Wednesday, July 17, 2013

முஸ்லிம் முதல்வரின் இந்து காவல் அதிகாரி ஆய்வு, மும்பையை திணறடிக்கிறது.


       இந்த மாத தொடக்கத்தில் அந்த முஸ்லிம் தொழில் அதிபர், ஜம்மு-காஷ்மீரிலிருந்து,மும்பை வருகிறார். நண்பருடன் சென்று,நான்கு சக்கர வாகன நிறுத்தத்தில், இரங்கி சிகரெட் வாங்க செல்கிறார். ஜூலை 6, ஜூலை 7 ஆளை காணவில்லை. புகார் கொடுத்தால், மும்பை காவல்துறை மதிக்கவே இல்லை முதல் தகவல் அறிக்கை கூட போடவில்லை. ஜூலை 8, அவரது சகோதரர் வந்து செல்வாக்குள்ளவர்களை வைத்ஹ்டு, முதல் தகவல் அறிக்கையை போடா வைத்தனர். ஜூலை 9  இல்,ரயிவே பாதியாய் கடக்கும்போது, இறந்ததாக உடலை கண்டுபிடித்து காவல்துறை கூறியது. சகோதரர் "உடலெல்லாம் உள்ள சித்திரவதை காயங்களை" காட்டுகிறார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள "சுயாட்சி பேசும் சிறிய காட்சிகளில்" தொடக்கி பெரிய கட்சிகள் வரை இதை கண்டிக்கிறார்கள்  முதல்வர் ஓமர் அப்துல்லா, ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளரை அனுப்புகிறார். பாண்டே என்ற அந்த அதிகாரி ஒரு "உண்மையறியும் குழு"வுடன் மும்பை  வந்து விசாரிக்கிறார். எப்படி இருக்கு இந்திய ஒற்றுமை?  

Tuesday, July 16, 2013

இளவல் பாஸ்கர் இறந்துவிட்டான்.......

இளவல் பாஸ்கர் இறந்துவிட்டான்.......
     எங்கள்  தோழர் இளவல் பாஸ்கர் நேற்றைக்கு முந்திய நாள்,மண்டபம் அருகே வாகன விபத்தில், ஓட்டுனராக பயணம் செய்யும்போது, இறந்துவிட்டான். அவனது உடலை இப்போதுதான், இன்றுதான் கல்பாக்கம் அருகே உள்ள "பழைய நடுக் குப்பம்" இடுகாட்டில் மீனவ சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நண்பர்கள் உடன் இணைந்து "அஞ்சலி கூட்டம் நடத்தி எரித்துவிட்டார்கள்  அதில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளேன்.இந்த பாஸ்கரை "முக நூல்" வாசகர்களுக்கு தெரியாது. அவனுக்கும் முக நூல்  வாசகர்களை தெரியாது. அவன் ஓடி ஓடி வேலை செய்யும் மீனவ்   சமூகத்தின் ஒரு போராளி. ஒரு அடிமட்ட செயற்பாட்டாளன் அவன் இல்லாமல், காஞ்சி மாவட்ட மக்கள் மன்றம் நெருக்கடிகளை கடக்க வில்லை என்று மக்கள் மன்றம் மகேஷ் நினைவு கூறுகிறார். அவன் இல்லாமல் மீனவ சமூக அணிதிரட்டல்களில் பணிகள் நடக்க வில்லை என்று மீனவ சங்க தலைவர் கபடி மாறன் ஆதங்கப்படுகிறார். 

        பாரதியும், மாறனும், பாபு வும் மற்றவர்களும் நடத்திய "மீனவ மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் பெற்றவருக்கு, பரிசுகள் வழங்கும் விழாவில் பாஸ்கர் சூர்,சுறுப்பாக இயங்கினான்.  கன்சி மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க தலைவர் சதீஸ் நடத்திய மீனவ மாணவர்களுக்கான  " அடுத்த கட்ட படிப்பை தேர்வு செய்யும் கலந்துரையாடலில்" பாஸ்கர் வேகமாக இயங்கினான். அதை மீன் வள துறை உதவி இயக்குனர் ஜூலியஸ் உட்பட பாராட்டினார்கள். பேரா.சிவகுமார்,பேரா.திருமாவளவன், உட்பட அனைவரும் பார்த்தார்கள். அதை கண்டு "தம்பி" பெரும் பார்ரட்டுகளில் உள்ளம் பூரிந்த்தேன். அந்த பாஸ்கர் இப்போது இல்லை. 

                  கல்பாக்கம் அருகே கடலில் இருக்கும் "எரிமலையை கண்டோம் என்று  அதன்  பாதிப்பை கண்ட மீனவ  மக்களை பற்றி "த.மு.முக.வின் செயலாளர் அப்துல் சமது"என்னிடம் கூறிய பொது ஒரு திருமணத்தில் அந்த வட்டாரத்தை சேர்ந்த பாஸ்கரிடம் நான் கத்திய உடனேயே, பகுஷிமா நினைவு நாளில், அங்கேயே ஒரு பத்து மீனவ கிராம மக்களை திரட்டி, கூட்டம் நடத்தினானே அதை அடக்க நிகழ்ச்சியில், அப்துல் சமது நினைவு கூறினார்  அன்று, "கூத்தவக்கம், கல்பாக்கம், மாமல்லபுரம் காவல் நிலையங்கள் அந்த கூட்டம் நடத்த விடாமல்" செய்த வேலைகளை பாஸ்கர் எப்படி முறியடித்தான் என்று நான் நினவு கூறினேன். காவல் துரையின், உளவுத்துறையின் மிரட்டல், பாஸ்கரிடம் அன்று பலிக்கவில்லை. நான் வருவது அந்த உளவு அதிகாரிகளை தலையிட வைத்தாலும், பாஸ்கர் ஊர்தியாக  நின்றான் "எள் என்றால் எண்ணை " என்று நிற்பானே என நான் பெருமை பட்டுக் கொண்டேன். எத்தனை பிரபலங்கள், இன்று அந்த மீனவ கிராமத்திற்கு இறுதி  அஞ்சலி செலுத்த வந்தார்கள்? ஒரு கடலோர மெனிவா கிராமத்திற்கு பதினைந்து நன்கு சக்கர வாகனங்கள் வந்ததை மக்கள் பேசிக் கொண்டார்கள் பாஸ்கர் அந்த அளவுக்கு காசிமேட்டிலும் மரக்காணம் பகுதியிலும்  பிரபலமான தோழன். நானா நிறைய எழுதவேண்டும் அவனை பற்றி. ...  .

Sunday, July 14, 2013

நாடாளுமன்ற தாக்குதல், 26/11 மும்பை தாக்குதல் இரண்டையும் செய்தது இந்திய அரசு?

நாடாளுமன்ற தாக்குதல், 26/11 மும்பை தாக்குதல் இரண்டையும் செய்தது இந்திய அரசு?
    இன்று காலை "டைம்ஸ் ஆப் இந்தியா " முதல் பக்க செய்தி. முன்னாள் உள்துறை அண்டர் செகரட்ரி ஆர்.வி.எஸ்.மணி இந்த தகவலை கூறினார். அவரிடம் சமீபகாலம் வரை சோ.பி.ஐ.யின் "சிறப்பு புலனாய்வு குழு"வில் இருந்த சதீஸ் வர்மா இத்தகைய செய்தியை கூறியதாக தெரிவித்துள்ளார். 13-12-2001 இல் நாடாளுமன்ற கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நடத்தியது நடுவண் அரசுதான் என்று அதில் தெரிவித்துள்ளார். வாஜ்பாயி ஆட்சியில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்கியவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் சில ராணுவத்தினரும் பலி கொடுக்கப்பட்டனர். உள்ளே "தாக்குதல்காரர்கள்" வரும்போதே, ராணுவ ஜீப்பில் எப்படி வந்தனர்? எப்படி அவர்களை உள்ளே பாதுகாவலர்கள் விட்டனர்? ஜீப்பில் "இந்திய எதிர்ப்பு வாசகங்கள்" எப்படி பகிரங்கமாக எழுதப்பட்டிருந்தன? சாட்சிகள் இல்லாமல் அனைவரும் ஏன்  கொல்லப்பட்டனர்? அவர்கள் "திட்டமிட்ட பயங்கரவாதிகள்" என்றால் எப்படி "கைபேசியை" விட்டு சென்றனர்? அதை வைத்து பிடித்தாக அறிவித்த பேராசிரியர் கிலானியை நீதிமன்றம் விடுதலை செய்ததே? அதே பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட "அப்சல் குருவை" மட்டும் ஏன்  விடவில்லை? அப்சல் குரூ "ஜம்மு-காஷ்மீர் விடதலை முன்னாணியை" விட்டு வெளியே வந்து, சி.ஆர்.பி.எப். முகாமின் பொறுப்பில்தானே இருந்தார்? அந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியும் இப்போது, ஆயுதப் போராட்டம் செய்யவில்லையே? அரசியல் போராட்டத்திற்கு "யாசின் மாலிக்" தலைமையில் வந்துவிட்டார்களே?  அப்சல்குரு தனது நேர்காணலில், "தன்னை சி.ஆர்.பி.எப்.முகாமின் தலைவர் டில்லி போகப் பணித்தார் என்று கூறியுள்ளாரே?  அவருக்கு சம்பந்தப் படாத  ஆட்களை பார்க்க கூறினார் என்றும் கூறினாரே? அவரை அந்நியாயமாக  "மரண தண்டனை" கொடுத்து கொன்று விட்டீர்களே?  அந்நியாயமாக தேசப்பற்றுடன் ராணுவத்தில் சேர்ந்த வீரர்களையும் உங்கள் அரசியல் விளையாட்டிற்காக கொன்று விட்டீர்களே? இப்பது அதிகாரிகளுக்குள் வந்துள்ள முரண்பாட்டில், உண்மையை கூறுகிறீர்களே? அதுவும், "போடா " என்ற கொடும் சட்டம் கொண்டுவர "பயங்கரவாத சூழலை" ஏற்படுத்த இப்படி செய்தார்கள் என்று அரசின் உண்மை தோற்றத்தை கூறுகிறீர்களே?  நான்கள் இதைத்தானே ஊடகம் மூலம் "பத்து ஆண்டுகளாக" கூறிவருகிறோம்? எங்களை " இறையாண்மைக்கு"எதிரா பேசுவதாக சிலர் முனு, முனுத்தீர்களே? இப்போது "பொடா" சட்டம் கொடுவருவதர்காக செய்த "சதி" என்பது அம்பலம் ஆகிறதே?

           அடுத்து, 26/11 மும்பை தாக்குதல். 2008இல் அது நடந்தது. ஐந்து ஆண்டுகளாக அந்த தாக்குதல்  "நாடவன் அரசும், அமெரிக்க உளவு துறையும்" சேர்ந்து திட்டமிட்டு செய்தது என்று கூறிவந்தோமே? ஊடகங்களில் இப்படி கூறலாமா? என்று சிலர் கூச்சலிட்டார்களே? முழுமை பார்வை விளங்காதவர்கள் எல்லாம் எங்களை விமர்சனம் செய்தார்களே?  "கசாப்" நேபாளத்தில் காத்மாண்டில் பிடிபட்டு, இந்திய உளவு துறை பொறுப்பில் பயிற்சி கொடுக்கப்பட்டப்வன் என்ற செய்தியை கூறிவந்தோ மே ? சி.ஐ.ஏ .கூட அந்த தாக்குதலை திட்டமிட்டதிளுண்டு என்பதை, ஹெட்லீ அமெரிக்க உளவு துறையால் அனுப்பப்பட்டவர் என்று தெரியும் போதே  கூறினோமே?  அமெரிக்காவுடன் "பாதுகாப்பு ஒப்பந்தம்" செய்துகொள்ள  இந்த "தாக்குதல்" திட்டமிடப்பட்டதாகா நாங்கள் கூறிணோமே? அப்போது செவி மடுக்காததுபோல இருந்தீர்களே? ஹெட்லியை பிடிக்கவோ,விசாரிக்கவோ, கைதி பரிமாற்றம் செய்யவோ, அமெர்க்காவுடன் உங்களால் முடியவில்லையே? உங்கள் வேண்டுகோள்படி, அமெரிக்க உங்களுக்கு உதவி செய்து, மும்பை தாக்குதலை நடத்தி இருக்கும்போது, எந்த முகத்தோடு நீங்கள் அமெரிக்காவிடம் கேட்க முடியும்? அமெரிக்க ஆலோசனையை ஏற்று, "யு.ஏ பி.ஏ " என்ற "சட்ட விரோத கூட்ட தடுப்பு சட்டம்" என்பதை கொண்டுவரத்தான் அந்த மும்பை தாக்குதல் நடத்தப்பட்டது என்று இப்போது, சதீஸ் வர்மா கூறியதை, ஆர்.வி.எஸ்.மணி போட்டு உஅடித்து விட்டாரே? மும்பையில் கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம்  "உங்கள் திருவிளையாடலுக்கு" பலியானவர்கள்தானே? அதில் மீதம் இருந்த சாட்சி என்பதால்தானே அவசர,அவசரமாக  "கசாப்" கொலை செய்யபட்டான்? நாங்கள் இதுபற்றிய உண்மைகளை கூறும்போது, எதோ "தேச துரோகம்" என்பது போல பார்த்தீர்களே? இப்போது தெரிகிறதா? யார் தேசத் துரோகிகள் என்பது?

                  2005 ஜூன் மாதம் இஷ்ரத் அந்நியாயமாக "போலி துப்பாக்கி சண்டையில்" கொல்லப்பட்டதை அம்பலப்படுத்திய சி.பி.ஐ., உள்துறை கொடுத்த செய்தியான "லஷ்கர் தொடர்பில் இஷ்ராத்" இருந்தார் என்ற தவறான செய்தியை கொடுத்து என்று, "சி.பி.ஐ.யை கையில் வைத்துள்ள சோனியா அணியினர், அமெரிக்க ஆதரவுடன் உள்துறையை செல்வாக்கு செலுத்திய மன்மோகன் சிங்  குழு மீது, பாய்வதற்கு போட்ட "திட்டத்தால்", அந்த நேரத்தில் உள்துறையில்  அப்படிப்பட்ட ஆவணத்தில், கையெழுத்திட்ட ஆர்.வி.எஸ்.மணி  கோப்பப்பட்டு, இந்த உண்மையை போட்டு உடைத்து விட்டார். இப்போது  நடுவன் அரசின் "நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக" உதவி நில வளர்ச்சி அதிகாரியாக ஆர்.வி.எஸ்.மணி பணியாற்றி வருகிறார். குஜராத் வழி அதிகாரியாக வந்த சதீஸ் வர்மா,இப்போது, சுன்னாகத் காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். ஆர்.வி.எஸ்.மணி தனது அமைச்சக "அண்டர் செக்ரட்டரிக்கு" எழுதிய கடிதத்தில், இஷ்ராத் சம்பந்தமாக இரண்டு ஆசி.பி. அதிகாரிகள்தான் எழுதினார்கள் என்று "எழுத்துபூர்வமாக" கொடுக்க சொன்னார் என்றும்,தான் மறுத்து விட்டதாகவும், குற்றம் சாட்டியுள்ளார்  இந்த அரசியல்வாதிகளின்,"சதிகள்" எத்தனை மக்களை கொல்கிறது பார்த்தீர்களா?  ஆர்களுக்குள் வரும் "மோதல்" எத்தனை உண்மைகளை போட்டு உடைக்கிறது பார்த்தீர்களா? 

குட்ரோச்சி மரணம் சோனியா தலை தப்பியது?


     அப்பாடா. அன்னை சோனியாவை இனி யாரும் "போபார்ஸ் பீரங்கி ஊழலை" காட்டி மிரட்ட முடியாது. ஒரே சாட்சியான இத்தாலி மாபியா ஆயுத வணிகர் "கொற்றோச்சியும்" காலி. இனி எந்தப் பய  "சாட்சி" சொல்ல வருவான்? 20014 தேர்தலில் இனி எதிர்கட்சிகள் போபார்ஸ் பற்றி பேச முடியாது. 2ஜி, விண்வெளி ஆராய்ச்சி, நிலக்கரி, காமன்வெல்த் ஆகிய ஊழல்களை சோனியாவின் சி.பி.ஐ. தானே பிடித்தது?. அவை எல்லாவற்றிலும் மன்மோகனுக்குதானே தொடர்பு? இப்படி "தோசையை" புரட்டி  போட சோனியா அணி  தயாராகிறது.

சூரியனும் வேண்டும், அது மேற்கே உதிக்க வேண்டும் ???


     சூரியனை தேர்தல் சின்னமாக கொண்ட தலைவர்தான் இப்படி கூறியுள்ளார் இன்று. இப்படியா கூறுவார்?  அந்த அளவுக்கா அவர் ? இப்படி நீங்கள் கேட்கலாம்  அவர் கூறியது இதுதான் "கூடங்குளம் அணு உலையும் வேண்டும். அது மக்களுக்கு ஆபத்து தராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்."  இதற்கு பொருள் அதுதானே? என்ன உடன்பிறப்பே?

வன்னியர் பெண்களும் தருமபுரி போராட்டத்தில்....

வன்னியர் பெண்களும் தருமபுரி போராட்டத்தில்....
    நேற்றைய  "நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் " ஏடு  ஐந்தாவது பக்க செய்தி இது. நாம் மீண்டும், மீண்டும் கூறி வருகிறோம். இளவரசன்-திவ்யா "காதலும்", அதில் திவ்யா தந்தை, திவ்யாவின் கணவர் இளவரசன் ஆகியொரீன் "சாதலும்" "சாதி" பிரச்சனை மட்டுமல்ல. அடியாழத்தில், அது "இளைய தலைமுறையினருக்கு எதிரான போர்" என்பது புரியும். அதுவும் இளம் பெண்களுக்கு எதிரான குறிப்பான போர். அதிலும் "வன்னிய பெண்களுக்கு" எதிரான போர். "நாடக காதல்", "ஜீன்ஸ் காதல்", "கூலிங்க்ளாஸ் காதல்" ஆகியவை ஒரு குறிப்பிட்ட கட்சியை எதிர்த்து என்று கூறப்பட்டாலும், தலித் சமூகத்தை எதிர்த்து என்று புரியப்பட்டாலும், அது " வன்னியப் பெண்களை" இழிவு படுத்தும் "சொல் அம்புகள்" இல்லையா? அதை தொடுத்தவர்களை எதிர்த்து போரில், நிர்கவேண்டியவர்கள் வன்னியப் பெண்கள் இல்லையா?  அதுதான் தொடக்கி உள்ளது. அந்த செய்தியில் சில வன்னியப் பெண்களை நேர்காணல் செய்து எழுதி உள்ளார்கள் 

Friday, July 5, 2013

பூக்கள பறிக்காதீங்க, காதல முறிக்காதீங்க.....


       இளவரசன் மரணம் ஏன் ? உங்கள் சமூகத்தால்  அதன் சாதி திமிறால், உங்கள் சீரழிந்த அரசியலால் அதன் வாக்குகள் பெறுவதற்கு சாதி வெறியை தூண்டும் கேவலத்தால், சொந்த சமூகத்தின்  பெண்களை உங்களது "உடமைகளாக" எண்ணும்  அழுகிப்போன பண்பாட்டால், முற்போக்கு பேசிக் கொண்டு பிற்போக்காக செயல்படலாம் என்று தமிழ் மக்கள் பலரையும் அனுமதித்து, நடமாட விட்டுள்ள, இழிநிலையால், நீதிமன்றம் வந்தாலும் பெண்ணை ஆண்கள் அன்பாகவே மிரட்ட முடியும் என்ற அசிங்கத்தை பொதுமக்கள் கேள்வி கேட்காமல் இருக்கும் முதுகெலும்பு அற்ற சூழலால், நெருக்கடியில் உள்ள தாய்க்கும், மகளுக்கும், கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றாத "நீதிமான்களின்" அளவற்ற அக்கறையால், "நேர்மையான அன்பு " இந்த புழுத்துப் போன புவியில் இல்லாததால், சாதியின் பெயரில் "சண்டியர் தனம் " அனுமதிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள இழி பிறவிகளுடன் வாழ "தகுதியற்றவனாக" ஆகிவிட்டதால், ஏற்பட்ட மரணம்தானே? 
       ஒன்று புரிந்து விட்டது. இளைய தலைமுறை மீது,"முதிய தலைமுறையின் சாதி அரசியல்" ஒரு போரை கட்டவிழ்த்து  விட்டுள்ளது.அந்த போரை சந்திக்க இளைய தலைமுறை  தயாராக வேண்டும். அதிலும், இளைய தலைமுறையின் இளம் பெண்கள் முன் நின்று சந்திக்க வேண்டும். உங்களுக்கு முதிய தலைமுறையின் பெண்கள் துணை நிற்பார்கள்  ஏன்  என்றால், அவர்கள் ஏற்கனவே இந்த ஆணாதிக்க சாதிய வெறியர்களை சந்தித்து விட்டு வந்தவர்கள்  இளம் பெண்கள் கைகளில்தான் இந்த உலகம் இருக்கிறது. மாவோ கூறியது போல , "இளைஞர்களே, நீங்கள்தான் உலகை உருவாக்க இருப்பவர்கள்.நாங்களும்தான். ஆனால் இறுதி ஆய்வில் நீங்கள்தான் " நினைவில் வையுங்கள்.