Sunday, June 17, 2012

கோவிலில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்?

கோவிலில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்?
    ஆன்மிகம் அதிகமாக நமது முதல்வரது மனதில் திரண்டோடும். அதனால் அவர் ஆட்சிக்கு வந்ததும், ஆன்மீக உணர்வில், கோவில்களில் எல்லாம் "இலவச உணவு" போடுவார். இந்த முறை "கோவிலுக்கு வருபவர்கள் செருப்பு வைக்க இலவசம்" என்று அறிவித்தார். அது எல்லா கோவிலக்ளிலும் உடனடியாக அமுலுக்கு வந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலும், அதேபோல செருப்பு வைக்க இலவசம் என்ற நடைமுறை பெரும் பெயரை அந்த முதல்வருக்கு பெற்று தந்தது. இப்போது நிலை என்ன? செருப்பு வைக்கும் இடத்திலும் "காசு" வாங்குகிறார்கள். அதற்கு யார் காரணம்? கபாலீஸ்வரர் கோவிலின் அரங்காவலர்தானே பொறுப்பு? யார் இந்த அறங்காவலர்? 

                       அப்போலோ மருத்துவமனையின் பண்கால்லி முதலாளி, விஜயகுமார் ரெட்டி தான் அந்த அறங்காவலர். ஒரு தலைமை அறங்காவலர் நியமிக்கப்பட்டால், நான்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி இன்னமும், நன்கு அறங்காவலர்களை நியமிக்க வில்லை. ஏன்? அறநிலையத்துறை தானே அவர்களை நியமிக்க வேண்டும் அறநிலையத்துறையை மிரட்டி, அப்போலோ முதலாளி, தன்னை தவிர யாரையும் நியமிக்க விடாமல் தடுக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. அபப்டியானால் அறநிலையத்துறை "பக்தர்களுக்கு" பட்டை நாமம் போடுகிறதா? அறநிலையத்துறையின் துணை ஆணையராக ஒருவர் பொறுப்புக்கு வந்து, ஆண்டுக்கு ஐம்பது லட்சம் லாபம் கிடைக்க வழி செய்தால், அவரை "இணை ஆணையர்" பொறுப்புக்கு உயர்த்துவது வழக்கமாம். காசு வரவை வைத்தே இங்கே ஆன்மிகம் தழைத்தோங்குகிறது. அதனால் பக்தர்களை "துன்புறுத்தி" துணை ஆணையர் வசூல் செய்கிறார்.

                  சிறப்பு வழிபாடு என்று ஒன்றை வைத்து அடஹ்ர்க்கு அதிக 'காசு வசூலிப்பதை" சென்ற திமுக அட்சி நடைமுறையில் வைத்திருந்தது. அப்போது சிறப்பு வழிபாட்டு கட்டணம் என "நூறு" ரூபாயை வாங்கி வந்த்ஜார்கலாம். ஜெயலலிதா ஆட்சியில் அது வெறும் "பத்து" ரூப்பஎன குறைக்க பட்டதாம். அதையும்கூட இப்போது அதிகாரிகள் கூட்டி விட்டார்கள் என்று பக்தர்கள் புலம்புகிறார்கள். இப்போது சிறப்பு வழிபாட்டிற்கு, இருபது ரூபாயும், நூறு ரூபாயும் வாங்குகிறார்கள் என்று பக்தர்களின் குரல் ஒழிக்க தொடங்கி உள்ளது. கோவில் ஓடியவர்களின் கூடாரமாக ஆக்க கூடாது என்று முன்னாள் முதல்வர் வசனம் எழுதினார்.இப்போது அதிகாரிகளே அந்த கொடியவர்களாக மாறுகிறார்களா? சிவன் கோவிலுக்கே "பட்டை நாமமா?". 

பள்ளி கல்வித்துறையில் அதிகாரிகளின் ஊழல்



     அமைச்சர் சீ.வி.சண்முகம் பள்ளி கல்வி துறைக்கு அமைச்சராக போடப்பட்டார். அவரது தம்பி கே.கே.நகரில் உட்கார்ந்துகொண்டு, ஒரு லட்சம், இரண்டு லட்சம் ஏன் ஆகாசு பெற்றுக்கொண்டு, ஆசிரியர்களின் "மாற்றல்  உத்தரவுகளை" பைசல் செய்தார். அதை நாம் ஊடக வாயிலாக பல முறை அம்பலப்படுத்தினோம். அதன்பிறகு அந்த இலாக்க மாற்றப்பட்டது. உண்மையில் அமைச்ஹ்ச்சர் சீ.வி.சண்முகத்திற்கு டேஹ்ரியாமல் அல்லது அவரது ஒப்புதல் இல்லாமல் அவரது அதம்பி இந்த ஊழல் வெளியாயி செய்துவந்தார் என்றும் அவர்தான் இவரை விழுப்புரத்தில் வெற்றிபெற வேலை செய்தார் என்பதால் அமைச்சரால் எதுவும் கேட்கமுடியாமல் போய்விட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் அதன்பிறகு அமைச்சர்கள் ஊழல் செய்வதை அரசு கவனிக்கிறது என்ற நிலையில், அதிகாரிகள் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கிவிட்டார்கள்.

                 இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரை "நிர்வாக" காரணங்களுக்காக என்ற பெயரில் "பலப்பல" மாற்றல் உத்தருவுகளை அதிகாரிகள் போட்டுள்ளனர். கல்வி இயக்கக ஆணையர் "சபீதா"விற்கு டேஹ்ரியாமலேயே இது நடக்கிறது. அதாவது "துணை ஆணையர்" தான் இத்தகைய வேளைகளில் அசகாய சூரராக இருக்கிறார். துணை ஆணையர் தொடங்கி, " தலைமை கல்வி அதிகாரி" வரை னைவரும் ஊழலில் பங்கு வாங்குகிறார்கள் என்கிறது நேரடி செய்தி. அவர்கள் ஒவ்வொரு ஆசிரியரின் மாற்றல் உத்தரவுக்கும்,குறைந்தது  "ஒரு  லட்சம்" அல்லது பெண் ஆசிரியர்களை தங்களது இச்சைக்கு அழைப்பது என்ற கேவலத்தை செய்து வருகிறார்கள்.திமுக ஆட்சியில்,  அமைச்சர் தங்கம் தென்னரசு கைகளுக்கு செல்லாமல், உதவியாளர்கள் காசு அடித்து "ஆசிரியர் பணி"யை விலைக்கு  விற்று வந்தார்கள். நாம் ஊடகத்தில் அமபல்ப்படுத்தி வந்தோம்.கருணாநிதி கூப்பிட்டு அமைச்சர் மூலம் ஒரு "ஏழாயிரம் " ஆசிரியர்களுக்கு மூப்பு அடிப்படையில் வேலை என்பதை "இலஞ்சக்காசு" வாங்காமல் நிறைவேற்றினார். 

             அப்போதும் இந்த ஊழல் அதிகாரிகள், வேண்டும் என்றே "எங்களுக்கு காசுதராமலே வேலை பெற்று விட்டீர்களா? உங்களை தள்ளி, தள்ளி பணியில் அமர்த்திவிடுகிறோம். மாற்றல் உத்தரவு வேண்டும் என்றால் ஒரு லட்சம் கொடுங்கள்" என்று கேட்க தொடங்கினார்கள். இப்போதும் அந்த வேலையைத்தான் அதிகாரிகள் பார்க்கிறார்கள். இப்போது "மாற்றல் உத்தரவுகளை" உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு போட்டுவருகிறார்கள். இதுவரை பி.டி. ஆசிரியர்களுக்கு மாற்றல் உத்தரவுகளை போடவில்லை. இப்போது கபில்சிபல் போட்ட உத்தரவுபடி, "தகுதி தேர்வு" கட்டாயம் நடத்த வேண்டும் என்பதை, தமிழக கல்வித்துறை அதிகாரிகள் வசமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். தகுதி தேர்வுகளுக்கு வெற்றிபெற "மூன்று லட்சம்" என்பது அவர்களது கணக்கு. அதில்குளிர் காய்கிறார்கள்.அதில்தங்களுக்கு ஒரு லட்சம்தான் வரும் என்றும் மீதிப்பணம், "மேலே" போய்விடுகிறது என்றும் அவர்கள் பகிரங்கமாக ஆட்சியாளர்கள் மீதே பழியை போட்டுவருகிறார்கள். இதை உடனேயே ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு நல்ல பெயர். இல்லாவிட்டால், அவர்களது இஷ்டம்/ 

                       . 

நில அபகரிப்புக்கு எதிராக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


நில அபகரிப்புக்கு எதிரான தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழி போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் தேசமெங்கும், கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைத்தீவில், தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரத்து நிற்கின்ற சிறிலங்கா இராணுவத்தினர், தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை திட்டமிட்ட வகையில் அபகரித்து வருகின்றமை, சமீபத்திய காலங்களில் தீவிரமடைந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள், இத்தகைய நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கஙை நடாத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, தமிழர் வாழும் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்களை, சமாந்திரமாக முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் மீதான, இனவாதிகளின் அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னாரில் இடம்பெற்றிருந்த சாத்விகவழியிலான போராட்டத்திற்கு வலுவூட்ட தமிழர்கள் வாழும் தேசமெங்கும், தோழமையோடு சர்வத வழிபாட்டு விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் தொடர்சியாக தமிழர் தாயகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நில அபகரிப்பு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு சமாந்திரமாக, இப்போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்கின்றது.

தமிழர் வாழும் தேசம் யாவும், நமது புதிய போர்களம் என்ற அடிப்படையில், உலகந்தழுவியரீதியில், தாயக மக்களுக்கு எமது தோழமையுணர்வினைத் தெரிவிப்பதோடு, தாயகத் தமிழர்களின் போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்ல, உலகத் தமிழர்களின் போராட்டங்கள் வழிகோலுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தலித் பணத்தை பிடுங்கி பார்ப்பனர்களுக்கு சேவையா?



    தமிழ்நாடு போககுவரத்து கழகம் பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிகமாக விவரம் தெரியும் என்று நினைக்கிறீர்களா? அதிகாரிகள் சொல்வதை கேட்கும் "ஆமாம்" சாமி என்கிறீர்களா?  சென்னை போககுவரத்து கழகத்தை உதாரணமாக பார்ப்போமா? "வெள்ளை" பெயர்ப் பலகை என்பது குறைந்த காசு பயணச்சீட்டு கொண்ட பேருந்து. "தாழ்த்தலாம்", "விரைவு பேருந்து" என்பவை அதிக காசை "அடித்து பிடுங்கும்" பேருந்துகள். அதிலும் "இருக்காய்" இருக்கும் லட்சணத்தில், மனிதன் அமர முடியாது. அதாவது நீண்ட கால் கொண்ட ஆறடி உள்ள எந்த மனிதனும் இந்த டீலக்ஸ் பேருந்துகளில் முறையாக முழுமையாக அமர முடியாது. திமுக ஆட்சியில் நேரு அமைச்சராக இருக்கும்போதே இந்த "கோளாறு" ஆரம்பமானது. அந்த நேருவே அந்த இருக்கைகளில் அமர முடியாது. அப்படிப்பட்ட இருக்கைகள். ஆயிரம் முறை சென்ற ஆட்சியில் கொரிப்பார்த்தும் எந்த நிவாரணமும் கிடைக்க வில்லை. இப்போதும் அப்படியே.

                        இப்போது ஒரு கண்டுபிடிப்பு எழுந்துள்ளது. கண்ணகிநகர். இந்த நகர் ஏழை, எளிய மக்களை சென்னைக்குள் இருந்து வீட்டு வேலைகள், சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, ஒட்டி வந்தவர்களை, கூவம் நதி ஓரம் குடி இருக்கிறீர்கள் என்று சொல்லி, ரயில்வே பாதை வருகிறது என்ற பெயரிலும், மாநகரை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரிலும், "வேயே" தொக்கி எரிந்து, ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் வீடு தருகிறோம் என விரட்டி அடித்தார்கள். அந்த கண்ணகி நகருக்கு செல்லும் பேருந்துகளில், என் அதிகமாக "டீலக்ஸ் பேருந்துகளும், எக்ஸ்ப்ரெஸ் பேருந்துகளும்" அனுப்படுகின்றன? அந்த இருவகை பேருந்துகளும் "அதிக கட்டணம்" வசூலிக்கும் ப[இருந்துகள் என்பது செந்தில் பாலாஜிக்கு தெரியாதா? அல்லது கண்ணகி நகர் மக்கள் ஏழை எளிய மக்கள் என்பதும், அவர்கள் இன்னமும் அன்றாட கூலி வேலைக்கு, சென்னை நகருக்குள் வந்துபோக பேருந்துகளை பயபடுத்துகிரார்கள் என்பது செந்தில் பாலாஜிக்கு தெரியாதா? அவர்களுக்கு ஏன் அதிகமாக "வெள்ளை பெயர்பலகை" கொண்ட "சாதா கட்டண" பேருந்துகளை அதிகமாக அனுப்ப அவரால் முடியவில்லை? ஏழை மக்களை இப்படி "சோர்ந்டி வாழை" ஏன் அவர் நினைக்கிறார்? 


                  அதேசமயம் அதே பேருந்து கழகம், மைலாபூர், மந்தவெளி, பெசன்ட் நகர், தி நகர்,   மடிப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு அதிகமாக "சாதா கட்டணம்" கொண்ட வெள்ளை நிற பெயர் பலகை கொண்ட பேருந்துகளை அனுப்பும் ரகசியம் என்ன? அந்த அபகுதிகளில் "பார்ப்பனர்கள்" அதிகம் வாழ்கிறார்கள் என்பதுதான் காரணமா? அபப்டியானால் பார்ப்பனர்களுக்கு "குறைந்த செலவில்" சேவை செய்ய, தலித்துகள் "தலையில்" கட்டண "சுமையை" ஏற்றுவதுதான் அமைச்சரின் பணியா? அமைச்சருக்கு தெரியாமல் "அதிகாரிகள்" அப்படி ஒரு திருட்டு வேலையை செய்கிறார்களா? எபப்டியோ தலித்துகளுக்கு கடினமும், பார்ப்பணர்களுக்கு சலுகையும் நடிமுரையில் "பேருந்து தடம்" வரை நீண்டுள்ளது என்பது கவனிக்கதக்கது.அதேசமயம் மந்தவெளி, தீநகர், மடிப்பாக்கம், பெசன்ட் நகர் என்று பார்ப்பனர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள "வசதிபடைத்த பார்ப்பனர்களுக்காக" குளிர் சாதன பேருந்துகளும் கவனமாக விடப்படுகின்றன. அந்த பாதைகளில் தீலக்சுகளும், விரைவு வாகனங்களும் அடைத்து கொள்வதில்லை. இப்போது புரிகிறதா? அதிகாரிகளும் "பார்ப்பனீய" மனயொபாவத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதை? 

Tuesday, June 12, 2012

கலைஞர் அவர்களே, உங்கள் "டெசோ"வை, தமிழர்கள் நம்புவார்களா?


      கலைஞர் அன்று டெசோ கண்டார். நெடுமாறன் உடன் இருந்தார். வாஜ்பாய் இருந்தார். ஏன்.தி.ஆர். அதனுடன் இருந்தார். அன்று டில்லிக்கு "தமிழ் போராளிகள்" தேவைப்பட்டனர். அதனால் எல்லோரும் உடன் இருந்தார்கள். டில்லி ஏற்பாடு செய்த "டெலோ" புலிகளை கொள்ள "பணிக்கப்பட்டது". முந்திக்கொண்ட புலிகள் தேலோவை அன்று பதம் பார்த்தனர். கலைஞர் கோபமானார். டெசோ வை கலைத்தார். அது டில்லிக்கு பிடித்திருந்தது. எம்.ஜி.ஆர். புலிகளுக்கு உதவினார். அதனால்தானோ என்னவோ, கலைஞர் கூடுதலாக புலிகளை எதிர்த்தார்.   தான் கொடுத்த பிறந்தநாள் காசை வாங்கி கொள்ளவில்லை என்றதும், மேலும் புலிகளை வெறுத்தார் கலைஞர்.

                  வன்னி போரின் இறுதி காலத்தில், கலைஞர் ஆட்சி தமிழர்களை பாதுகாக்க எதுவும் செய்யவில்லை என்று சாமானியர்கள் கூறினார்கள். விவரம் அறிந்த தமிழர்கள் வன்னி போர் குற்றங்களில் "விசாரிக்கப்பட வேண்டியவர்" கலைஞர் என்று குற்றம் சாட்டினர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதனாலேயே அவரை வெறுத்தனர். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், ஜெயலலிதா "தமிழீழம்" பேசியபோதும், கலைஞர் "ஈழ ஆதரவாளர்" என்ற பெயரை முழுமையாக ஐழந்துவிடவில்லை. போருக்கு பின்னும் டில்லியும், காங்கிரசும், கலைஞரும் இலங்கை ராஜபக்சவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களை "தொடர் சித்திரவதை" செய்ததை தமிழ் கூறும் நல்லுலகம் ரசிக்கவில்லை. கனக்கியர்சுடன் சேர்ந்துகொண்டு கலைஞரும் "ஈழத்தமிழருக்கு" துரோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டு  உலகெங்கும் தமிழர்கள் மத்தியில் ஒழிக்க தொடங்கியது. அதுவே சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் எதிரொலித்தது. ஜெயலலிதா உலக தமிழர்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றார். அதற்கு அவரது சட்டமன்ற தீர்மானமான "போர்க்குற்றவாளி" பற்றியதும், பின்னால் அமெரிக்கா தீர்மனாத்தை அய்.நா.வில் ஆடஹ்ரிக்க கூறியதும், இலங்கை மீது பொருளாதார தடை கோரியதும், இலங்கை அமைச்சர்கள் வரும்போது தமிழ்நாட்டு அரசை கலந்துகொண்டே மத்திய அரசு முடிவு செய்யவேண்டும் என்றதும், விமான நிலையத்தில் சிங்களர்களுக்கு கண்காணிப்பு செய்ததும், ஈழ அகதிகளின் நல்வாழ்விற்கு புதிய சலுகைகளை அறிவித்ததும், கூடுதலான காரணங்களாக அமைந்துவிட்டது.

             இதை தாங்க முடியாத கலைஞர் இப்போது தானும் இழந்த தமிழர் ஆதரவை பெற புது முயற்சி எடுத்துள்ளார். அதுதான் "தமிழீழம்" "டெசோ" என்று அவர் முழங்கும் புதிய முழக்கங்கள். அவற்றில் விடுதலை சிறுத்தைகளை சேர்த்து கொள்ளாமல்தான் முதலில் இறந்தார். அது காங்கிரசை குளிர் விக்க இருக்கலாம். அனால் தனது ஈழ அதரவு எடுபடவில்லையோ என்று இப்போது திருமாவையும் சேர்த்து கொள்கிறேன் என்கிறார். அதுவும் சோலை நினைவேன்தலில் திருமா உரையாற்றி கலைஞரையும், ஸ்டாலினையும்  பாராட்டிய பிறகு, ஆ.ராஜா விடுதளையான் அபிறகு கூறுகிறார். ஆனாலும் கலைஞர் மீது படிந்த "கறிகள்" இந்த முழக்கங்களால் போய்விடுமா? உலக தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்களா?  பழைய போர்குற்றங்களை மறந்து விடுவார்களா? தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இடையே உள்ள போட்டியில் உலக தம்ஜிஹர்கள் சிக்கி கொள்ள மாட்டார்கள்.

Friday, June 8, 2012

நெஞ்சுக்கு நீதி சொல்ல முடியுமா தலைவரே?



    இந்திய கம்யுனிஸ்டு  கட்சி தா.பாண்டியன் கலைஞர் பற்றி ஈழ பிரச்சனையில் தமிழர்களை சவிளிருந்துகாப்பாற்ற எதுவும் செய்யவில்லை என்று திருவாரூர் சென்று கூறியதற்கு, அடுக்கடுக்காக கலைஞர் முரசொலியில் பதில் எழுதி உள்ளார். ஒவ்வொரெஉ நாளையும் குறிப்பெடுத்து, ஒவ்வொரு செயலையும் பட்டியல் போட்டு, கலைஞரும், திமுகவும் எப்படியெல்லாம் ஈழத்தமிழர் பிரச்சனையில் தீர்மானங்கள் போட்டும், ராசினாமாக்களை வாங்கியும், மழையிலும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தியும், மன்மோகன் சிங், சோனியா காந்தி, சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, ஆகியோரிடம் கலைஞர்  பேசினார் எனப்தை எல்லாம் எடுத்து கூறியிருக்கிறார்.  அந்த டில்லி தலைவர்கள், ராஜபக்சேவிடம் பேசியதையும், அந்த டில்லி தலைவர்கள் வாக்குறுதி கொடுத்ததையும் எடுத்து கூறியிருக்கிறார். அய்யா, தலைவர் கலைஞர்  அவர்களே, நீங்கள்  கூறியுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், அந்த டில்லி தலைவர்கள் வாக்குறுதி கொடுத்த பின் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியாதா தலைவரே?


            உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை உங்களுக்கு மட்டும் எப்படி தலைவரே டேஹ்ரியாமல் போனது? டில்லிகாரர்கல்தான் இலங்கை அதிபரிடம் சொல்லி ஈழத்தமிழர்களை ஒட்டுமொத்தமாக பலி வாங்க சொன்னார்கள் என்பது உங்களுக்கு மட்டும் இன்னமும் புரியவில்லையா தலைவரே? மன்மோகன் ராஜபக்சேவிடம் பேசினார் எனக்க கூறும் கலைஞர், ராஜபக்சே அந்த பேச்சிற்கு பிறகு என்ன செய்தான் என்று என் கூறவில்லை? சிதம்பரம் கலைஞரிடம் வாக்குறுதி கொடுத்த பிறகு, ஈழத்தில் எந்த அளவுக்கு "இனப்படுகொலை" வெறி பிடித்து நடத்தப்பட்டது என்று கலைஞர் என் கூறவில்லை? 

          அனைத்து கட்சி தலைவர்களை டில்லிக்கு அழைத்து சென்று மன்மோகன் சிங்கிடம் பேசவைத்ததை கூறும் கலைஞர் அவர்களே, அந்த பேச்சுவார்த்தைக்கு கடைசி வரையில் செல்வாரா, மாட்டாரா என்று இருத்த தா.பாண்டியனும் கடைசி நேரத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து டில்லியில் உங்களுடன் கலந்து கொண்டாரே கலைஞர் அவர்களே? அப்போது என்ன நடந்தது? மன்மோகனை நம்பி நிறைய பேசிய தா.பாண்டியன் பேச்சிற்கு வெறும் தலையசைத்து கொண்டிருந்த மன்மோகன் பற்றி கலைஞர் அவர்களே நீங்கள் தா.பாண்டியனிடம் என்ன கூறினீர்கள்? தேவையில்லாமல் கடினப்பட்டு அந்த ஆளிடம் இன்ற்ஹா அளவுக்கு எடுத்து சொன்னீர்களே? எண் அபயன்? என்று நேநேகள் கேட்டதாக கூறப்படுகிறதே? உண்மையா? தலைவரே?  அதற்கு பிறகு கழக தலைவர்களிடம் "நான் மட்டும் எதிர்கட்சியாக இருந்தாள் இந்த பிரச்சனையை வைத்து பயங்கரமாக மத்திய இசை ஆட்டி படைததிருப்பேன் "என்று நீங்கள் கூரிநீர்கலாமே? உண்மையா தலைவரே? 


                    இப்படி நீங்கள் நாடகத்தை பெரும் ளவு நடத்தியதால்தானே அங்கே ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளானார்கள்? எப்படி அதை மறக்க முடியும்? அல்லது மறைக்க முடியும்? தா.பாண்டியன் கூரியிற்றுப்பது ஒரு பகுதிதானே? உங்களையும் சேர்த்து அங்கு நடந்த இனப்படுகொலை போரில் ஒரு "சாட்சியாக" அல்ல, போர்குற்றம் புரிந்தவர்களின்" பட்டியலில் போடவேண்டும் என்று உலக தமிழர்கள் பேசுவது காதில் விழுகிறதா, தலைவரே? 

Wednesday, May 30, 2012

சோலை--ஒரு ஊடகவியலாளரின் வரலாறு நின்றுவிட்டது.



    அவர் திண்டுக்கல் அருகே உள்ள ஐயம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இடது சாரி கருத்துக்களின் மேலுள்ள தாக்கத்தினால் தோழர் ஜீவானந்ததுடன் நெருக்கமானார். ஜீவா சோலை என்ற அந்த சோமசுந்தரத்தை, "ஜனசக்தி" ஏட்டில் இறக்கிவிட்டார். ஜனசக்தியும், சோலையும் சேர்ந்தே வளர்ந்தனர். அதன்பின் எம்.கல்யானசுன்தரன் நண்பர்களை உர்ச்சாகப்படுத்தியத்தில் தொடங்கியது, "மக்கள் குரல்". அங்கும் சோலையே முதன்மை பணி செய்தார். "அலை ஓசை" சிம்சன் போராட்டத்தில் தமிழ்நாடெங்கும் புகழ் பெற்றது. வேலூர் நாராயணன் நடத்தினார். அங்கும் சோலைதான் சிறப்பு செய்தார். இடதுசாரிகளின் செயல்பாட்டில் ஈடுபடும் "எழுத்தாளர்கள்" ஊடகவியலாளர்கள்" அதிகமாகவும், ஆர்வமாகவும், ஆழமாகவும், விரைவாகவும் "விடை" தேடுவதால், அவர்களுக்கு அன்றைய "நக்சல்பாரி இயக்கம்" ஈர்ப்பு மையமாக ஆகியது. சொலிக்கும் அதே நிலை. 

                சென்னை தொழிலாளர் வர்க்கம் தேர்தலில் பங்குகொள்ளும் இடதுசாரி கட்சிகாரர்களை தாண்டி சிந்தித்தது. நக்சல்பாரி எழுச்சி சென்னை தொழிலாளர் வர்க்கத்தை செழுமையாக தாக்கம் செலுத்தியது. ஏ.எம்.கே. என்ற மூன்றெழுத்து பெயர் எல்லோர் உள்ளத்திலும் எதிரொலித்தது. மோகன் குமாரமங்கலம் வழக்கறிஞராக இருந்தபோது, ஏ.எம்.கோதண்டராமன் அவருக்கு இளம் வழக்கறிஞராக இருந்தாராம். நக்சல்பாரி எழுச்சி, மார்க்சிசிட் கட்சியின் சீ.அய்.டி.யு.தொழிற்சங்கத்தை விட்டு தோழர் ஏ.எம்.கே. வை வெளியே கொண்டுவந்தது. அவருடன் வழக்கறிஞர் குசேலரும் வெளியேறினார். குசேலர் உருவாக்கியது "உழைக்கும் மக்கள் மாமன்றம்" என்ற தொழிற்சங்கம்.தலைமறைவாக இருந்த ஏ.எம்.கே. பெயரிலேயே  அந்த தொழிற்சங்கம் போர்க்குனமிக்கதாக வளர்ந்தது. அந்த புரட்சிகர எழுச்சி சென்னையை ஆயயொரங்களில் அல்ல, பத்தாயிரங்களில் ஆல், லட்சங்களில் தொழிலாளர் வர்க்கத்தை தெருவுக்கு இழுத்து வந்தது. அத்தகைய தொழிற்சங்கத்திற்கு ஒரு "நாளேடு" தேவைப்பட்டது. அதுதான் "மக்கள் செய்தி" ஏடு. அங்கும் சோலையே ஒளிர்விட்டார். சோலை தலைமறைவாக இருந்த ஏ.எம்.கே.வை அடிக்கடி சந்தித்து வந்தார்.

                    புரட்சிகர இயக்கத்தின் ஒரு முக்கியகூட்டம்.. இரவில் கிராமத்தில் நடந்துசெல்லும் தோழர்களுடன் சோலை "லாந்தர் விளக்கு" ஏந்தி சென்றார் என்று அவரது இறுதி நிகழ்வில் தோஹ்ர்கள் பேசிக்கொண்டனர். நேற்று செவ்வாய் அன்று சோலை தாம்பரம் தனியற மருத்துவமனையில் மரணமடைந்தார். அதற்குமுன் இடதுசாரிகளில் கல்யாணசுந்தரம் போன்றோர் எல்லாம் எம்.ஜி.ஆர். இன் கழகத்திற்கு துணை சென்ற போது, சொல்லையு உடன் சென்றார். அதன்மூலம் எம்.ஜி.ஆர். தனது முக்கிய ஆலோசகராக சோலையை உடன் வைத்து கொண்டர. அது திமுக வை எதிர்த்து தமிழக மக்களின் "ஊழல் எதிர்ப்பு" போர். அதன் வடிவமாக எம்.ஜி.ஆர். அன்று இருந்ததால் சோலை உடன் இருந்தார். பிரபல "சத்துணவு திட்டம்" சோலை கூறிய ஆலோசனை என்கிறார்கள். அதன்பின் சோலை செல்வி.ஜெயலலிதாவின் அரசியல் நுழைவின் களத்தில், எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி உடன் இருந்து உதவினார். 

                   சோலை ஒரு பிரபல எழுத்தாளர். கலைஞரின் கவனத்தில் சோலை ஈர்க்கப்பட்டார். அங்கும் தனது கருத்துக்களை வைக்க சோலை தயங்குவதில்லை. கலைஞரின் உதவியாளராக இருந்துவரும் உறவுக்காரர் அய்.ஏ.எஸ். ராஜமாணிக்கம் சோலையை முழுமையாக கலைஞர் குடும்ப அரசியலுக்கு பயன்படுத்த முனைந்தார். சோலை அங்கும் பயன்பட்டார். பல வார இதழ்களில், பிறகு வார இருமுறை தழ்களில் சோலை தொடர்ந்து எழுதிவந்தார். நக்கீரன் வார இருமுரைய் இதழில் அவர் எழுதிவந்த தொடர் கட்டுரைகள் அரசியல் அரங்கில் முக்கியமானவை. சசிகலா  குழுவினர் தோட்டத்தை விட்டு விரட்டப்பட்ட போது, அதற்காக ஜெயலலிதாவை பாராட்டி எழுதினார்.கடந்த மூன்று வாரங்களாக அவரால் எழுத முடியாமல் மருத்துவமனையில்   இருந்துவிட்டதை கடைசி நேரம் மனம் நொந்து கூறியுள்ளார்.  

                கடைசி நாளுக்கு முந்திய இரவில் சில நண்பர்களுடன் பேச முற்பட்டு மருத்துவர்களால் தடுக்கப்பட்டாராம். கடைசியாக் மருந்து சீட்டின் பின்புறத்தில் அவர் எழுதச்சொல்லி எழுதியவை குறிப்பாக கூறப்படுகின்றது. வருகிற தேர்தலில் காங்கிரஸ்  செல்வாக்கு இழந்துவிடும். ப.ஜ.க.வும் செல்வாக்கு இழக்கும். இடதுசாரிகள் செல்வாக்கு பெறமாட்டார்கள் என்பது வருந்ததக்கது. ஆயினும்.... என எழுதி நிறுத்தப்பட்ட வரிகளை நண்பர்கள் எடுத்து  கூறுகின்றனர். .அதனால்தானோ என்னவோ இன்று கலைஞர் தனது ஆர்ப்பாட்ட பேச்சில், காங்கிரசுடன் கூட்டணி தொடரலாமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். எபப்டியோ, செல்வி.ஜெயலலிதா மும்ன்முயர்ச்சி எடுக்கும் "மூன்றாவது அணியான" மாநில கட்சிகளின் கூட்டணிதான் சோலை கூறவந்ததா?

          மறக்கமுடியாத நிலையில் சோலையின் உடல் மேல் நான் ஒரு சந்தன மாலையை அணிவித்தேன். பல தோழர்களை அங்கே சந்தித்தேன். நிருபர் ஸ்ரீனிவாசனை சந்தித்து குறிப்பிடத்தக்கது. தாம்பரம் நண்பர்கள் பட்டாளமே ஆணை.பன்னீசெல்வம், வேணுகோபால், இடதுசாரி தோழர்கள் என்று கூடியதை நேரில் கண்டேன்.நேற்றும், இன்றும்   பல,பல தலைவர்கள் மு.க.ஸ்டாலின், இடதுசாரி தலைவர்கள், பீட்டர்  அல்போன்ஸ், திருநாவுக்கரசர், நக்கீரன் கோபால், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., எஸ்.எம்.பாக்கர், பலப்பல ஊடகவியலாளர்கள் பெருங்குலத்தூர் இல்லத்திலும், குரோம்பேட்டை மின்சார மயானத்திலும் கூடினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் இறுதி பயண வாகனத்தில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.