்கை விட்டு வருகின்றனர்.
அத்தைகைய தண்ணீரை கூடங்குளம் அணு உலைகள் பெறுவதற்கு எண்ண ஏற்பாடு என்று அவர் நிர்வாகத்தை கேட்டார். அப்படி ஒரு நாளைக்கு 2500 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவை என்றார். அதற்கு நிர்வாகம் எண்ண ஏற்பாடு செய்துள்ளது என்று கேட்டார். இத கேள்வியை வி.டி.பி. ஒரு கருத்தரங்கில் வட மாநிலத்தில் கேட்ட போது மறுநாளே கூடங்குளம் அணு நிர்வாக தலைவர் காசிநாத் பாலாஜி, தாங்கள் எட்டாயிரம் கியூபிக் மீட்டார் தண்ணீரை "கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்" கொண்டு வார இருப்பதாக ஒரு மழுப்பல் அறிககையை கொடுத்தார் என்றார். அதுவும் போதாது. பத்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இவர்களால் கூடங்குளத்தில் கொண்டுவரப்பட்டாலும் எந்த நேரத்திலும் அவை "பழுதுபடலாம்" என்றார். அப்போது மாற்று ஏற்பாடு தண்ணீருக்கு எங்கே இருக்கிறது என்று வினவினார்.
அதற்காக "பேச்சிப்பாறை அணைக்கட்டு" தண்ணீரையோ, "கோதையாறு அணிக்கட்டு" தண்ணீரையோ எடுத்து வார அணு உலை நிர்வாகம் ஆசைப்பட்டால் அங்குள்ள விவசாயிகள் எப்படி அனுமதிப்பார்கள்? ஏற்கனவே பேச்சிப்பாறை விவசாயிகளின் "பாசன பாதுகாப்பு சங்கம்" 1987 இலிருந்தே தங்கள் தண்ணீரை எடுப்பதை எதிர்த்து போராடி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அணு உலையை சிறிது, சிறிதாக செயல் இழக்க செய்து, "இருபத்து நாலு மணி நேரத்தில்" வெடிக்க செய்யும் என்று அறிவியலாளர் பத்மநாபன் விளக்கினார். இத்தகைய பெரும் தடங்களை வைத்துக் கொண்டுதான் இவர்கள் கூடங்குளம் அணு உலையில் "பாதுகாப்பு" பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள் என்பது அம்பலமானது.
அடுத்து மனித நேய மக்கள் கட்சியின் போது செயலாளர் அப்துல் சமத் பேசினார். இவர் கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். அதனால் அங்குள்ள நிலைமைகளை விளக்கினார். எந்த அளவுக்கு கல்பாக்கம் அணு உலைகளின் " கதிரியக்க கசிவுகள்" அங்குள்ள கிராமங்களில் "புற்று னையை" ஏற்படுத்தி உள்ளது என்று பட்டியலிட்டார். மருத்துவர் புகழேந்தி அது பற்றி உண்மை விவரங்களை கூறியதற்காக அந்த அணு உலை நிர்வாகம் அவர் மீது குறி வைத்து வழக்குகளில் சிக்க வைக்க திட்டமிடுவதும் அங்கே தெரிய முடிந்தது. இப்போது புதிய "ஈனுலை" என்று ஒரு உலையை கொண்டுவர முயர்ச்சிப்பதை எத்ரிக்க வேண்டும் என்றார். கல்பாக்கம் மக்கள் படும் அவதி போதுமென்றும், அந்த கொடுமை கூடன்குலத்திற்கும் வேண்டாம் என்றும் கூறினார்.
அடுத்து பேசிய இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் யாரிடம் கேட்டு இவர்கள் கூறுகின்ற யுரேனியத்தை உள்ளே கொடன்னு வந்தார்கள் என்றார். அமெரிக்காவிற்கு முழுவதும் அடிமை ஆவதும், அணுகுண்டு தயாரிக்க திட்டமிடுவதும் இவர்களது முயற்சியா? என்று வினவினார். அதை அடுத்து மக்கள் சிவில் உரிமை கழகத்தின்{ பி.யு.சீ.எல்.} தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி பேசினார்.அவரது இருபத்தைந்தாண்டு கூடங்குளம் எதிர்ப்பு போராட அனுபவங்களை கூறினார். இந்த எதிர்ப்பு இப்போது உருவானந்து என்பதே ஒரு பொய் என்றார்.இத்தனை ஆண்டுகளாக மக்களது கவலையை போக்க அரசுகள் முயற்சி செய்யாதது யார் தவறு என்று கேட்டார்.
1962 ஆம் ஆண்டு அணு சட்டப்படி இவர்கள் அனைத்தையும் அணு சக்தி துறைக்கு மட்டுமே ரகசியமாக வைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 2005 ஆம் ஆண்டு "தகவல் பெரும் உரிமை சட்டம்" உருவானதை நினைவு படுத்தி, பகுஷிமா விபத்திற்கு பிறகு அந்த தகவல் பெரும் உரிமையை மக்களுக்கு அளித்து உண்மையை அரசு கூறவேண்டும் என்றார். அதற்கான மைச்சரவை தீர்மானந்தை தமிழக அரசு போட்டதற்காக மத்திய "அய்.மு.கூ. அரசு " தமிழ்நாட்டை பழி வாங்குகிறது என்றார். அதற்காக அணு சக்தி துறை மூலமும், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மூலமும், பல கோடி பணத்தை செலவழித்து "அணு உலை ஆதரவை" கிளப்பி விடுகிறார்கள் என்றார். 1998 ஆம் ஆண்டு நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் உள்ள "ஊடகத்துறை வசம்" ஒரு கோடி ரூபாய் தருகிறோம், அணு பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள் எனு லஞ்ச்ச்மா கொடுக்க முயன்றதை சுட்டி காட்டினார். இப்போது அதுவே பல நூறு கோடி லஞ்சமாக மாறிவிட்டது என்றார். ஆகவே அணு உலை ஆதரவாலர்களுக்குதான் பல கோடி ரூபாய் வருகிறது என்றார்.
அமெரிக்கா அணு சக்தி சட்டத்தை அதாவது 123 சட்டத்தை அமுலாக, பல அணு உலைகளை இந்தியாவிற்கு கொண்டுவர பல நூறு கொடிகளை, அமெரிக்கா அணு உலை அதாரவுக்கு செலவழிக்கிறது என்றார். அதையே அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது பழி போட திசை திருப்புகிறார்கள் என்றார். மக்கள் இயக்கத்தை யாரும் ஒச்சைப்படுத்த முடியாது என்றார். அடுத்து பேசிய பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி, தானும் கல்பாக்கம் பகுதிகாரர்தான் என்று கூறி, தன்கள் பகுதியில் எத்தனை சொந்த கற்ற தலித்துகள் கல்பாக்கம் அணு உலை கதிர் வீச்சால் "புற்று நோய் " வந்து அவதிப்படுகிறார்கள் என்று விளக்கினார்.
மொத்தத்தில் "கிருத்துவர்கள் மட்டுமே எதிர்ப்பதாக" பொய்யை கிளப்பிவிட்ட அர்சுதுரைக்கு, கிருத்துவர் அல்லாத பல முக்கிய பிரமுகர்கள் இந்த சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம் என்ற அமைப்பை உருவாக்கி இருப்பது பெரும் "பதிலடியாக" இருக்கும்.
வி.டி.பத்மநாபன் தான் தயாரித்த "பவர் பாயிண்ட் பிரசெண்டேசனை" சென்னை பத்திரிகையாளர் மத்தியில் திரையில் போட்டு காண்பித்தார். அதில் அணு உலைகள் கூடங்குளத்தில் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்றும் விளக்கினார். அணு உலைகளுக்கு எப்படி எரிபொருளான யுரேனியும் முக்கியமோ, அதுபோல நல்ல சுத்தமான தண்ணீரும் முக்கியம் என்றார். அதாவது அயோடின் இல்லாத,கணிமதன்மை இல்லாத தண்ணீரை "குளிரூட்ட" அணு உலைகளுக்கு சுற்றி ஓடவிடும் போது மட்டும்தான் "அணு உலைகளிலிருந்து" வெளிவரும் வெப்பமான "கதிர்வீச்ச்சு" கட்டுப்படும் என்ற உண்மையை போட்டு உடைத்தார். இதையே கூறித்தான் அணு உலைக்கு ஆதரவான விஞ்ஞானிகளும் நம்மை பயமுறுத்த, அந்த குளிரூட்டல் தஹ்டுக்கப்பட்டால் இப்போதே கூடங்குளத்தில் விபரீதம் ஏற்படுத்தப்படும் என்று அறிக்கை விட்டு வருகின்றனர்.
அத்தைகைய தண்ணீரை கூடங்குளம் அணு உலைகள் பெறுவதற்கு எண்ண ஏற்பாடு என்று அவர் நிர்வாகத்தை கேட்டார். அப்படி ஒரு நாளைக்கு 2500 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவை என்றார். அதற்கு நிர்வாகம் எண்ண ஏற்பாடு செய்துள்ளது என்று கேட்டார். இத கேள்வியை வி.டி.பி. ஒரு கருத்தரங்கில் வட மாநிலத்தில் கேட்ட போது மறுநாளே கூடங்குளம் அணு நிர்வாக தலைவர் காசிநாத் பாலாஜி, தாங்கள் எட்டாயிரம் கியூபிக் மீட்டார் தண்ணீரை "கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்" கொண்டு வார இருப்பதாக ஒரு மழுப்பல் அறிககையை கொடுத்தார் என்றார். அதுவும் போதாது. பத்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இவர்களால் கூடங்குளத்தில் கொண்டுவரப்பட்டாலும் எந்த நேரத்திலும் அவை "பழுதுபடலாம்" என்றார். அப்போது மாற்று ஏற்பாடு தண்ணீருக்கு எங்கே இருக்கிறது என்று வினவினார்.
அதற்காக "பேச்சிப்பாறை அணைக்கட்டு" தண்ணீரையோ, "கோதையாறு அணிக்கட்டு" தண்ணீரையோ எடுத்து வார அணு உலை நிர்வாகம் ஆசைப்பட்டால் அங்குள்ள விவசாயிகள் எப்படி அனுமதிப்பார்கள்? ஏற்கனவே பேச்சிப்பாறை விவசாயிகளின் "பாசன பாதுகாப்பு சங்கம்" 1987 இலிருந்தே தங்கள் தண்ணீரை எடுப்பதை எதிர்த்து போராடி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அணு உலையை சிறிது, சிறிதாக செயல் இழக்க செய்து, "இருபத்து நாலு மணி நேரத்தில்" வெடிக்க செய்யும் என்று அறிவியலாளர் பத்மநாபன் விளக்கினார். இத்தகைய பெரும் தடங்களை வைத்துக் கொண்டுதான் இவர்கள் கூடங்குளம் அணு உலையில் "பாதுகாப்பு" பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள் என்பது அம்பலமானது.
அடுத்து மனித நேய மக்கள் கட்சியின் போது செயலாளர் அப்துல் சமத் பேசினார். இவர் கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். அதனால் அங்குள்ள நிலைமைகளை விளக்கினார். எந்த அளவுக்கு கல்பாக்கம் அணு உலைகளின் " கதிரியக்க கசிவுகள்" அங்குள்ள கிராமங்களில் "புற்று னையை" ஏற்படுத்தி உள்ளது என்று பட்டியலிட்டார். மருத்துவர் புகழேந்தி அது பற்றி உண்மை விவரங்களை கூறியதற்காக அந்த அணு உலை நிர்வாகம் அவர் மீது குறி வைத்து வழக்குகளில் சிக்க வைக்க திட்டமிடுவதும் அங்கே தெரிய முடிந்தது. இப்போது புதிய "ஈனுலை" என்று ஒரு உலையை கொண்டுவர முயர்ச்சிப்பதை எத்ரிக்க வேண்டும் என்றார். கல்பாக்கம் மக்கள் படும் அவதி போதுமென்றும், அந்த கொடுமை கூடன்குலத்திற்கும் வேண்டாம் என்றும் கூறினார்.
அடுத்து பேசிய இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் யாரிடம் கேட்டு இவர்கள் கூறுகின்ற யுரேனியத்தை உள்ளே கொடன்னு வந்தார்கள் என்றார். அமெரிக்காவிற்கு முழுவதும் அடிமை ஆவதும், அணுகுண்டு தயாரிக்க திட்டமிடுவதும் இவர்களது முயற்சியா? என்று வினவினார். அதை அடுத்து மக்கள் சிவில் உரிமை கழகத்தின்{ பி.யு.சீ.எல்.} தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி பேசினார்.அவரது இருபத்தைந்தாண்டு கூடங்குளம் எதிர்ப்பு போராட அனுபவங்களை கூறினார். இந்த எதிர்ப்பு இப்போது உருவானந்து என்பதே ஒரு பொய் என்றார்.இத்தனை ஆண்டுகளாக மக்களது கவலையை போக்க அரசுகள் முயற்சி செய்யாதது யார் தவறு என்று கேட்டார்.
1962 ஆம் ஆண்டு அணு சட்டப்படி இவர்கள் அனைத்தையும் அணு சக்தி துறைக்கு மட்டுமே ரகசியமாக வைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 2005 ஆம் ஆண்டு "தகவல் பெரும் உரிமை சட்டம்" உருவானதை நினைவு படுத்தி, பகுஷிமா விபத்திற்கு பிறகு அந்த தகவல் பெரும் உரிமையை மக்களுக்கு அளித்து உண்மையை அரசு கூறவேண்டும் என்றார். அதற்கான மைச்சரவை தீர்மானந்தை தமிழக அரசு போட்டதற்காக மத்திய "அய்.மு.கூ. அரசு " தமிழ்நாட்டை பழி வாங்குகிறது என்றார். அதற்காக அணு சக்தி துறை மூலமும், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மூலமும், பல கோடி பணத்தை செலவழித்து "அணு உலை ஆதரவை" கிளப்பி விடுகிறார்கள் என்றார். 1998 ஆம் ஆண்டு நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் உள்ள "ஊடகத்துறை வசம்" ஒரு கோடி ரூபாய் தருகிறோம், அணு பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள் எனு லஞ்ச்ச்மா கொடுக்க முயன்றதை சுட்டி காட்டினார். இப்போது அதுவே பல நூறு கோடி லஞ்சமாக மாறிவிட்டது என்றார். ஆகவே அணு உலை ஆதரவாலர்களுக்குதான் பல கோடி ரூபாய் வருகிறது என்றார்.
அமெரிக்கா அணு சக்தி சட்டத்தை அதாவது 123 சட்டத்தை அமுலாக, பல அணு உலைகளை இந்தியாவிற்கு கொண்டுவர பல நூறு கொடிகளை, அமெரிக்கா அணு உலை அதாரவுக்கு செலவழிக்கிறது என்றார். அதையே அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது பழி போட திசை திருப்புகிறார்கள் என்றார். மக்கள் இயக்கத்தை யாரும் ஒச்சைப்படுத்த முடியாது என்றார். அடுத்து பேசிய பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி, தானும் கல்பாக்கம் பகுதிகாரர்தான் என்று கூறி, தன்கள் பகுதியில் எத்தனை சொந்த கற்ற தலித்துகள் கல்பாக்கம் அணு உலை கதிர் வீச்சால் "புற்று நோய் " வந்து அவதிப்படுகிறார்கள் என்று விளக்கினார்.
மொத்தத்தில் "கிருத்துவர்கள் மட்டுமே எதிர்ப்பதாக" பொய்யை கிளப்பிவிட்ட அர்சுதுரைக்கு, கிருத்துவர் அல்லாத பல முக்கிய பிரமுகர்கள் இந்த சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம் என்ற அமைப்பை உருவாக்கி இருப்பது பெரும் "பதிலடியாக" இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)
