Monday, September 26, 2011

செங்கோடிக்கு "மக்கள் மன்றம்" செய்த "அஞ்சலி".

சனிக்கிழமை சென்னைக்கு வந்த "காஞ்சி மக்கள் மன்றம்" வீரமகள் செங்கொடித்தோழர் "தியாக மகள்" ஆனதற்கு " நினைவேந்தலை" படத்திறப்புடன், "தலைவர்களை" அழைத்து, "இப்படி ஒரு காட்சி" இதுவரை இல்லை என்று சொல்லும்படி, நடத்திக்காட்டினார்கள். ராயப்பேட்டை அவைசன்முகம் சாலையில், அதிமுக அலுவலகத்தை அடுத்த கட்டிடமான "ஹேமமாலினி" கல்யாண மணடபத்தில், மாலை சரியாக "நாலரை மணிக்கு" கலை நிகழ்ச்சிகளை தொடங்கினார்கள். செங்கொடியுடன்"தோழமையாக" வளர்ந்து,செங்கொடியுடனே, பல "நடனங்களையும், பாடல்களையும்" நடத்திக் காட்டிய "சக தோழிகள்" அங்கே "நடனங்களின்" மூலம் செங்கொடிக்கு "அஞ்சலி" செலுத்தினர்.

பெரும் அரங்கு. அதுபோலவே பெறும் 'சுவரொட்டிகள்". ஆயிரக்கணக்கில் "துண்டறிக்கைகள்' . அத்தனையும் "மக்கள் மன்றத்தின் தோழமை சக்திகள்" சென்னையிலிருந்து "ஏற்பாடு" செய்திருந்தனர். மக்கள் மன்றத்தின் "கிராமப்புறக் கிளைகள்" தாங்களே "வாகனங்களை" ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தனர். நூற்றுக் கணக்கில் மக்கள மன்றத்தினர் வார, சென்னைவாசிகளும், நூற்றுக் கணக்கில் கலந்து கொண்டனர். கலைப்புலி தாணு, டாக்டர் கலாநிதி என்று "பிரபல புரவலர்களும்" அந்த நிகழ்வுக்கான உதவிகளை அளித்திருந்தனர். ஆனாலும் மக்கள் மன்றம் "எந்த நிதியையும்" தங்கள் இயக்கத்திற்கு என்று வாங்குவதாக இல்லை. செங்கொடி "நினைவு மண்டபம்" எழுப்ப, கலந்து கொண்டோரிடம் "நிதி" திரட்டப்ப்டட்டது. "செங்கலும், சிமிட்டியும், மணலும்,"வாங்கித் தருபவர்கள் வரவேற்கப்பட்டனர். மக்கள் மன்றம் "ஒரு கம்யூன்" என்றழைக்கப்படும் "கூட்டு வாழ்க்கை". அதற்கு " நிதி" என்பது அதன் " கடமையை" சிரிதாக்கிவிடக்கூடாது என்பதே அதன் "குறிக்கோள்".

இப்படி :"கொள்கை" வீராங்கனையாக வளர்ந்ததால்தான் "செங்கொடி" இன்று "உயர்ந்து நிற்கிறார்". செங்கொடி "நடத்திய" நடன நிகழுவுகளின் "காணொளிகள்" திரையில் காட்டப்பட்டன. அதுகண்டு " உருகாத" உள்ளமே இருக்க முடியாது. செங்கொடியின் "நளினம்", "கால்களை எடுத்துவைக்கும் பாங்கு"," கைகளை சுழட்டும் பக்குவம்", "கண்களை மிரட்டிக் காட்டும் பார்வை" " கண்களில் நடனம் காட்டிய நர்த்தனம்", "ஒயிலாட்ட முறையில் கைகளை உயர்த்தி கீழிறக்கி, வளைத்து" நிகழ்த்திய காட்சிகள், எல்லாமே "காண்பவரை" இழுத்து, தனது "காலடியில்" நிற்க வைத்த அந்த "இளம் தோழி" எல்லோர் கண்களையும் "குளமாக்கிவிட்டார்" அதில் அசந்துபோன கவின்மலர் தனது "பேஸ்புக்" வர்ணித்துள்ளார். முன்கூட்டியே வந்து மர்ந்துர்ந்த தலைவர்கள் "சிலர்" மட்டுமே அந்த "காட்சியை" பெரிய திரையில் "காண முடிந்தது". அதில், கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன், பேரா.சரஸ்வதி, நெடுமாறன், ஜான்பாடியன்" ஆகியோர் அடங்குவர்.அந்த "திரை நிகழ்வை" கருவிகள் மூலம் இயக்கிக் காட்டிய, செங்கொடியின் "இன்னொரு அக்கா" ஜெசி அத்தனை "நிழற்படங்களையும்" இயக்கியதை யாருமே "காணத்தவறவில்லை".

செங்கொடி 'நினைவை" மரண தண்டனை "எதிர்ப்பு கூட்டமாக மக்கள் மன்றம் நடத்தியது. பேராசிரியர் சரஸ்வதி "தலைமை" தாங்கினார். பெரியார் திராவிடர் கழத் தலைவர் கொளத்தூர் மணி "செங்கொடியின்" படத்தை திறந்து வைத்தார். மக்கள் மன்றத்தின் மேகலா வரவேற்றார். மக்கள் மன்றத்தின் மகேஷ் அவ்வப்போது விளக்கங்களை அளித்தார். இறுதியில் மக்கள் மன்றத்தின் மகா நன்றி கூறினார். "பழ நெடுமாறன், சரஸ்வதி, கொளத்தூர் மணி, மக்கள் மன்றம் மகேஷ், மேகலா, மகா, டி.எஸ்.எஸ்.மணி, தியாகு, ஜான் பாண்டியன், வழக்கறிஞர் பார்வேந்தன்,டாக்டர் கிருஷ்ணசாமி, வைகோ ஆகியோர் உரையாற்றினார்கள்.

தோழர் நல்லகண்ணு, பெயர் அறிவித்திருந்தும் வர இயலவில்லை. அவர்களுக்கு 'உள்ளாட்சி தேர்தலில்" அணி மாற்றம் என்ற குழப்பம், தொகுதி பங்கீடு என்ற சிக்கல் இருந்திருக்கும் என்று தெரிகிறது. வெள்ளையன் ஏதோ வரவில்லை. டாக்டர் ராமதாஸ், ஏற்கனவே வடிவேல் இராவணன் பெயரை கொடுத்திருந்தார். ஆனால் அவரும் வரவில்லை. இயக்குனர் மணிவண்ணன் கொசையில் மருத்துவ சிகைச்சியில் இருந்துவிட்டார். தொல் திருமாவளவன் 'வெளிநாடு " செல்ல இருப்பதால் முதலில் சிந்தனை செல்வன் பெயர் இடம் பெற்றது. பிறகு வெளிநாடு செல்லவில்லை என்று, "திருமாவளவனே" அவ்ருவதாக இருந்தார். கடைசிவரை உறுதியாக வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக அவர்கள் கட்சியின், "பார்வேந்தன்" பேசினார். இப்படியாக "மக்கள் மன்றத்தின்" முதல் சென்னை நிகழ்ச்சி "வெற்றிகரமாக" நடந்தேறியது.

"செங்கோடிக்கு" இதுபோல ஒரு "மரியாதயை" யார் தர முடியும் என எல்லோர் மனதிலும் "செங்கொடி" நிறைந்து இருந்தார். இனி ஒவ்வொரு "விடுதலை எழுச்சியும்" செங்கொடியின் "நிழலில்"தான் எண்பதை அந்த கூட்டம் "கட்டியம்" கூறியது

No comments:

Post a Comment