Saturday, April 2, 2011

காங்கிரஸ் பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையம் பிடிக்காதா?

இன்று [ 02 -04 -2011 ] மாலை 6 -30 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சனை கிராமத்தில் வைத்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமியின் மகன் கரு.மாணிக்கம் தலைமையில் வந்த மூன்று கார்கள் மூன்று லட்சம் ரூபாயுடன் பிடிபட்டன. அதை பாஜக வேட்பாளர் நேரில் பார்த்திருக்கிறார். உயர் மட்ட காவல்துறையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆனா அதற்குள் அந்த மாவட்டத்தில் சுற்றுலா செய்யும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதில் தலையிட்டு பிடிபட்டவர்களை விடுதலை செய்யவைத்துள்ளார்.

அதன்பிறகு தேர்தல் ஆணையம் ஊடகத்தாரிடம் புது கஹையை சொல்லியிருக்கிறார்கள். அந்த கதையில் ஒரு கார் பிடிபட்டதாகவும் அதில் துண்டுகள் மட்டுமே இருந்ததாகவும் அதில் வேட்பாளர் மகன் கரு.மாணிக்கம் இல்லை என்றும், பொய் செய்தியை கூறமுடியும் என்றால் சிதம்பரத்தின் தலையீடு எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் நேர்மையாக தேர்தல் நடத்தக்கூடாது என்பதில் இருக்கிறது என புரிய முடியும். ஏற்கனவே சிதம்பரம் இன்று சிவகங்கை மாவட்டத்தில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஒரு ஆலோசனையி ஊடகங்களுக்கு மிரட்டலுடன் கூறியுள்ளார். தேர்தல் என்றால் திருமண வீடு போல இருக்க வேண்டும் என்றும், அதில் திருவிழா களை கட்டவேண்டும் என்றும், சுவர் எழுத்து, சுவரொட்டி, கொடிகள் தோரணங்கள் ஆகியவற்றை தெர்தலானையம் தடுக்க கூடாது என்று கூறிவிட்டு, இந்த விசயத்தில் ஊடகங்கள் தேர்தல் ஆணையத்தை எத்ரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கே.ஆர்.ராமசாமி ஏற்கனவே ஊஞ்சனைகிராமத்தில் 1980 ஐந்து தலித் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த கரிய.மாணிக்க அமபலத்தின் மகன். மற்றும் தொடர்ந்து "நாடு" என்ற பெயரில் சாதி ஆதிக்கத்தை அங்கு தலைமைதாங்கி வருபவர். அவருக்கு எப்போதும் உதவியாக இருக்கும் ஊஞ்சனை ராமசாமி என்பவர், தான் சைக்கள நடராஜனுக்கு நெருக்கம் என்று கூறி கொண்டு, அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமிக்கு அனைத்து வேலைகளையும் செய்துவருபவர்.அதிமுக சார்பாக ஒரு கள்ளர் சமூகத்தினரான சோலை.பழநிச்ச்காமியை அங்கே நிருத்தியிருந்தும் கூட, இந்த ஊஞ்சனை ராமசாமி போன்றோர் கே.ஆர்.ராமசாமியையே தங்கள் சமூக தலைவராக பார்க்கிறார்கள்.

இப்போது திமுகவிற்கு பணப்பட்டுவாடா விசயத்தில் தடை செய்ய முயலும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அதை செய்ய முற்படவில்லையே என்று திமுகவினர் கூட கேட்கிறார்கள். வருகிற ஐந்தாம் நாள் சோனியா வந்தபிறகு, ராகுலும் தமிழக தேர்தலுக்கு தங்கள் கூட்டணிக்கு ஆடஹ்ரவு கேட்டு வந்த பிறகு, தேர்தல் ஆணையம் இதே நேர்மையுடன் நடந்துகொள்ளுமா? அப்படி நடக்க காங்கிரஸ் தலைமை அனுமதிக்குமா? சிதம்பரத்தின் தலையீடு தனது சொந்த மாவட்டத்தில் தொடங்கி விட்டதே?

No comments:

Post a Comment