Wednesday, December 21, 2011

மக்கள் மனங்களில் ஒருவித விடுதலை.?

கலைஞரை பிடிக்காதவர்கள் எம்ஜிஆரிடம் சென்றார்கள்.எம்ஜிஆரிடம் சென்றவர்கள் ஜெயலலிதாவிடம் வந்தார்கள். ஏதோ கலைஞர் மட்டுமே நாட்டில் கெட்ட அரசியல்வாதி என எண்ணியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என பற்று கொண்டார்கள். கலைஞர் மீது கோபம் கொண்ட தமிழின உணர்வாளர்களும் கடைசியாக ஜெயலலிதாவிடம் நல்லது நடக்காத என ஏங்கி வந்தார்கள். காங்கிரஸ் என்பது எதிரி என கணக்குபோட்ட தமழின உணர்வாளர்கள் ஏதாவதொரு திராவிட் அக்கட்சியிடம் தானே எதிர்பார்க்க முடியும் என்று கூறினார்கள். வன்னிப்போரால் புண்பட்ட தமிழ் இதயங்கள் கலைஞரை வெறுத்ததால், ஜெயலலிதா புண்ணுக்கு மருந்து என்று கூறினார்கள். அதை நிரூபிக்கும் முகத்தோடு அந்த அமமாவும் "போர்குற்றம் விசாரணை", "மீனவர் மீது துப்பாக்கி சூடு","காங்கிரஸ் எதிர்ப்பு" "ப.சிதம்பரம் எதிரி", " நூன்று பேர் தூக்குதண்டனை குறைப்பு", என தமிழ் இன உணர்வாளர்களுக்கு நிறைய "கடலை போட" சரக்கு கொடுத்தார்கள்.


சாதாரண மக்களோ கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்று தங்களுக்கு தெரிந்ததையும், தெரியாததையும் கூறி அரசியல் பேசினார்கள். அவர்கள் எல்லோரும் "ஒரே விசயத்தில்" மனம் வருந்தினார்கள். அதுதான் "சசிகலா குடும்பம்" செய்யும் ஆதிக்கம். திமுக கட்சியின் வளர்ச்சிக்காக தங்கள் உழைப்பை கொடுத்த "ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஊடகம் மூலம் தயாநிதி, ஆகியோரையே தாங்கிகொள்ளாத தமிழினம், அதிமுக வளர்சிக்கு எந்த உழைப்பையும் போடாமல், அதன்மூலம் தனைகளுக்கு வருமானம் மாத்திரமே பெற்று வந்த ஒரு சசிகலா குடும்பம் பற்றி வாய் திறக்க முடியாமல் புலம்பி வந்தார்கள். அந்த கும்பலை கண்டு பயந்தார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கட்சியின் சிறிய பதவிக்கும் பணம் வாங்கி கொண்டு பொறுப்பு கொடுக்கும் குடும்பத்தை அப்ற்றி வாய் திறக்க வழி இன்றி தவித்தார்கள்.

இப்போது எல்லோருமே ஒரு பெருமூச்சு விடுகிறார்கள். அப்படா. கடைச்யாக அம்மா சசிகலா குடும்பம் மீது நடவடிக்கை எடுத்தார்களே என்று வாய் விட்டு கூறுகிறார்கள். அதனால் அந்த ஆள் இதை செய்தான், இந்த ஆள் அதை செய்தான் என்று வெளியிடுகிறார்கள். அதில் அதிக பக்கங்கள் அந்த ராமாயண தமிழ் மன்னன் பெயரை கொண்டவர் தோட்டத்தில் இருந்து கொண்டு, பணமும், பெண்களும் என மிரட்டி வாங்கி குவித்த மர்மங்களை எல்லாம் மூட்டை மூட்டை மூட்டையாக இப்போது அவிழ்த்து விடுகிறார்கள். மக்கள் இதன் மூலம் மன விடுதலை பெற்று வெளியே பேச வருகிறார்களே...அது ஒரு முதல் கட்ட நன்மைதான். இனி யாரும் அந்த குடும்பம்தான் காரணம், முதல் மனுஷி நல்லவர்கள் என்று "சப்பை கட்டு" கட்ட முடியாது அல்லவா?

Monday, December 19, 2011

சமரசம் ஆகிவிடும என்று யார் சொன்னது?

அதிமுக விலிருந்து சசிகலா விளக்கப்பட்டாரா? போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வகையறாக்கள் வெளியேற்றப் பட்டார்களா? எல்லாம்சும்மா. வெறும் நாடகம். இப்படி பல பேர் கூறி திரிகிறார்கள்.இதற்குமுன்பு இப்படி பலமுறை அந்த இருவருக்கும் "சண்டை" என்று சொல்வார்கள், பிறகு மீண்டும் கூடி குலாவுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.ஜெ-சசி கூட்டு உடையாது என்று இந்த வாய் பேசுபவர்கள் கூறி,கூறி, அலுத்துவிட்டது. இவை எல்லாம் உண்மையா? இப்படித்தானே கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும், கலைஞருக்கும், அழகிரிக்கும், கலைஞருக்கும், தயாநிதிக்கும் "சண்டை" என்று சொல்வார்கள் பிறகு ஒன்றுகூடி விடுவார்களே? இவ்வாறு வியாக்ஞானம் வேறு செய்கிறார்கள்.

அப்படிப்பட்டதா இந்த முரண்பாடு? நாம் கேட்க விரும்புவது "இதுவரை எத்தனை முறை இந்த குடும்ப உறுப்பினர்களை"ஜெ வெளியேற்றி விட்டு திரும்ப சேர்த்துக் கொண்டுள்ளார்? இந்த கேள்விக்கு எல்லோருமே மேலோட்டமாக சிந்தித்து "பலமுறை" என்று பதில் சொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் சில கேள்விகளை கேட்கவேண்டும்.
அய்யா, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ம.நடராஜனை கட்சியை விட்டும், தோட்டத்தை விட்டும் வெளிஎற்றினார்களா ? இல்லையா? அதற்குபிறகு இன்றுவரை ஜெ அவரை மீண்டும் அனுமதித்தாரா? அவர் எல்லோரிடமும் தான்தான் எல்லாம் என்று சொல்லிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் ஜெ அனுமதித்தாரா?


அடுத்து திவாகரனை வெளியேற்றிய பிறகு மீண்டும் சேர்த்த வரலாறு உண்டா? சரி. போகட்டும். சுதாகரனை வெளியேற்றி யாரும் தொடர்பு வைக்காதீர்கள் என்று கூறிய பிறகு மீண்டும் எடுத்துக் கொண்டாரா? அடுத்து டி.டி.வி.தினகரனை நம்பி எல்லாம் கொடுத்து, எம்.பி.ஆகி அவரும் நம்பிக்கை துரோகம் செய்தார் என்று நீக்கிய பிறகு, மீண்டும் சேர்த்து கொண்டாரா? அதுவும இல்லை. அடுத்து தினகரனுடன் உறன்பட்ட மகாதேவனை கொண்டுவந்து, பிறகு அவரும் சரியில்லை என்று வெளியேற்றி பிறகு மீண்டுமவரை சேர்த்தாரா? அதற்கு பிறகு வந்த டாக்டர் வெங்கடேசை நம்பி அவரிடம் அனைத்து பொறுப்பையு கொடுத்து பிறகு அவரையும் தவறு என வெளியேற்றிய பிறகு, மீண்டும் அவரை சேர்த்தாரா? அதுவும் இல்லை.

அதன்பிரகுதானே ராவணனையும், ம.ராமச்ச்னடிரனையும் நம்பி அவர்களும் அப்படித்தான் என்று தெரிந்த பிறகுதானே இப்போது வெளியேற்றி இருக்கிறார். ஒவ்வொரு ஆளையும் சரியில்லை என தெரியு போதும், அடுத்த ஆல் அவரும்போதும், ஜெ அன்ம்பியது சசிகலாவை மட்டும்தானே? அந்த சசிகலா, எம்.என். வெளியேற்ற படும்போது, "அக்கா, மாமா ரொம்ப மோசம். திவாகரனை நம்பலாம்".என்றும், அவரும் தவறு என ஆகும்போது, "அய்யய்யோ அக்கா, திவாகரன் மோசம். தினகரனை நம்பலாம்" என்றும், அவரும் அம்பலமாகும்போது, "அக்கா, தினகரன் மோசம், அவனுக்கு எதிராக இருக்கும் மகாதேவனை நாம் நம்பலாம்" என்றும். மகாதேவனும் அதேபோல நடக்கும்போது, "அக்கா, இவன் இப்படி செய்வான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.டாக்டர் வெங்கடேசன், அறிவாளி, அவனை நம்பலாம்" என்றும் கூறினார். ஒவ்வொரு முறையும் "பாவம், சசி, தவறாக கணித்துவிட்டார்" என மன்னிக்கப் பட்டது.

அதற்குபிறகு டாக்டர் வெங்கடேசன் தனது முனைப்பை மட்டும் காட்டி லாபம் தேட, அவரையும் வெளியேற்ற வேண்டி வந்தது.அப்போது சசிகலா அடையாளம் காட்டிய " ராவணன், ம.ராமச்சந்திரன்" இருவரையும் ஜெ நம்பும்படி செய்தார்கள். ம.ராமச்சந்திரன் தனது அண்ணனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று நம்பும்படி பேசிவந்தார். அதுவும் இப்போது அம்பலமாகி விட்டது. தங்க உதட்டை போடும் வாத்தை அறுத்து பார்க்க அந்த குடும்பம் நினைத்தது. அதன் விளைவு "உள்ளதும் போச்சு, நோல்லைகன்னா" என்று ஆகிவிட்டது. இந்த குடும்பம் கட்ச்சியை அழிப்பதாக தொண்டர்கள் எண்ணினார்கள். இப்போது தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதை கொண்டாடுகிறார்கள். அதனால் இதுவரை வெளியே அனுப்பப்பட்ட யாரையும் மீண்டும் மன்னித்த வரலாறு கிடையாது. இதுவரை ஆயிரம் உறன்பாடு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் சசிகலாவை கட்ச்சியை விட்டோ, தோட்டத்தை விட்டோ வெளியேற்றிய வரலாறு உண்டா? அதனால் மக்கள் சஞ்சலப்படவேண்டாம்.

மாளிகை புரட்சி சதி முறியடிப்பா?

சசிகலா வகையாறாக்கள் அந்த ஆளும்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த பட்டியலில் சசிகலா,ம.நடராசன், மன்னார்குடி திவாகரன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், டாக்டர் வெங்கடேசன், சுதாகரன், ராவணன்,குலோத்துங்கன், மோகன் போன்றோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சசிகலா அதிமுக கட்சியின் உயர் செயற்குழு உறுப்பினர் என்பது முக்கிய செய்தி.ம.நடராஜன், சுதாகரன் போன்றவர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது நபர்களை நீக்குவதற்காக வெளியிடப்பட்டஅறிவிப்பு அல்ல என்பதை அந்த அறிவிப்பின் அணுகுமுறையே வெளிப்படுத்துகிறது. இவர்களுடன் கட்சியில் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் வழக்கம் போல அறிவிப்பு உள்ளது.

மேற்கண்டோர் மட்டும்தான் விலக்கப்பட்டார்களா? அவர்கள் மட்டும்தான் இன்று காலையில் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறினார்களா? என்று கேட்டால் இல்லை. சமையல்காரர் உட்பட குறிப்பாக மன்னார்குடி குடும்ப உறுப்பினர்களும்,உறவுகளும், வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமாக அதிமுக பொதுசெயலாலருக்கு பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்ப்பட்ட "தனியார் பாதுகாப்பு படை" வெளியேற்றப்பட்டுள்ளது. அதாவது இப்படி ஒரு படையை "பழனி" தலைமையில் "தரணி" உடன் சேர்த்து, மூன்று தஞ்சைகாரர்களும், இரண்டு மேலூர் காரர்களும் ஒரே "சாதியை" சேர்ந்தவர்களாக இருந்தார்களே, அவர்கள் ஐந்துபேரும் "கள்ளத்தனாமாக" நடராஜனின் கட்டளைக்கு என்னவேண்டுமானாலும் செய்ய துணிந்தவர்கள் என்று "உளவுத்துறை" கூறிவிட்டதால் வெளியேற்றப்பட்டுள்ளனர். எல்லோரும் "மூட்டை, முடிச்சை" தூக்கி கொண்டு "சூட்கேசுகளுடன்" மதியத்திற்குள் வெளியேறினர்.


அந்த இடங்களை "சிறப்பு காவலர்கள்" நிரப்பினர். சசிகலா வகையறா இரண்டு "ஸ்கார்பியோ" வாகனங்களில் வெளியேறினர். ஆனாலும் "தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை" மாவட்டங்களில் இருந்து நேற்றே நிலைமையை கேள்விப்பட்டு, "சசி குழு "அழைப்பின்" பெயரில் சென்னை வந்துள்ள கள்ளர் சமூக முன்னோடிகள் இன்று "தனியாக" சென்னையில் கூடி விவாதிக்கின்றனர். அவர்கள் மீண்டும் "சமரசம்" பேச வாய்ப்புள்ளதா என்று பேசிக்கொள்கிறார்கள். அதை எதிர்க்கட்சி டி.வி. மூலம் ஒளிபரப்புகிறார்கள். ஏன் இந்த குழப்பம்? பெங்களூரு நீதிமன்றத்தில் வைத்து முதல்வர் போகாத கடந்த வாரம் "சசிகலாவும், இளவரசியும், சுதாகரனுக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டு "ரகசியம்" பேசியதும், அங்கே நேரில்வராத நடராசன் விடுதி அறையில் இருந்து வழிகாட்டியதும் உளவுத்துறை மூலம் முதல்வருக்கு தெரிந்தது. அதுமட்டுமின்றி தங்களுக்குள் "தொடர்பு இல்லை" என்று கூறி வந்தவர்கள் பெங்களூரில் ஒன்றாக கூடி குசலம் விசாரித்ததில் தன்னிடம் "சசி உட்பட" பொய் கூறியுள்ளார்கள் எனபதும் முதல்வருக்கு வெளிப்பட்டு விட்டது.


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றுவிடுவார், அதனால் தன்னை முதல்வராய் ஆக்கு, அல்லது தான் காட்டும் நபரை ஆக்கு என நடராசன் உளவு துறையின் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் என்ற காரைக்குடிகாரர் வசம் பேசியதை கேள்விப்பட்டுதான் அந்த ராஜேந்திரனை மாற்றினார் முதல்வர். இது இரண்டு மாதமாக நடக்கும் பிரச்சனை.அதற்கு பிறகு போடப்பட்ட "பொன்மாநிக்கவேலும்" ஸ்டாலின் கைது விவகாரத்தில் செயல்படாததை அறிந்து அதற்கும் "நடராசன் விசுவாசம்"காரணமா என ஆராயப்பட்டது. அவரும் அதனால் மாற்றப்பட்டார். அதற்குள் பெங்களூரு நீதிமன்ற "சந்திப்புகள்" உண்மை சதியை அம்பலப்படுத்தின. "சதி" கேள்விப்பட்ட உடனேயே "உளவுத்துறையினர்" தனியார் பாதுகாப்பு படை முதல்வரை சுற்றி நிற்பது "ஆபத்து" என உணர்ந்தனர். அவர்களும் "அதே" கும்பல்தானே என்பதால் "எதையும் செய்வார்கள்" என்று எண்ணினார்கள். ஆகவே அவர்களும் "காலி". பூங்குன்றன் மாத்திரம் "காத்திருப்போர்" பட்டியலில் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இத்தனை விவாகரமும் "நமது எம்.ஜி.ஆர்" இதழிலும், "முரசொலியிலும்" மறைமுகமாக வந்து கொண்டுதான் இருந்தன. அதை யாரும் "துருவி" பார்க்கவில்லை. டிசம்பர் முதல்வாரம் நமது எம்ஜிஆரில் "ஐந்து மாவட்ட செயலாளர்கள்" மாற்றப்பட்டனர். இன்றைய இதழில் அத்தனை மாற்றமும் "தவறு" என்றும் பழைய மாவட்ட செயலாளர்களே தொடர்வர் எனவும் வந்துள்ளது. இன்று "முரசொலியில்" ஒரு கட்ட செய்தி வந்துள்ளது. அதில் " முதல்வரை காப்பாற்றிய சிறுமிக்கு பரிசு" எனும்போது அந்த சிறுமி "உங்களை காப்பாற்றியதற்கு" எனக்கு அவர்கள் "தூக்கு தண்டனை" கொடுக்கலாம் என கூறியது வெளியாகியுள்ளது. அதை ஆளும் கட்சியின் ஏடு "முந்தா நாள்" வெளியிட்டுள்ளதாக முரசொலி கூறியுள்ளது. அதாவது முதல்வரின் உயிருக்கு "ஆபத்து வார" உள்ள வாய்ப்பை அப்படி முரசொலி எழுதியதும் இப்போது தெரிகிறது.


அப்படியானால் முரசொலியை நடத்தும் திமுக தலைமைக்கு ஏற்கனவே "எல்லாம் " தெரியுமா? ஆமாம். தெரியும். எப்படி? மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிழல் மனிதரின் நடவடிக்கைகளை உளவு துறை மூலம் கணக்கெடுத்த அன்றைய முதல்வர் "அந்த கலாட்சேத்ரா காலனி" வாசியை பிடிக்குள் கொண்டுவந்து விட்டார். அவரது "வங்கி கணக்குகளை" எடுத்து வைத்து கொண்டு, அவரை "கிடிக்கி பிடி" போட்டு "ஜாபர் செட்" மூலமே அதிமுக உடைக்கும் படலத்தை தொடங்கி விட்டார். அப்படி வெளியே வந்தவர்கள்தான் "செல்வகணபதி, முத்துசாமி" போன்றோர். அந்த "உள்ளே-வெளியே" விளையாட்டை அப்போதிலிருந்தே இந்த கூட்டம் செய்து வந்துள்ளது. உள்ளேயிருந்து விளையாடியவர்களின் "நடிப்பு" அந்த அதிமுக பொது செயலாளரை நம்ப வைத்து விட்டது.


இந்த சதியை அதனால்தான் "கருணாநிதியின் சதியை முறியடித்ததாக" ஆள்வோர் பேசிக் கொள்கிறார்கள். ஏற்கனவே காவல்துறைக்குள் இருக்கும் "குழுவாதம்" இந்த சதிகளுக்கு உதவி விட்டது. அதாவது "ஜாங்கிட் குழு". இது திமுக விசுவாச குழு. ஜாங்கிட் ராஜாத்தி அம்மையாருக்கும், ஸ்டாலினுக்கும் "முறைவாசல்" செய்தவர். அவருக்கு எதிர்குழு "ராஜெச்தாஸ், பொன்மாணிக்கவேல்,குழு".இவர்கள் ஜான்கிட்டால் "பழி வாங்கப்பட்டவர்கள்". இந்த குழு விளையாட்டில் "சிவனாண்டி" சிக்கி கொண்டார். சென்ற அதிமுக ஆட்சியில் சசிகலா விசுவாசி, பிறகு திமுக ஆட்சியில் அழகிரி மூலம் உள்நுழைவு, பிறகு மீண்டும் சசிகலா மூலம் முயற்சி, ஆனால் இப்போது ஜெயாவால் "வாங்கிய குட்டு". இதேபோல ம.நடராஜனின் நண்பர் பன்னீர்செல்வம் அய்.ஏ.எஸ். அவர் நல்லவர் போல நடந்து எல்லா "சேட்டைகளையும்" அரங்கேற்றியவர்.அம்பலம் ஆனதும் அவரது உயர்ந்த பதவியான " சிறப்பு கடமை அதிகாரி" என்ற ஒ.எஸ்.டி. பறிபோனது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர்.கால விசுவாசி "பிச்சாண்டி அய்.ஏ.எஸ்." வந்துவிட்டார்.

இத மாற்றங்கள் "அதிகாரிகளின் ஆலோசனைப்படி" நடக்கின்றன. அதை புரியாமல் எது "கள்ளரை எதிர்த்து" என்று எண்ணிக்கொண்டு, சில "பார்ப்பன விற்ப்பன்னர்கள்" தோட்டத்தில் நுழைய முயற்ச்சித்தார்கலாம். ஆனால் ""மூக்குடைபட்டு" திரும்பினார்களாம். அதனால் பார்ப்பனர்களுக்கு இந்த "மாற்றம்" பயன்படாது. தமிழர்களுக்கே பயன்படும் எனபது "கூடங்குளம், முல்லைபெரியார்" விசயங்களிலும், "மூன்றுபேர் தூக்கு , ஈழத்தமிழர்" விசயங்களிலும நிரூபனமாகி வருகிறது. காஞ்சி "மடசங்கரங்கள்" செய்யும் "நீதியரசருக்கு லஞ்சம் கொடுக்கும்" செயல்களும் தண்டிக்கப்படும். மத்திய அரசின் "தமிழ்நாடு மீதான போர் நடவடிக்கையும்" ப.சிதம்பரத்தின் சதிகளும் முறியடிக்கப்படும்.

Saturday, December 17, 2011

ஏண்டா, முல்லபெரியாரா?

வேண்டும் என்றே "முல்லைபெரியாரை" முல்லா பெரியார் என்று எழுதி அப்படியே உச்சரித்து மலையாள உச்சர்தஈபு என்பதாக காட்டி, இந்தியா முழுவதும் ஊடகங்களில் உள்ள "கூமுட்டைகளுக்கு" புரியாமல் இருக்கும்போதே ஒரு "சித்து விளையாட்டை" செய்துவரும் கெட்டிகாரர்கலே,நீங்கள் அந்த அணையின் பெயரை மலையாளத்தில் போட எண்ணினால் என்ன செய்யவேண்டும் தெரியுமா?

மலையாளத்தில் "முல்லை நதி" என்பதுதான் அப்படி அழைக்கப்படுகிறது. அந்த முல்லை நதியை நீ, முல்லா" என்கிறாய். சரி. சொல்லிவிட்டு போ. மீதம் உள்ள "பெரியாரை" ஏன் அப்படியே அழைக்கிறாய்? "பெரிய ஆறு" என்பதுதான் அங்கே பெரியாறு" என்று அழைக்கப்படுகிறது. நீ அதையும் மலையாளத்தில் கூறு. அதாவது "வல்லிய புழா" என்று கூறு. மொத்தத்தில் "முல்ல வல்லிய புழா" என்றுதான் நீ அழைக்க வேண்டும். உனக்கு சம்மதமா? சென்னை பதிப்பான டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, ஹெட்லைன்ஸ் டுடே ஆகியவை திருந்துவார்களா?

முல்லைபெரிராஉ அணை இருக்கும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள், 1879 இல் பஞ்சா என்ற தமிழ்மன்னன் வசம் இருந்ததும், 1885 இல் . கண்ணன் தேவன் எஸ்டேட் உடன் ஒப்பந்தம் போட்டதும் வரலாற்றில் ஆவணமாக உள்ளது. அதற்குப்பின்தான் "திருவிதாங்கூர்" சமஸ்தானம் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்தது. ஆங்கிலேயன் முட்டாள்தனமாக தமழ்நாட்டு பகுதிக்கு "திருவிதாங்கூர்" மன்னனுடன் ஒப்பந்தம் போட்டு விட்டான். இந்த உணமைகளை நாகர்கோவில் எம்.பி. நேசமணி, ௧௯௫௫ ஆம் ஆண்டு டிசம்பர் பதினாலாம் நாள் நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். அப்போது அவர் "திருவிதாங்கூர் காங்கிரஸ் கட்சி தலைவர் ".

பொய்குண்டு போடும் தலப்பாக்கட்டு.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் போலி உணவுவிடுதிகள் தங்களை உண்மை "தலப்பாக்கட்டு பிரியாணி" என்று வணிகம் செய்வதாக நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. அதனாலோ, என்னவோ, நமது "தலைப்பாகை தலைமை அமைச்சரை" தலப்பாகட்டு என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள். ரஷியா சென்றார் தலப்பாக்கட்டு. கள்ள ஒட்டு போட்டுஆட்சிபிடித்த புதின்அரசுடன் கைகோர்த்துகொண்டு அந்த அரசிடம் கொஞ்சினார் தலப்பாக்கட்டு. அப்படி கெஞ்சும்போது பல்வேறு ஒப்பந்த்தங்களில் "அணு உலைகள்" பற்றிய ஒப்பந்த்தம் முக்கியமாக . போடப்பட்டது. அதில் "கூடங்குளம்" பற்றியும் பேசினார். இரண்டு வாரத்தில் முதல் அணு உலையை கூடங்குளத்தில் "ஓடவிடுவோம்" என்று அவர் அப்பது கூறினார். கூடங்குளம் மக்களும், தமிழக அரசும் தனைகளை "ஓடவிட்டுவிடுவார்கள்" என்பது அவருக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் ஏன் பொய் பேசினார்?

இந்திய ஊடகங்களும், ஊழல் அரசியல்வாதிகளும், ஒப்பந்தங்கள் எடுக்கலாம் என்று கனவுகாணும் திடீர் பணக்காரர்களும் "அணு உலை ஆதரவு" முழக்கங்களை எழுப்பி வருவதால் அவர்களுக்கு "தலைமை அமைச்சரின்" அறிவிப்பு "தெம்பை" கொடுக்கலாம். அணு உலை எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு இதுவே "மனச்சங்கடத்தை" கொடுத்திருக்கலாம். ஆனால் உண்மை நிலையை நாம் எடுத்து சொல்ல வேண்டும். இன்று ஏடுகளிலே :கூடங்குளம்அணுஉலைநிர்வாகஅதிகாரி"கேஸ்வந்த் பாலாஜி பிரதமர் கூறுவது போல உடனே அணு உலை இயங்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார். போராட்டம் முடிவுக்கு வந்தபின் "ஆறு மாதத்தில்" தயாராகும் என்று கூறியுள்ளார்.


இதுவே பிரதமர் கூறியது "ஒரு பித்தலாட்டம்" என்பதை உறுதியாகிவிட்டது. எதற்காக பிரதமர் அப்படி ஒரு பொய்யை சொல்ல வேண்டும்? அடுத்து இரண்டு நாள் முன்பு கோவையில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. அதில் கல்பாக்கத்தில் பணியாற்றி இந்திய அணு உலைகளுக்கு வழக்கமாக வக்காலத்து வாங்கும் எம்.ஆர். ஸ்ரீனிவாசன் என்ற விஞ்ஞானி கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தார். அப்போது டாக்டர் ரமேஷ் ஒரு கேள்வியை கேட்க, விஞ்ஞானி தினறிவிட்டார். கூடங்குளம் திட்டம் வருவதற்கு முன்பு அந்த இடத்தில் "எரிமலை, சுனாமி ஆய்வுகள் நடந்ததா?" என்று ரமேஷ் கேட்டார்.இதற்கு இங்கே பதில் சொல்ல முடியாது, வேண்டுமானால் இணைய அஞ்சலில் பதில் சொல்கிறேன் என்றார் விஞ்ஞானி. அடுத்து கூடங்குளம் அணு உலைக்கு எங்கிருந்து தண்ணீர் எடுக்க போகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு "பேச்சிபாறை அனையிளிருந்துதான்" எடுக்க வேண்டும், ஆனால் தமிழக அரசு அதற்கு அனுமதி தரவில்லை என்று அவர் கூறினார். அதாவது தண்ணீர் இல்லாமல் அணு உலையை குளிரூட்டுவது பற்றி சிந்திக்கவே முடியாது. அதற்கே ஏற்பாடு செய்யாத நிலையில் எப்படி உலைகள் இரண்டு வாரத்தில் தொடங்கும்?

அதனால் ரஷியாவில் தலப்பாக்கட்டு கூறியது "கலப்பற்ற பொய் ". அதை ஏன் கூறினார்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.அதாவது அணு உலை எதிர்பாளர்களை மிரட்ட கூறினாரா? மக்களை மன உறுதி கேடவைக்க கூறினாரா? தமிழக அரசை மிரட்ட கூறினாரா? அனைத்து காரங்களும் ஓரளவு இருந்தாலும் அதற்காகவெல்லாம் கூறியதாக தெரியவில்லை. பிறகு எதற்காக தலைமை அமைச்சர் பொய் கூறினார்? ஒரு புறம் அமைச்சர் நாராயணசாமியை வைத்து போராட்டத்திற்கு பணம் வருகிறது என்று கூற சொல்லி விட்டார்கள். அதனால் அது பெரிய அளவு போராட்டத்தை அடக்காது என்பதையும் தெரிந்தே வைத்துள்ளார்கள்.ஒரு காங்கிரஸ் தொழிற்சங்க வாதியை வைத்து "மணல் அள்ளுபவர்கள்" அணு உலையை தஹ்டுக்கிரார்கள் என்றும் இன்று சொல்ல வைத்து விட்டார்கள். சென்னையில் ஒரு குழுவை வைத்து "சான்பிரான்சிச்கொவிளிருந்து" தொலைபேசி மிரட்டல் வந்தது என்றும் குற்றச்சாட்டு சொல்லி விட்டார்கள். ஆகவே எல்லா குற்றச்சாட்டுகளும் மத்திய காங்கிரஸ் அரசால் "தமிழக அரசிற்கு" எதிரானதாக கிளப்பப்பட்டுள்ளன.

அதாவது மத்திய காங்கிரஸ் செல்வி.ஜெயலலிதா அரசை எதிரியாக பார்த்து குறிப்பாக அதன் உள்துறை அமைச்சர் "தனிப்பட்ட முறையில்" இறங்கி இதுபோன்ற "காரியங்களை" தூண்டி விடுகிறார் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. அதனால் அது உள்துறையின் "பழிவாங்கும்" போக்கு. ஆனால் பிரதமர் மன்மோகன் ஏன் கூடங்குளம் அணு உலை பற்றி "பொய்யான தகவலை" கூறவேண்டும்? சமீபத்தில் அமெரிக்காவிற்கும், மன்மோகனுக்கும் இடையில் உள்ள 'சர்ச்சை" எதன மீது?. அணு உலை ஆபத்து நட்ட ஈடு சட்டம் மீது எனபது நினைவுக்கு வருகிறதா? அதாவது அணு உலைகளுக்கு அந்நிய நாடுகளிடம் கையேந்தி சென்ற மன்மோகன் அமெரிக்காவின் வெள்ளை புஷ் வசம் சென்றது நினைவுக்கு வருகிறதா? அதன்மூலம் இந்திய நாடாளுமனரத்திற்கு தெரியாமல், மத்திய அமைச்சரவைக்கு தெரியாமல் மன்மோகன் புஷ் உடன் "கையெழுத்திட்டு" அமெரிக்கா -இந்திய அணு சக்தி ஒப்பந்தம் உருவானதா?

அந்த ஒப்பந்தத்தை வைத்து மேலை நாடுகளான அணு சக்தி நாடுகளிடம் கையேந்தி, கெஞ்சி கூத்தாடி, அமெரிக்கா ஒத்துழைப்பால் அய்.ஏ.ஈ.ஏ. என்ற அனைத்துநாட்டு அணு சங்கதி கழகம் என்ற அமைப்பின் ஒப்புதலை வாங்கினார் அல்லவா? அவர்கள் நான் ப்ராளிபரேசன் ஒப்பந்தம் என்ற "அணுகுண்டை சோதனைக்காக வெடிக்கமாட்டோம்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போட நிர்ப்பந்தம் செய்தார்களா? இல்லையா? அதற்கு இந்தியா "தயாராக இல்லை" என்பதும் புரிகிறதா? அதன்பிறகு அந்த மேலை நாடுகளான அணு சக்தி நாடுகள், தங்கள் நாட்டை போலவே, "சீ.எஸ்.சீ. என்ற 'அணு விபத்து நட்ட ஈடு சட்டம்" கொண்டு வார வர்புருத்தினார்களா? இல்லையா? அதற்காக ஒரு மசோதாவை மன்மோகன் அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்ததே? அதில் சில அமெரிக்க கார்பொரேட் அணு உலை முதலாளிகளுக்கு சாதகமான வார்த்தைகளை நீக்க "தி ஹிந்து" ஊடக அமபலப்படுத்தளினால், பாஜக நாடாளுமன்றத்தில் கத்திய பிறகு, அவற்றை நீகினார்களா? இல்லையா?

அப்படி நீக்கியதால் "அந்நிய அணு உலை முதலாளிகள்" இறக்குமதி செய்யும் உலைகள் ஆபத்தில் சிக்கினால், மக்களுக்கு கொடுக்கும் "நட்ட ஈட்டில்" அந்த இயக்குனர்களும் "பங்கு" செலுத்தவேண்டும் என்று இருந்ததே? அதை அமெரிக்க கார்பொரேட் அணு உலை முதலாளிகள் ஏற்றுக் கொள்ளவில்லையே? அந்த சட்டத்தை மாற்றி அமெரிக்க கார்பொரேட் அணு உலை முதலாளிகளை "திருப்தி"படுத்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு முறை டில்லி வந்து பேசி பார்த்து "ஏமாந்து" போனாரே? மன்மோகன் அமெரிக்க போகும்போதும் இரண்டு முறை இதுபற்றி பேசி ஏமாந்து போனார்களே? அதே பியார்ச்ச்னையை அதாவது "அணு உலை ஆபத்து நட்ட ஈடு சட்டம்" பற்றி சென்னை வந்தபோது, முதல்வரிடம் ஹிலாரி பெசியதகாவும் வந்ததே?அவர்களை "திருப்தி" படுத்த ஒரு "விதிகளை" அந்த சட்டத்திற்காக எழுதி, அமைச்சரவை ஒப்புதலுடன் அதை மாலி சென்று "அமெரிக்காவின் கருப்பு புஷ் இடம்" காண்பித்து அதன்மூலம் அமெரிக்க அணு உலை உற்பத்தி நிறுவங்களை 'சம்மதிக்க" வைத்து விடுவேன் என்று மன்மோகன் கூறினாரே? அப்போதும் அவர்கள் சம்மதிக்கவில்லையே? இந்திய நாடாளுமன்றமும் அந்த "விதிகள்" அணு உலை ஆபத்து நட்ட ஈடு சட்டத்தை "நீர்த்துபோக" செய்யும் என்று பேச தொடங்கி விட்டார்களே?


இத்தகைய சூழலில்தான் மனோகன் பிரான்ஸ் நாட்டு அதிபருடன் இரண்டு வாரம் முன்பு 'அணு உலை மற்றும் யுரேனியும் " வாங்க சம்மதம் பெற்று அதை ஊடகங்களில் பெயர்த்து படுத்தினார். அதேபோல இப்போது ரஷியா சென்று அணு உலை பெற, சம்மதம் பெற்றேன் என்கிறார். அதேநேரம் அமெரிக்கா தனது நாட்டு "தனியார் முதலாளிகளது" உலைகளுடன் ஒப்பந்தம் போட சொல்கிறது. ஆனால் பிரான்சும், ரஷியாவும், அந்தந்த 'அரசாங்கங்களுடன்" ஒப்பந்தம் போட தயாராக இருக்கிறது என்றும் ஊடகங்கள் மூலம் கருத்தை பரப்புகிறார். நான் ப்ராளிபரேசன் ஒப்பந்தம் போட்டு இந்தியா "அணுகுண்டு சோதனை" செய்யகூடாது என்று அமெரிக்காவும், மேலை நாடுகளும் கூறும்போது, அப்படிப்பட்ட ஒப்பந்தத்தை பிரான்சும், ருசியாவும் "நிர்பந்திக்கவில்லை" என்று கூறுகிறார். அதை ஒட்டியே "கூடங்குளம் அணு உலை இரண்டு வாரத்தில் செயல்படும்" என்று பொய் செய்தியை குண்டாக போட்டுள்ளார். அதாவது இது தனது நிரந்தர முதலாளி அமெரிக்காவை "நிர்ப்பந்தம்" செய்ய போடப்பட்ட "பொய் குண்டு".

இப்படி பொயகுண்டு போடும் "தலப்பாக்கட்டு" உண்மையில் அணு உலை மூலம் "மின்சாரம்" தயார் செய்யும் கொள்கை கொண்டவர் அல்ல. மாறாக அணு உலைகள் மூலம் "அணு குண்டு" செய்ய பல வழிகளிலும் ஏற்பாடு செய்பவர். அதனால்தான் அனுகுண்டின் ஆதரவாளர் "அப்துல்கலாம்" இங்கே வந்து வேண்டும் இந்த அணு உலை என்று கூறி சென்றார். இந்த அதலப்பாகட்டின் "இரட்டைவேடம்" அமப்லப்படுத்தப்படவேண்டும்.

Friday, December 16, 2011

சென்னை ஊடகமே கேரள அரசின் பொய்யை பரப்ப உதவுவதா?

சென்னை ஊடகமே கேரள அரசின் பொய்யை பரப்ப உதவுவதா?
கடந்த சில நாட்களாக சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு இணையதளத்தின் மீது சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில ஏட்டிற்கு பெறும் கோபம் வந்துவிட்டது. அந்த இணைய தளத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையை காரணம் காட்டி, அந்த கட்டுரையாளர் மீதும், அதன் ஆசிரியர் மீதும், அதன் வெளியீட்டாளர் மீதும் அவதூறு வழக்கு தொடுப்போம் என அந்த பிரபல நாடு தழுவிய ஆங்கில ஏட்டின் சென்னை பதிப்பிலிருந்து வழக்கறிஞர் அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில் முதல் அறிக்கையில் ஒரு கோடி ரூபாய் நட்டஈடு கேட்டும், இரண்டாவது அறிக்கையில் "நூறு கோடி" நட்ட ஈடு கேட்டும் மிரட்டல் விடப்பட்டுள்ளது.

அந்த இணைய தளம் பெயர் வீகென்ட் லீடர். { www .weekendleader .com } அந்த கட்டுரையார் பெயர் "ராதிகா கிரி". அவர் statesman என்ற ஆங்கில ஏட்டின் சிறப்பு ஊடகவியலாளர். அவர் தனது கட்டுரையில் ஏன் இந்த சென்னை ஆங்கில ஏட்டில் முல்லைபெரியார் விசயத்தில் " சார்பற்ற நிலை" எடுக்காமல் கேரள சார்பு நிலை எடுக்கிறார்கள்? என்று வினவி இருக்கிறார். அதற்கு அந்த டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டின் சென்னை பிரிவில் எல்லா பொறுப்புகளிலும் "மலையாளிகள்" இருப்பதுதான் காரணமா? என்றும் கேட்டிருக்கிறார். முல்லை பெரியார் பெயரையே ஏன் அவர்கள் முல்லபெரியார் என்று மலையாள உச்சரிப்பில் போடவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். ஏற்கனவே எம்ஜீஆர் காலத்திலேயே 1978 இல் திட்டமிட்டு கேரள மலையாள மனோரமா ஏட்டில் "பீதியை" உருவாக்க எழுதியதையும் அப்போது அந்த கருத்தை கேரள மின்சார வாரிய தலைவர் பரமேஸ்வரன் நாயர் கூறியதையும் எடுத்து காட்டி இருக்கிறார்.

இத்தகைய உண்மை கருத்துக்களை கொண்ட கட்டுரை சென்னை ஆங்கில ஏடான "டைம்ஸ் ஆப் இந்தியா" ஏட்டிற்கு "சூட்டை" கிளப்பி விட்டது. அதனால்தான் அவர்கள் வீகன்ட்லீடர் இணைய தள ஏட்டிற்கு மிரட்டலாக "நூறு கோடி" நட்ட ஈடு கேட்டு வக்கீல் நோடிஸ் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அந்த சென்னை பதிப்பு டைம்ஸ் ஆப் இந்தியா தனது "சார்பு நிலையை" மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அதை இன்று அவர்களது ஏட்டின் வெளியீடுகள் காட்டிவிட்டன. அதை வின் காட்சி ஊடக செய்திகளும், நிஜங்களும் நிகழ்ச்சியில் நாங்களும் சொல்லிவிட்டோம்.

இன்றைய இதழில், எல்லா நாளேடுகளும், ஆங்கில ஏடுகளான தி ஹிந்து, நியு இந்தியன் எக்ஸ்ப்ரஸ், டெக்கான் கிரநிகள் உட்பட தமிழ் ஏடுகளும், "சட்டசபை தீர்மானத்தை" முதல் செய்தியாக வெளியிட்டுள்ளன. அதாவது முல்லைபெரியார் பற்றிய
தமிழக சட்டமன்ற தீர்மானம் ஒரு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் கொண்டது என்று புரிந்து கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.எல்லா கட்சிகளும் ஒட்டுமொத்தமாக் சேர்ந்து தமிழக முதல்வரின் தீர்மானத்திற்கு "துணையாக" நிற்கும் மகத்தான நிகழ்வை நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய "ஊடக கடமையை" சரியாக செய்துள்ளன. ஆனால் இந்த சென்னை பதிப்பு "டைம்ஸ் ஆப் இந்தியா" மட்டும் அந்த செய்தியை "ஒன்பதாம் பக்க" செய்தியாக ஆக்கி, அதற்கு முதல் பக்க கீழ்பகுதியில் ஒரு "தொடர்பை" கொடுத்துள்ளது. ஏன் இந்த விபரீத புத்தி? இது "மலையாள இனஉணர்வா?" இப்படி ஒரு கேள்வியை அனைவரும் எழுப்ப எதுவாக அந்த செய்தி வெள்யீடு உள்ளது.

அந்த ஏட்டின் சென்னை பதிப்பை பார்த்து நாம் சில கேள்விகளை கேட்க வேண்டும். செல்வி.ஜெயலலிதாவின் "கொடும்பாவியை" எரித்த கேரள வெறியர்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? எங்கள் முதல்வரது தீர்மானம் உங்களுக்கு அவ்வளவு "கசக்கிறதா?". இந்த செய்தியை "ஓரங்கட்டி" வெளியிடும் அளவு கூட "கேரளாவிலிருந்து தமிழக தேவாரம் பகுதிக்கு" ஓடிவந்த தமிழர்கள் செய்தியை நீங்கள் மட்டும் வெளியிட வில்லையே? அது ஏன்? தி ஹிந்து கூட அதை வெளியிட்டதே? அதேபோல இதே சென்னை பதிப்பான நியு இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஏட்டில் வெளியிடப்பட்ட "கேரள மனித உரிமை ஆணைய" கருத்தையோ, கேரள அரசு வழக்கறிஞரின் கருத்தையோ, கேரள உயர்நீதி மன்றத்தில் நிபுணர் குழு சார்பாக "பரமேஸ்வரன் நாயர்" முன்வைத்த கருத்தையோ இந்த சென்னை பதிப்பு "டைம்ஸ் ஆப் இந்தியா" ஏன் வெளியிடவில்லை? அவை எல்லாமே கேரளாகாரர்களால் கூறப்பட்ட "தமிழக அரசின் நிலை சார்பான" கருத்துக்கள என்பதனாலேயே?

இப்படி ஒரு ஏடு "ஒரு சார்பு நிலை" எடுக்கலாமா? தமிழ்நாட்டில் விற்க வேண்டும் என்று கருதிகூட அந்த இதழால் "சார்பற்ற நிலை எடுத்து உண்மைகளை" போட முடிய வில்லையே? அது ஏன்? அதற்கு "இன வெறி" காரணமாக இருக்கிறதா? சரி. அப்படி உண்மை செய்திகளை சார்பற்ற நிலையில் வெளியிட முடியவில்லை. கேரள டிரச்போர்ட் போன்ற விளம்பரங்கள் வாங்கி போடுவதற்காக என்றுகூட நாம் இறங்கிவந்து ஏற்றுக்கொள்வோம். ஆனால் வீகன்ட்லீடர் இணைத்தளம் மீது அனுப்பிய வக்கிள்நோடிசில் கூறியுள்ளபடி அவர்களிடம் "தேசிய உணர்வு, நாற்றுபற்று" இருப்பதாகவும் தெரியவில்லையே? இன்று அவர்களது ஏட்டில் முதல் பக்கத்தில் அவர்கள் முதல்வரின் சட்டபேரவை தீர்மானத்தை வெளியிடவில்லை என்ற் அக்குற்றம் இருக்கும்போதே, வண்ண, வண்ண படங்களுடன் முதல் பக்கத்திலேயே, "சென்னையில் மலையாள படங்களுக்கு சினிமா கொட்டகைகள் தடை" என்று போட்டு பயந்துபோய் தடை செய்துள்ள சென்னை சினிமா கொட்டகைகளை " கலவரம்" மூட்டும் நோக்கத்தோடு அசிங்கப்படுத்தி செய்தி வெளியிடிருக்கிரார்களே? அது ஏன்?

அவர்களுக்கு செல்வி.ஜெயலலிதா தலைமையிலான அரசின் "சட்ட ஒழங்கை" கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? தலைநகர் சென்னையில் மட்டும்தான் "தமிழர்-மலையாள" பிரச்சனை அடிதடி ஆகாமல் இருக்கிறது என்ற "நல்லெண்ணத்தை" கெடுக்க எண்ணுகிறார்களா? பிரதமரும், உச்சநீதிமன்றமும் கூறிய பிறகு, ஊமன் சாந்தியே அமைதியாகி விட்டார். ஆனால் இவர்கள் சென்னையில் ஊடகத்தை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கிறதே? இங்கே ஒரு "ரத்த மோதலுக்கு" தயார் செய்கிறார்களா? இதுபோல்தானே "டேம் 999 " எடுத்த ஷோகன் ராய் அண்ணன்காரன் "விமல் ராய்" இங்கே சென்னை "ஆசிய நெட்" தலைவராக இருந்துகொண்டு அந்த ஊடகத்திலே "பீதியை" கிளப்புகிற வேலையை செய்ததையும், அவர் தம்பி மூலம் படம் எடுத்து கேரள மக்களை பீதி அடைய செய்ததையும் "தாமதமாக " நாம் உணர்ந்து "திட்டமிட்ட சகோதரர்களின் "சதியா" என்று வினாவை எழுப்பி
வருகிறோம். அதேபோல்தான் இவர்களும் செய்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் அந்த ஏடு, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் எதற்காக "பாதுகாப்பு" கேட்டார்கள்? தாங்கள் "தவறான, தமிழ் மக்களுக்கு விரோதமான" செய்திகளை வெளியிடுகிறோம் என்று அவர்களுக்கே தெரிந்ததால்தானே கேட்டார்கள். மதுரையில் இருந்து இன்னொரு ஆங்கில ஏட்டின் நிருபர் "கேரளாவில் விரட்டப்பட்ட" தமிழர்கள் பற்றி எழுதினால் எதற்காக இவர்களது சென்னை பதிப்பின் அலுவலகத்திலிருந்து அவரை "மிரட்ட வேண்டும்?". இப்படி சென்னையில் அமர்ந்துகொண்டே "தவறுகள் செய்யாதீர்கள்" என எச்சரிக்கை செய்கிறோம்.

இதே ஏட்டில் இருக்கின்ற ஒரு முக்கிய ஆசிரியர் "யாழ் சென்று போர் நேரத்தில்" நேர்மையான செய்திகளை வெளியிட்டதையும் நாங்கள் மறக்கவில்லை. ஆகவே எல்லா இன மக்கள் மத்தியிலும் "நல்லவர்கள்-கெட்டவர்கள்" இருவரும் இருக்கிறார்கள். நாங்கள் இந்த எட்டிலும் நல்ல, நேர்மையான சார்பற்ற ஊடகவியலாளர்களை எதிர்பார்க்கிறோம்.

Monday, December 12, 2011

இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைத்துவிடு

ஏன் இந்த கூச்சல்? எதற்காக முல்லைபெய்யார் அணை உடையுமா? என்று இல்லாத ஆராய்ச்சியைஎல்லாம் மலாயளிகள் கிள்ளப்பவேண்டும்? மின்சாரம் தங்கள் தேவைக்கு தகுந்தாற்போல இடுக்கி அணையிலிருந்து கிடைக்க வில்லை என்ற வருத்தம் மட்டுமே காரணமா? பிரவம் தொகுதியில் எர்ணாகுளத்தில் இடைத்தேர்தல் வரப்போகிறதே என்று "தயாரிப்பு ஏற்பாடு" மட்டுமே காரணமா? அணை 999 என்ற சினிமா படத்தை எடுத்த ஷோகன் ராய், இந்த பீதியை அதிகமாக கிளப்பிவிடும் " ஆசியா நெட்" என்ற டி.வி.யின் சென்னை தலைமையான "விமல் ராய்" இன் சகோதரர் என்பதனால் மட்டுமா காரணம்? கடலுக்கு வீணாக போகும் நீரை தமிழ்நாட்டிற்கு கொடுக்க மாட்டோமென அடம்பிடிக்க என்ன காரணம்?

அந்த அணையின் அடியில் ஐந்தாயிரம் ஏக்கரில் "உள்ளாச்விடுதிகள், சுற்றுலா வாசங்கள்" வைத்துள்ளவர்களை சார்ந்து வாழும் அரசியல்வாதிகள் மட்டமா காரணம்? இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் தமிழ்நாட்டை சேர்ந்த "தேவிகுளம், பீர்மேடு" பகுதிகளை காமராசர் காலத்திலேயே தமிழர்கள் கேட்ட போது, அப்போதுள்ள காங்கிரஸ் கட்சிகாரர்கள், "குளமாவது, மேடாவது,போ" என்று பூகோள அறிவு, நில உரிமை அறிவு சிறிதும் இல்லாமல் கூறியது தானே அடிப்படை காரணம்? அந்த வட்டாரம் தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்று இப்போது "முரசொலியில்" எழுதும் ரஹ்மான்கான் கட்டுரையை வெளியிடும் கலைஞர் அந்த செய்தியை "தான் ஆட்சியில்" இருக்கும் போது கூறாதது ஏன்?

இப்போது அடுத்தவர் ஆட்சிக்கு சிக்கல் வரட்டும் என்று எண்ணியாவது தமிழர் நலனுக்கான இந்த உண்மையை முரசொலியில் வெளியிட்டாரே? அதற்காக பாராட்டலாம். தனக்கு ஏக இந்தியா அடுத்தவருக்கு தமிழ்நாடு என்ற அவரது கொள்கை வாழ்க. இப்போது பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஜெ.எம். ஹாரூன் ஒரு புதிய "கோரிக்கையை" முன்வைக்கிறார். அது "இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டிற்கு"கொடுத்துவிடு.என்பதே. அறுபது விழுக்காடு மக்கள்தொகை தமிழர்களாக இருக்கும் இடுக்கி நமக்கே. எழுபது விழுக்காடு சபரிமலை பக்தர்கள் தமிழர்களே எனபதும் அந்த கோரிக்கையை வலுப்படுத்தும்.

வளமான தமிழ்நாட்டோடு சேரவேண்டுமா? அல்லது வரட்சியான கேரளாவில் இருக்க வேண்டுமா? என்ற முழக்கத்தை இடுக்கி மாவட்ட மக்கள் மத்தியில் வைக்கலாம் என்கிறார் ஹாரூன்.இது நல்லாதானே இருக்கு?