Friday, October 7, 2011

பிரதமர் "ஏமாற்றுகிறாரா?" அல்லது "ஏமாந்தாரா?"

கூடங்குளம் "அணு உலை எதிர்ப்பாளர்கள்" முதல்வர் ஜெயலலிதாவின் "திட்டப்படி" டில்லி சென்றார்கள். இன்று காலை பிரதமர் மன்மோகனை சந்தித்தார்கள். ஏற்கனவே "திட்டமிட்டபடி" நாமும் முன்கூட்டியே "சொன்னபடி" அரசியல்வாதிகள் "போராட்டக்காரகளை" காலியிலேயே சந்தித்து, "நீங்கள் பிரதமரை" சந்திக்க "அம்மா" ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால் நீங்கள் அங்குபோய், அம்மா வார்த்தைக்கு எதிராக எதுவும் ஸெய்யக்கோடாதுஎ ன்று "ட்சொல்லாமல்" சொல்லி அழைத்து சென்றார்கள். அதாவது மைத்ரேயனின் வார்த்தைகளில் சொல்லப்போனால்," கூடங்குளம் வட்டார மக்களின் அச்சத்தை போக்கும்வரை" அணு உலை வேலைகள் "நிறுத்தி வைக்கப்படவேண்டும்" என்று கூறப்போகிறோம். அதுதான் மன்மோகனை "சரியாக" எதிர்கொள்ள உதவும். அதற்காக தாங்கள் "தயார்" செய்துள்ள மனுவை தாங்கள் அளிப்போம் என்றும், போராட்டக்காரர்கள் தங்கள் "சார்பில்" ஒரு மனுவை அளித்ஹ்டுக் கொள்ளுங்கள் என்று "தங்கபாலு" கூற "அப்படியே ஆகட்டும்" என்று உதயகுமார் தலைமையில் வந்தவர்களும் "ஆமோதிக்க" அந்த குழு பிரதமர் அலுவலகத்திற்கு 12 - 30 க்கு பிரதமரை சந்திக்க சென்றது.


"கிருத்துவ பேராயர்களும் , பங்கு தந்தைகளும்" இதுபற்றி எதுவுமே "அறியாதவர்களாக" அம்மா அனுப்பியிருக்கிறார் என்று "சும்மா" போய் அமர்ந்து கொண்டார்கள்.மைத்ரேயன் "தனக்கே" உரிய பாணியில் 'அச்சத்தை" போக்கும்வரை 'அணு உலை வேலைகளை" நிறுத்தி வையுங்கள் என்று விளக்கினார். அதையே "சீ.பி.அய். யை சேர்ந்த டி.ராஜாவும்" ஆமொத்ஜிப்பது போல பேசினார். அமைதியாக வழக்கம் போல அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த "பாரதப் பிரதமர்" எதுவுமே விளக்காமல், "இன்னமும் அணு உலைகள் செயலப்டத்துவங்க வில்லை" என்று யாருக்குமே தெரியாத செய்தியை "கூறுவது" போல கூறினார். அது அவரது "அறியாமையை" காட்டுகிறதா? அல்லது "திமிரான" பதிலா என்பதை அங்கு சென்ற "ஆர்வலர்கள்தான்" விளக்க வேண்டும். மைபா [ தமிழர் களம்} தனது உணமிப் பெயரான சேர்மாதேவி ஜேசுராஜ் என்ற பெயருடன் வந்ததால், "தமிழில்" இரண்டு வார்த்தை பேசினார். தமிழில் பேசினேன் என்று வெளியே வந்து "சொல்வதற்காகவா" என்பது நமக்கு தெரியாது.


உதயகுமார் தன்னை 'அமைப்பாளர்" என்று போட்டுவிட்டதால், "அணு உலை ஆபத்துகளை" விளக்கினார். அதற்கு அங்குள்ள அணு அறிவியலாளர்கள் "ஆபத்தில்" சொல்ல "குழப்பமே" மீதியாக நின்றது."நாங்கள்தான்" உங்களுக்கும், அறிவியலாளர் லாலுக்கும், ஏற்கனவே 'எங்களை" நீங்கள் "பார்க்க வந்தபோது" இதை விளக்கிணோமே என்று அந்த "விஞ்ஞானிகள்" கூறியது அவர்களை "அமபலப்படுத்தவா" என்பது தெரியவில்லை.அன்டன் கோமேஸ் எழுந்து "இங்கே வந்துள்ளவர்களுக்கு நீங்கள் வில்லாக வேண்டாம். அங்கே உள்ள எங்கள் மக்களுக்கு முதலில் அச்சத்தை போக்க" வாருங்கள் என்று அவர்களை "போராட காலத்திற்கு" அழைத்தார். அதற்கு அப்படியே "நிபுணர் குழுவை மத்திய, மாநில அரசுகள்" அனுப்பிவைக்கும் என்று அவர்கள் பதில் கூறினார்கள்.அனைத்தும் ஒரு விதமான "நாடகம் போல" நடந்து முடிந்தது. அரசியல்வாதிகள் "தங்கள் மனுவை" கொடுக்க போராட்டக்காரர்கள் "தங்கள் மனுவை" பிரதமரிடம் கொடுத்தனர்.சரத்குமார் தனது "பங்கிற்கும்" சில வார்த்தைகளை பேசினார். வெளியே வந்ததும், "தங்கபாலு" ஒரே மனுதான் கொடுக்கப்பட்டது என்று கூறவேண்டும் என்று போராட்டக்கரர்களிடம் "கட்டளையிட்டார்". அதையும் உதயகுமார் ஏற்றுக் கொண்டார்.இது வழக்கறிஞர் சிவசுப்பிரமணித்தின் "மனதை" சஞ்சலப்படுத்தியது. 'சிவா சுப்பிரமணியன், லிட்வின், ஆண்டன்" ஆகியோர் மக்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள். ஆகையால் அவர்கள் "மக்களுக்கு" பதில் சொல்லவேண்டும்.


ஆனால் "பேராயர்களும், உடுப்புடன் வந்த பங்கு தந்தைகளும், உடுப்பு இல்லாமல் வந்த பங்கு தந்தையான ஜேசுராஜ் என்ற மைபாவும்" யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். "மத நிறுவனத்திற்கு" தான் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.. மத நிறுவனத்திற்கு "காத்து" கேட்காது. அதனால் அவர்கள் யாருக்கும் "பதில்" சொல்ல வேட்னிய "அவசியம்" இல்லை. உதயகுமார் தனி ஒரு "அறிவியலாளர்". அவர் எழுதும் "வார இருமுறை ஏட்டில்" என்ன எழுதுகிறாரோ அதுதான் "பதில்". புஷ்பா ராயன் தனது" அரசு சார நிறுவனத்திற்கு" பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. "பட்டினி போராட்டம்" நடத்திய மீனவ் மற்றும் நாடார் இன மக்கள் மத்தியிலிருந்து "போதுமான" பிரதிநிதிகள் "வராததால்" அவர்களுக்கு "என்ன செய்தி" பிசெரும் எனபது கேள்விக் குறியே. தங்கபாலு மட்டும் "சரியான் ஆரசியல்வாதி" போல தான் அன்னை சோனியாவிடம் போய் சொல்லபோகிறேன் என்று "அங்கேயே மார் தட்டிக் கொண்டார்".


இப்போது 'அச்சு ஊடகங்களில்" வந்துள்ள செய்தி "அதிர்ச்சியை" தருகிறது. அதாவது 'இந்திய ராணுவம் யுரேனியத்தை செறிவூட்டி" அதில் "அனுகுயண்டு" தாயாரிக்க ஏற்பாடு செய்வதை "படங்களுடன்" கூகிள்காரன் வெளியிட்டு விட்டான்.2006 ஆம் ஆண்டு வந்த அந்த "படத்தை" அப்போதே அன்றைய குடியரசு தலிவரும், அணுகுண்டு அறிவியலாளருமான அப்துல் களாம் மற்றும் அய்.எஸ்.ஆர்.ஒ. தலைமை "கவலை" தெரிவித்தது என்ற செய்தி வெளியாகி உள்ளது. அது மைசூர் அருகே "அய்.எம்.ஆர்.எப். தளம் அருகே" செரிவூட்டப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. அதை "அய்.எஸ்.ஆர்.ஒ. தலைவர் பாப அணு ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஆர்.கே. சின்ஹா" ஒப்புக் கொண்டுள்ளார். இது "மாபெரும்" அனைத்து நாட்டு "விதி மீறல்" செயல் இல்லையா? இதுவரை "புலூட்டுனியம்" மூலம் மட்டுமே 'அணுகுண்டு" தயாரித்து வந்த "இந்திய" இப்போது தனது "ராணுவம்" மூலம் "யுரேனியத்தை செருவூட்டி" அதிலிருந்தும் "அணு ஆயுதம்" தாயரிக்கிறது என்பது "அம்பலமாகி" விட்டது. இது மிகவும் "ஆபத்தான" செயல். அதாவது "அமெரிக்காவுடன் 123 என்ற அணுசக்தி ஒப்பந்தத்தை போட்டுள்ள மன்மோகன்" அந்த ஒப்பந்த்ததில் இனி "ஆகாபூர்வமான" காரியங்களுக்கு மட்டும் அந்த "யுரேனியத்தை" பயன்படுத்துவோம்" என்று உறுதிமொழி கொடுத்துள்ளார். இப்போது "மாட்டிக் கொண்டார்".


அதேபோல அமெரிக்க ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு, "என்.எஸ்.ஜி. என்ற அணு விநியோக நாடுகளுடன்" ஒப்பந்தம் செய்து, " அய்.ஏ.என்.ஏ." என்ற அனைத்துநாட்டு அணு கண்காணிப்பு அஜென்ஷி என்ற கழகத்துடனும் "ஒப்பந்தம்" போட்டுள்ள மன்மோகன்சிங் "அதையும்" இந்த "ராணுவ யுரேனியம் செறிவூட்டல் திட்டம்" மூலம் உடைத்து விட்டார். இனி இவருக்கு "யார்" யுரேனியம் தருவார்கள்? இத்தகைய "அழிவுக்கான அணு உற்பத்தியை" செய்யும் இந்திய அரசு, "எப்படி" இதுபோன்ற "திருட்டு வேலைகளை" செய்ய முடிகிறது? அதற்கு "ஒரே காரணம்"இங்கே அமுலில் உள்ள "ஒரு ரகசிய" விதிதான். அதாவது இந்திய 'அணுசக்தி" பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும், "பிரதமர், பாதுகாப்பு அமிச்சர்ப், அணு சக்தி துறை தலைவர்" ஆகிய மூவருக்கு "மட்டுமே" தெரிந்திருக்க வேண்டும். அதாவது இந்திய "மத்திய அமைச்சரவைக்கோ, இந்தியஅ நாடாளுமன்றத்திற்கோ" தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இந்த "விதி" ஒரு "பழங்கால" தூசு தட்ட வேண்டிய விதி. இந்த "காலம்", தகவல் பெவ்ரும் உரிமையின் "காலம்". ஆகவே மக்களுக்கு எல்லாமே டேஹ்ரிந்திருக்க வேண்டும். இப்போது இதுபோன்ற விதிகள் அமுலில் உள்ளதால்தான்" கூடங்குளம்" மக்களுக்கும் "அச்சம்" தோன்றியுள்ளது.



மன்மோகனுடன் "மோதல்" கொண்டுள்ள "சோனியா காந்தி" தனக்கும், தனது "குடும்பத்திற்கும்" தெரியாமல் இப்படி ஒரு "விதி" இருப்பதை எப்படி "பொறுத்து கொள்ளப் போகிறார்?". ஆகவே "வெளிப்படித்தன்மை" அணு சக்தி விசயத்தில் "வேண்டும்". அதுவே
'மக்களின்" எத்ரிபார்ப்பு. அப்போதுதான் "மன்மோகன் ஏமாந்தாரா? அல்லது ஏமாற்றுகிறாரா?" என்பது புரியும்.

Is the P.M. inefficient or efficient in serving the Imperialists?

Is the P.M. inefficient or efficient in serving the Imperialists?
Koodankulam anti-nuke activists were sent to the P.M. by the C.M. of T.N. Then why Thangabalu, the President of the TNCC, D.Raja of the C.P.I., Mythreyan.M.P. and Thambidurai.M.P. of the AIADMK, with AISMK leader Sarathkumar M.L.A, joined with Three Bishops and Two Parish Priests accompany the Delegation. It is nothing but a 'Political Ploy". Even the B.J.P. Secretary from TN, one Saravanapperumal was included into the Team. Sp. Uthayakumar who was introduced as the convenor of the Activists Team was suppressed to explain his side, and he also succumbed to that suppression by the Politicians. It semms that He wants to show himself as the convenor. But he came into the movement only some years back. From 1988, the day when Koodankulam Nuke was singed" G.Anton Gomez led a " Koodankulam anti-nuke federation of T..N.& Puduvai". It was guideed by George Fernandez in those days. It organise Big Rallys in Tirunelveli and Tuticorin.

In todays meeting witht the P.M. the arguments placed before him were 'To Halt the work, until the Public of thet area got Convinced". But the P.M. replied that ' The Reactors are yet to Commence". Narayanasamy say,'Only Manitenance work is going on". Nobody replies to his argument. What is there in going "All the way' to Delhi? BUT aNTON Gomez of the Koodankulam Anti-Nuke Federation formed in 1988 straightaway told the P.M. that they are aginst using Nuke for Peaceful purposes and also for Weapon purposes. Anton in his memorandum writes about the ' Indian Military' s Uraniam Enriching" which is for War Purposes". This news coming out in the lat two days is Exposing " the Atomic Power Plants" are going to be used for "Getting Uraniam" for enriching them for the Preparation of Nuclear Weapons". Inthe place of 'Plutonium" Indian Military is now usiong '"Uraniam" for the preparation of Atombombs".

Now the "123 Agreement" with U.S. and the 'Agreements with N.S.G. countries for getting Uraniam" are made as Mockering, since the 'Uraniam" is going to be used for War purpose. Where our P.M. Stands? Either for the preparation of a War? or for his Loyalty to U.S agreement?". Why still Inida is having the Right to maintain the "Secrecy about he Nuke within the Three members namely the P.M, Defence Minister and D.A.E.chairman?". At this stage of " R.T.I." period, why manintaining such a Secrecy?" It may endanger the Soverignity of the Country. Even the Great Sonia Gandhi is not suppossed to know about the Nuke Secrecy" handeld by the P.M and the DAE. So Transparancy is needed in the Nuke Policies.

Thursday, October 6, 2011

கூடங்குளம் எதிர்பாளர்களை "சந்தித்தால்" பிரதமர் " மாறிவிடுவாரா?".

கூடங்குளம் எதிர்பாளர்களை "சந்தித்தால்" பிரதமர் " மாறிவிடுவாரா?".
இன்று முதல்வர் செல்வி.ஜெயலலிதா கூறியபடி, "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை சென்னையில் "தலைமை செயலாளரை" சந்திக்க வைத்து, பிறகு நாளை அதிகாலை விமானத்தில், அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் டில்லி சென்று "தலைமை அமைச்சரை" சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டார்.அந்த "குழுவில்" இருப்பவர்கள் பலரும் "எந்த காரணத்திற்காக" சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது நமக்கு விளங்கவில்லை. அதில் அதிமுக.வை சேர்ந்த எம்.பி. கள் தம்பிதுரையும், மைத்ரேயனும் இருக்கிறார்கள். அவர்கள் 'அணு உலை" பற்றி தேர்ச்சி பெற்றவர்களா என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. அதனால் 'அரசியல் காரனங்களுக்காகத்தான்" அவர்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். வருகிற "நாடாளுமன்ற டேஹ்ர்தலை" மனதில் வைத்து அவர்கள் அதிமுக சார்பாக "காங்கிரஸ்" கட்சியை "நெருக்குவதற்காக" சேர்க்கப்பட்டுள்ளார்களா ?

அடுத்து அதில் இணைக்கப்பட்டுள்ளவர்கள், சீ.பி.அய். கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா. அவர் 'சமீபத்தில்" பழைய அணு உலை மூலம் மின்சாரம் என்ற ஆதரவு நிலையை "மாற்றிக்கொண்டு " அணு உலை எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் ஒரு 'அரசியல் தலைவர்". அவரை இணைத்ததன் மூலம் "சீ.பி.அய். உடன் அதிமுக விற்கு" உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான "உறவு" என்பது இங்கே மன்மோகனை "நெருக்கி" அம்பலப்படுத்த உதவும் என்று ஜெயலலிதா என்னலாம். அடுத்து வருபவர் அ.இ.ச.ம.க தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. இவர் அதிமுக நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார். அடுத்து "கூடங்குளம் இருக்கின்ற தொகுதியின் எம்.எல்.ஏ. யான தேமுதிக வை சேர்ந்த " மைகேல் ராயப்பன்". இவர்தான் "பிரதமரிடம்" தொகுதி மக்களின் நிலைமையை சொல்ல முடியும். அதன்மூலம் "தேமுதிக வும், காங்கிரசும்" நாடாளுமன்ற டேஹ்ர்தலில் "கூட்டணி" சேர முடியாமல் அவர்களையும் மத்திய அரசுக்கு எதிராக நிறுத்த முடியும் என்று முதல்வர் நினைக்கலாம்.

பா.ஜ..க .வின் மாநில செயலாளர் 'சரவணப்பெருமாள்" இதில் இணைக்கப்பட்டுள்ளார். அதாவது "காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்" பா.ஜ.க.வும் பயன்படும் என்ற ரீதியில் இது இருக்கலாம். .ஆனால் "புதிய தமிழகம்" கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. இதில் இணைக்கப்படவில்லை. அவரும் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்" என்பது மட்டுமின்றி, அவரது தொகுதியான "ஓட்டப்பிடாரம்" கூடங்குளம் அருகே இருப்பதும், 'ஆபத்தினால்" அந்த தொகுதி" மக்களும் அச்சப்படுவதும் முதல்வருக்கு "கவனத்துக்கு வரவில்லை" என்று நாம் சௌகரியமாக "நினைத்துக் கொள்ளலாம்".இனி வர "நாடாளுமன்ற தேர்தலுக்கும்" கூட்டணியில் கிடையாது என்று "அர்த்த்தமா" என்பது நமக்கு தெரியாது.

அடுத்து நாகர்கோவில் கத்தோலிக்க பேராயர் 'பீட்டர் ரெமிஜியாஸ், தூத்துக்குடி கத்தோலிக்க பேராயர் யுவான் அம்ப்ரோஸ், பாளையம்கோட்டை சி.எஸ்.அய். பேராயர் ஜே.ஜே. கிருஸ்துதாஸ், இடிந்தகரை பங்கு தந்தை ஜெயக்குமார், கூத்தங்குழி பங்கு தந்தை ரக்ஷக நாதன், ஆகியோர் "கிருத்துவ பாதிரிகலாகவும், ஆயர்களாகவும்" இருக்கிறார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்யாகுமரி மாவட்ட மீனவர்கள் "கத்தோலிக்க பரதவர் ம,அற்றும் முக்குவர்கழக " இருப்பதால் அவர்களது "போராட்டத்தை" கிருத்துவ "மத போதகர்களது" தலைமையில் "நடப்பதாக" தப்புக் கணக்கை போடும் 'அரசுகள்" இந்த "போதகர்களின்" சொற்களை கேட்காமல் "மக்கள்" நாளை போராடுவார்கள் என்று "எதிர்பாராதது" கெடு வாய்ப்புதான்.

நாகர்கோவில் உதயகுமார், தூத்துக்குடி புஷ்ப ராயன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் "பட்டினிப்போரை " நடத்துவதில் முன் நின்றார்கள் என்பது அரசின் "கணக்கு". சரிதான். அனால் இவர்கள் "வெளிநாட்டு பணம் வாங்கும் அரசுசாரா நிறுவனத்தை" சேர்ந்தவர்கள் எனபதால் எப்படியும் "மிரட்டி விடலாம்" என்ற கணக்கு அரசிடம் இருக்கிறது. .கூடங்குளம் வழக்கறிஞர் "சிவசுப்பிரமணியம்" சேர்க்கப் பட்டுள்ளார். அவர் கூடங்குளத்தில் உள்ள ரவி தலைமையிலான "மக்கள் பாதுகாப்பு யொயக்கத்தை" சேர்ந்தவர் என்பதால் "வளையாமல் நிற்பார்" என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவை சேர்ந்த "லிட்வின்" சேர்க்கப் பட்டுள்ளார். அவர் தனது இயக்கத்தின் மூலம் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில்" 1988 முதலே இருப்பதால் 'சமரசமாக" வாய்ப்பு இல்லை.அடுத்து "ஆண்டன் கோமேஸ்". சேர்க்கப்பட்டுள்ளார். இவர் "கூடங்குளம் அணு உள்;அய் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் வழிகாட்டப்பட்டு, ௧௯௮௮ இலேயே "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற ஒரு "தமிழ்நாடு-புதுச்சேரி" மாநிலங்களின் கூட்டமைப்பை கட்டி நடத்தி பெரும் அளவில் செயல்பட்டு அவ்ருபவர். அதனால் அவரை "சமரசம்" செய்ய முடியாது. ஆனால் "தந்திரமாக" அவரை முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க செல்லும்போது, "கிருத்துவ போதகர்கள்" சண்டைக்காரர்" என்று சேர்க்கவிடவில்லை...

ஒட்டுமொத்த "மீனவர்களும்" சேர்ந்து "போராடுவதால்" ஆண்டன் கோமேஸ் மீனவர் திர்ஹளைவராகவும் இருப்பதால் சேர்க்கவேண்டும் என்று இப்போது "இரு அரசுகளும்" கருதி விட்டன போல இருக்கிறது. இதுதவிர சேரன்மாதேவி ஜேசுராஜ், ஸ்ரீரங்கனாயகபுரம் பாலக்ருஷ்ணன், ஆகியோரும் முன்னோடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த "குழுவில்" பிரதமை சந்திக்க செல்கின்றனர். இதில் "அணு உலை ஆதரவு" அரசியல் வெல்லுமா? அணு உலை எதிர்ப்பு அரசியல் வெல்லுமா" நாடாளுமன்ற தேர்தலுக்கான "மாநில கட்சி, மத்திய கட்சி அரசியல்கள் வெல்லுமா? என்பதே கேள்வி.

Wednesday, October 5, 2011

சென்னைக்கும் வந்தது "கேபிள் போர்".

அரசு கேபிள் வந்துவிட்டது. அதனால் "சுமங்கலி கேபிள் வலைப்பின்னல்" இனி எடுபடாது என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால் "டி.வி. என்றாலே சன் தான்" என நினைக்கும் "அப்பாவி" மக்கள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டிடில், "சன் டி.வி." வரவில்லையா? என்று "கேபிள் டி.வி." இயக்குபவர்களை "மாறி,மாறி" கேள்வி கேட்டு "துளைத்தெடுக்கும்" நேயர்கள் மத்தியில் "வியாபாரம்" செய்ய வேண்டும் என்றால், "சன் குழுமம்" வேண்டும் என்ற நிலைக்கு கேபிள் இயக்குபவர்கள் வந்துவிட்டார்கள். இப்படி சூழலில்தான் "அரசு கேபிள்" இதுவரை விட்டு வைத்திருந்த "சென்னை நகரிலும்" அதைக் கொண்டுவரவேண்டும் என்று "துடித்தது" அரசு. அதற்கான 'வழிகளை" ஆராய்ந்து வந்தது.

சென்னை போன்ற "பெரு நகரங்களில்" அதிகமான "தொடர்புகள்" உள்ள "அலைவரிசைக்கு"தான் "அதிக ளவில் விளம்பரங்கள்" வந்து சேரும். இந்த "வித்தையை" தெரிந்துகொண்ட "சன் குழுமம்" ஏற்கனவே தன்னை அல்லது தனது அரசியலை இமர்சிக்கும் "காட்சி ஊடகங்களுக்கு" தனது 'டி.டி.எச்." இல் "இடம்" கொடுக்காமலும், தனது "அலைவரிசை" எண்ணில் "கடைசி" எங்களில் "தெரியும்படி" செய்வதிலும், "கைதேர்ந்து" இருந்தது. அதன்மூலம் மற்ற டி.வி. களுக்கு 'அதிக விளம்பரங்கள்" வரவிடாமல் "தடை" செய்து விட்டு, அதன் மூலம் தனது "போட்டியாளர்களாக" யாருமே வரவிடாமல் "வெற்றிக்"கோடி நாட்டி வந்தது. இந்த 'சன் விளையாட்டை" நிறுத்த முயற்சித்த 'அரசு கேபிள்" சென்னை நிலைமை பற்றி "ஆய்வு" செய்தது. அப்போது, சென்னையில் "சன்குழுமத்தின்" சுமங்கலி கேபிள் வலைப்பின்னலை "நேரடியாக" எதிர்த்து "போட்டி" போட்ட "வலைப்பின்னல்" ஹாத்வே என்று இனம் கண்டனர். அந்த ஹாத்வே வலைப்பின்னலை அதனால்தான் அன்று "சன்குழுமத்திற்கு" போட்டியாக வந்த "அழகிரி" குழுவினர் "ஆதரித்தனர்" என்பதையும் கண்டனர்.

அந்த "ஹாத்வே கேபிள் வலைப்பின்னல்" பின்னால் "ஜேகப் கேபிள் வலைப்பின்னல்" கைக்கு மாறியதையும் கண்டனர். அந்த ஜேகப் தான் "ஜாக் கேபிள் வலைப்பின்னல்" என்று அழைக்கப்படுகிறது. அந்த "ஜாக் கேபிள்" ஏற்கனவே தனது "பிடிக்குள்" சன் குழும அலைவரிசைகள் உட்பட, பல டி.வி.களை "ஒப்பந்தங்கள்" மூலம் "வாங்கி" வைத்துள்ளதையும் கவனித்தார்கள்.அதனால் அந்த "ஜாக் " உடன் "அரசுகேபிள்" உடன்பாடு செய்துகொண்டு, சென்னையில் 'செயல்படுவது" என்ற முடிவுக்கு வந்தனர். அதில் "அரசு கேபிளை" தமிழ்நாடெங்கும் "ஏற்றுக்கொள்ளாத" சன் குழுமம் கூட "வந்தாக வேண்டிய" நிலைமை "சென்னையில்" அமைந்து விடுகிறது. இவ்வாறாக "வணிகத்தில்" மாறி,மாறி "சூதாட்டம்" செய்தால்தான் வழக்கமாக "சூதாட்டம்" செய்கின்ற சன்குழுமத்திற்கு "போட்டிவேலை" செய்ய முடியும் என்று "அரசு கேபிள்" முடிவுக்கு வந்ததோ என்னவோ.


இப்போது 'அரசு கேபிள்" தனது "ஆவணங்களை" தாயார் செய்த நிலையில், எந்த நேரமும் "அதிகாரபூர்வமாக" அறிவிக்கப்படலாம் என்ற சென்னையின் நிலையில், "சன் குழுமம்" புதிய "தந்திரத்தை" எடுத்துள்ளது. அதாவது எல்லா "கேபிள் இயக்குபவர்களுக்கும்" ஒரு 'செட் ஆப் பாக்சை" இலவசமாக தருகிறோம் என்று அறிவித்து, அதற்காக சென்னையில் உள்ள "கேபிள் இயக்குபவர்கள்" எல்லாம் வரிசையில் வந்து "தினகரன்" அலுவலகத்தில் நிற்கின்ற நிலையை ஏற்புத்தி விட்டார்கள். அந்த "செட் ஆப் பாக்சை" வைக்கும் "இயக்குபவர்கள்" எல்லாம் "சன் குழுமம்" கொடுக்கும் 'விண்ணப்பத்தில்" வாடிக்கையாளர்களிடம் "கையெழுத்து" வாங்கித் தரவேண்டும். அந்த "விண்ணப்பத்தில்" ஒரு நிபந்தனை உள்ளது. தான் எந்த ஒரு " மாற்று கேபிள் முறைக்கும்" செல்ல மாட்டோம் என்று "வாடிக்கையாளர்களிடம்" கையெழுத்து வாங்குகிறார்கள். இவாறு தஹ்னது "தனித்தன்மையை" காப்பாற்றிக் கொள்ள 'சன் குழுமம்" முயற்சிக்கிறது. இதை அரசு கேபிள் எதிர்த்து தனது "வணிகத்தை" செய்யும்.அதற்காக அரசு கேபிளும் " இலவச செட் ஆப் பாக்சுகளை" இயக்குபவர்களுக்கு கொடுக்கிறது.

சன் குழுமம் தந்து "கேபிள் வலைப்பினலுக்கு" வலு சேர்ப்பதற்காக பல " அலைவரிசைகளை" தனது வலைப்பின்னலில் சேர்த்து உள்ளது. உதாரணமாக "ஸ்டார் டி.வி., ஈ.எஸ்.பி.என். என்ற விளையாட்டு போட்டிக்கான டி.வி." இப்படி பல டி.வி.களை "ஒப்பந்தம்" மூலம் சேர்த்ஹ்டுக் கொண்டுள்ளது வை 'அரசு கேபிளுக்கு" கிடைக்காது. என் என்றால் " ஸ்டார் டி.வி.யை வாங்க வேடனும் என்றால்" அவர்களுக்கு "கட்டவேண்டிய பணம்" மற்றும் இதுபோன்று ஒவ்வொரு டி.வி.கும் கட்டவேண்டிய பணம் எல்லாம் சேர்த்து "அரசு கேபிள்" மக்களிடம் பெரும் 'எழுபது" ரூபாயை விட "நான்கு மடங்கு" அதிகப்பணம் செலவழிந்து விடும். இப்படி "அரசுக்கு" ஒத்துழைக்காமல் ஒரு வணிகர் குழுமம் தனது "ஏகபோகம்" மூலம் விளையாட முடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

Tuesday, October 4, 2011

மின்தடை யார் ஆட்சியில் "அதிகம்" என்று "சண்டை" போடுகிறார்களா?

கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று "பதில்" கொடுத்துள்ளார். பதில் முழுக்க தங்களது திமுக ஆட்சியில் மின்தடை பற்றி செல்வி.ஜெயலலிதா "என்னவெல்லாம்" கூறினார் எனப்தைப்பற்றியே இருக்கிறது. முரசொலியில் "நீட்டி" முழக்கியுள்ளார். அதில் "கருணாநிதியும், ஆற்காடு வீராசாமியும்" எப்படியெல்லாம் "கையாலதார்களாக" இருந்தார்கள் என்று ஜெயலலிதா கொர்ரியுல்லத்தை சுட்டிக் காட்டியுள்ளார். உட்கார்ந்துகொண்டு, "டேஹ்டிப்பிடித்து" ஜெயலிதா சொன்னதையெல்லாம் "வரிச்ப்படுத்தி" நாள் தவறாமல் அந்த "செய்திகளை" மேற்கோள் காட்டி " கேள்வி கேட்பதில்" கருணாநிதிக்கு இணை கருணாநிதிதான்.

அவையெல்லாம் உண்மைதான். ஆனால் அதன்மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு "மின்தடை" குறையுமா? மின்தடை நீங்குமா? இதுதான் இப்போது கேள்வி. மின்வாரிய அதிகாரிகள் "முதல்வருக்கு" உண்மை தகவல்களை கொடுக்கிறார்களா? அதுவும் யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் கருணாநிதி காலத்தில்" ஓராண்டு மின்துறை தலிவராக இருந்த "வர்மா" என்பவர்த்ஜான் இப்போதும் இருக்கிறார். அவருக்கும், இப்போதைய மின்துறை அமைச்சர் "நத்தம் விஸ்வநாதனுக்கும்: அப்படி ஒரு நெருக்கம் என்கிறார்கள். அதாவது நத்தம் உடன் அதே அதிகாரி முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் ஒரு வருடம் இதே துறையில் "குப்பை" கொட்டியவராம். எபப்டியோ " சேர்வாருடன்தானே சேர்வார் சேர்வர்".

நமக்கு கிடைத்த தகவல்கள்படி, " காற்றாலை மின் உற்பத்தி" 3000 கிலோவாட் மற்றும் 4000 கிலோவாட் ௦௦௦அளவுக்கு "உற்பத்தி" ஆகும்போது, அதை "தமிழ்நாடு மின்வாரியம்" வாங்கி கொள்ள தாயாராயில்லை. ஆதாவது "தமிழ்நாடு மின்வாரியம்" 2000 ௦ கிலோவாட் மின்சாரத்தை மட்டும்தான் "சேமித்துவைக்கமுடியும்" என்று அப்போது கூறியிருந்தது. இது இன்றைய முதல்வர் "காதுக்கு" சென்றதா என்பது நமக்கு தெரியாது. இப்போது முதல்வர் தமிழ்நாட்டில் "காற்றாலை மின் உற்பத்தி" குறைவாகி உள்ளது என்று ஒரு "கணக்கு" காட்டுவதனால் நாம் இதை கூறவேண்டியுள்ளது.

வெளிச்சந்தைகளில் "மின்சாரம்" வாங்கப் போகிறோம் என்று முதல்வர் கூறியுள்ளார். ஏற்கனவே "தமிழ்ஜ்நாடு மின்வாரியம்" வெளிச் சந்தைகளில் "வாங்கிய' மின்சாரத்திற்கு 10000 கோடி ரூபாய் "கடன்" வைத்துள்ளது என்பது முதல்வருக்கு தெரியுமா ந நமக்கு தெரியாது. ஆகவே "அதிகாரிகள்" எழுதிக் கொடுப்பதை படிப்பது மாட்டும் போதாது. அதில் உண்மை "எவ்வளவு தூரம்" இருக்கிறது என்று "ஆய்வு" செய்ய ஒரு "வழிமுறை" இருக்க வேண்டும்.

பாலுக்கு காவலனும், பூனைக்கு தோழனும் சேர்ந்தால்??

"வறுமையின் எல்லைக்கோடு" எது என்ற "மதிப்பீட்டு" பிரச்சனையில், மன்மோகன் கும்பலைச் சேர்ந்த "திட்டக்குழு துனைத்தலைவர" அலுவாலியாவும், சோனியா கும்பலைச் சேர்ந்த "அருணா ராய், ஹர்ஷ் மந்திர், சக்சேனா ஆகியோரும் "குடுமி பிடிச் சண்டை" பொட்டுக் கொண்டு நின்றதையும், அதில் "மன்மோகன் சோனியா கட்டளைப்படி, அலுவாலியாவை" விட்டு விரட்டியதையும் "மட்டுமே"' பார்த்துவிட்டு, சோனியா மன்மோகனை "வென்றார்" என்று நாம் ''தப்புக் கணக்கு" போட்டுவிட்டோமா? இப்போது' ''மன்மோகன் உத்தரவுப்படி" மான்டெக்சிங் அலுவாலியா என்ற "முன்னாள் அய்.எம்.எப். அதிகாரி" தான்'' திட்டக்குழுதுனைத்தலைவராக இருந்தால்தான் " தொடர்ந்து"' உலக வங்கிக்கும், அனைத்து நாட்டு நிதியத்திற்கும் "சேவை" செய்யமுடியும் என்பதால், ஜெயராம் ரமேஷ் என்ற அந்த 'ஊராட்சி மேம்பாடு துறை அமைச்சரை" அதாவது ஒரு " முழு அரசியல்வாதியை" சந்தித்து பேசினார்.

அந்த "சந்திப்பு" மன்மோகன் மற்றும் சோனியா குழுக்களிடையே நடக்கும் "பனிப்போரை" முடிவுக்கு கொண்டுவருவதற்காக "ஏற்பாடு" செய்யப்பட்டது. அதில் அவர்கள் இருவருமே ஒரு "சமரசத்திற்கு" வந்தனர். அதன்படி,'''வறுமையின் எல்லைக்கோடு வரையறை"' ஒரு அளவுகோலாக, "சமூக நல்வாழ்வு திட்டங்களுக்கோ" அல்லது "உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கோ" எடுத்துக் கொள்ளப்படாது என்று "முடிவுக்கு" வந்துள்ளதாக "தெரிவித்தார்கள்". அதற்கு "என்ன"' பொருள்? அதாவது வ'ருமையின் எல்லைக்கோடு வரையறை" என்பது ஏற்கனவே "'திட்டக்குழு" சார்பாக .நீதிமன்றத்தில் கூறப்பட்ட அந்த "கிராமப்புறங்களுக்கு இருபத்தாறு ரூபாயும், நகர்புரன்குக்கு முப்பத்தி இரண்டு ரூபாயுமாக"''' தான் இருக்கும் என்று பொருள். ஏதே சமயம் அந்த வரையறையை இணைத்து நாங்கள் இனி "'சமூக நல்வாழ்வு திட்டங்களையும்" , "உணவு பதுகாப்பு திட்டங்களையும்" பார்க்க மாட்டோம் என்று இருவரும் சேர்ந்து " ஊடகவியலாளர்கள்"' கூட்டத்தில் சொல்லியுள்ளனர்.

இதன்மூலம் "மன்மோகனுக்கும்,,சோனியாவிற்கும்"'' உள்ள முரண்பாடு வேண்டுமானால் "நீங்கியதாக" தோற்றம் அளிக்கலாம். ஆனால் "உலக வங்கி" கூறிய "வறுமையின் எல்லைக்கோடு" என்ற் ஒன்றை "'இந்தியாவில்" இல்லாமல் செய்வதற்கான "முதல்படி" நிறைவேறியுள்ளது. அதாவது இதுவரையில் நமது நாட்டு மக்களின் "ஏழ்மையை" பதிவு செய்ய "ஒவ்வொருவர்" கைகளிலும் இருந்த அந்த "அடையாள அட்டை" பறிக்கப்படுகிறது. அதற்கு பதில்,"சாதி வாரி கணக்கெடுப்பு" நடத்தும் போது, உண்மையான "ஏழ்மையை" லவிட்டுக் கொள்ளலாம் என்று "சமாதானம்" சொல்லப்பட்டுள்ளது. அதுதான் "சமூக நல்வாழ்வு திட்டங்கள், உணவு பாதுகாப்பு திட்டங்கள்"ஆகியவற்றிற்கு அந்த சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் "வரையறை" வகுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படியானால் "மன்மோகன் சோனியாவிடம் தோற்கவில்லை" என்றுதானே பொருள்? சரி.. அப்படியானால் "சோனியா மன்மோகனிடம் தோற்றுவிட்டாரா?" அதுவும் இல்லை. சோனியா நினைத்ததை அதாவது தான் "மக்களை கவரும்" திட்டங்கள் போடுவதை இந்த "புதிய வரையறை" நீக்க கூடாது என்பதை "சாதித்து" விட்டார். அப்படியானால் "தோற்றது" யார்? இந்த "இடம்" கவனமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. "தேசிய ஆலோசனை கவுன்சில்" என்ற பெயரில், சோனியாவை நம்பி வந்தார்களே மூன்று "சமூக ஆர்வலர்கள்" அதாவது "அருணாராயும், ஹர்ஷ்மந்திரும், saksenaavum" அந்த மூவரும் இந்த "ஆளும் வர்க்க" சூதாட்டத்தில் "தோற்றுப்போய்" விட்டார்கள்;.அதாவது "இந்திய மக்கள்" தோற்றுப்போய் விட்டார்கள்" என்று பொருள்.ஏன் என்றால் " பாலுக்கு காவலனான ஜெயராம் ரமேஷும், பூனைக்கு தோழனான அலுவாலியாவும்" சேர்ந்துகொண்டு "மக்களை" ஏமாற்றுகிறார்கள் அல்லவா?

Monday, October 3, 2011

மன்மோகனை வென்ற "சோனியா".

இப்போது இந்திய அளவில் " வறுமையின் எல்லைக்கோடு" பற்றிய மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு "மாபெரும் விவாதம்" நடந்து வருகிறது. அதில் "திட்டக் குழு" துணைத் தலைவர் "மாந்தக் சிங் அலுவாலியா " இந்தியாவின் "ஏழைகள்" யார் என்று அவரது முதலாளிகளான "உலக வங்கி" என்ன சொல்கிறதோ, அதை அப்படியே "ஈ அடிச்சான்" காப்பி போல சொல்லியதால் வந்த "சர்ச்சை" தான் இப்போது விவாதமாக நடக்கிறது. அலுவாலியா "நகரங்களில் வறுமையின் எல்லைக்கோடு" தினசரி "முப்பத்தி இரண்டு ரூபாய்" சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே என்றும், "கிராமப்புறங்களில்" அதவே "இருபத்தைந்து ரூபாய்" மட்டுமே சம்பாதிப்பவர்களுக்கு "மட்டுமே" என்றும் அறிவித்ததால் வந்திருக்கும் சிக்கல்தான் இது.

இது "எப்படி" சாத்தியம்? என்று பலரும் கேள்வி கேட்டுவிட்டனர். அதில் "சோனியா" தலைமையிலான "தேசிய ஆலோசனைக் கவுன்சில்" உறுப்பினர்களான "அருணா ராய், ஹர்ஷ் மந்திர், சக்சேனா" ஆகியோர் கேட்டுவிட்டனர். ஏற்கனவே நாம் கூறியிருந்த படி, "இது" மன்மோகனுக்கும், சொநிஆவிற்கும் "நடக்கும்" பனிப்போர். அதாவது மன்மோகன் கும்பல் "உலக வங்கி" யின் ஆலோசனைப் அப்டி, இந்தியாவில் "மானியங்களை" நிறுத்தவேண்டும், இலவச சலுகைகளை தடை செய்யவேண்டும் என்ற குறிக்கோளில், இந்த " வறுமையின் எல்லைக்கொட்டையும் குறைக்க" ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கு அவர்களது "கைத்தடியான" அலுவாலியாவை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அலுவாலியாவை இதற்காகத்தான் அவர்கள் "திட்டக் குழுவின் துனைத்தலைவராக " போட்டார்கள். அப்போதே அதை 'இடது சாரிகள்" எதிர்த்தார்கள்.

சோனியா கும்பல் "அடுத்த "நாடாளுமன்ற தேர்தலை"மனதில் வைத்து செயல்பட்டுவருகிறது. மன்மோகனோ, உலக வங்கியின் "கட்டளைகளை" மனதில் வைத்து செயல்பட்டுவருகிர்பார். இந்த முரண்பாட்டில்தான் இந்த "தகராறு" வந்துள்ளது. இப்போது "சோனியா" மன்மோகனிடம் "கறாராக" வறுமையின் எல்லைக்கோடு விவகாரம் பற்றி "எச்சரிக்கை" கொடுத்துவிட்டார். அதனால்தான் மன்மோகன் அதை இன்று "அலுவாலியாவிடம்" கராராக கூறிவிட்டார். இப்போது அந்த "அலுவாலியா" மன்மோகனின் ஆலோசனைப்படி, "ஜெயராம் ரக்மேஷை" சந்தித்து அவரது அறிவுரையை கேட்டு, பிறகு "வறுமையின் எல்லைக் கோட்டை" முடிவு செய்வாராம். இதற்கு என்ன அர்த்தம்?

ஜெயராம் ரமேஷ் இப்போது "ஊராட்சி வளர்ச்சித் துறையின் அமைச்சர்". அபப்டியானால் 'சோனியா" ஆதரவாளரான ஜெயராம் ரமேஷ் இதற்காகத்தான் "ஊரக அமைச்சராக" நியமிக்கப்பட்டாரா? ஆமாம். ஏன் என்றால் "ஆபத்து மாதங்களுக்கு" முன்பு "ஜெய்பூர் பல்கலைக்கழகத்தில் " ஒரு கருத்தரங்கம் நடந்தது. அது இந்த " வறுமையின் எல்லைக்கோடு பற்றி முடிவு" செய்ய "யு.ஜி.சீ." என்ற "பல்கலைக்கழக மானியக் குழு" உதவியில் நடத்தப்பட்ட கருத்தரங்கம். அதில் "நான்" தமிழ்நாடு சார்பாக அழைக்கப்பட்டிருந்தேன். அதில் "அருணா ராய்" கலந்து கொண்டார். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த "மத்திய ஊராட்சித் துறை அமைச்சர்நான" ஜோஷி, அதாவது "சோனியா கும்பலை" சேர்ந்தவரும் கலந்துய் கொண்டு, எனது அருகேதான் இரண்டு நாட்களும் அமர்ந்திருந்தார். அந்த அமைச்சரும் சேர்ந்து கொண்டு, அங்கே "திட்டக் குழு" மதிப்பீடு பற்றி "வாங்கு, வாங்கு" என்று வாங்கினோம். எல்லோரும் திட்டக் குழுவின் "வறுமையின் எல்லைக்கோடு" பற்றிய மதிப்பீட்டை எதிர்த்தே பேசினர். கருத்தரங்கு முடிந்த "நான்கு" நாட்களில், மன்மோகன் அந்த "ஜோஷி" கையிலிருந்து "ஊராட்சி அமைச்சர்" பொறுப்பை "பிடிங்கி" விட்டார். அது "சோனியா கும்பல்குக்கு" எதிரான மன்மோகனின் "சேட்டை".


அதன்பின், மீண்டும் மன்மோகனின் "கைத்தடி" அந்த அமைச்சராக இருந்தார். அதை "சோனியா கும்பல்" போருக்க முடியாமல், சோனியாவின் விசவாசியான "ஜெயராம் ரமேஷை" அவர் வகித்த "சுற்றுப்புற சூழல்" அமைச்சரகத்திலிருந்து "மாற்றி" மீண்டும் தனது 'ஆளையே" அந்த "ஊரக அமைச்சரவைக்கு" போட மன்மோகனிடம் "வற்புறுத்தி" ஜெயராம் ரமேஷ் "கையில் " அந்த இலாகாவை கொடுக்க வைத்துள்ளார். இது சோனியா கும்பலுக்கான "முதல்" வெற்றி. இப்போது "தேசிய ஆலோசம்னை கவுன்சிலின்:" உறுப்பினர்கள் மூலம் "அலுவாலியா" வின் மதிப்பீட்டிற்கு "எதிராக" பேசவைத்து , அதன்மூலம்,மன்மோகனை "நிர்ப்பந்தித்த் " அவரை "அலுவாலியாவை" அடக்க சொல்லி, மன்மோகனும், அலுவாலியாவிடம் "ஒழுங்காக" ஜெயராம் ரமேஷ் சொல்வதை "போய் கேள்" என்று சொல்ல வைத்துவிட்டார்கள். இதுதான் "மன்மோகனை வென்ற சோனியா".