Monday, July 25, 2011

திமுக செயற்குழு, பொதுக் குழு படிப்பினைகள்.

வரப்போகிறது. அண்ணன் அழகிரிக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் தகராறு என்று ஆர்ரோடம் கூறிய எத்ரித்தர்ப்பு செய்திகளுக்கு மத்தியில் கடைசியாக திமுக தனது செயற்குழுவையும், பொதுக்குழுவையும் வெற்றிகரமாக திருச்சியில் நடத்தி முடித்திருக்கிறது. எண்பத்து எட்டு வயதிலும், கலைஞர் அந்த இரண்டு குழுக்களையும் நடத்தி, முரண்பாடுகளைக் கையாண்டு வெற்றிகரமாக திரும்பி உள்ளார். தனது அன்பு மகள் கூட்டணி கட்சியின் "நரித்தந்திர வழியால்" பின்னப்பட்டு "திகார் சிறையில்" அவதிப்படுவதை தாங்க முடியாத ஒரு தந்தை அதையும் நெஞ்சில் ஏந்தி, இந்த இரண்டு பெரும் கூட்டங்களையும் நடத்தி முடித்திருக்கிறார்.

ஸ்டாலினுடைய ஆட்கள் திட்டமிட்டு, "செயல்தளைவராக" ஸ்டாலினை கொண்டு வார எடுத்த முயற்சிகள் முதல் நாள் "செயற்குழு" வில் "பொன்முடி, த.எ.வேலு"மூலம் வெளிப்பாட்ட போதும், "பொதுக் குழு"வில் கோவை ராமநாதன் மூலம் வெளிப்பட்ட போதும் "ஒரு உரத்த குறளை" கிளப்பி தலைவர் அதை அடக்கி விட்டார். அடஹ்ர்கு பேராசிரியர் அன்பழகனும், துரைமுருகனும் துணை செய்தனர். அழகிரி பேசவேண்டிய அவசியமே இல்லாமல் ஸ்டாலினது " பட்டத்துக்கு வரும் முயற்சியை" தலைவரே கையாண்டு தீர்த்து வைத்து விட்டார். அற்ற்ஹை தீர்மானிக்க ஒரு "குழுவை" போட்டு விட்டார். அது "தொடர்ந்து வெடிக்கும்" என்பது வேறு செய்தி. இப்போதைக்கு, "இப்போ, இல்லாட்டா எப்போ" என்று பாட்டு பாடிவந்த ஸ்டாலின் குழுவினருக்கு தோல்விதான். இதுதான் கலிஞர் என்பது நிரூபணமானது மீண்டும்.

No comments:

Post a Comment