Friday, March 4, 2011

தி.மு.க.வை குத்தும் காங்கிரஸ்.

குத்து குத்து கும்மாங்குத்து குத்தராங்கலேப்பா காங்கிரஸ். இது ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனிதனை கடிக்கும் கதையா? முதலில் ஈழத்தமிழர்களை போராட விடாமல் சிங்களத்திற்கு உதவியது காங்கிரஸ்.பிறகு ஈழத்தமிழரின் விடுதளிக்கு போராடும் விடுதலை புலிகளை தடை செய்தது காங்கிரஸ். பிறகு விடுதலை புலிகளின் தலைவர் மீது கோளை குற்றத்தை சுமத்தியது காங்கிரஸ். பிறகு விடுதலை புலிகளின் இருத்தலே போர்க்க மாட்டாமல் அழிக்க முழு உதவியை சிங்கள பவுத்த பேரினவாத போர் வெறியர்களுக்கு செய்தது காங்கிரஸ். பிறகு ஈழ தமிழ் தேச்டிய இனத்தையே அழிக்க னைத்து உதவிகளையும் செய்தது காங்கிரஸ். அதேபோல தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முல்லை பெரியார் அணைக்கட்டு தண்ணீரை உச்சநீதிமன்றம் கொடுத்தான் கூட அதை கேரள சட்டமன்ர்டம் மூலம் தீர்மானம் போட்டு தடுத்தது காங்கிரஸ். கர்நாடக மூலம் காவேரி தண்ணீரை நடுவர் மன்ற தீர்ப்பை கூட மீறி தடுத்தது காங்கிரஸ். ஆந்திராவில் பாலாற்றுக்கு நடுவே தடுப்பணைகளை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராமல் தடுத்தது காங்கிரஸ்.

இத்தனையும் நடக்கும் போதெல்லாம் காங்கிரஸ் தலைமையை ஆதரித்த தி.மு.க. தலைமையை இப்போது போட்டு வாட்டி வதைக்கிறது காங்கிரஸ்.தி.மு.க தலைவர் கூறுவது போலவே தேர்தல் ஆணையம் மூலம் ஏப்ரல் பதிமூன்றே தேர்தலை வைத்து தானே கூட்டணி பேச்சுவார்த்தையை இழுத்துக்கொண்டு போய், திக்கு முக்காட வைக்கிறது காங்கிரஸ். டில்லியிலிருந்து வந்த ஆசாத் முதலில் என்பது என்றார். பிறகு ஐம்பத்து எழுவரை ஒப்புக்கொண்டார். அறுபது என்று தி.மு.க. வந்த பின்பும் இப்போது அறுபத்து மூன்று என்கிறது காங்கிரஸ். மத்திய அரசை விட்டு வெள்யே வருகிறோம் என்று கருணாநிதி இப்போது சிந்திக்கிறார். இடையில் கருணைதி, அன்பழகன், ஆற்காட்டார், துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட கருணாநிதி மேலவை திட்டம் வைத்திருந்தார். அதையும் காங்கிரஸ் தனது தேர்தல் ஆணைய வழக்கறிஞர் மூலம் பேசவைத்து முறியடித்து விட்டது.

அதேசமயம் ராஜாவை உள்ளே தள்ளி அவர் மீது அன்னிய நாட்டு உலவி துறைக்கு உதவிய வழக்கை போட முடிவு செய்கிறார்கள்.இது எல்லாமே கருணாநிதிக்கு திட்டமிட்டு காங்கிரஸ் கொடுக்கும் தொல்லைகள்தான். தமிழினத்தை பகைத்துக்கொண்டாலாவது, தனது குடும்ப நலனை பெரிதாக எண்ணிய ஒரு கிழவயது அரசியல்வாதிக்கு டில்லி கொடுக்கும் சித்திரவதை இது மட்டுமா, இன்னமும் போகுமா என்று தமிழினம் எண்ணிப்பார்கிறது

1 comment:

Yoga.s.FR said...

நம்பிக்கை உள்ளவர்களுக்கு எப்போதும் தோல்வி ஏற்படுவதேயில்லை!முள்ளி வாய்க்கால் பேரவலத்துக்கு "மேல்நீதிமன்றில்"(அது தான் கடவுளின் தீர்ப்பு)கணக்கு முடிப்பதற்கான நேரம் வந்து விட்டது!இப்போதெல்லாம் அன்றே!!!!!!!!!!!!!!!!!!!!!!

Post a Comment