Monday, September 26, 2011

காஷ்மீரில் அம்பலத்திற்கு வந்த "இனப்படுகொலைகள்".

இலங்கைத் தீவில் "தமிழினப் படுகொலைகளை" நடத்த துணையிருந்த "இந்திய ராசு" அதில் தப்பித்திருக்கலாம். ஆனால் காஷ்மீரில் நடத்தப்பட்ட "இனப் படுகொலைகளில்" இப்போது மாட்டிக் கொண்டுவிட்டார்கள். இன்று "ஜம்மு--காஷ்மீர்" மாநிலத்தின் "மாநில மனித உரிமை" அமைப்பு கண்டுபிடித்துள்ள, " சுடுகாட்டு புதைகுழிகள்" இந்திய அரசின் "உண்மை முகத்தை" படம் பிஒடித்து காட்டியுள்ளது. தொடர்ந்து " காணமல் போனவர்கள்" என்ற பெயரில் "ஒவ்வொரு வீட்டிலும்" தாய்மார்கள், "பிள்ளைகளை" இழந்தும், பெண்கள் "கணவன்மார்களை" இழந்தும், குழந்தைகள் "தந்தையரை" இழந்தும், சகோதர்களை இழந்து தவிக்கும் சிறுமிகளும், "சகோதரிகளை" இழந்து அலறும் " ஆண்களும்" சில பத்தாண்டுகளாகவே அதிகமாகிக் கொண்டு இருந்தார்கள்.

இப்போது "மாநில மனித உரிமை கவுன்சில்" கண்டுபிடித்துள்ள, 2000 ௦௦ புதை குழிகளில், "எலும்பு கூடுகள்" கிடப்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இவை "முப்பத்தெட்டு" இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 'அறிவிக்கப்படாத" இடுகாடுகளாக அவை இப்போது அறிவிக்கப்படுகின்றன. அவற்றில் இருக்கும் எலும்புக் கூடுகள் அனைத்தும் "போராளிகளுடையது" என்று சொல்லல தாங்கள் தயாரில்லை என்பதே மனித உரிமை ஆணையத்தின் முடிவு. அதற்காக அந்த உடல்கள் மீது, "டி.ஏன்.ஏ. சோதனை" நடத்தப்பட வேண்டும் என்பதே மனித உரிமை ஆணையம் வந்திருக்கின்ற முடிவு. அதனால் "தங்கள் உறவினரது" உடலா என்ற "ஆர்வத்தில்" மனிதர்களைத் தொலைத்தவர்கள் இருக்கிறார்கள்.

இது சம்பந்தமான அறஈகையை "சட்டமன்றத்தில்" எதிர்க்கட்சித் தலைவரான "மக்பூபா முப்டி " கிழித்துப் போட்டுள்ளார். முதல்வர் "உமர் அப்துல்லா" மாட்டிக் கொள்வார் என்கின்றனர். ஆனால் "கொலைகளை" செய்தவர்கள் அங்கே நிலை கொண்டு இருக்கும் "இந்திய இராணுவமே" என்பது கண்கூடு. 'ஐ.நா. சபையில் "மஹிந்தாஅரசை" போற்குற்றங்களில் இருந்து "காப்பாற்ற" துடிக்கும் "இந்திய ராசு" இப்போது, "காஷ்மீர் தேசிய இன" பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கு "ஊழல் குற்றச்சாட்டில்" சிக்கியுள்ள சிதம்பரம் பதில் சொல்வாரா?,

No comments:

Post a Comment