Monday, July 25, 2011

ஏக மகிழ்ச்சியில் கலைஞர்

கருணாநிதி வாழ்க்கையில் சமீபத்தில் அதாவது ஐம்பது ஆண்டுகளாக அடையாத மகிழ்ச்சியை இரண்டு நாட்களாக அடித்துள்ளார் என்றால் அது ஆச்சர்யமான செய்திதானே? திமுக வின் செயற்குழுவும், பொதுக் குழுவும் ,கடுமையான "தேர்தல் தோல்விக்கு" பிறகு கூடும் பொது கலைஞரின் கையாளுதல் "புதிய அணுகுமுறையை" எடுத்தது. "சிறப்பு அழைப்பாளர்கள்" வரிசையில் இதுவரை இலாத முறையில் "ராஜாத்தி அம்மாளை" அமர வைத்திருந்தார். "கனிமொழி" இருக்கவேண்டிய செயற்குழு, பொதுக்குழுவில் ராஜாத்தி மறந்திருக்கிறார் என்பது எல்லா திமுக காரர்களுக்கும் புரிந்தது. ஆனாலும் "இதை எப்படி ஸ்டாலின்" பொறுத்துக் கொள்ள முடியும்? இதை பார்த்தும் எப்படி "தயாநிதி மாறன்" சும்மா இருப்பார்? இதை "அழகிரி ஏற்ற்க்கொல்கிறாரா?"இப்படி கேள்விகள் எல்லாம் திமுக காரகளுக்கு இருந்தது.

அதேபோல "தயாளு என்ன எண்ணுவார்?" என்பது சிலரை அச்சுறுத்தியது. ஏன் என்றால் இந்த ஐம்பத்தொரு ஆண்டு வரலாற்றில், "ராசாத்தியை" கோபாலபுரம் "தயாளு அம்மாள்" என்றுக் கொண்டதே கிடையாது. இப்போது ச்ய்ரகுழு நடக்கும் பொது, "ராஜாத்தி சிறப்பு அழைப்பாளர்" என்ற செய்தி கோபாலபுரத்துக்கார அம்மையாருக்கு எட்டியது. அதை "வில்லங்கமாக" ஒரு சக்தி அங்கே போய் கேட்டது. அதற்கு தயாளு கொடுத்த பதில்தான் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. " ஏன் அவர்களுக்கு தகுதி இல்லையா? ராஜாத்தி சிறப்பு அழைப்பாளராக சென்றது சரிதான்" என்று தயாளு அம்மையார் வாயிலிருந்தே வந்துவிட்டது. "மனைவிக்கும்,துணைவிக்கும்" மத்தியில் திணறி வந்த தலைவர் இந்த செய்தி கேட்டு ஒரே மகிழ்ச்சி அடைந்துள்ளார். கலைஞரைப்போலவே சிந்திக்க மனைவியை தயார் செய்ய இத்தனை ஆண்டு ஆகிவிட்டது போலும்.

No comments:

Post a Comment