சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தி.மு.க.முற்றுகை இட முயர்ச்சிஎடுத்து கனிமொழி உட்பட கைதாமே? இது எதற்காக? யாழ்ப்பாணம் அருகே இந்தியாவிலிருந்து சென்ற குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சென்ற அதிலும் குறிப்பாக நாகப்பட்டினத்திலிருந்து சென்ற பதினெட்டு படகுகளை சேர்ந்த நூற்று ஆறு மீனவர்களை பிடித்துள்ளார்கள் என்பதே அந்த செய்தி. இவர்களை கைது செய்தது அல்லது இடைமறித்தது யார்? தி.மு.க.தலைமை சொல்கிறது, அது இலங்கை கடற்படை என்று. சரி அப்படி இருந்தால் அந்த தி.மு.க. தலைமை ஏன் இதுவரை நடந்த தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை இலங்கை கடற்படை வெட்டவெளிச்சமாக செய்தபோது சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் இலங்கை தூதரகமுற்றுகை என்று கிளம்பி உள்ளது? ஏன் ஜெயகுமார் என்ற புஷ்பவனம் மீனவர் இலங்கை கடற்படையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டபோது காட்டாத எதிர்ப்பை இப்போது திடீரென காட்டுகிறது? எதற்காக பாண்டியன் என்ற மீனவர் இளநகை கடற்படையால் சமீபத்தில் கொல்லப்பட்டபோது கட்டத எதிர்ப்பை தி.மு.க. தலைமை காட்டுகிறது?
தேர்தல் நேரம். தி.மு.க. தலைமை உண்மையாகவே தான் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதை பதிவு செய்யவேண்டும் என்றால் சரியானதுதான். சமீபத்திய ஜெயகுமார், பாண்டியன் கொலைகளுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு வந்துள்ளதால் தானும் அதனுடன் கலந்துகொண்டு மீனவர்களுக்காக குரல் கொடுத்தால் அதுவும் கூட ஒரு அரசியல் கட்சியை பொறுத்தவரை, அதுவும் தி.மு.க. போன்ற மாநில அரசியலை முன் நிறுத்தி பணியாற்றும் அரசியல் கட்சியை பொருத்தவரை சரியானதுதான். அதனால்தான் மீன்வள அமைச்சர் கே.பி.பி.சாமியின் ஏற்பாட்டில் அவரது கைகளிலேயே உள்ள அன்பழகனார் என்ற மீனவர் தலைவரது அமைப்பையும் பயன்படுத்தி இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். காநிராஸ் கட்சிக்கும் தி.மு.க.விற்கும் சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையில் ஆ.ராஜாவை கிடிக்கி பிடி போடும் சீ.பி.ஐ.யால் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவே இந்தார்ப்பாட்டம் என்பது மட்டும்தான் உண்மையா? அப்படியானால் உண்மையில் நடந்ததுதான் என்ன?
மீனவர்களுக்கு மட்டுமே புரிந்த அல்லது தெரிந்த மீன்பிடி தொழில் பற்றி நிலம் சார்ந்த மக்களுக்கு தெரியாது. அதாவது இரட்டை மடி வலை, சுருக்கு வலை ஆகியவை ஒட்டுமொத்த மீனவர்களும் மீன் பிடிக்க முடியாமல் தடுக்கின்ற அல்லது அவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் முழு கடலையும் அரித்து எடுக்கின்ற ஒரு தடை செய்யப்ப்பட்ட வலைகளாகும். அந்த வலைகளை சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் உலா மீனவர்கள் மட்டும் மற்ற மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ராமேஸ்வரத்திலும், நாகப்பட்டினத்திலும் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கிடைகிறது. அதனால் மற்ற மீனவர்களுக்கு மீன்களே இல்லாமல் ஆகஈவிடுகிறது.இந்த தடை செயாப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை மீன் வள துறையின் ஊழல் அதிகாரிகளும், ஒழல் அரசியல்வாதிகளும் ஆதரிக்கிறார்கள். கையூட்டு வாங்கி கொள்கிறார்கள். இது விசைப்படகு மீனவர் சங்கங்களால் தொடர்ந்து எதிர்க்க படுகிறது.
இதே தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்தி மன்னார், யாழ்ப்பாணம் வரை சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கும் போதெல்லாம் சில ஆண்டுகளாகவே அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்ப்பை கொடுத்துள்ளார்கள். அதுதவிர யாழ்ப்பாணம், மன்னார் தமிழ் மீனவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் போல டிராலர்களை பயன்படுத்துவது இல்லை. அவைகள் இன்னமும் நாட்டு படகு முறைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்போது அங்கே பிடிபட்டவர்கள் இரட்டை மடி வலைகளையும், ஒற்றை மடி வலைகளையும் பயன்படுத்தி டிராலர்கள் மூலம் மீன் பிடிக்க சென்றவர்கள். அங்கே வந்து மீன் பிடிப்பதை அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்க்கவில்லை. டிராலர்களை பயன்படுத்துவது அவர்களுக்கு இடையூறுதான் எராலும் அதைக்கூட அவரால் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் பல முறை எச்சரிக்கை விடுத்தும் இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவது அவர்களது வாழ்வுரிமையை பறிப்பதாக உள்ளது.அதுமட்டுமின்றி இவர்கள் யாழ்ப்பாண கரையோரம் சென்று மீன் பிடித்துள்ளனர். அது அவர்களது அன்றாட மீன் பிடித்தலுக்கே எதிரானது.
ஆகவே இந்த நாகப்பட்டினம் மீனவர்களை பிடித்தது யாழ்ப்பாண தமிழ் மீனவர்கள்தான், அதன்பிறகு இவர்களுக்கேபிரியாணி உட்பட நல்ல உணவு அழத்து பிறைதான் அவர்களை படித்துறை என்ற காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இந்த சில குறிப்பிட்ட தவறு செய்யும் மீனவர்களை ஆதரித்து இவர்களிடம் லஞ்சப்பணம் வாங்கி கொண்டு ஒத்துழைப்பவர்கள் தமிழ்நாட்டு மீன்வள துறையின் அதிகாரிகளும், எம்.எல்.ஏ., எம்.பி. போன்றோரும், அமைச்சர் கே.பி.பி.சாமியும் என்பது தெரியவந்துள்ளது.இப்போது தி.மு.க. நடத்திய போராட்டம் தடை செயப்பட்ட வலைகளை பயன்படுத்ஹுவோருக்கு ஆதரவாகவும், ஊழல் அமைச்சர்களுக்கும், ஊழல் அதிகாரிகளுக்கும் ஆதரவாகவும் இருகிறதே தவிர, இன்மையில் அப்பாவி மீனவர்கள் கடலில் இலங்கை கடற்படையால் சுடப்படுவதற்கு ஆதரவாக இருக்கவில்லை. அப்படி அவர்கள் ஆதரவாக குரல் கொடுக்க எண்ணினால் இதுவரை கொல்லப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் 538 முதல் தகவல் அறிக்கைகளையும், அடிக்கப்பட்ட, வலைகள் அறுக்கப்பட்ட, படகுகள் யுடைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் இருபதேட்டேட்டாண்டு வழக்குகளையும் சேர்த்து உயர்நீதி மன்றத்தில் போட்டு, இலங்கை கடற்படை தளபதிகள் மீது கைது வாரண்டை பிறப்பிக்க செய்யட்டும்.
Wednesday, February 16, 2011
தயாநிதி காலம் விசாரணைக்கு வந்து விட்டது.
இந்திய ஊடகங்களிலும், தமிழக ஊடகன்கல்லும் தடுக்கப்பட்ட அந்த செய்தியை இன்று சென்னையிலிருந்து வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியாவும், நக்கீரனும் வெளிப்படுத்திவிட்டன. கபில் சிபிலால் நிரோப்பட்ட முன்னாள் நீதிடரசர் சிவராஜ் பட்டீல் விசாரணை குழு முன்வைத்துள்ள அறிக்கையின் படி, தயாநிதி சகோக்கள் அவர்களது சன் டி.டி.எச். சிறகாக வாங்கிய 675 கோடி ரூபாய் மூலதனம் எங்கிருந்து, எப்படி வந்தது என்பது அம்பலமாகியுள்ளது. அதாவது 2004 முதல் 2007 வரை தொலை தொடர்பு அமைச்சராக இருந்த அந்த இளைய சகோ. டிஷ் நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய அலைகற்றைவரைசையை கடுமையாக தாமதம் செய்து அவர்களுடன் பேரம் பேசி, அந்த ஏர்செல்லின் அங்கமான டிஷ் நிறுவனத்தை தங்களுக்கு வேண்டிய மாக்சி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடவைத்து அதன்மூலம் சண் டி.டி.எச். சிறகு அந்த பெரும் தொகையை மூலதனமாக வாங்கியுள்ளனர். இப்போது அது வணிக தர்மம் என்றும் கூறுகின்றனர். இதை சிவராஜ் பட்டீல் தனது அறிக்கையில் கண்டுபிடித்து குறிப்பிட்டிருப்பதுதான் முக்கிய செய்தி.
இதை ஒட்டி கார்பொரேட் போர் கடுமையாகி உள்ளது. ரிலைன்ஸ் நிறுவனம் தங்கள் மீது குற்றம் வருகிறது என்று தெரிந்தவுடன், டாடா தான் முக்கிய குற்றவால் என்றும் அவர்களது ஒப்பந்தத்தால் தான் இரண்டு லட்சம் கோடி நட்டம் அரசுக்கு என்றும் தெரிவிக்க டாடா அதை எதிர்க்க இப்படி ஒரு பெரு முதலாளில்குழுமங்களின் போர் தொடங்கியுள்ளது. இதற்கிடையே இன்றைய டெக்கான் கிரோனிகள் ஏடு சமீபத்தில் வெளியாகி உள்ள இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவன தேவாஸ் மல்டி மீடியா வுடனான ஒப்பந்தத்தை கசியவிட்டது முதல்வர் கருனநிதீன் குடும்ப உர்ப்பினரான ஒரு ஐ.எஸ்.ஆர்.ஒ.வின் மூத்த அதிகாரி என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. ஆ.ராஜாவை சிக்கவைத்த ஆனியார்ஸ் கட்சியை கவிழ்க்க பிரதமர் அலுவலகம் செய்த மாபெரும் ஊழலை அம்பலப்படித்தி திசை திருப்பிவிட கருணாநிதி குடும்ப முயற்சி என்கிறது அந்த ஏடு.
எப்படியோ ராஜ ராஜ சோழனின் வாரிசு என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஒரு கேரள மாவலி அரசனின் வழிவந்தவராக தன்னை கருதிக்கொள்ளும் ஒரு முதல்வர் இப்போது இந்திய நாட்டையே சுற்றிவிடுவதர்க்கான பல ஊழாகளை செய்து அதமூலம் பிரபலம் அடைந்திருப்பது தமிழர்களாகிய நாம் பெருமை படக்கூடியதன்றோ?
இதை ஒட்டி கார்பொரேட் போர் கடுமையாகி உள்ளது. ரிலைன்ஸ் நிறுவனம் தங்கள் மீது குற்றம் வருகிறது என்று தெரிந்தவுடன், டாடா தான் முக்கிய குற்றவால் என்றும் அவர்களது ஒப்பந்தத்தால் தான் இரண்டு லட்சம் கோடி நட்டம் அரசுக்கு என்றும் தெரிவிக்க டாடா அதை எதிர்க்க இப்படி ஒரு பெரு முதலாளில்குழுமங்களின் போர் தொடங்கியுள்ளது. இதற்கிடையே இன்றைய டெக்கான் கிரோனிகள் ஏடு சமீபத்தில் வெளியாகி உள்ள இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவன தேவாஸ் மல்டி மீடியா வுடனான ஒப்பந்தத்தை கசியவிட்டது முதல்வர் கருனநிதீன் குடும்ப உர்ப்பினரான ஒரு ஐ.எஸ்.ஆர்.ஒ.வின் மூத்த அதிகாரி என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. ஆ.ராஜாவை சிக்கவைத்த ஆனியார்ஸ் கட்சியை கவிழ்க்க பிரதமர் அலுவலகம் செய்த மாபெரும் ஊழலை அம்பலப்படித்தி திசை திருப்பிவிட கருணாநிதி குடும்ப முயற்சி என்கிறது அந்த ஏடு.
எப்படியோ ராஜ ராஜ சோழனின் வாரிசு என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஒரு கேரள மாவலி அரசனின் வழிவந்தவராக தன்னை கருதிக்கொள்ளும் ஒரு முதல்வர் இப்போது இந்திய நாட்டையே சுற்றிவிடுவதர்க்கான பல ஊழாகளை செய்து அதமூலம் பிரபலம் அடைந்திருப்பது தமிழர்களாகிய நாம் பெருமை படக்கூடியதன்றோ?
Tuesday, February 15, 2011
தடுக்கப்பட்ட டில்லி கசிவுகள்.
காதலர் தினத்தன்று காலையில் அந்த செய்தி வந்தது. அது எந்த காதளைப்பற்றியோ, காதலர்களைப்பற்றியோ இல்லை. தமிழ்நாட்டின் பிரபல ஊடகவியலாளருக்கு ஊழல் மீது உள்ள காதலைப்பற்றியது. நடந்துகொண்டிருக்கும் இரண்டு தலைமுறை அலைக்கற்றை ஊழலில் சிக்கியுள்ள ஆ.ராஜாவிற்கு மேலும்,மேலும் சீ.பி.ஐ.அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கிறார்கள்.அது தி.மு.க. தலைவருக்கு அதிக இரத்த அழுத்தத்தை கொடுக்கும். அதுவே சன் டிவி சகோதரர்களுக்கு பேருவகையை தரும்.ஆனால் டில்லியில் வெளிவந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி உவகையை மாற்றி அளித்தது. 2003 ஆம் ஆண்டு அருண் செளரி தொலை தொடர்பு அமைச்சர். அப்போது முதலில் வருபவருக்கு முதலில் கொடுப்பது என்ற நடைபெற்று வந்த கொள்கையை எதிர்த்து, இரண்டு அலைவரிசை வழங்குவதில்,இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை அதிகாரம் என்ற டி.ஆர்.ஏ.ஐ. ஒரு முன்வைப்பை வைக்கிறது. அதில் போட்டீக்கு விட்டு அலைகற்றையை வழங்கும்படி ஆலோசனை கொடுக்கப்பட்டது. அதை மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்தது. அதை அருண் சூரியின் அமைச்சரவ்கமும் ஒப்புக்கொண்டிருந்தது. அதற்குப்பிறகும் ஏன் அருண் செளரி முதலில் வருபவருக்கு முதலில் என்ற கொள்கையை பின்பற்றினார்? என்ற கேள்வியை கேட்டு வருகிற இருபத்தி ஒன்றாம் நாள் அருண் ஷௌரியை சீ.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளது.
அதேசமயம் அதே துறையில் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டுவரை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அவருக்கு சன் தொலைகாட்சி ஊடக குழுமத்தில் தமிழ்நாட்டில் ஐந்துக்கு மேற்பட்ட அலைவரிசைகளும், ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் பல அலைவரிசைகளும் இருக்கும்போதே அந்த அலைவரிசைகளுக்கு தலைமை ஏற்கும் ஒரு அமைச்சரவையை கொடுத்திருந்தார்கள். அதுவே தலைமை அமைச்சர் செய்த தவறு. ஒரு தனியார் முதலாளிக்கு அவரது வணிகம் தொடர்பான அமைச்சரவையை கொடுக்கும் சாமர்த்தியம் மன்மோகனுக்கு மட்டுமே உண்டு. அந்த தயாநிதி மாறனுடைய காலத்தில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசை விற்பனையும் முதலில் வருபவருக்கு முதலில் என்ற அணுகுமுறையிலேயே கொடுக்கப்பட்டது. அதில் லாபம் அடைந்த தனியார் நிறுவனங்கள் அந்த அமைச்சரை கவனிப்பது என்பது கார்பரேட் பண்பு. அதன்படியே அந்த கொள்ளையில் அதிகம் சம்பாதித்த ஏர்செல் நிறுவனம் தனது அன்பளிப்பாக 670 கோடியை சன் டிடிஎச் என்ற தாயநிதி மற்றும் கலாநிதி சகோதரர்களின் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளனறேன்பதே அந்த செய்தி.
அதனால் அடுத்து சீ.பி.ஐ. விசாரணை தயாநிதி மேலும் வார இருக்கிறது என்பது அந்த தகவல். இதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் போட்டிருக்கலாம். அதற்கு டாடா ஏற்பாடு காரணமாகவும் இருக்கலாம். அனால் தயாநிதி சகோக்கள் அவ்வளவு தூரம் விட்டுவிடுவார்களா என்ன? உடனடியாக எல்லா ஊடகங்களையும் தொடர்பு கொண்டு அது பொயசெய்தி என்றும், அதை வெளிடாதீர்கள் என்றும் தடுத்து விட்டார்கள். எல்லாம் ஊடக பெரும் உதலாளிகளால் முடியும் ஐயா.
அதேசமயம் அதே துறையில் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டுவரை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அவருக்கு சன் தொலைகாட்சி ஊடக குழுமத்தில் தமிழ்நாட்டில் ஐந்துக்கு மேற்பட்ட அலைவரிசைகளும், ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் பல அலைவரிசைகளும் இருக்கும்போதே அந்த அலைவரிசைகளுக்கு தலைமை ஏற்கும் ஒரு அமைச்சரவையை கொடுத்திருந்தார்கள். அதுவே தலைமை அமைச்சர் செய்த தவறு. ஒரு தனியார் முதலாளிக்கு அவரது வணிகம் தொடர்பான அமைச்சரவையை கொடுக்கும் சாமர்த்தியம் மன்மோகனுக்கு மட்டுமே உண்டு. அந்த தயாநிதி மாறனுடைய காலத்தில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசை விற்பனையும் முதலில் வருபவருக்கு முதலில் என்ற அணுகுமுறையிலேயே கொடுக்கப்பட்டது. அதில் லாபம் அடைந்த தனியார் நிறுவனங்கள் அந்த அமைச்சரை கவனிப்பது என்பது கார்பரேட் பண்பு. அதன்படியே அந்த கொள்ளையில் அதிகம் சம்பாதித்த ஏர்செல் நிறுவனம் தனது அன்பளிப்பாக 670 கோடியை சன் டிடிஎச் என்ற தாயநிதி மற்றும் கலாநிதி சகோதரர்களின் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளனறேன்பதே அந்த செய்தி.
அதனால் அடுத்து சீ.பி.ஐ. விசாரணை தயாநிதி மேலும் வார இருக்கிறது என்பது அந்த தகவல். இதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் போட்டிருக்கலாம். அதற்கு டாடா ஏற்பாடு காரணமாகவும் இருக்கலாம். அனால் தயாநிதி சகோக்கள் அவ்வளவு தூரம் விட்டுவிடுவார்களா என்ன? உடனடியாக எல்லா ஊடகங்களையும் தொடர்பு கொண்டு அது பொயசெய்தி என்றும், அதை வெளிடாதீர்கள் என்றும் தடுத்து விட்டார்கள். எல்லாம் ஊடக பெரும் உதலாளிகளால் முடியும் ஐயா.
Thursday, February 10, 2011
இதுதான் அதிகாரவர்க்க முதலாளித்துவம்.
ஐ.எஸ்.ஆர்.ஒ.வும், தேவாஸ் மல்டிமீடியாவும் செய்துகொண்ட ஒப்பந்தம் இன்று ஊரெல்லாம் கிழிந்து தொங்குகிறது. அதை தாங்கள் ரத்து செய்யப்போகிறோம் என்று அவர்களே அறிவிக்கும் நிலைக்கு அது பொய் சேர்ந்துள்ளது. அதில் முதல் தகவல்படி,அல்லது மேலோட்டமான ஒரு கணிப்புப்படி, இரண்டு லட்சம் கோடி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய செய்தி. அந்த பணம் யாருடையது? இந்திய மக்களது பணம் இல்லையா?
இந்திய மக்கள் இன்னமுஜ்ம் ஏழ்மையில் வாழ்கிறார்களே? அவர்கள் தாங்கள் செலுத்திய நேரடி வரி மற்றும் மறைமுக வரி மூலம் இந்த நாட்டின் அரசு செயல்பட உதவி வருகிறார்களே? நேரடி வரி என்பது நமது நட்டு மக்களது, அதாவது உங்களையும், என்னையும் சேர்த்த இந்திய மக்களது நேரடி வரி என்றுதானே பொருள். அதை பல்வேறு விதமான வரிகள் மூலம் நாம் செலுத்தி வருகிறோமே?
மறைமுக வரி என்பது நாம் வாங்கும் ஒவவொரு பொருள் மீதும் இந்த அரசு போட்டுள்ள விற்பனை வரி, மதிப்பு கூடுதல் வரி, ஆகியவை அனைத்தும் நமது மக்களின் பைகளிலிருந்து ஒவ்வொரு நாளும் மத்திய மாநில அரசுகளின் கஜானாவிற்கு எடுத்துசெல்லப்படுகிறது. அப்படியானால் அந்த பணம்தானே இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் செலவழிக்கப்படுகிறது? ஐ.எஸ்.ஆர்.ஒ. எனபது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்று தமிழில் பொருள்படும். அவர்கள்தான் இந்த இரண்டு லட்சம் கோடியை அரசுக்கு நட்டம் ஏற்படுத்த காரணமானவர்கள். அதிலும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள், வெள்யே வந்தபின் தேவாஸ் மல்திமேடிஆ போன்ற நிறுவனங்களை ஏற்படுத்துவதும், அவர்களுக்கு உள்ளே இருக்கும் நிறுவன தலைவர்கள் இத்தகைய ஒப்பந்தங்களை வேறு வெளி ஆட்களுக்கு தெரியாமல் போட்டுக்கொடுப்பதும் ஏன் நிகழ்கிறது?
இத்தகைய அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை யார் கொடுத்தது? தலைமை மாயச்ச்சரின் அலுவலகத்திற்கு கீழே இருக்கும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்படி தலைமை அமைச்சருக்கும் கூட தெரியாமல் இப்படிப்பட்ட அரசுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒப்பந்தங்களை போடமுடிகிறது? இந்திய அரசில் அதற்க்கான ஏற்பாடு எங்கே இருக்கிறது? இப்போது அம்பலமாகி இருப்பது உள்ளபடியே ஐ.எஸ்.ஆர்.ஒ.அதிகாரிகள் தாங்கள் உருவாக்கிய புதிய எஸ்.பாண்டு திட்டத்தை வெளியே அறிவிக்காமல் அதற்கான டெண்டர் விடாமல், பலரும் போட்டியில் கலந்துகொள்வதை தடுத்து தங்களது மூத்த அதிகாரிகள் ஒய்வு பெற்று வெளியே இருப்பவர்கள் மூலம் அத்தகைய ஒப்பந்தங்களை போட்டிருக்கிறார்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
ஏன் இந்த அதிகாரிகள் இவ்வாறு இந்தியாவின் எந்த விதியையும் மீறி, தங்கள் லாபங்களுக்காக செயலபடுகிரார்கள்? பெரிய மத்திய அரசின் நிறுவனங்களில் இருக்கும் உயர் அதிகாரிகள் இவ்வாறு இந்தியாவின் பொருளாதாரத்தை அல்லது இந்திய அரசின் மூலதனத்தை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிரார்களே? இது எப்படி நிகழ்கிறது? இந்திய அரசை ஆளுகின்ற வர்க்கங்களில் முக்கியமாக இந்த அதிகாரவர்க்க முதலாளிகள் இருக்கிறார்கள். ஆமாம். இவர்களுக்கு பெயர் அதிகார வர்க்க முதலாளிகள். இந்திய அரசின் மூலதனத்தை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ஆளுகின்ற இந்த அதிகாரிகள் அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த அதிகாரவர்க்க முதலாளிகள் அந்நியநாடுகளுடன் பல ஒப்பந்தங்களை அந்நியநாட்டு நலன்களுக்கும், அந்நியநாட்டு நிறுவனங்களான பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கும், இந்திய நாட்டு செல்வங்களை பகிர்ந்துகொள்ள உதவியிருக்கிறார்கள் என்பதுதான் இதில் புரியப்படவேண்டிய செய்தி.அவ்வாறு இவர்கள் செயல்படுவதால் இவர்கள் தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்கபடுகிரார்கள்.
இவ்வாறு இந்த கொள்ளையடிக்கும் அதிகாரிகளை தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைப்பது சீ.பி.ஐ.எம்.எல். என்ற நக்சல்பாரி இயக்கம்தானே என்று கேட்கலாம். ஆம். அதுதான் உண்மை. இந்தியாவை ஆள்வது தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று நக்சல்பாரி இயக்கம்தாம் உறுதியாக கூறியது. யார் கூறியிருந்தாலும் உண்மை அதுதானே? அதனால் அவர்கள் கூறுவதுபோல தரகு அதிகாரவர்க்க முதலாளிகளான இந்த ஐ.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் இந்தியாவை கொள்ளை அடித்ததை இப்போது மக்கள் புரிந்துகொள்ளும் கட்டம் வந்துவிட்டநிலையில் அவர்களை தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்க நாமும் பழகிக்கொள்ள வேண்டும்.
இந்திய மக்கள் இன்னமுஜ்ம் ஏழ்மையில் வாழ்கிறார்களே? அவர்கள் தாங்கள் செலுத்திய நேரடி வரி மற்றும் மறைமுக வரி மூலம் இந்த நாட்டின் அரசு செயல்பட உதவி வருகிறார்களே? நேரடி வரி என்பது நமது நட்டு மக்களது, அதாவது உங்களையும், என்னையும் சேர்த்த இந்திய மக்களது நேரடி வரி என்றுதானே பொருள். அதை பல்வேறு விதமான வரிகள் மூலம் நாம் செலுத்தி வருகிறோமே?
மறைமுக வரி என்பது நாம் வாங்கும் ஒவவொரு பொருள் மீதும் இந்த அரசு போட்டுள்ள விற்பனை வரி, மதிப்பு கூடுதல் வரி, ஆகியவை அனைத்தும் நமது மக்களின் பைகளிலிருந்து ஒவ்வொரு நாளும் மத்திய மாநில அரசுகளின் கஜானாவிற்கு எடுத்துசெல்லப்படுகிறது. அப்படியானால் அந்த பணம்தானே இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் செலவழிக்கப்படுகிறது? ஐ.எஸ்.ஆர்.ஒ. எனபது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்று தமிழில் பொருள்படும். அவர்கள்தான் இந்த இரண்டு லட்சம் கோடியை அரசுக்கு நட்டம் ஏற்படுத்த காரணமானவர்கள். அதிலும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள், வெள்யே வந்தபின் தேவாஸ் மல்திமேடிஆ போன்ற நிறுவனங்களை ஏற்படுத்துவதும், அவர்களுக்கு உள்ளே இருக்கும் நிறுவன தலைவர்கள் இத்தகைய ஒப்பந்தங்களை வேறு வெளி ஆட்களுக்கு தெரியாமல் போட்டுக்கொடுப்பதும் ஏன் நிகழ்கிறது?
இத்தகைய அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை யார் கொடுத்தது? தலைமை மாயச்ச்சரின் அலுவலகத்திற்கு கீழே இருக்கும் இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எப்படி தலைமை அமைச்சருக்கும் கூட தெரியாமல் இப்படிப்பட்ட அரசுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒப்பந்தங்களை போடமுடிகிறது? இந்திய அரசில் அதற்க்கான ஏற்பாடு எங்கே இருக்கிறது? இப்போது அம்பலமாகி இருப்பது உள்ளபடியே ஐ.எஸ்.ஆர்.ஒ.அதிகாரிகள் தாங்கள் உருவாக்கிய புதிய எஸ்.பாண்டு திட்டத்தை வெளியே அறிவிக்காமல் அதற்கான டெண்டர் விடாமல், பலரும் போட்டியில் கலந்துகொள்வதை தடுத்து தங்களது மூத்த அதிகாரிகள் ஒய்வு பெற்று வெளியே இருப்பவர்கள் மூலம் அத்தகைய ஒப்பந்தங்களை போட்டிருக்கிறார்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
ஏன் இந்த அதிகாரிகள் இவ்வாறு இந்தியாவின் எந்த விதியையும் மீறி, தங்கள் லாபங்களுக்காக செயலபடுகிரார்கள்? பெரிய மத்திய அரசின் நிறுவனங்களில் இருக்கும் உயர் அதிகாரிகள் இவ்வாறு இந்தியாவின் பொருளாதாரத்தை அல்லது இந்திய அரசின் மூலதனத்தை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிரார்களே? இது எப்படி நிகழ்கிறது? இந்திய அரசை ஆளுகின்ற வர்க்கங்களில் முக்கியமாக இந்த அதிகாரவர்க்க முதலாளிகள் இருக்கிறார்கள். ஆமாம். இவர்களுக்கு பெயர் அதிகார வர்க்க முதலாளிகள். இந்திய அரசின் மூலதனத்தை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ஆளுகின்ற இந்த அதிகாரிகள் அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த அதிகாரவர்க்க முதலாளிகள் அந்நியநாடுகளுடன் பல ஒப்பந்தங்களை அந்நியநாட்டு நலன்களுக்கும், அந்நியநாட்டு நிறுவனங்களான பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கும், இந்திய நாட்டு செல்வங்களை பகிர்ந்துகொள்ள உதவியிருக்கிறார்கள் என்பதுதான் இதில் புரியப்படவேண்டிய செய்தி.அவ்வாறு இவர்கள் செயல்படுவதால் இவர்கள் தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்கபடுகிரார்கள்.
இவ்வாறு இந்த கொள்ளையடிக்கும் அதிகாரிகளை தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைப்பது சீ.பி.ஐ.எம்.எல். என்ற நக்சல்பாரி இயக்கம்தானே என்று கேட்கலாம். ஆம். அதுதான் உண்மை. இந்தியாவை ஆள்வது தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று நக்சல்பாரி இயக்கம்தாம் உறுதியாக கூறியது. யார் கூறியிருந்தாலும் உண்மை அதுதானே? அதனால் அவர்கள் கூறுவதுபோல தரகு அதிகாரவர்க்க முதலாளிகளான இந்த ஐ.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் இந்தியாவை கொள்ளை அடித்ததை இப்போது மக்கள் புரிந்துகொள்ளும் கட்டம் வந்துவிட்டநிலையில் அவர்களை தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் என்று அழைக்க நாமும் பழகிக்கொள்ள வேண்டும்.
Wednesday, February 9, 2011
தமிழ்நாடு தமிழருக்கே என்ற நூல் என்ன சொல்கிறது?
பிப்ரவரி எட்டாம் நாள் அதாவது மா.பொ.சீ.யின் பிறந்தநாளுக்கு முந்திய நாள் வழக்கறிஞர் சக்திவேல் எழுதிய " தமிழ்நாடு தமிழருக்கே" என்ற நூல் வெளியிடப்பட்டது. அதில் பழ.நெடுமாறன், புகழேந்தி தங்கராஜ், இலக்குவனார் திருவள்ளுவன், பெ.மணியரசன், தியாகு, திரைக்கலைஞர் ராஜேஷ், இயக்குனர் வீ.சேகர், சந்திரேசன், ஆகியோர் உரை நிகழ்த்தினர். மறுநாள் மா.பொ.சீ.க்கு கலைஞர் சிலை திறக்கிறார்.என்னே கரிசணை? மா.பொ.சீ.கூறிய கருத்துக்கள் சரிதானா? இன்னமும் மறையாமல் இருக்கிறதா? அவர் மெட்ராஸ் ராஜதானியில் 1920 முதல் 1952 வரை தமிழகத்தை ஆண்ட பத்து முதல்வர்களில் எட்டு பேர் தமிழை தாய்மொழியாக கொள்ளாத தெலுன்குகாரர்கள் என்று எழுதியுள்ளார். அந்த நேரம் ஆங்கிலேயன் ஆட்சியில் உள்ள மெட்ராஸ் ராஜதானி. அதாவது மொழிவாரி மாநிலங்கள் ஏற்படாத காலம். இப்போது மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு ஆன பிற்பாடு என்ன நிலைமை?
அதேநிலைதான் உள்ளது என்பதே அந்த புதிய சக்திவேலின் நூல் கூறுகிறது. அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு மேற்கண்ட தமிழ் அறிஞர்கள் மேடையில் பேசினார்கள். அவர்கள் உண்மையில் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று கருதுகிறார்களா? நமக்கு தெரிந்த வரையில் அந்த கூட்டத்திலேயே மணியரசன் குறிப்பிட்டதைப்போல பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் மக்களாகத்தான் கருதப்படவேண்டும் என்பது ஒருபுறம் வாதம். அதேபோலத்தான் கன்னடம் பேசும் மக்களும், மலையாளம் பேசும் மக்களும் வருவார்கள். ஆனால் தமிழ்நாட்டு பண்பாட்டுடன் இரண்டற கலந்துவிட்ட அல்லது அதிகபட்சம் கலந்துவிட்ட இந்த திராவிடர்களை முதல் எதிரிற் போல சித்தரிப்பது சரியா? கலப்பு திருமணத்திலும், தமிழ் மொழிக்கான போராட்டத்திலும், தமிழர்களுக்கான போராட்டத்திலும் மேற்கண்ட மொழிவழி வந்தவர்கள் பலர் பங்குகொண்டு சிறப்பாக கூட பணியாற்றுகிறார்கள். ஆனாலும் ஒரு அச்சத்தின் காரணமாக அவர்களை கணக்கு பார்க்கிறோம் என்று நம்மவர்கள் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் இந்த தமிழ் சிந்தனையாளர்கள் இன்னொரு இனம் எந்த ஒரு கலப்பையும் தமிழ்மக்களுடன் வைத்துக்கொள்ளாமல், பண்பாட்டு, சமூக காரோயங்களில் கலக்காமல், தனது தனித்தன்மையை தக்கவைத்துக்கொண்டே தமிழ்நாட்டில் அனைத்து துறைகளையும், அதாவது பொருளாதார மட்டத்தில் எல்லா துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு இருக்கிறார்களே அந்த வட இந்திய வணிக சமூகம் பற்றி இவர்கள் ஏன் பேசவில்லை? அந்த மார்வாடி சமூகம் பற்றி பேச பயமா? மறந்துவிட்டதா? அல்லது கண்ணுக்கு தெரியவில்லையா? அவர்கள் வாங்கி போட்ட இலங்கள் இவர்களது இல்லையா? ஒவ்வொரு தமிழ்நாட்டு பொருளாதார துறையிலும் இந்த மார்வாடிகள் நுழைந்து கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டது நமது தமிழ் அறிஞர்களுக்கு தெரியாதா? அல்லது மார்வாடியை தொட்டால் டில்லி ஆட்சியாளர்கள் கோவித்துக்கொள்வார்கள் என்று பயமா?
மார்வாடியை தொட்டுவிட்டால் டில்லிக்காரர்கல்தானே வருவார்கள்? தெலுங்கனையும், கன்னடனையும், மலையாளியையும் தொட்டால் டில்லிகாரனுக்கு மகிழ்ச்சிதானே?
வாணி போருக்கு பின் விபத்து போல உலக தமிழினமும், உள்ளூர் தமிழர்களும், டில்லியை எதிரியாக பார்க்காவிட்டாலும், கடும் கோபத்தை டில்லி மீது வைத்துக்கொண்டுள்ளார்கள். அதை திசை திருப்பும் பணியை தெலுங்கர், கன்னடர், மலையாளி எதிர்ப்பு செய்துவிடாதா என்று தமிழ் அறிஞர்கள் சிந்திக்கவேண்டும். இப்போதுதான் டில்லியை தமிழன் சரியாக புரிந்து கொண்டுள்ளான் என்று மகிழ்ச்சியடைந்தால் அதில் மண் விழா வைத்துவிடாதீர்கள் ஐயா.
அதேநிலைதான் உள்ளது என்பதே அந்த புதிய சக்திவேலின் நூல் கூறுகிறது. அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு மேற்கண்ட தமிழ் அறிஞர்கள் மேடையில் பேசினார்கள். அவர்கள் உண்மையில் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று கருதுகிறார்களா? நமக்கு தெரிந்த வரையில் அந்த கூட்டத்திலேயே மணியரசன் குறிப்பிட்டதைப்போல பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் மக்களாகத்தான் கருதப்படவேண்டும் என்பது ஒருபுறம் வாதம். அதேபோலத்தான் கன்னடம் பேசும் மக்களும், மலையாளம் பேசும் மக்களும் வருவார்கள். ஆனால் தமிழ்நாட்டு பண்பாட்டுடன் இரண்டற கலந்துவிட்ட அல்லது அதிகபட்சம் கலந்துவிட்ட இந்த திராவிடர்களை முதல் எதிரிற் போல சித்தரிப்பது சரியா? கலப்பு திருமணத்திலும், தமிழ் மொழிக்கான போராட்டத்திலும், தமிழர்களுக்கான போராட்டத்திலும் மேற்கண்ட மொழிவழி வந்தவர்கள் பலர் பங்குகொண்டு சிறப்பாக கூட பணியாற்றுகிறார்கள். ஆனாலும் ஒரு அச்சத்தின் காரணமாக அவர்களை கணக்கு பார்க்கிறோம் என்று நம்மவர்கள் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் இந்த தமிழ் சிந்தனையாளர்கள் இன்னொரு இனம் எந்த ஒரு கலப்பையும் தமிழ்மக்களுடன் வைத்துக்கொள்ளாமல், பண்பாட்டு, சமூக காரோயங்களில் கலக்காமல், தனது தனித்தன்மையை தக்கவைத்துக்கொண்டே தமிழ்நாட்டில் அனைத்து துறைகளையும், அதாவது பொருளாதார மட்டத்தில் எல்லா துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு இருக்கிறார்களே அந்த வட இந்திய வணிக சமூகம் பற்றி இவர்கள் ஏன் பேசவில்லை? அந்த மார்வாடி சமூகம் பற்றி பேச பயமா? மறந்துவிட்டதா? அல்லது கண்ணுக்கு தெரியவில்லையா? அவர்கள் வாங்கி போட்ட இலங்கள் இவர்களது இல்லையா? ஒவ்வொரு தமிழ்நாட்டு பொருளாதார துறையிலும் இந்த மார்வாடிகள் நுழைந்து கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டது நமது தமிழ் அறிஞர்களுக்கு தெரியாதா? அல்லது மார்வாடியை தொட்டால் டில்லி ஆட்சியாளர்கள் கோவித்துக்கொள்வார்கள் என்று பயமா?
மார்வாடியை தொட்டுவிட்டால் டில்லிக்காரர்கல்தானே வருவார்கள்? தெலுங்கனையும், கன்னடனையும், மலையாளியையும் தொட்டால் டில்லிகாரனுக்கு மகிழ்ச்சிதானே?
வாணி போருக்கு பின் விபத்து போல உலக தமிழினமும், உள்ளூர் தமிழர்களும், டில்லியை எதிரியாக பார்க்காவிட்டாலும், கடும் கோபத்தை டில்லி மீது வைத்துக்கொண்டுள்ளார்கள். அதை திசை திருப்பும் பணியை தெலுங்கர், கன்னடர், மலையாளி எதிர்ப்பு செய்துவிடாதா என்று தமிழ் அறிஞர்கள் சிந்திக்கவேண்டும். இப்போதுதான் டில்லியை தமிழன் சரியாக புரிந்து கொண்டுள்ளான் என்று மகிழ்ச்சியடைந்தால் அதில் மண் விழா வைத்துவிடாதீர்கள் ஐயா.
Sunday, February 6, 2011
அம்பலமான புதிய ஊழலில் சிக்குவது?
இந்து ஆங்கில நாளிதழும்,அதன் வணிக இதழான பிசினஸ் லைனும், வெளியிட்டுள்ள புதிய சீ.ஏ.ஜி. அறிக்கை என்ற, கணக்கு கண்காணிப்பு குழுவின் புதிய அறிக்கை பர,பரப்பை ஏற்படுத்தியுள்ளது.அது அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாயை நட்டம் ஏற்படுத்திய ஒப்பந்தம் ஒன்றை பற்றி கூறுகிறது.அப்படி ஒரு ஒப்பந்தத்தை நமது நாட்டின் விண்வெளி துறையின் வணிகபிரிவு போட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை. அப்படியானால் அந்த அம்பலமாகியுள்ள ஒரு லட்சத்து எழுபத்தாறு கோடி ரூபாய் கொள்ளையைவிடட இன்ரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் என்பது பெரிய கொள்ளை இல்லையா? இதை கமுக்கமாக செய்தவர்கள் யார்? இந்த ஒப்பந்தம் போடப்பட்ட ஆண்டு 2005 . அந்த நேரத்தில் இந்த நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தவர் மன்மோகன் தான். இது என்ன ராஜா செய்த ஒப்பந்தத்தைவிட அதிக நட்டத்தை ஏற்படுத்தியது? இவர்கள் மாறி,மாறி இந்திய் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்களா?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி என்ற் ஐ.எஸ்.ஆர்.ஒ .உடன், அதாவது அதன் வணிக பிரிவான அற்றிக்ஸ் உடன், தேவா என்ற நிறுவனம் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது. இதன் மூலம் ஆண்டு செயற்கை கோள்களை அந்த தனியார் நிறுவனம் வானில் பறக்க விட்டது. ஐ.எஸ்.ஆர்.ஒ.எப்போதுமே தலைமை அமைச்சரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிறுவனம். அதாவது அன்றைய தலைமை அமைச்சரான மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தம். மன்மோகனும் தனியார் நிறுவனமான தேவாவுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம். அதில்தான் இந்திய அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று இந்த சீ.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது
2500 மெகா ஹெர்ஸ் கொண்ட அந்த செயற்கை கோளில் எழுபது மெகா ஹெர்ஸ் இந்த தேவா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் மூன்றாம் அலைக்கற்றை விற்பனையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தொகையை கணக்கில் கொண்டு இப்போது சீ.ஏ.ஜி. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேவா நிறுவனம் பெற்ற தொகையை கணக்கிட்டுள்ளது. அதான் இரண்டு லட்சம் ரூபாய் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இந்த ஒப்பந்தத்தால் நட்டமாகி உள்ளது என்ற கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. .ஐ.எஸ்.ஆர்.ஒ. விற்கு தலைமை அமைச்சர் மன்மோகன் தான் பொறுப்பு என்பதால் அவரும் சேர்ந்து செய்த நட்டம் என்று புரிகிறது.
இப்போது தேவாஸ் மல்டி மீடியா என்ற அந்த நிறுவனம் எந்த அலைக்கற்றையையும் வாங்கவில்லை என்றும், குத்தகைக்குத்தான் எடுத்தோம் என்றும் எல்லாமே ஐ.எஸ்.ஆர்ட்.ஒ.வின் வசம்தான் இருப்பதாகவும் கூறியுள்ளது.அதே கருத்தை முன்னாள் ஐ.எஸ்.ஆர்.ஒ. செயலாளர்களான ராதாகிருஷ்ணன், மாதவன் நாயர், ஆகியோரும் கூறுகின்றனர். ஏன் இவர்கள் முண்டி அடித்துக்கொண்டு பதில் சொல்கிறார்கள்? இந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முன்னாள் செயலாளராக ஐ.எஸ்.ஆர்.ஒ.வில் இருந்த சந்திரசேகர்.. அப்படியானால் பல ஐ.எஸ்.ஆர்.ஒ. முன்னாள் செயலாளர்கள் சேர்ந்து இப்படி ஒரு திட்டத்தை தீட்டி அதை தங்களது தனியார் நிறுவனமான தேவாசிற்கே குத்தகைக்கு கொடுக்கும் ஒப்பந்தம் செய்தார்களா? இது ஒரு அதிகாரிகள் மட்டத்து மாபெரும் ஊழலா?
ஏன் டெண்டர் விடவில்லை என்று கேட்டதற்கு மற்றவர்கள் போற்ற்டிக்கு வரவில்லை என்றும், தேவாஸ் மாத்திரமே வந்தது என்றும் கூறுகிறார்கள். அதாவது இப்படி ஒரு திட்டம் ஐ.எஸ்.ஆர்.ஒ.விடம் உருவானது மடற நிறுவனங்களுக்கு தெரியவிடாமல் முன்னாள் அதிகாரிகள் மட்டுமே திட்டமிட்டு அவர்களுக்குள் போட்டுக்கொண்ட சதியா? கர்நாடகாவில் உள்ள இந்த நிறுவனம் மாதவன் நாயர் போன்றோரின் உறவினர்கள் மற்றும் எழுபது விழுக்காடு பங்கை பெற்றுள்ள பிரான்சு நாட்டு நிறுவனம் ஆகியவை சேர்ந்து செய்துள்ளதாக தெரிகிறது. நெருக்கடி இப்போது வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை சென்ற ஆண்டே அரசு வழக்கறிஞர் ரத்து செய்ய சொன்னதாகவும், ஆகவே அது செயல்படுவதற்கு முன்பே ரத்து செய்யப்படும் என்றும் இப்போது கூறுவது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்றும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சியா? என்றும் எண்ணத்தோன்றுகிறது. எஸ்.பான்ட் என்பதுதான் இப்படி ஒப்பந்தம் போடப்பட்டது என்றும், கே.யு.பாண்ட்தான் சன் குழுமம் உட்பட டி.டி.எச்.களுக்கு பயன்படுகிறது என்றும் விளக்குகிறார்கள்.எப்படியோ இப்போதைக்கு தயாநிதி சிக்கவில்லை. ஆனால் மன்மோகன் மாட்டிக்கொண்டார்.ஆனால் ஏன் சன் குழுமத்தின் பங்கு தொகை கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக சரிந்துள்ளது?
2007 -2008 ஆண்டுகளில் தயாநிதி சகோதர்கள் நடத்தும் சன் காட்சி ஊடக குழுவினர், ஒரு செயற்கை கோளை அதிகமான பங்கை செலுத்தி வாங்கி அதை வானில் விட்டு முதல் முறை தோற்றுபோய் பிறகு வெற்றி அடைந்தது நினைவிருக்கிறதா? அது இந்த ஒப்பந்தம் தானா என்ற கேள்வியும் எழுகிறது. அதன்மூலம் தங்களது குழுமத்தின் அனைத்து அலைவரிசைகளையும் இயக்கி வருகிறார்களே? இந்திய நாட்டை நட்டமடைய வைத்து தங்கள் குடும்பம் பிழைக்கின்ற வழியா இது? இப்போது ஆ.ராஜாவின் சின்ன ஊழல் கோடுக்கு பக்கத்தில் தயாநிதியின் பெரிய ஊழல் கோட்டை போட்டாச்சா?
.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி என்ற் ஐ.எஸ்.ஆர்.ஒ .உடன், அதாவது அதன் வணிக பிரிவான அற்றிக்ஸ் உடன், தேவா என்ற நிறுவனம் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது. இதன் மூலம் ஆண்டு செயற்கை கோள்களை அந்த தனியார் நிறுவனம் வானில் பறக்க விட்டது. ஐ.எஸ்.ஆர்.ஒ.எப்போதுமே தலைமை அமைச்சரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிறுவனம். அதாவது அன்றைய தலைமை அமைச்சரான மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தம். மன்மோகனும் தனியார் நிறுவனமான தேவாவுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம். அதில்தான் இந்திய அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று இந்த சீ.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது
2500 மெகா ஹெர்ஸ் கொண்ட அந்த செயற்கை கோளில் எழுபது மெகா ஹெர்ஸ் இந்த தேவா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் மூன்றாம் அலைக்கற்றை விற்பனையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தொகையை கணக்கில் கொண்டு இப்போது சீ.ஏ.ஜி. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேவா நிறுவனம் பெற்ற தொகையை கணக்கிட்டுள்ளது. அதான் இரண்டு லட்சம் ரூபாய் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இந்த ஒப்பந்தத்தால் நட்டமாகி உள்ளது என்ற கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. .ஐ.எஸ்.ஆர்.ஒ. விற்கு தலைமை அமைச்சர் மன்மோகன் தான் பொறுப்பு என்பதால் அவரும் சேர்ந்து செய்த நட்டம் என்று புரிகிறது.
இப்போது தேவாஸ் மல்டி மீடியா என்ற அந்த நிறுவனம் எந்த அலைக்கற்றையையும் வாங்கவில்லை என்றும், குத்தகைக்குத்தான் எடுத்தோம் என்றும் எல்லாமே ஐ.எஸ்.ஆர்ட்.ஒ.வின் வசம்தான் இருப்பதாகவும் கூறியுள்ளது.அதே கருத்தை முன்னாள் ஐ.எஸ்.ஆர்.ஒ. செயலாளர்களான ராதாகிருஷ்ணன், மாதவன் நாயர், ஆகியோரும் கூறுகின்றனர். ஏன் இவர்கள் முண்டி அடித்துக்கொண்டு பதில் சொல்கிறார்கள்? இந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முன்னாள் செயலாளராக ஐ.எஸ்.ஆர்.ஒ.வில் இருந்த சந்திரசேகர்.. அப்படியானால் பல ஐ.எஸ்.ஆர்.ஒ. முன்னாள் செயலாளர்கள் சேர்ந்து இப்படி ஒரு திட்டத்தை தீட்டி அதை தங்களது தனியார் நிறுவனமான தேவாசிற்கே குத்தகைக்கு கொடுக்கும் ஒப்பந்தம் செய்தார்களா? இது ஒரு அதிகாரிகள் மட்டத்து மாபெரும் ஊழலா?
ஏன் டெண்டர் விடவில்லை என்று கேட்டதற்கு மற்றவர்கள் போற்ற்டிக்கு வரவில்லை என்றும், தேவாஸ் மாத்திரமே வந்தது என்றும் கூறுகிறார்கள். அதாவது இப்படி ஒரு திட்டம் ஐ.எஸ்.ஆர்.ஒ.விடம் உருவானது மடற நிறுவனங்களுக்கு தெரியவிடாமல் முன்னாள் அதிகாரிகள் மட்டுமே திட்டமிட்டு அவர்களுக்குள் போட்டுக்கொண்ட சதியா? கர்நாடகாவில் உள்ள இந்த நிறுவனம் மாதவன் நாயர் போன்றோரின் உறவினர்கள் மற்றும் எழுபது விழுக்காடு பங்கை பெற்றுள்ள பிரான்சு நாட்டு நிறுவனம் ஆகியவை சேர்ந்து செய்துள்ளதாக தெரிகிறது. நெருக்கடி இப்போது வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை சென்ற ஆண்டே அரசு வழக்கறிஞர் ரத்து செய்ய சொன்னதாகவும், ஆகவே அது செயல்படுவதற்கு முன்பே ரத்து செய்யப்படும் என்றும் இப்போது கூறுவது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்றும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சியா? என்றும் எண்ணத்தோன்றுகிறது. எஸ்.பான்ட் என்பதுதான் இப்படி ஒப்பந்தம் போடப்பட்டது என்றும், கே.யு.பாண்ட்தான் சன் குழுமம் உட்பட டி.டி.எச்.களுக்கு பயன்படுகிறது என்றும் விளக்குகிறார்கள்.எப்படியோ இப்போதைக்கு தயாநிதி சிக்கவில்லை. ஆனால் மன்மோகன் மாட்டிக்கொண்டார்.ஆனால் ஏன் சன் குழுமத்தின் பங்கு தொகை கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக சரிந்துள்ளது?
2007 -2008 ஆண்டுகளில் தயாநிதி சகோதர்கள் நடத்தும் சன் காட்சி ஊடக குழுவினர், ஒரு செயற்கை கோளை அதிகமான பங்கை செலுத்தி வாங்கி அதை வானில் விட்டு முதல் முறை தோற்றுபோய் பிறகு வெற்றி அடைந்தது நினைவிருக்கிறதா? அது இந்த ஒப்பந்தம் தானா என்ற கேள்வியும் எழுகிறது. அதன்மூலம் தங்களது குழுமத்தின் அனைத்து அலைவரிசைகளையும் இயக்கி வருகிறார்களே? இந்திய நாட்டை நட்டமடைய வைத்து தங்கள் குடும்பம் பிழைக்கின்ற வழியா இது? இப்போது ஆ.ராஜாவின் சின்ன ஊழல் கோடுக்கு பக்கத்தில் தயாநிதியின் பெரிய ஊழல் கோட்டை போட்டாச்சா?
.
Saturday, February 5, 2011
நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம்
நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் சென்னையில் பிப்-4 இல் தனது முதல் அறிமுக கூட்டத்தை தியாகராய நகர் தேவர் திருமண மண்டபத்தில் நடத்தியது. அதன் அமைப்பாளர் பேரா.சரஸ்வதி தலைமை தாங்க, பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, தியாகு, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன், மருத்துவர் எழிலன், அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் உரையாற்றினர்.இடையில் திடீரென நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருத்திரகுமார் தனது உரையை இணையதள திரை மூலம் நியூ யார்க் நகரிலிருந்து ஆற்றினார். அதில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் தொடங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து அந்த கூட்டத்தின் ஒரு உரையாளராக கலந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.
முதலில் ஈழப்போரில் உயிர் துறந்த போராளிகளுக்கும், அப்பாவி மக்களுக்கும் கூட்டம் அஞ்சலி செலுத்தியது. தலைமை உரையாற்றிய பேரா.சரஸ்வதி, நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் என்ற அந்த கூட்ட தலைப்பிற்கு அழகான விளக்கத்தை தந்தார். ஆயுதம் தாங்கிய ஈழப்போரின் பின்னடைவுக்கு பின் தமிழர்கள் சோர்ந்துவிடாமல், அரசியல் அரங்கில் ஒரு அனைத்துநாட்டு வடிவம் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவி இருப்பதன் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொண்டார். புதிதாக விடுதலை பெற்றுள்ள தெற்கு சூடான் அரசு நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்திருப்பதை சுட்டி காட்டினார். தாங்கள் தொடங்கி இருக்கும் தோழமை மையம் இந்தியளவில் அந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக அதன் அங்கீகாரத்தை உலகம் தழுவிய அளவில் பெறுவதற்காக பாடுபடும் என்றார். அதன்பிறகு தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு அந்த தமிழீழ அரசின் செயல்பாடுகளின் தேவையை விளக்கினார்.
அடுத்து உரையாற்ற தமிழக இளைஞர் இயக்க தலைவர் மருத்துவர் எழிலன் தொடங்கினார். அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆணைய துணை தலைவர் பேரா.நாகநாதனின் மைந்தன் என்பதால் கூட்டம் அதிக ஆர்வத்துடன் அவர் எடுத்துவைத்த சஐதிகளை கவனித்தது. எழிலன் சூடான் நாடு எப்படிப்பட்ட சூழலில் சிக்கி இருந்தது என்று விளக்கினார். வட சூடானில் உள்ள அரபிகள் பணம் படைத்தவர்களாக என்னை வளம் மிக்க நிலங்களை ஆள்பவர்களாக
இருஹ்தார்கள் என்றார். அவர்கள் தெற்கு சூடானில் இருந்த பழங்குடி மக்களை குதிரையில் சென்று சாட்டை கொண்டு அடித்து வேலை வாங்கினர் என்றார். அதனால் கொந்தளித்த அந்த மக்கள் பெரும்பாலும் கிறித்துவ மதம் சார்ந்தவர்களாக இருந்த அந்த தெற்கு சூடான் மக்கள் தங்கள் விடுதலைக்காக சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தை நடத்தி முப்பத்தைந்து ஆண்டுகள் போராடினர் என்றார்.அவர்களது போராட்டம் எழ தமிழர்களின் போராட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படவேண்டும் என்றார். அந்த நாடு இப்போது கருத்துகேட்பு வாக்கெடுப்பில் சுதந்திர நாடாக ஆகியுள்ளது என்றார். அத்தகைய நாட்டின் அழைப்பு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பெரும் அங்கீகாரத்தை அனைத்து நாட்டு தளத்தில் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் பேசிய மருத்துவர் எழிலன், இங்கும் தோழமை மையம் பல்வேறு கொள்கைகள் கொண்ட பல அமைப்புகை சேர்ந்தவர்களால் இணைக்கப்பட்டிருப்பினும் ஒரு குறைந்த பட்ச போது வேலை திட்டத்தின் கீழ் செயல்படவேண்டும் என்றார். அடுத்து பேசிய ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, தெ.சீ.சு.மணி என்று அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் மக்கள் சிவில் உரிமை கழகம் என்ற பி.யு.சீ.எல். என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அகில இந்திய மனித உரிமை அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் என்றும் கூறப்பட்டது. அவர் மாவோ கூறிய மேற்கோளான," போர் என்பது ஆயுதம் தொக்கும் அரசியல், அரசியல் என்பது ஆயுதம் தோக்காத போர்" என்று கூறி தொடங்கினார். வன்னியில் நடந்த நான்காவது போர் ஒரு தற்காப்பு போராக இருந்ததை, புலிகள் கிழக்கிலிருந்து திருநப அழைக்கப்பட்டதையும், மன்னர் தாக்குதல்களினால் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் புலிகள் இருந்த வன்னி பகுதிக்குள் புகலிடம் தேடி வந்ததையும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கடைச்யாக முள்ளிவாய்க்கால் என்று அவர்கள் இடம் பெர்ந்ததையும் குறிப்பிட்டு தற்காப்பு போரை புலிகளின் தலைமை தெரிந்தே நடத்தியது என்றும் அதனால் ஏற்படும் அனைத்து நாட்டு அரசியல் போராட்டத்தை போராளிகளின் தலைமை புரிந்தே இருந்தது என்றும் வாதிட்டார். அதன் விளைவே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். ஆயுதப்போராடத்தையும், அரசியல் போராட்டத்தையும் எதிர் எதிராக காணக்கூடாது என்றார்.
அடுத்து பேசிய வேப்தமிழ்துனியா ஊடகவியலாளர் அய்யநாதன், ஈழப்போராட்ட வரலாற்றில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு பொதுமக்கள் பெரும் அளவில் வாக்களித்த காலம் தொட்டு இன்று உலக அளவில் புலம் பெயர்ந்த தமிழர் இடையே என்பது நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையே நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். அதற்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் இன்று தெற்கு சூடான் கொடுத்திருப்பது போல பெற்றுத்தர நாம் போராடவேண்டும் என்று நாடு கடந்த தனிழீழ அரசு தோழமை மையத்தை தாங்கள் தொடங்கி இருக்கும் காரணம் பற்றி விளக்கினார்.
அடுத்து அந்த தேவர் மண்டபம் ஆச்சர்யத்தில் மூழ்க இணையதளம் மூலம் அங்கிருந்த திரையில் தோன்றி நாடு கடந்த தமிழீழத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் ருத்திரகுமார், ருத்ரா என்ற பெயர் அறிவுப்புடன் பேசினார். அதில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் பேரா.சரஸ்வதி தலைமையில் தொடங்கப்பட்டுள்ளதர்க்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். தனது உரையில் தேசிய தலவரின் விருப்பத்திற்கினங்க இந்த அரசியல் களத்தில் தாங்கள் நிற்பதை கூறினார்.தெற்கு சூடானின் மக்கள் விடுதலை இயக்கம் எப்படி தங்களது அரசு தொடக்க நிகழ்விலேயே கலந்து கொண்டது என்பதை தெரிவித்தார். தமிழக கடற்கரை ஓரம் மீனவர்கள் சிகல கடற்படையால் கொலை செய்யப்படுவதையும், சமீபத்தில் புபவனம் ஜெயகுமார் கழுத்து நேரிக்கப்பட்டநிலையில் சிங்கள கடல் படையால் கொல்லப்பட்டதையும் குறிப்பிட்டு தங்கள் அரசு சார்பாக கண்டனம் தெரிவித்தார். சிங்கள பௌத்த பேரினவாத அரசு எவ்வாறு தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் மூலம் இந்திய அரசின் மீது தாக்குதல் நடத்துகிறது என்று கூறினார். இந்திய நடுவன் அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து அதன்மூலம் தமிழர்களை அழிப்பதற்கு ஒத்த்டுழைப்பு கொடுத்து ஒரு மாய நம்பிக்கையில் இருக்கிறது என்று விளக்கினார். ஆனால் சிங்களம் இந்தியாவை நம்பவில்லை என்றார்.
அடுத்து பேசவந்த இந்திய தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முஸ்லிம்களான தாங்களும் தமிழர்கள்தான் என்றார். இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு தமிழர்கள்தான் என்று விளக்கினார். ஈழத்தமிழர் தொடர்ந்து அழிக்கப்பட்டதையும், இப்போது வாழ்வதற்கே வழி இன்றி துன்பப்படுவதையும் விளக்கும் போது அழுது விட்டார்.அது கேட்ட மேடையில் அமர்ந்திருந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் அழுதுவிட்டார். மலையாக தனிழர்கலான இந்திய வம்சாவழி தமிழரும், இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களும், எழத்தமிழர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார். முஸ்லிம்கள் ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுடன் இணைந்தே போராடினர் என்றும், சிங்கள சதியால் அவர்கள் இருவரும் பிரிக்கப்பட்டனர் எனவும் கூறினார்.
அடுத்து உரையாற்றிய கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன் தாங்கள் பெங்களூருவில் மற்றும் கர்நாடக தமிழ்நாடு எல்லையில் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை தெரிவித்தார். ஆயுதப்போராட்டம் மூலம் விடுதலை அடைவதை விட்டுவிடக்கூடாது என்றும், இந்திய இசை நம்பக்கூடாது என்றும், அரசியல் போராட்டமும் தேவைதான் என்றும், தமிழ்நாடு பிரிந்து செல்லும் போராட்டம் நடத்தபடவேண்டும் என்றும் கூறினார். பேரா.சரஸ்வதி ராசனது அந்த சொந்த கருத்தை சுட்டிக்காட்டி இந்த தோழமை மையம் ஈழத்தமிழரது அரசு அமைவதற்கான ஒற்றை கோரிக்கையை முன்வைக்கிறது என்று விளக்கினார். அதை அடுத்து பேசிய பெரியார் தி.க.தலைவர் கொளத்தூர் மணி சிறப்பாக ராஜன் எழுப்பிய கேவிகளுக்கு விடை பகன்றார். அதாவது அவரவர்களது தனி கொள்கைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள டத்தை கணக்கில் கொண்டு அதற்குள் நின்று அத்தகைய ஒரு அரசின் அங்கீகாரத்தை உலக ளவில் பெற போராடும் என்றார். ஏற்கனவே இந்திய அரசு கண்ட பாரதம்தான் புலிகளின் கொள்கை என்று பொய் சொல்லி வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். புலிகளின் மீதான தடையாய் ஆய்வு செய்ய போடப்பட்ட தீர்ப்பாயம் முன்பு இந்திய அரசு புலிகளின் தொடர்ச்சியே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்று திசை திருப்பும் வேலையை சேதத்தையும் சுட்டிக்காட்டினார்.
நிறைவு உரை நிகழ்த்திய திரைப்பட இயக்குனர் மணிவன்னான், நாடு கடந்த தமிழீழ அரசு அப்ற்றி சந்தேகங்களை கிளப்பியவர்களை நாம் கோபப்படவேண்டாம் என்றும், அத்தகைய சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார். பல்வேறு கேள்விகளை அனைத்து நாட்டு தளத்தில் கிளப்பிவருவதால், இத்தகைய சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாது என்றும் விளக்கினார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரே என்று விளித்து, நீங்கள் அங்கீகாரத்திற்காக பல அரசுகளிடம் பேசுங்கள், அதேசமயம் எங்களுக்கு வழிகாட்டுங்கள் அதே கோரிக்கைகளுக்காக நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆயத்தமாக உள்ளோம் என்று முத்தைப்பாக கூறியது பெரும் அளவில் வரவேற்கப்பட்டது.
சென்னை எங்கும் இந்த அறிமுக கூட்டத்திர்க்கான சுவரொட்டிகள் தென்பட்டன. ஆயிரக்கணக்கில் துனடரிக்கைகளும் விநியோகம் செய்யப்பட்டன. கூட்ட அரங்கு அருகே அகில இந்திய பார்வார்டு பிளாக் அமைப்பினர் ஒட்டியிருந்த சுவரொட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்த்தது. அதில் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் படமும், முத்துராமலிங்க தேவர் படமும், மூக்கையா தேவர் படமும் போட்டு, நேதாஜி வழியில் உருவான நாடு கடந்த தமிழீழ அரசுக்கு முதல் அங்கீகாரம் அளித்த சுதந்திர தெற்கு சூடன் அரசுக்கு ன்றி என்று அறிவித்திருந்தது வித்தியாசமாக இருந்தது.
---------- Forwarded message ----------
முதலில் ஈழப்போரில் உயிர் துறந்த போராளிகளுக்கும், அப்பாவி மக்களுக்கும் கூட்டம் அஞ்சலி செலுத்தியது. தலைமை உரையாற்றிய பேரா.சரஸ்வதி, நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் என்ற அந்த கூட்ட தலைப்பிற்கு அழகான விளக்கத்தை தந்தார். ஆயுதம் தாங்கிய ஈழப்போரின் பின்னடைவுக்கு பின் தமிழர்கள் சோர்ந்துவிடாமல், அரசியல் அரங்கில் ஒரு அனைத்துநாட்டு வடிவம் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவி இருப்பதன் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொண்டார். புதிதாக விடுதலை பெற்றுள்ள தெற்கு சூடான் அரசு நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்திருப்பதை சுட்டி காட்டினார். தாங்கள் தொடங்கி இருக்கும் தோழமை மையம் இந்தியளவில் அந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக அதன் அங்கீகாரத்தை உலகம் தழுவிய அளவில் பெறுவதற்காக பாடுபடும் என்றார். அதன்பிறகு தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு அந்த தமிழீழ அரசின் செயல்பாடுகளின் தேவையை விளக்கினார்.
அடுத்து உரையாற்ற தமிழக இளைஞர் இயக்க தலைவர் மருத்துவர் எழிலன் தொடங்கினார். அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆணைய துணை தலைவர் பேரா.நாகநாதனின் மைந்தன் என்பதால் கூட்டம் அதிக ஆர்வத்துடன் அவர் எடுத்துவைத்த சஐதிகளை கவனித்தது. எழிலன் சூடான் நாடு எப்படிப்பட்ட சூழலில் சிக்கி இருந்தது என்று விளக்கினார். வட சூடானில் உள்ள அரபிகள் பணம் படைத்தவர்களாக என்னை வளம் மிக்க நிலங்களை ஆள்பவர்களாக
இருஹ்தார்கள் என்றார். அவர்கள் தெற்கு சூடானில் இருந்த பழங்குடி மக்களை குதிரையில் சென்று சாட்டை கொண்டு அடித்து வேலை வாங்கினர் என்றார். அதனால் கொந்தளித்த அந்த மக்கள் பெரும்பாலும் கிறித்துவ மதம் சார்ந்தவர்களாக இருந்த அந்த தெற்கு சூடான் மக்கள் தங்கள் விடுதலைக்காக சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தை நடத்தி முப்பத்தைந்து ஆண்டுகள் போராடினர் என்றார்.அவர்களது போராட்டம் எழ தமிழர்களின் போராட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படவேண்டும் என்றார். அந்த நாடு இப்போது கருத்துகேட்பு வாக்கெடுப்பில் சுதந்திர நாடாக ஆகியுள்ளது என்றார். அத்தகைய நாட்டின் அழைப்பு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பெரும் அங்கீகாரத்தை அனைத்து நாட்டு தளத்தில் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் பேசிய மருத்துவர் எழிலன், இங்கும் தோழமை மையம் பல்வேறு கொள்கைகள் கொண்ட பல அமைப்புகை சேர்ந்தவர்களால் இணைக்கப்பட்டிருப்பினும் ஒரு குறைந்த பட்ச போது வேலை திட்டத்தின் கீழ் செயல்படவேண்டும் என்றார். அடுத்து பேசிய ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, தெ.சீ.சு.மணி என்று அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் மக்கள் சிவில் உரிமை கழகம் என்ற பி.யு.சீ.எல். என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அகில இந்திய மனித உரிமை அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் என்றும் கூறப்பட்டது. அவர் மாவோ கூறிய மேற்கோளான," போர் என்பது ஆயுதம் தொக்கும் அரசியல், அரசியல் என்பது ஆயுதம் தோக்காத போர்" என்று கூறி தொடங்கினார். வன்னியில் நடந்த நான்காவது போர் ஒரு தற்காப்பு போராக இருந்ததை, புலிகள் கிழக்கிலிருந்து திருநப அழைக்கப்பட்டதையும், மன்னர் தாக்குதல்களினால் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் புலிகள் இருந்த வன்னி பகுதிக்குள் புகலிடம் தேடி வந்ததையும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கடைச்யாக முள்ளிவாய்க்கால் என்று அவர்கள் இடம் பெர்ந்ததையும் குறிப்பிட்டு தற்காப்பு போரை புலிகளின் தலைமை தெரிந்தே நடத்தியது என்றும் அதனால் ஏற்படும் அனைத்து நாட்டு அரசியல் போராட்டத்தை போராளிகளின் தலைமை புரிந்தே இருந்தது என்றும் வாதிட்டார். அதன் விளைவே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். ஆயுதப்போராடத்தையும், அரசியல் போராட்டத்தையும் எதிர் எதிராக காணக்கூடாது என்றார்.
அடுத்து பேசிய வேப்தமிழ்துனியா ஊடகவியலாளர் அய்யநாதன், ஈழப்போராட்ட வரலாற்றில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு பொதுமக்கள் பெரும் அளவில் வாக்களித்த காலம் தொட்டு இன்று உலக அளவில் புலம் பெயர்ந்த தமிழர் இடையே என்பது நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையே நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். அதற்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் இன்று தெற்கு சூடான் கொடுத்திருப்பது போல பெற்றுத்தர நாம் போராடவேண்டும் என்று நாடு கடந்த தனிழீழ அரசு தோழமை மையத்தை தாங்கள் தொடங்கி இருக்கும் காரணம் பற்றி விளக்கினார்.
அடுத்து அந்த தேவர் மண்டபம் ஆச்சர்யத்தில் மூழ்க இணையதளம் மூலம் அங்கிருந்த திரையில் தோன்றி நாடு கடந்த தமிழீழத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் ருத்திரகுமார், ருத்ரா என்ற பெயர் அறிவுப்புடன் பேசினார். அதில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் பேரா.சரஸ்வதி தலைமையில் தொடங்கப்பட்டுள்ளதர்க்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். தனது உரையில் தேசிய தலவரின் விருப்பத்திற்கினங்க இந்த அரசியல் களத்தில் தாங்கள் நிற்பதை கூறினார்.தெற்கு சூடானின் மக்கள் விடுதலை இயக்கம் எப்படி தங்களது அரசு தொடக்க நிகழ்விலேயே கலந்து கொண்டது என்பதை தெரிவித்தார். தமிழக கடற்கரை ஓரம் மீனவர்கள் சிகல கடற்படையால் கொலை செய்யப்படுவதையும், சமீபத்தில் புபவனம் ஜெயகுமார் கழுத்து நேரிக்கப்பட்டநிலையில் சிங்கள கடல் படையால் கொல்லப்பட்டதையும் குறிப்பிட்டு தங்கள் அரசு சார்பாக கண்டனம் தெரிவித்தார். சிங்கள பௌத்த பேரினவாத அரசு எவ்வாறு தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் மூலம் இந்திய அரசின் மீது தாக்குதல் நடத்துகிறது என்று கூறினார். இந்திய நடுவன் அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து அதன்மூலம் தமிழர்களை அழிப்பதற்கு ஒத்த்டுழைப்பு கொடுத்து ஒரு மாய நம்பிக்கையில் இருக்கிறது என்று விளக்கினார். ஆனால் சிங்களம் இந்தியாவை நம்பவில்லை என்றார்.
அடுத்து பேசவந்த இந்திய தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முஸ்லிம்களான தாங்களும் தமிழர்கள்தான் என்றார். இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு தமிழர்கள்தான் என்று விளக்கினார். ஈழத்தமிழர் தொடர்ந்து அழிக்கப்பட்டதையும், இப்போது வாழ்வதற்கே வழி இன்றி துன்பப்படுவதையும் விளக்கும் போது அழுது விட்டார்.அது கேட்ட மேடையில் அமர்ந்திருந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் அழுதுவிட்டார். மலையாக தனிழர்கலான இந்திய வம்சாவழி தமிழரும், இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களும், எழத்தமிழர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார். முஸ்லிம்கள் ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுடன் இணைந்தே போராடினர் என்றும், சிங்கள சதியால் அவர்கள் இருவரும் பிரிக்கப்பட்டனர் எனவும் கூறினார்.
அடுத்து உரையாற்றிய கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன் தாங்கள் பெங்களூருவில் மற்றும் கர்நாடக தமிழ்நாடு எல்லையில் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை தெரிவித்தார். ஆயுதப்போராட்டம் மூலம் விடுதலை அடைவதை விட்டுவிடக்கூடாது என்றும், இந்திய இசை நம்பக்கூடாது என்றும், அரசியல் போராட்டமும் தேவைதான் என்றும், தமிழ்நாடு பிரிந்து செல்லும் போராட்டம் நடத்தபடவேண்டும் என்றும் கூறினார். பேரா.சரஸ்வதி ராசனது அந்த சொந்த கருத்தை சுட்டிக்காட்டி இந்த தோழமை மையம் ஈழத்தமிழரது அரசு அமைவதற்கான ஒற்றை கோரிக்கையை முன்வைக்கிறது என்று விளக்கினார். அதை அடுத்து பேசிய பெரியார் தி.க.தலைவர் கொளத்தூர் மணி சிறப்பாக ராஜன் எழுப்பிய கேவிகளுக்கு விடை பகன்றார். அதாவது அவரவர்களது தனி கொள்கைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள டத்தை கணக்கில் கொண்டு அதற்குள் நின்று அத்தகைய ஒரு அரசின் அங்கீகாரத்தை உலக ளவில் பெற போராடும் என்றார். ஏற்கனவே இந்திய அரசு கண்ட பாரதம்தான் புலிகளின் கொள்கை என்று பொய் சொல்லி வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். புலிகளின் மீதான தடையாய் ஆய்வு செய்ய போடப்பட்ட தீர்ப்பாயம் முன்பு இந்திய அரசு புலிகளின் தொடர்ச்சியே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்று திசை திருப்பும் வேலையை சேதத்தையும் சுட்டிக்காட்டினார்.
நிறைவு உரை நிகழ்த்திய திரைப்பட இயக்குனர் மணிவன்னான், நாடு கடந்த தமிழீழ அரசு அப்ற்றி சந்தேகங்களை கிளப்பியவர்களை நாம் கோபப்படவேண்டாம் என்றும், அத்தகைய சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார். பல்வேறு கேள்விகளை அனைத்து நாட்டு தளத்தில் கிளப்பிவருவதால், இத்தகைய சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாது என்றும் விளக்கினார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரே என்று விளித்து, நீங்கள் அங்கீகாரத்திற்காக பல அரசுகளிடம் பேசுங்கள், அதேசமயம் எங்களுக்கு வழிகாட்டுங்கள் அதே கோரிக்கைகளுக்காக நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆயத்தமாக உள்ளோம் என்று முத்தைப்பாக கூறியது பெரும் அளவில் வரவேற்கப்பட்டது.
சென்னை எங்கும் இந்த அறிமுக கூட்டத்திர்க்கான சுவரொட்டிகள் தென்பட்டன. ஆயிரக்கணக்கில் துனடரிக்கைகளும் விநியோகம் செய்யப்பட்டன. கூட்ட அரங்கு அருகே அகில இந்திய பார்வார்டு பிளாக் அமைப்பினர் ஒட்டியிருந்த சுவரொட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்த்தது. அதில் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் படமும், முத்துராமலிங்க தேவர் படமும், மூக்கையா தேவர் படமும் போட்டு, நேதாஜி வழியில் உருவான நாடு கடந்த தமிழீழ அரசுக்கு முதல் அங்கீகாரம் அளித்த சுதந்திர தெற்கு சூடன் அரசுக்கு ன்றி என்று அறிவித்திருந்தது வித்தியாசமாக இருந்தது.
---------- Forwarded message ----------
Subscribe to:
Posts (Atom)
