Friday, March 4, 2011

பார்வதியம்மாள் ஒரு அடையாள குறியீடு.

வருகிற மார்ச் ஏழாம் நாள் புலிக்குட்டியை பெற்றெடுத்த தாய்ப்புலி பார்வதியம்மாளின் பதினாறாவது நாள் காரியம். பார்வதியம்மாள் சைவ நம்பிக்கை கொண்டவர். சைவ நம்பிக்கை கொண்டவர்கள் பதினாறாம் நாள் காரியத்தை கவனமாக கடைப்பிடிப்பார்கள். நாம் வைணவராகவோ,கிறித்துவராகவோ, இஸ்லாமியராகவோ,மதம் அற்றவராகவோ, நாத்திகராகவோ இருக்கலாம். ஆனால் அனைவரும் தமிழர்கள் அனைவரும் தமிழீழம் அடைவதை வாழக்கையின் ஒரு முக்கிய லட்சியமாக கொண்டிருக்கிறோம்.அதிலும் அதற்காக புறப்பட்ட புலிப்படையின் சாகசங்களையும், சாதனைகளையும்,மனதில் நிறுத்தி ஒவ்வொரு நாளும் அகமகிழ்கிறோம்.அதற்கு காரணமான அந்த மகத்தான தமிழீழ தேசியத்தலைவரை எண்ணி, எண்ணி,பஐவகை அடைகிறோம். உலகில் எந்த ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்திலும் தரைப்படையை தாண்டி, கடல் படையையும்,வான் படையையும் கட்டி வெற்றிகரமாக வழிநடத்தியதாக சரித்திரம் இல்லை. அப்படிப்பட்ட சரித்திரத்தை படைத்த ஒரு தலைவரை தனது கருவில் சுமந்து பெற்ற அந்த தாயார் பார்வதியம்மாளின் காரியம் என்றால் அதில் தமிழர்களின் பதிவு வேண்டும்.

பார்வதியம்மாள் இன்று ஒரு அடையாள குறியீடாக ஆகி உள்ளார்.அதாவது அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு கூட சிங்கள வெறியர்களின் தலைமையை ஏற்றுள்ள ஒட்டு குழுவினர் தடை செய்தார்கள். அம்மாளின் சிதையில்கூட அவர்கள் உடைப்பு வேலை செத்தார்கள். சாம்பலை கூட விட்டுவைக்க தயாரில்லை.பார்வதியம்மலின் சாம்பலில் கூட நாய்களை அறுத்து போட்டனர். கருவிலே புலியை சுமந்த ஒரு தாயாரின் சாம்பல் கூட தமிழின எதிரிகளுக்கு அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதால் பார்வதியம்மாள் ஒரு அடையாள குரீடாக ஆகிவிட்டார்.

சென்னையில் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் மீனவர் சங்கங்களின் முன்முயர்ச்சியில், நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையமும் சேர்ந்து அத்தகைய காரியத்தை நடத்திட பல இடங்களில் திங்கள் கிழமை பார்வதியம்மாள் படத்துடன் ஏழைகளுக்கு உணவு அளித்தால் என்ற காரியத்தை செய்ய இருக்கிறார்கள்.அதற்க்கான பணியை துவங்கி விட்டார்கள். நீங்கள் என்ன செய்யப்போகிரீகள்.

No comments:

Post a Comment