Saturday, April 2, 2011

தேத்தல் அதிகாரிக்கு மக்கள் அமைப்புகள் ஆதரவு.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளாக இருப்பார்கள். அந்த வகையில் சகாயம் என்ற நேர்மையான அதிகாரி மதுரை மாவட்டத்தின் தேர்தல் அதிகாரியாக உள்ளார். அவர் தேர்தல் ஆணையம் மேலிருந்து கூறியுள்ள அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று கண்டிப்பாக இருக்கிறார். அதாவது மதுரை என்பதால் அங்குள்ள குருநிலமன்னருக்கும், அவரைத் தொண்டரடிப்பொடி அடியாட்களுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறார்.

மதுரையில் தொடர்ந்து சக்கரவர்த்தி முதல்வர் குடும்பத்தின் மூத்த அரசர் சொல்படி நடக்கும் அராஜகங்களை கண்டு மனம் நொந்து இருக்கின்ற அமைப்புகளும், அறிவு ஜீயகளும் ஒரு பதினைந்து அமைப்புகள் இணைந்து இன்று காலை பி.யு.சீ.எல். என்ற மக்கள் சிவில் உரிமை கழகம் என்ற அகில இந்திய பிரபல மனித உரிமை அமைப்பின் முக்கிய பங்குடன் ஒரு முடிவு செய்துள்ளார்கள். தங்கள் மதுரைக்கு ஒரு நல்ல, நேர்மையான அதிகாரி இப்போதுதான் மாவட்ட ஆட்சியராக கிடைத்துள்ளார். அவரை நீக்க, அவரை இழிவு படுத்த ஆளும் கூட்டம் எடுக்கும் முயற்சிகளை எத்ரித்து தேர்தலை பயம் இன்றி நடத்த இதுபோன்ற நல்ல, நேர்மையான அதிகாரிகளை ஆடஹ்ரிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.பியுசியல் மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளி இதை தெரிவிக்கிறார்.

1 comment:

superlinks said...

வணக்கம்,
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

Post a Comment