Wednesday, October 27, 2010
கருத்துரிமை என்பது, காஷ்மிர்காரர் டில்லியில் பேசக்கூடாது என்பதுதானா? அருந்ததி எங்கேயும் பேசக்கூடாது என்பதுமா?
Wednesday, October 20, 2010
மகிந்தா வழியை தி.மு.க. தலைமை ஏற்றுக்கொண்டுவிட்டதா?
இலங்கை திவில் நடப்பது பற்றி தெரிந்திருந்தால்தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும். அதனால் இலங்கை தமிழர்கள் பிரச்சனை மட்டுமின்றி இலங்கை அதிபரின் பிரச்சனையையும் தெரிந்து வைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் மகிந்தா விவகாரமும் இருந்தது. அதன் பின் மத்திய ஆரசு கிழித்த கோட்டை தாண்ட முடியாது என்பது இங்குள்ள ஆளும் கட்சி தலைமைக்கு கட்டாயமாக ஆன பிறகு, வர்கள் அதற்கு ஏற்றார்போல தாளம் போடத்தொடங்கினார்கள். தாளத்தை சத்தம்போட்டு போடும்போது, இரு நாடுகளிலும் தாளம் போடுபவர்களுக்குள் ஒரு நெருக்கம், ஒரு புரிதல், ஒரு பரஸ்பரம், ஒரு கொடுத்துவாங்குதல், ஒரு பரிமாற்றம், ஒரு ஒப்பந்தம், ஒரு நட்பு, ஒரு கடித போககுவரத்து, ஒரு பயணம், ஒரு இணைந்த செயல்பாடு, ஒரு எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொடுக்கும் மன பக்குவம், ஒரு வரவேற்ப்பு கொடுக்கும் பாங்கு, ஒரு அரசியல்மேதைதன பரிமாற்றம், ஒரு வணிக உறவு, ஒரு நிலம் வாங்கும் போக்கு, ஒரு மகிழ்விக்கும் விருந்துபசாரம், ஒரு தொலை நோக்கு பார்வையுடன் கூடிய திட்டமிடல் இத்தனையும்ம்வரத்தானே செய்யும்?
ராஜ ராஜ சோழன் பல நிலங்களையும் தனது ஆட்ச்சியின் கீழ் கொண்டு வார வேண்டும் என்றால், தனது தமிழ்த்தனத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு, பார்ப்பனீய சக்திகளுக்கு சதிர்வேத மங்களத்தையும், பிரும்ம தேசத்தையும் கொடுக்க வேண்டிய கட்டாயம் வரவில்லையா? அதுபோல அவரது வாரிசாக வரவேண்டும் என்றால், அதுபோலவே ஆளும் டில்லியுடன் ஒரு அரவணைப்பு, ஒரு அடிமைத்தனம், அதை ஒட்டி டில்லியின் நண்பர்களுடன் ஒரு கலந்தாய்வு, ஒரு கலப்பு ஆகியவை ஏற்படத்தானே செய்யும்? நீங்கள் ராஜ ராஜ சோழன் காலத்திய தலித் மக்கள் உழைக்கும் மக்களாக உழவு செய்யும் தமிழர்களாக இருந்ததனால், அவர்கள் கையில் வைத்திருந்த விலை நிலங்களை எப்படி அரசர் அந்தணர்களுக்கு தானம் கொடுக்க முடியும்? அந்த நிலங்களை தலித்துகள் கைகளில் இருந்து பறித்து எடுத்து, அந்த பரித்தேடுத்தலை சட்டமாக்கி அதற்கு பிறகுதானே அந்தணர்களுக்கு தானமாக கொடுக்க முடியும்? அதற்காக பிரும்ம தேசம், சதிர்வேத மங்கலம் ஆகியவற்றை ஏற்படுத்திதானே ஆகவேண்டும்?
அதுபோலத்தானே அதிபர் மஹிந்த ராஜ பக்சே, இந்தியா, சீனா, ஆகிய நாடுகளுக்கு தங்கள் நிலத்தை தானம் கொடுத்து பிழைப்பு நடத்துவதுதான் ஒரே வழி என்று இலங்கை ஒட்டுமொத்த மக்களுக்கு எதிராக சிந்திக்கும் போது, அதையே தனது வாழ்க்கையாக நிரூபிக்கும் போது, தமிழீழ நிலத்தை போராளி தலைவன் பிரபாகரனிடம் இருந்து பறித்து எடுக்கத்தானே செய்யமுடியும்? அந்த முயற்ச்சியில் பல, பல உயிர்கள் இறக்கத்தானே செய்யும்? இறந்த உயிர்களும், கை போன மனிதர்களும், கால் போன பெண்டிரும், நச்சு காற்றில் இறந்துபட்ட உயிர்களும், கொத்து குண்டுகளில் கொல்லப்பட்டோரும், நீரின்றி செத்த பெருசுகளும், பாலின்றி இறந்த குழந்தைகளும், அதமிழர்களாக இருந்தால் யார் என்ன செய்ய? யார் தமிழர்களை அந்த போர்க்களத்தில் போய் வாழச்ச்கோன்னது? இப்படி த்தானே இங்குள்ள ஆளும் கட்சி தமிழர்கள் சிந்திக்க முடியும்? அவர்கள் ராஜ ராஜ சோழனது வாரிசுகளாக ஆக வேண்டியது முக்கியமா? உழைக்கும் தமிழர் கூட்டம் தனது நிலத்தை தானே ஆளவேண்டும் என்பது முக்கியமா? ஆகவே இங்கும், அங்கும் உள்ள ஆட்ச்ஹ்சியாலர்களது கூட்டு உருவானது.
அப்போது பல வணிக சூத்திரங்கள் பரிமாறப்பட்டன. அதில் ஒன்று உங்களுக்கு பணம் வேண்டும், வணிகம் வேண்டும், நல்ல பொருள் ஈட்ட வேண்டும். ராஜ ராஜ சோழன் போல நாடு கடந்து நிலம் ஆளவேண்டும். அதற்கு ஒரே வழி உங்கள் முதலாளி டில்லியை மட்டும் நம்பி இருந்தால் போதுமா? இந்த கேள்வி மகிந்தாவின் சிந்தனை இங்கும் தனது வேர்களை போடமுடிந்தது. மகிந்தா இந்திய அரசுக்கு போட்டியாக, சீன அரசை இறக்கிவிட்டார். அது அவருக்கு பலன் கொடுத்தது. நமது அண்ணன்களும் கற்றுக்கொண்டனர். தமிழக துணை முதல்வரது சீன பயணமும், அவரது அண்ணன் மத்திய அமைச்சரது சீன பயணமும் அதற்கு வழி செய்தன. அய்யா அரசவையில் அமர்ந்தவாறு, அதற்கு ஆலோசனை வழங்கி வழி அனுப்பி வைத்தார். மகிந்தாவின் கடிதத்திற்காக இலங்கைக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த அதே கரங்கள்தான், அதே மூளைதான் இப்போதும் தனது மகன்களை சீன தேசம் அனுப்பிவைத்து அங்குள்ள முதலாளிகளுடன் பல தொழில் உடன்படிக்கைகளை போட உதவ முடிகிறது.
இப்போது புரிகிறதா? இவர்கள் டில்லிக்கு கூட விசுவாசம் இல்லை. தங்களுக்கு மட்டுமே விசுவாசமானவர்கள். ராஜ ராஜ சோழனின் வாரிசுகள்தான் என இப்போதாவது உலக தமிழர்கள் ஒப்புக்கொள்ளுங்கள்.
Monday, October 18, 2010
மும்பை தாக்குதலை நடத்தியது அமெரிக்க குடிமகனா? அமெரிக்க உளவு துறையா?
Sunday, October 17, 2010
தமிழர் வரலாறும், பண்பாடும், எந்தகண்கொண்டு காணப்படவேண்டும்?
இன்றைய சூழலில் தமிழர் உரிமைகள் என்பது உலக தமிழர் மத்தியில் அதிகமாக கவனிக்கப்படும் விசயமாக அறுதியிடப்பட்டு வருகிறது. தமிழர் உரிமைகள் எழுப்பப்பட வேண்டுமானால், தமிழர்களது இன்றைய நிலைமை பற்றிய மதிப்பீடு அறியப்பட வேண்டும். இன்றைய நிலையை ஒப்பீட்டு அறிய, கடந்த கால தமிழர் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அதை தெரிந்து கொள்ள தமிழர் வரலாறு படிக்கப்பட வேண்டும். அதனால் தமிழர் வரலாறும், பண்பாடும் பலராலும் இன்று கூறப்பட்டு வருகிறது. பலராலும் எழுதப்பட்டும் வருகிறது. அவ்வாறு தமிழர் வரலாறு, கோவையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிலும் பேசப்பட்டது. எழுதப்பட்டது. காட்டப்பட்டது. ஓதில் காட்டப்பட்டது என்ற செய்திதான் அதிகமான மக்களை போய் அடையக்கூடியது. அதாவது காட்டப்படுவது என்பது கண்காட்சியாக வைக்கப்பட்டும், காட்சிகளாக உருவாக்கப்பட்டு என்பதாகவும்,பொருள்படுகிறது. அப்படி செம்மொழி மாநாட்டில் ஒரு கண்காட்சி வைக்கப்பட்டது. அதன் முயற்சி முழுமையாக, அனைச்சர் தங்கம் தென்னரசுவினதாக இருக்கலாம். ஆனாக் அதுதான் பெரும்பான்மையான தமிழ் மக்களை கவர்ந்தது. அதில் பல தமிழர்களது பண்பாட்டு அடையாளங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. காட்சிகள் மூலமாக பல பண்பாட்டு நிகழ்வுகள் காட்டப்பட்டன. தமிழர்களது வீர விளையாட்டுக்கள், காதல் காட்சிகள், களை திறமைகள் என அந்த கண்காட்சி காண்போர் மனதை கவர்ந்தது. தமிழன் புறநானூற்றிலும், அகநானூற்றிலும், சங்க காலத்திலும் எப்படி வாழ்ந்தான் என்ற வரலாற்று சான்றுகள் அங்கே எடுத்து வைக்கப்பட்டன. அப்படி இருந்தும் நிகழ் கால தமிழன் எழத்தில் எப்படி போரிட்டான் என்பதும், எப்படி சுற்றி வளைக்கப்பட்டன என்பதும், எப்படி தரைபடை,கடல் படை,மற்றும் வான்படையை கட்டி அமைத்தான் என்ற வரலாறு அரசியல் காரணங்களால் இடம் பெறவில்லை. அது அவர்களது அரசியலாக இருந்துவிட்டு போகட்டும். நாம் கற்க வேண்டியது தமிழரது உண்மை வரலாறு இல்லையா? தமிழரது உண்மையான பண்பாடு பற்றி இல்லையா? அது இன்றைய நிலையில் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது? இவ்வாறான கேள்விகளுக்கு விடை காண வேண்டும் அல்லவா? அவ்வாறு காண்பதற்கு, தேர்தல் அரசியலை சார்ந்து நிற்கும் கூட்டத்தினரிடமிருந்து சற்றே விலகி இது பற்றி சிறிது அலச வேண்டும் அல்லவா? அதற்கு தமிழர் இயக்கங்களை, தமிழின உணர்வாளர்கள் நடத்தும் நிகழ்வுகளை, அப்படி உணர்வுள்ளவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளை, அல்லது கண்காட்சி நிகழ்ச்சிகளை, நாம் நாடி செல்வோமல்லவா? அப்படித்தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழக பெண்கள் செயற்களம் நடத்திய, தமிழர் பண்பாட்டு கண்காட்ச்சிக்கு பார்வையாளனாக சென்றேன். பண்டை தமிழர்கள் கற்கால மனிதர்களாகம் வேட்டையாடும் காலத்திய நிலையில், அடுத்து விவசாயத்தை கற்ற நிலையில், பல்வேறு கலைகளை படைத்த வரலாற்றில், மன்னர் கால ஆட்சிகளில், உற்பத்திகளில் ஈடுபட்ட காலங்களில், கடல் கடந்து வணிகம் செய்த காலத்தில்,வீரத்தில்,காதலில்,இலக்கியத்தில்,என்பதாக தீட்டப்பட்ட ஓவியங்களை, சித்திரங்களை, விவரிப்புகளை,அனைத்தையும் காணமுடிந்ததது.கடுமையான உழைப்பு இன்றி இவை அவ்வாறு ஒழுங்கு படுத்தப்பட முடியாது.அததகைய கடுமையானமுயற்ச்சியை பெண்கள் மூலமாக செயலபடுத்தியிருப்பது பெரும் சிறப்பு என உணர முடிந்தது. அதேசமயம் அந்த கண்காட்சி ஒரு பெரிய கேள்வியை கிளப்பி விட்டது. அதில் தமிழர் வரலாற்றை வர்ணிக்கும் போது, ஆண்களின் பங்கை உயர்த்தி பிடித்திருப்பதை உணர முடிந்தது, அதுதான் தமிழர் வரலாறா? அல்லது அது அவ்வாறு பொருள்படும்படி ஆண்களால் எழுதப்பட்டுள்ளதா? பெண்பாற் கவிஞர்கள் அந்த காலத்தில் ஏதாவது வித்தியாசமாக எழுதி இருக்கிறார்களா? அல்லது அப்படி எழுதியவை நமது கண்களுக்கு பட வில்லையா? அதேபோல கண்காட்சியின் கடைசி பகுதியில் இன்றுள்ள சாதி ஒடுக்கல் வரையப்பட்டுள்ளது. அது இடையில் வந்ததா? அப்படியானால் எந்த காலகட்டத்தில் இடையில் வந்தது? தமிழ் அரசர்களே அதை அதாவது சாதி வேறுபாட்டை ஆதரித்து நின்றார்களா? உணவு உற்பத்தி என்ற விசயத்தில் நெல் உற்பத்தி எப்போது வந்தது? கம்பு, கேழ்வரகு, சோளம், திணை ஆகிய வகைகள் சமீப காலம் வரை பயிரிடப்படுவதும், அதிகமாகஉட்கொள்ளப்படுவதும் இருந்து வந்ததே? என்பதாம் ஆண்டுகள் வரை, தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில், அததகைய பயிர்களை மாட்டுமே அதிகம் உண்டு இழைத்துவந்த் தமிழ் மக்கள் மத்தியில்தானே வாழ்ந்து வந்தோம்? அதனால் நெல்வந்து அததகைய திணைகளை மாற்றி அமைத்தது, தமிழனது வாழ்வியலில் கொண்டு வந்த மாற்றம் பயனுள்ளதா? அல்லது தமிழனை உணவு பழக்கத்திலும் மாற்றி அமைத்து பலவீனப்படுத்தி விட்டதா? இப்படி பல கேள்விகள் நமக்கு எழுந்து விட்டன. அதனால் நாம் தமிழர் வரலாற்றை எந்த கண்களுடன் காண வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஏன் என்றால் தமிழ் அரசர்கள் என்று இன்று புகழப்படுபவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்? என்ன செய்தார்கள்? எப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினார்கள்? யாருக்கு ஆதரவாக இருந்தார்கள்? தமிழர்களின் வாழ்வு மலர உதவினார்களா? அல்லது தமிழர்களின் பண்பாடுகளை நசுக்குவதற்கும், உழைக்கும் தமிழர்களின், வாழ்வாதாரத்தை அழிப்பதற்கும், தீவிரமாக செயல்பட்டார்களா? அப்படி செய்திருந்தால், அவர்களை தமிழர்களின் அரசர்கள் என்று பெருமைப்படலாமா? தமிழர்களில் நல்லவர்களும் இருந்தார்கள், துரோகிகளும் இருந்தார்கள் என்று ஒப்புக்கொள்ளப்போகிரோமா? இல்லையா? இத்தகைய கேள்விகள் நமக்குள் எழ வேண்டும். அவ்வாறு எழும்போது உலகம் முழுக்க மனித இனம் வளர்ந்தது போலவே, தமிழ் இனத்தின் கற்காலங்களிலும்ம பெண் தலைமை சமுதாய அமைப்புதான் இருதது எனபதையும், பெண்கள் தலைமையில் ஆண்கள் வேட்டையாடுதலை செய்தார்கள் என்பதிலும் நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்க தேவையில்லை. அப்படி ஆணும், பெண்ணும் சமமாக இருந்த தமிழர்கள் மத்தியிலும் பாலின வேறுபாடு வந்தது என்பதை நாம் மறைக்க தேவையில்லை. அந்த பாலின வேறுபாடும், எழத்தில் போர்க்களத்தில், பெண்புலிகள் துவக்கு எடுத்து போரிடுன் போதுதான் உணமையான பாலின சமத்துவம் மீண்டும் படைக்கப்பட்டது என்ற வரலாற்றையும் நாம் பகிரங்கமாக உரக்க கூவ வேண்டும். அதுபோல ராஜ ராஜ சோழனது ஆட்சி காலத்தில்தான் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை அவர்கள் நிலங்களில் இருந்து விரட்டி அடித்து அவர்களின் இடம் பெயர்வை சட்டரீதியாக ஆக்கிய கொடியவன்தான் அந்த அரசன் என்பதை நாம் பதிவு செய்யாமல் அவனை புகழ முடியுமா? அதுமட்டுமின்றி சதிர்வேத மங்கலத்தில் ராஜ ராஜ சோழனுக்கு எதிராகம உழைக்கும் தமிழ் மக்களான தாழ்த்தப்பட்ட மாக்கள் போராடியதை மறைக்கமுடியுமா?இன்றுஅதேபோல அரச தன்மையை கொண்டுள்ள மன்னர்கள் வேண்டுமானால் அந்த அரசனை புகழலாம். விடுதலை வேண்டிசெயல்படுவோர் புகழமுடியுமா? ஆகவே இந்த சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய வேறுபாடுகளை உடைத்தெறிவதும் தமிழ் தேசிய விடுதலையின் ஒரு பகுதியும், தொகுதியும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உகத்தில் பல நாடுகளில் பல தேசிய இணைகள் விடுதலைக்காக போராடி உள்ளன. பல விடுதலை அடைந்துள்ளன. ஆனால் தமிழ் தேசிய இனம் மட்டுமே தனது விடுதலையின் ஊடே, பாலின வேறுபாட்டையும், சாதி வேறுபாட்டையும், மத வேறுபாட்டையும், வர்க்க வஐபாட்டையும் நீக்கும் போராட்டங்களை உள்ளடக்கி வளர்ந்து வருகிறது. அதனால்தான் தமிழர் திருநாள் என்று அறியப்பட்ட பொங்கல், உழவர்களது அறுவடை திருநாளாக, கொண்டாடப்படுகிறது. தமிழர் என்றால் உழவர் என்பத்கும் அதில் பொருள் படுகிறது. ஆகவே தமிழர் விடுதலை என்ற தொலைநோக்கு பார்வையுடன் தமிழர் வரலாற்றை தொகுக்கும போது, பாலின சுதந்திரம், சாதி வேறுபாடு நீக்கம், ஆகியவற்றை இணைத்து காண்பதுதான் தமிழர் பண்பாட்டில் சிறப்புதன்மையையும், செழிப்புதன்மையையுன் ஏற்படுத்தி, எதிர்கால விடுதலைக்கு வித்திட முடியும் என்பதை நாம் உரக்க கூறலாம். | புதிய விண்டோ அனைத்தையும் அச்சிடுஸ்பான்சர் செய்யப்பட்ட இணைப்புகள் Life In The Robotics Lab Who builds humanoid robots? Blog, contests and more! Robot Manipulators Manual, semi and automatic models Capacities from 250 up to 20,000kg Indoor Research Robot Affordable, Capable, and Expandable Program in Linux or Windows Dynamixel, Bioloid, OLLO Smart Robot Servo, DIY Robot Kit ROBOTIS - All you need for robot இந்த இணைப்புகளைப் பற்றி |
Thursday, October 14, 2010
தண்ணீர் உரிமை மனித உரிமை என்று ஐ.நா.சொல்கிறதே?
இந்த ஆண்டு ஜூலை-28 ஆம் நாள் புதன்கிழமையன்று, ஐ.நா. தண்ணீர் உரிமையை ஒரு மனித உரிமை என்று பிரகடனப்படுத்தியது. ஏற்கனவே மனித உரிமைகளுக்கான ஒரு பிரபஞ்சம் தழுவிய பிரகடனத்தை, இதே ஐ.நா. பொது சபை 1948 ஆம் ஆண்டில், 58 உறுப்பு நாடுகளின் ஒப்புதலோடு நிறைவேற்றியது. அதே ஐ.நா.பொதுசபை, இப்போது அறுபத்திரண்டு ஆண்டுகள் கழித்து, தண்ணீர் உரிமை, மனித உரிமையே என்ற தீர்மானத்தை 192 நாடுகள் இருந்த சபையின் ஒப்புதலோடு நிறைவேற்றியிருக்கிறது. அது தண்ணீரையும், கழிவு அகற்றளையும் ஒரு அடிப்படை மனித உரிமையாக அங்கீகரித்துள்ளது. இந்த தீர்மானம் சிக்கலானது என்று நிரூபிக்கும் அளவில், இதற்கு ஆதரவாக 122 நாடுகளும், வாக்களிகாதவர்களாக 41 நாடுகளும் இருந்தன. ஒருவரும் இதை எதிர்த்து வாகளிக்கவில்லை. அதேநேரம் இந்த தீர்மானம் ஒரு ஏழை நாடுகள், பணக்கார நாடுகள் முரண்பாடு என்பதாக பார்க்கப்பட்டது. அதாவது ஒரு வடக்கு---தெற்கு முரண்பாடாக கருதப்பட்டது. அமெரிக்கா எதிர்பார்த்தபடியே ஆதரவு வாக்கை அளிக்கவில்லை. மாறாக வாக்களிக்காமல் இருந்துவிட்டது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆச்திரயா, கனடா, கிரீஸ், ஸ்வீடன், ஜப்பான், இஸ்ரேல், தென்கொரியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, டென்மார்க், அயர்லாந்து, ஆகியவை பணக்கார, தொழில்வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுடன் சேர்ந்து வாகளிகாமல் இருந்துவிட்டன. ஆனால் அவர்களுடன் வளரும் நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில், போட்ஸ்வானா, எதியோபியா, கென்யா, லெசோதோ, சாம்பியா, கயானா, ட்ரினிடா, தொபகா சேர்ந்துகொண்டன. இந்த தீர்மானத்தை கொண்டுவந்த பொலிவியா, மனித உரிமைகள் முழுமையாக உருவான ஒன்றாக இருப்பதில்லைஎனவும், அவை யதார்த்தத்தையும்,எதிர்பார்ப்பையும் வைத்தே வளர்க்கப்படுகின்றன என்றும் கூறினார். அனைத்துநாட்டு பொருளாதார, சமூக,பண்பாட்டு மாநாட்டில் முடிவு செய்தது போல, கல்விக்கான உரிமையும், வேலைக்கான உரிமையும் எப்படி மனித உரிமையோ அதுபோல, தண்ணீருக்கும், கழிவு அகற்றலுக்கும் உள்ள உரிமையும் அடிப்படை மனித உரிமைதான் , என்று அவர் விளக்கம் அளித்தார்.
அமெரிக்காவின் பிரதிநிதியோ, இந்த தண்ணீருக்கும், கழிவு அகற்றலுக்கும் ஆன தீர்மானத்தில் உலக நாடுகள் மத்தியில் ஒரு கலந்துரையாடலின் மூலம் ஒத்த கருத்தை எட்டி அதன்பிறகு, இப்போது ஐ.நா.வின் மனித உரிமை கழகத்தில் ஜெனிவாவில் நிலுவையில் உள்ள தீர்மானத்தை முழுமையாக ஆக்குவோம் என்று கூறி இப்போதைக்கு தப்பித்துக்கொண்டார். எப்படியோ தண்ணீரை வணிக பொருளாக, குறிப்பாக மக்களுக்கு தேவைப்படும் குடி தண்ணீரை வணிகப்போருளாக ஆகும் ஏகாதிபத்திய நோக்கத்தை ஆதரித்து நிலை எடுப்பவர்களும் அங்கு அடையாளம் காணப்பாட்டனர். அனைத்து நாட்டு சட்டத்தில் தண்ணீரையும், கழிவு அகற்றலையும் ஒரு மனித உரிமையாக பார்ப்பதற்கான அம்சமே இல்லை என்பது அமெரிக்க பிரதிநிதியின் வாதமாக இருந்தது. ஆனாலும் சுத்தமான குடிநீரும், கழிவு அகற்றலும் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
வாழ்க்கை வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படையில் தண்ணீருக்கான மற்றும் கழிவு அகற்றலுக்கான உரிமை வருகிறது என்றும், ஆகவே அதை மனித உரிமை என்று கூறுவது இந்த பொருளில்தான் என்றும் அதனால் அதை உடனே ஏற்றுக்கொள்ளும் வகையில் அனைத்துநாட்டு சட்டம் எழுதப்பட வேண்டும் என்றும் வாதாடப்பட்டது. தண்ணீர் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதும் பலமாக பேசப்பட்டது. குடிதண்ணீருக்கு விலை கூவி விற்க கூடாது என்று பலரும் ஐ.நா. சபையில் பேசினார்கள். பல லட்சம் லிட்டர் தண்ணீர் தினசரி குழாய் கசிவினால் மட்டுமே வீணாகி போகிறது என்றும் சிலர் கூறினார்கள். சிங்கபூரும், பிலிப்பைன்சின் மணிலாவும், கம்போடியாவின் நாம்பென்னும், ஏற்கனவே தங்கள் குடிமக்களுக்கு தண்ணீரையும், கழிவு அகற்றலையும், மனித உரிமை என்று அறிவிப்பதற்கு முன்பே இனாமாக கொடுத்துவருகிறார்கள். நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் இதையெல்லாம் இலவசமாக கொடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் இவை உணமையிலேயே உலகம் அறிந்த மனித உரிமைகள்.
தண்ணீருக்கான நீதி என்ற ஒரு முழக்கம் இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகமயமாக்கலும், தனியார்மயமாக்கலும், தாராளமயமாக்கலும் இன்று உலக அளவில் தண்ணீரை தனியார் வணிகத்திற்கு தாரை வார்த்துவிட்டது உலகம் முழுவதும் 130 கோடி மக்களுக்கு, சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. அதேபோல 250 கோடி மக்களுக்கு கழிவு அகற்றலுக்கான வசதிகள் கிடைக்கவில்லை. உலக வங்கி கணக்குப்படி, 2025 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு, சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலை உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா சுமார் 120 கோடி மக்கள்தொகையை கொண்ட நாடு. அதாவது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள்தொகை கொண்ட நாடு. இங்கே உணவு பாதுகாப்போ, தண்ணீர் தேவையோ, மக்களுக்கு இயற்கை மூலாதாரங்கள் மீது உரிமை இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் கிடைக்கப்பெறும். ஆனால் இங்கே நிலம், தண்ணீர், காடுகள், நதிகள், கடல் ஆகியவற்றின் மீது பொது மக்களுக்கு உரிமை இல்லாத சூழல் ஏற்படுத்தப்படட்டு வருகிறது.
அதாவது நிலங்களை விவசாயத்தில் ஈடுபடும் மக்களான தலித், மற்றும் ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கைகளில் இருந்து தனியார் ஆதிக்க சாதி பண்னையார்களோ, தனியார் ஆலைகளின் முதலாளிகளோ, அரசாங்க உதவி மூலம் பன்னாட்டு மூலதன கம்பனிகளோ, கைப்பற்றி அதில் தங்களது லாப நோக்க வேலைகளுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு அரசாங்கங்களும் சட்டத்தை காரணம் காட்டி ஒத்துழைக்கிறார்கள். இநத்தகைய முயற்சிகளில் கிராம மக்களின் பொது இடங்கள் பறிபோகின்றன. அவைதான் குடிநீருக்கான தேவைகளை நிவர்த்தி செய்து வந்தன என்பதை அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை. அது தவிர குளங்கள், ஏரிகள், ஆகியவை இன்றைய அரசாங்கத்தால் முறையாக பராமரிக்க படுவதில்லை. ஒவ்வுறு கோவில் அருகிலும், குளங்களை அன்றைய மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்தனர். ஆனால் இன்றைய அரசுகள் அது பற்றி கவலை படுவதில்லை.
அதுமட்டுமின்றி இந்த அரசியல்வாதிகள் தங்கள் கைகளுக்கு மக்கள் கொடுத்த அதிகாரம் வந்த பிறகு, மக்களுக்கு குடிதண்ணீர் கொடுக்க வேண்டுமே எனப்தி பற்றி கூட கவலைபடுவதில்லை. அதன் விளைவாக மக்கள் அனுபவித்து வரும் காடுகளை இவர்கள் பன்னாட்டு மூலதன நிறுவனகளுக்கு தாரை வார்த்து விடுகின்றனர் அதுபோல நதிகளை கூட இவர்கள் தனியாருக்கு ஏலம் போட்டு விடுகின்றனர் என்று சொன்னால் நம்புவீர்களா? சத்தீஸ்கரில் ஒரு நதியை தனியாருக்கு ஏலம் போட்டு கொடுத்துள்ளனர். அதன் விளைவு அந்த லாப நோக்கம் கொண்ட தனியார் அங்கு படகில் செல்வோரை, அந்த நதி நீரால் நிலத்தடி நீர் கிடைத்து அதன் மூலம் விவசாயம் செய்வோரை எல்லோரையும் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்த தொடங்கி விட்டனர். அதுபோல இங்கே குளங்களையும், ஏரிகளையும் பராமரிக்காத அரசாங்கம், கடல் நீரை குடி நீராக ஆக்குகிறோம் என்ற பெயரில் மீண்டும் தனியார் முதலாளிகுக்கு தாரை வார்க்கும் வேலையை செய்கிறது.
இவை எல்லாமே சந்தையில் தண்ணீரை வணிக பொருளாக ஆக்குவதில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. அதேபோல சில சுற்று சூழலை கெடுக்கும் ஆலைகளை அதாவது நாசகார ஆலைகளை, அதாவது ஆபத்தான ஆலைகள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட ஆலைகளை அதாவது நச்சு ஆலைகளை கொண்டு வந்து மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் நிருவவதால், அவை னியாத்தடி நீரையும், கடல் நீரையும் கெடுத்து குட்டி சுவராக ஆக்கி விடுகின்றன. அதுதான் ஸ்டெரிலைட் ஆலை விசயத்திலும், தூத்துக்குடி நகரில் நடந்துள்ளது. அதன் விளைவாக அந்த வட்டாரம் முழுக்க குடி தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கடல் நீர் கடுமையாக கேட்டு விட்டது. உதாரணமாக அங்கே உள்ள தெற்கு வீரபாண்டிய பட்டினத்தில் இன்றுள்ள சூழலில், குடி நீர் கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் பல லாரிகளில் குடி நீர் ஏற்றிவந்து கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த செயற்கை குடிநீர் தட்டுப்பாடுக்கு ஒரு நல்ல உதாரணமாக அமையும். இந்த நிலைதான் கோகோ கோலா ஆலை அமைந்துள்ள கங்கை குண்டான் நிலைமையும். அங்கும் குடி நீர் கடுமையாக பதிக்கப்பட்ட கிராமங்கலாக அங்குள்ள கிராமங்கள் மாறிவிட்டன.
இந்த இழி நிலையை போக்க குடிநீருக்கான ஒரு போரை பொது மக்கள் தான் தொடங்க வேண்டும். அதுவே ஐ.நா. சபை தீர்மானத்தை தண்ணீர் எனபது மனித உரிமையே எனபதை உண்மையாக ஆக உதவும். .
Wednesday, October 13, 2010
தூத்துக்குடி ஸ்டெர்லைட் செய்த இன்னொரு கொலை.
மரணத்திற்குப் பிறகும் படிப்பினைகள் தரும் தோழர் பழனியப்பன்!
பழம்பெரும் புரட்சியாளர் தோழர் பழனியப்பனை,இராவன்னா என்று அழைப்பார்கள்.அவர் காரைக்குடியில் சி.பி.ஐ கட்சியில் இருந்தார்.அப்போது 1967 ஆம் ஆண்டின் நக்சல்பாரி புரட்சி இவரையும் ஈர்த்தது.பழனியப்பன் பாத்திரங்கள் தயாரிக்கும் பணியில் இருந்தார்.உற்பத்திக்கான போராட்டம் என்று கூறப்படும் உழைப்பில் இருந்த பழனியப்பன்,தனது வாழ்க்கையை நக்சல்பாரி இயக்கத்திற்காக அர்ப்பணீப்பில் இறங்கினார். அன்றைய நக்சல்பாரி இயக்கத்தில்,சாருமஜீம்தாரின் வழிகாட்டல்கல் எல்லோராலும் ஏற்கப்பட்டன.தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட வழிகாட்டல்களில் செயல்பட்டு வந்த தோழர் எல்.அப்பு,வேலுரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ரகசியமாக கொலை செய்யப்பட்டார்.அது 1970ஆம் ஆண்டு நடந்தது.அண்ணாமலை பழ்கலைகழகத்தில் படித்து வந்த கே.என்.கணேசன், பென்னாடத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடித்து சிதறி தியாகியானார்.அவருடன் விளாத்திகுளத்தை சேர்ந்த சர்ச்சிலும், சிறுமுகையை சேர்ந்த கன்னியப்பனும் மரணமடைந்தார்கள் அதுவும் 1970 ஆம் ஆண்டு நடந்தது.
1972ஆம் ஆண்டு தோழர் பழனியப்பன் சாருமஜிம்தார் வழியில் செயல்பட முடிவு செய்து,தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இறங்கினார். செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் தேவேந்திரகுல மக்கள் ஆதிக்க சாதியின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி இருந்தனர். அந்த கிராமத்தில் விவசாய வேலைகள் செய்தபடி,பழனியப்பன் இறங்கி தலைமறைவு இயக்கப்பணிகளை தொடங்கினர்.ஒரு கட்டத்தில் அந்த கிராமம் காவல்துறையின் கியூ பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது சுற்றி வளைப்பை உடைத்துக்கொண்டு பழனியப்பனும்,தோழர்களும் தப்பித்தார்கள் அந்த மீனாட்சிபுரம் கிராமம்தான் பிறகு முழுமையாக முஸ்லிம்மாக மாறியது. அதாவது புரட்சிகர மாற்றத்திற்கு தயாரான தலித் மக்களை அரசு அடக்குமுறை செய்யுமானால், அவர்கள் சாதி ஒடுக்கலில் இருந்து தப்பிப்பதற்காக மதம் மாறுவார்கள் என்பதற்கு இதுவே சான்று.
சமீபத்தில் காரைக்குடியில் 24-09-2010அன்று மரணம் அடைந்த பழனியப்பன் இறுதி நிகழ்வில், மேற்கண்ட படிப்பினைகள் உணரப்பட்டன. தமிழ்நாட்டில், பிற மாநிலங்கள் போல் இல்லாமல் புரட்சிகர இயக்கங்கள் வெற்றி பெற்று, முன் செல்லாததற்கு, இத்தகைய காரணங்களும் இருக்கின்றனவா என்ற விவாதத்தை, தோழர் பழனியப்பன் வாழ்க்கை பரிசீலிக்க வைக்கிறது.
புதிய விண்டோ