Tuesday, February 22, 2011

பார்வதியம்மாள் மரணம் தரும் பாடம்?

ஒரு மூதாட்டி போதுமான மரஐத்துவ உதவி கிடைக்காமல் விரைந்து மரணம் நோக்கி பயணம் ஆனது இந்த உலகிற்கு புதிய செய்தியல்ல. ஒரு உயிர் போர் நடந்த ஊரில் சரியான வைத்தியம் இல்லாததால் விரைந்து மரணத்தை தழுவியதும் செய்தியல்ல. இனவெறி பிடித்த நாட்டில் நோயாளியான ஒரு தாய், அரசு உதவி இன்றி மரணம் அடைந்தார் என்பதும்கூட புதிய செய்தியல்ல. ஒரு போராளியின் தாய்க்கு அடக்குமுறை அரசு அலட்சியம் காட்டி மரணத்தை விரைவு படுத்தியது என்பதும் இந்த உலகிற்கு புதிய செய்தியல்ல. ஒரு விடுதலை வீரரின் அன்னைக்கு இப்படி இழைக்கப்பட்டதும் புதிய விசயமல்ல. ஒரு இனத்தின் தலைவனை பெற்றெடுத்த தாய்க்கே இப்படி நிலைமையா என்றால் உலகில் பல இடங்களில் அப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு நிகழ்வு தமிழீழ தசிய தலைவரின் தாய்க்கு நிகழ்ந்ததால் தமிழ் உணர்வாளர்களுக்கும், உலகம் தழுவிய தமிழருக்கும் நெஞ்சில் ஈட்டி குத்தியதுபோல இருக்கலாம். ஆனால் இங்கே நடந்தது மேற்கண்ட நிகழ்வுகளில் ஒன்று என்று எப்படி கூறமுடியும்?
ஈழத்தமிழர்கள் உலகம் தழுவிய அளவில் வசிக்கும் தமிழர்களான ஒன்பது கோடியில் ஒரு அங்கமாக இப்போது இனம் காணப்படுபவர்கள். அவர்களுக்கு இனச்சொந்தங்களாக அருகே இருக்கும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் ஆறரை கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அத்தகைய நாட்டில் தேர்தல்கள் மூலம் தாங்கள் விரும்பியவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பதாக இந்த உலகம் நம்புகிறது. அப்படிப்பட்ட இந்தியாவில் இருக்கும் தமிழ்நாட்டில் உள்ள தமிழகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சிதான் அங்கே ஆளுகிறது. அதற்கு தமிழர்கள் மத்தியில் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் வாழ்வதாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார். அத்தைகைய சூழலில் இந்த தாயாரின் மரணம் சம்பவித்துள்ளது. அப்படியானால் அததகைய வாய்ப்புகளை நம்பாமல் அல்லது பரிசீலிக்காமல், அல்லது பயன்படுத்தாமல் இந்த மூதாட்டி இருந்துவிட்டாரா?
பார்வதியம்மாள் சிகிச்சைக்காக சிங்கபூர் சென்றவர் அவரது கடைசி விருப்பத்திற்கு இணங்கவும், நண்பர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ சிகிச்சை பெறவும் தமிழ்நாட்டிற்கு வார விரும்பினார். அதற்காக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம மூலம் விசா பெற்றுக்கொண்டு சென்னை வந்து இறங்கினார். அப்போதே விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பபட்டார். இந்திய ஹை கமிஷன் கொடுத்த விசாவையே ஏற்காமல் அவரை திருப்பி அனுப்ப முடிவு செய்த புண்ணியவான்கள் யார் என்ப்வதே உலக தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. தமிழக முதல்வர் கலைஞரை பொறுத்தவரை அவருக்கு பார்வதியம்மாள் திருப்ப அனுப்பட்டபிறகு ஊடகங்களின் செரிதிமட்டுமே தெரியும் என்றி சொல்லிவிட்டார். ஒரு முதலமைச்சரை பொய் சொன்னார் என்று நாம் எப்படி குற்றம் சாட்டமுடியும்? ஏனென்றால் பார்வதியமாலை துரித மரணத்திற்கு தள்ள காரணமாக இருந்த அந்த சென்னை விமான நிலைய நாடகமான திருப்பி அனுப்பியது என்பது உலக தமிழர்கள் மத்தியில் கழுவப்பட முடியாத ஒரு பெரும் கரையாக பதிந்துவிட்டது.அத்தகைய குற்றத்தை கலைஞர் செய்தார் என்று நாம் கூசாமல் சொல்லக்கூடாது அல்லவா?
நடந்த நிகழ்வுகள் ஒரு முடிவுக்கு நம்மை தள்ளுகின்றன. மேற்கண்ட நிகழ்வுகளால் இப்போது ஏற்பட்டிருக்கும் பார்வதியம்மலின் மரணம் என்பது ஒரு கொலைதான் என்பதும், அதை செய்தா காரணமானவர்கள் கொலைக்குற்றவாளிகல்தான் என்றும் உலக தமிழர்களின் வரலாறு பதிவு செய்யும். ஆகவேதான் இதற்க்கு நாம் யாரையும் காரணமானவர்கள் என்று உடனடியாக முடிவு செய்ய முடியாது.இன விடுதலை போர் நடக்கும் போது நடந்த போர்க்குடர்ந்களுக்காக பலரும் இன்று உலக மக்கள் மத்தியில் குற்றவாளிகளாக நின்று கொண்டு இருக்கிறார்கள். அதிலும் சிலர் இந்திய மண்ணில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பட்டியளிடப்பட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் அதைவிட ஒரு தனிப்பட்ட உயிரை மருத்துவ சிக்கிச்சை இடிக்காமல் செய்து கோளை செய்வது என்பது கொடிய மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம். ஆகவேதான் நம்மால் அதற்கு காரணம் என்று யாரையும் உடனடியாக குற்றம் சொல்லமுடியவில்லை.
ஆனாலும் வரலாறு என்பது ஒரு நாள் உணமையான குற்றவாளியை பகிரங்கப்படுத்தவே செய்யும. சென்னை விம்மான நிலையத்திற்கு சென்று நூறு காவல் படைகளுடன் பார்வதியம்மலை திரும்ப அனுப்ப காவல்துறை ஆணையர் ஜாங்கிட் ஈடுபட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. அவர் அமுலாக்குபவராக இருக்கலாம். அவருக்கு அந்த உத்தரவை கொடுத்தவர்கள் யார்? முதல்வர் கலைஞர் தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார். அப்போது உணமியான குற்றவாளி யார் எனப் அதை இன்றைய தமிழ்நாட்டு தேர்தல் நேரத்தில் கண்டுபிடித்து தடனை வழங்கவேண்டிய போயிருப்பில் முதல்வர் கலிஞர் இருக்கிறார். அதையே உலக தமிழினமும் கேட்கிறது.

No comments:

Post a Comment