Saturday, July 28, 2012

சென்னையிலும் லண்டன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் ஆட்டத்திற்கு கோரிக்கை


          சென்னையில்  தமிழின இளைஞர்கள் ராஜா ஸ்டாலின் மற்றும் சூரியாவின் நண்பர்கள் இணைந்து ஒரு புதிய அமைப்பை ஏற்ப்படுத்தி உள்ளனர். அதற்கு " உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த இயக்கம் ஐநூறு இளைஞர்கள் அம்பத்தூரில் கூடியபோது உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூரில் த்ஜோடன்கிய இந்த இளைஞர்களது இயக்கம், இன்று சென்னை மையப்பகுதிக்கு வந்துள்ளது. தனது சமூக, அரசியல், இன பயணத்தில், இந்த இயக்கம் நாளை சென்னை பத்க்திரிகையாளர் மன்றத்தில் சேப்பாக்கத்தில் ஒரு "ஊடகவியலாளர் கூட்டத்தை" நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த கூட்டத்தில் லண்டனில் நடக்கும் அனைத்து நாட்டு ஒலிம்பிக் ஆட்டத்திற்கு சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். ஏற்கனவே லண்டனில் ஈழத் தமிழ் இளைஞர் சிவானந்தா அனைத்க்து நாட்டு ஒலிம்பிக் போட்டிக்கு, "போர்க் குற்றங்களில்" ஈடுபட்ட இலங்கை சிங்கள அரசின் பங்களிப்பை தடை செய்யவேண்டும் என்று கோரியும், காமன்வெல்த் நாட்டு வரிசையிலிருந்து இலங்கையை, இங்கிலாந்து அரசு நீக்க வேண்டும் என்று கோரியும், ஐந்து நாட்களாக பட்டினிப்போர் நடத்தி வருவது இந்த சென்னை இளைஞர்களை அதே கோரிக்கை மீது போராட தூண்டியுள்ளது. ஆகவே இவர்கள்  , ஞாயிறு அன்று சென்னை மையப்பகுதியில் உள்ள "வள்ளுவர் கோட்டத்தில்" ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். அதற்கு முன்பு இந்த செய்தியின் நியாயத்தை பொதுமக்களுக்கு  எடுத்து சொல்ல சனிக்கிழமை காலை பதினோரு மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்ப 


                    இந்த இளைஞர்களது முன்முயர்ச்சியை புரிந்துகொண்ட, பல அரசியல், சமூக, பண்பாட்டு தலைவர்கள் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, "ஏன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சிங்கள அரசை தடை செய்யவேண்டும்?" என்பதுபற்றி விளக்க . அவர்களில் திரைப்பட இயக்குனர்கள்  மணிவண்ணன், புகழேந்தி தங்கராஜ், , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் மலை சத்தியா, பெரியார் திராவிடக் கழக , தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி { நிறுவனர்-வேல்முருகன் ] , தலித் தலைவர் ரேவதி நாகராஜ், ஆகிய இந்தியப் பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.ஏ.மகேஷ், , தமிழக முன்னேட்டிற கழகம் அதியமான்,மற்றும் உலக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சூரியா, ராஜச்டலின் ஆகியோர் கலந்து கொள்க. இது தமிழக இளைஞர்கள் இடையே  ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Wednesday, July 25, 2012

மிரண்டாரா? மிரட்டுகிறாரா? கலைஞர் பற்றிய ஒரு ஆய்வு.


     நாம் கலைஞர்  சிதம்பரத்தின் டில்லிகார தர்பார் மிரட்டலுக்கு பயந்துதான் டெசோ மாநாட்டில் "தமிழீழம்" தீர்மானம் இருக்காது என்று கூறுவதும், தமிழர்களிடம் தனிமைப்படுவது கண்டு மிரண்டு, இல்லை, இல்லை நான் தமிழீழத்தை இன்னமும் கனவாக கொண்டுல்லீன் என்று மாற்றி, மாற்றி, கூறுவதும் செய்கிறார் என்றுதான் எண்ணிவந்தோம். ஆனால் அதை கலைஞரின் சீடராக குடும்ப ரீதியில் அன்றிலிருந்து, இன்றுவரை இருந்தவரான ஒரு வழக்கறிஞர் கடுமையாக மறுக்கிறார். தான் கலைஞரை அன்று முதளின்ருவரை கவனித்து வருவதாகவும், அவர் மிரளவில்லை, நம்மை மிரட்டுகிறார் என்றும் வர்ணிக்கிறார். எப்படி? என்று நாம் கேட்டால், ஒரு வரலாற்றையே அவர் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். 

                  முதலில் கலைஞருக்கும், ப.சிதம்பரத்திற்கும், இன்று உள்ள உறவு ஒருவரை ஒருவர் "மிரட்டும்" நிலையிலில்லை என்கிறார் அப்படியானால் இதுபோல இருக்கிறது என்ருய் கேட்டால், அது கலந்து ஆலோசிக்கும் நிலையில் இருக்கிறது என்கிறார். அதாவது இரண்டு பேருமே தமிழீழத்தை போருத்தவரியிலும், விடுதலை புலிகளை பொருத்தவரையிலும், ஒரே கருத்து கொண்டவர்கள்  என்பது அவரது வாதம்.இது மறுக்க முடியாத ஒன்றுதான். . தமிழீழம் என்ற சொல் இப்போது யாரால் உரைக்கப்பட்டாலும்  நாம் அவர்களை உற்று பார்த்து உண்மையிளுரைக்கிரார்களா? அல்லது தமிழ்நாட்டு மக்களை கவர உரைக்கிரார்களா? என்று காணவேண்டிய நேரம்.ஏன் என்றால் அங்கே ஈழத்தில் கருவி ஏந்தி வெற்றிகரமாக போராடி, வன்னி பகுதியையே விடுதலை செய்து "தமிழீழ அரசாங்கத்தை ஏற்படுத்தி, புலிகள் தலைவர் உலக வரலாடறி படைத்த காலத்தில், கடல் தாண்டி இருந்து கொண்டு "தமிழீழம்" பேசினாலும் அவர்கள் அந்த மண்ணில் உண்மையாக நிலைத்திருக்கும் ஒரு தமிழீழத்தை ஆதரிக்கிறார்கள் என்றே பொருள்படும். அனால் இன்று உள்ள சோக நிலையில், அதுவும், கடல் தாண்டிய மண்ணில் இருந்துகொண்டு தம்ஜிஹீழம் பேசினால், அது வேற்று முழக்கத்திற்காகவும் பேச முடியும். ஆகவே பேசுபவர்கள் "யார்" என்ற கண்காணிப்பு அவசியம் தேவைப்படுகிறது.

                      அதிலும் நிதர்சனமாக் இருந்த நிலைத்து இருந்த தமிழீழ மண்ணில், சிங்க பேரினவாத ராணுவத்தை இறக்கிவிட்டு, தமிழீழ மண்ணை அந்நியனுக்கு காட்டிக்கொடுக்க கடல் கடந்த நாட்டில் இருந்துகொண்டே "சாதித்து" காட்டியவர்கள் தமிழீழம் பேசினால் சந்தேகப்படாமல் எப்படி இருக்க முடியும்? கிளிநொச்சியில் ஒரு சுதந்திர ராசாங்கம். அதில் தமிழீழ தேசியத் தலைவருக்கு தலைமை அலுவலகம். அருகே வயல்வெளிகளில், தமிழீழ விவசாயிகள் உழுது, பாடுபட்டு, நெல் வித்தைத்து, வழமையான விவசாய பூமியாக அதை ஆக்கி, தம்ஜிஹீழ மக்களுக்கு சோறு கொடுத்த சூழல். அந்த விளை நிலங்களுக்கு விவசாயம் செய்ய கடன் கடுக்கும் ஒரு தமிழீழ வங்கி. சிங்கள ராணுவத்தை தாண்டி, "தாண்டிக்குளம்" எல்லையில், ஒரு "கடவு சீட்டு" பெரும் அலுவலகம்.அங்கே துவக்கு ஏந்திய இளம்புலிப்படை. கிளிநொச்சிக்கும், முல்லை தீவிற்கும், யாழிலிருந்தும் மற்ற  மாவ்ட்டங்களிளிருந்தும், கிளம்பி சென்று தமிழீழ மாநாகர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்காளன ஆண்,பெண் "வாத்திகள்". அவர்களை வழிநடத்த ஒரு தமிழீழ கல்வித்துறை. சாலைகளை பராமரித்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒழுங்கை சீர் செய்யவும், ஒரு தமிழீழ காவல்துறை. இப்படி ஒவ்வொரு துறையையும் கட்டி ஆண்ட ஒரு தமிழீழ அரசாங்கம். அப்படிப்பட்ட அரசாங்கத்தை "அழித்து விட்டு" இப்போது, எப்படியடா தமிழீழம் பேசத் துணிந்தாய்? இதுவல்லவோ தமிழனின் கேள்வி.


                         உலகமே அதிசயிக்கும் வண்ணம் தமிழீழ அரசாங்கத்தை கட்டிக் காத்த எங்கள்  த்மிழீழ தேசியத் தலைவரை அங்கீகரிக்காமல் எந்த "வாயால்" நீ தமிழீழ அரசாங்கம் பற்றி பேசுகிறாய்? என்று தமிழன் கேட்க மாட்டானா? ஆகவே அந்த கலைஞர் இன்று தமிழீழம் பற்றிய தீர்மானம் கொண்டுவராமல் இருக்கும் முடிவு, பயந்து அல்ல, நம்மை பயமுறுத்தவே என்கிறார் அந்த உடன்பிறப்பு. அதனால்தான் அவர் மிரள வில்லை, நம்மை மிரட்டப் பார்க்கிறார் என்று விவரிக்கிறார். சிதம்பரமும், கருணாநிதியும் இணைந்து அரைமணிநேரம் கலந்து பேசி, அதன்பிறகு, மறுநாள் "தமிழீசம் தீர்மானம் வராது"என்று ஊடகவியலாளர்களை அழைத்து நிதானமாக ஒரு தலைவன் சொல்கிறான் என்றால் அது இருவரும் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது நடத்தும், "உளவியல் போர்" இல்லையா? என்பதே அவரது வாதம். . கலைஞரே டில்லியின் "புலிக்கு தடை" என்ற சட்டத்தை கண்டு மிரண்டுவிட்டார், அகவே உடன்பிறப்பே, நீயும் மிரண்டு விடு, என்றும், ஆகவே வைகோவிற்கும், சீமானுக்கும், எந்த நேரமுமந்த சட்டத்தின் கொடுவாள் பாயலாம் என்பதால், தமிழர்களே நீங்களும் இப்போதே பயந்து விடுங்கள் என்று உரைப்பதை புரிந்துகொள்ள வில்லையடா? என்று அந்த நண்பர் கேட்கிறார்.

                ஆகா.எதனை பெரிய விளக்கம். அந்த எம்மாற்றி வரும் தலைவனை சரியாக புரிந்து கொண்ட விளக்கம். இதுபோலத்தானே இதே தலைவர், எம்ஜி.ஆர். ஆட்சி காலத்தில், மதுரையில் ரேஸ் கோர்ஸில் நடத்திய டெசோ மாநட்டில், வாஜ்பாய், ஏன்.டி.ஆர். முன்னிலையில், முழக்கம் போட்டு காவலர்களுக்கு எதிராக கொந்தளித்த தந்து கட்சி தொண்டர்களை பார்த்து, மைக்கை பிடித்துகொண்டு, "உங்களை காவல்துறையிடம் சொல்லி அடிக்க சொல்லுவேன்" என்று பகிரங்கமாக மிரட்டினார். இப்போதும் டெசோ மான்மாடு என்று வந்தவுடன் அந்த "புத்தி" அதாவது உளவுத்துறை, காவல்துறை சார்ந்த புத்தி மீண்டும் வந்து விட்டதால், தமிழீழ தீர்மானத்தை திரும்ப பெறுவதாக பயம் காட்டி தொண்டர்களை மிரட்டுகிறாரே? அப்படி தமிழர்களை மிரட்டினால் யாரும் இங்கே"தமிழீழம்"பற்றி பேச மாட்டர்கலேன்ரும், அதனால் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்  நேரத்தில்,:ஈழம்" ஒரு விவாதப்பொருளாக ஆக்கப்படாமல் இருக்குமெனவும் அந்த இரண்டு "மேதைகளும்" எண்ணித்தான் இப்படி ஒரு கரடியை அவிழ்த்துவிட்டுள்ளார்.  

Tuesday, July 24, 2012

யாருக்காக டெசோ மாநாடு?


    திமுக தலைவர் கருணாநிதி திடீரென டெசோ மாநாடு என்று அறிவித்து யாருக்காக? சட்டமன்ற போது தேர்தலில் தன்னை விட்டு எதிர்ப்புறம் சென்ற "வாக்குகளை" திரும்ப தன்னுடைய காங்கிரஸ் கூட்டணிக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலாவது கொண்டு வருவதற்கு என்பதாக பொதுவாக பர்ர்க்கிரார்கள். அதிலும் உண்மை இருக்கிறது. ஏன் என்றால் சென்ற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற நெடுமாறன் தலைமையிலான வைகோ முழங்கி வந்த இயக்கம் தங்கள் கூட்டணிக்கு "பாதிப்பை" ஏற்படுத்தும் என்று உணர்ந்த தலைவர் கருணாநிதி மருத்துவமனியில் இருந்தபடியே ஒரு யோசனை செய்தார். அதுதான் தன் தலைமையில் ஒரு இலங்கை தமிழர் பாதுகாப்பு அமைப்பு என்று கூறி, காங்கிரஸ் கட்சியையும் அதில் சேர்த்து  கொண்டார். அப்போது மருத்துவமையிலேயே சுப.வீரபாண்டியன் காங்கிரசை சேர்த்து அப்படி ஒயரு அமைப்பு உருவாக்குவதால் தான் கலந்துகொள்ள முடியாது என்று விலகி நின்றார். அந்த அமைப்பிற்காக மாவட்டம் தொரும்திமுக திரட்டிய கூட்டத்தை அன்று கலைஞர் டி.வி.யும், சன் டி.வி.யும் மக்கள் மத்தியில்கொண்டு சென்றனர்.மானாட மயிலாட, மற்றும் தொடர் நாடகங்கள் காணும் மக்களும் அந்த செய்திகளை தவறாமல் கண்டனர். 

                   அதனாலேயே செல்வி.ஜெயலலிதா தனது பரப்புரையில்னங்கள் ஆதரிக்கும் ஆட்சி மத்தியில் வந்தால், "தமிழீழம்" மலர பாடுபடுவோம் என்று கூறியதை கூட முழுமையாக ஏற்று மக்கள் கனகிராஸ் கூட்டணியை எதிர்த்து நிற்கவில்லை. மாறாக திமுக, அதிமுக இரண்டுமே ஈழத்தமிழர் பிரச்சனையில் அக்கறை கொண்டவர்கலேன்ர புரிதலை தமிழ்நாட்டு வாக்களர் பெருமக்கள் நம்பினார்கள். அதன்விளைவே "ஈழம்"தமிழ் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஒரு நிபந்தனையாக அப்போது ஆகவில்லை. அதனால் திமுக உடன் சேர்ந்த கணக்ராஸ் சரியாக வெற்றி பெறவில்லை என்றாலும்,  அவர்கள் கூட்டணி பல இடங்களில் வென்றது. அந்த நிலை தமிழ் வாக்காளர்கள் மத்தியில் சட்டமன்ற போது தேர்தலில் இல்லை. ஏன் என்றால் உலகம் முழுவதும் அந்த நாடாளுமன்ற  தேர்தலுக்கு பின்னர்தான் ஈழத்தில் நடந்த கொடுமைகள் தீவிரமாக அம்பலமாகின. உலக சமூகம் விழித்து கொண்டது. அதையொட்டி உள்ளூர் தமிழ் வாக்காளர்களும் விழித்து கொண்டனர். அதன் விளைவே திமுக-காங்கிரஸ் கூட்டணி மண்ணை கவ்வியது. இப்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வார இருக்கிறது. கலைஞர் ஏதாவது "தந்திரம்" செய்ய வேண்டாமா?

                      அதனால்தான் அவர் டெசோ பேச்சை தொடங்குகிறார் என்பது உண்மைதான். ஆனாலும் அதற்கு மத்திய அரசின் "மறைமுக ஆதரவு" இருக்கிறதா? நிச்சயமாக தமிழ் வாக்குகளை பெறுவதற்கு அப்படி ஒரு "தந்திர முழக்கத்திர்கான ஆதரவு" இருக்கும். ஆனாலும் அதைவிட அந்த டெசோ முழக்கத்தால் "தென்னிலங்கையில்" சிங்களர் மத்தியில் என்ன நிலை என்று ஆய்வு செய்யும்போது, மகிந்தாவிற்கு  இருந்த "சிங்கள எதிர்ப்பை" மாற்றி "தமிழீழ எதிர்ப்பு" என்ற ஒரு முழக்கத்தில் மகிந்தாவின் சிங்கள எதிர்ப்பாளர்கள், தற்போதைக்கு மகிந்தாவை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர் என்ற  செய்தி வருகிறது. அதற்காக தமிழ்நாட்டிலிருந்து நாம் ஈழ ஆதரவு முழக்கத்தை எழுப்பாமளிர்டுக்க முடியுமா? அது எழுப்பப்பட்டே ஆகவேண்டும். ஆனால் நாம் புரிந்து கொள்வதற்காக சிலசெய்திகளை பார்க்க வேண்டி உள்ளது. ஈழ மக்கள் மீது அடக்குமுறைகள் கூடும என்று கூறியோ, சிங்களர் ஒன்றுபட்டுவிடுவர் என்று கூறியோ,   நாம் ஈழ ஆதரவு முழக்கங்களை கைவிட முடியாது. போரில் இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் எதிரிகள் இந்த போர் சூழலை எபப்டிஎல்லாம் கையாள பார்க்கிறார்கள் என்று நாம் டேஹ்ரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் காணும்போது சில செய்திகள் கிடைத்துள்ளன. 

                    லண்டன் செல்ல மகிந்தா சமீபத்தில் புறப்பட்டபோதே, அவருக்கு அங்கே எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என்ற செய்தி உண்டு. ஆனாலும் தென்னிலங்கையில் சமீபத்தில் தனக்கு எதிராக் கிளம்பியுள்ள எதிர்ப்பை, அதிருப்தியை குறைக்க, வேண்டும் என்றே லண்டன் சென்று ஈழத்தமிழர் எதிர்ப்பை உலகம் அறிய த்ஜாவது சிங்கள உலகம் அறிய செய்தார் என்ற ஒரு ஆய்வு இருக்கிறது. அதன்மூலம் தனக்கு உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பை அவரால் மட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. அமெரிக்காவின் வலியுறுத்தலால், பொன்சேகாவை விடுதலை செய்த மகிந்தா அந்த பொன்சேகா மூலம் தனக்கு எதிராக கிளம்பும் சக்திகள் ஒன்று சேரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் என்கிறது அந்த ஆய்வு. அந்த நேரத்தில் கொழும்பை டில்லி மூலம் இதுவரை கையாண்டுவாத அமெரிக்கா, டில்லியை கைகழுவி விட்டு நேரடியாக கொழும்பை கையாள தொடங்கி விட்டது என்பதை உறுதி செய்த செயல்தான், ஹிலாரி வலியுறுத்தலில் மகிந்தா பொன்சேகாவை விடுதலை செய்தது. இந்த சூழல் டில்லிகாரர்களை கோபம் கொள்ள வைத்து மீண்டும் மகிந்தாவிற்கு எதிராக சில காய் நகர்த்தல்களை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போது எழுப்பட்ட டெசொவிற்கு டில்லி உளவு துறையின் ஆசீர்வாதம் இருந்தது என்கிறார்கள். 


               அய்.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலில் மீண்டும் அடுத்த மாதம் வரும் இலங்கை போர்குற்ற விசாரணை கூட்டம் இந்தியாவின் தலைமையில் நடக்க போகிறது. அதயு காரணம் காட்டி   டீல்லிகாரர்கள் சிவசங்கர மேனனை அனுப்பி மீண்டும்  மகிந்தாவிடம் பேரம் பேசினர்.  அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறத்தான் சிற்ற்ஹம்பரம் கருணாநிதியிடம் வந்து மிரட்டி, டெசொவில், தமிழீழ தீர்மானம் இருக்காது என்ற பதிலை பெற்றார் என்கிறது அந்த ஆய்வு. இப்போது டெசோ பேசும் கருணாநிதி ஏன் சிங்களர்களுக்கு பயிற்சி கொடுக்கும் மத்திய இசை தட்டி கேட்காமல், அதற்காக போராட்டம் நடத்தாமல், அய்.சீ.எப். ஆலையிலிருந்து ரயில் வண்டிகள் செல்வதை எதிர்க்காமல், எஸ்.ஆர்.எம். பலகலை கழகம் ஒன்று கொழும்பில் வணிக உறவுடன் தமழக ஊடகத்தார் கொண்ட உறவை எதிர்க்காமல், அங்குள்ள தம்ழிஹ் மக்களது வாழ்வை பாதுகாக்க மாநாடு என்று கூற முடியும்? ஒருபுறம் காங்கிரசின் தமிழின படுகொலையை எதிர்க்காமல், அவர்களுடன் கூட்டணி, இரத்த கறைகொண்ட பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு,இன்னொரு புறம் டெசோ என்றால் யாரை ஏமாற்ற? அதனால் அந்த மாநாடு தமிழர் வாக்குகளை ஏமாற்றி அல்ல மட்டுமல்ல, டில்லிக்கு பகடை காய்களாக மீண்டும் ஈழத்தமிழரை ஆக்குவதற்காக, என்பதையும் தாண்டி, மஹிந்தாவிர்கான சிங்கள எதிர்ப்பையும் நீர் ஊற்றி வடிய வைக்கும் என்பது தெரியவருகிறது. அதனால்தான் வீராங்கனை சுப்புலட்சுமி ஜெகதீசன் கூட டெசொவை புறக்கணித்தாரோ ?     

Thursday, June 21, 2012

பிரணாப் யாருடைய வேட்பாளர்?

பிரணாப் யாருடைய வேட்பாளர்?
  பிரணாப் முகரஜி சோனியா கனதியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் என்றுதான் எல்லோருக்கும் சொல்லப்பட்டது. அப்படியானால் எது சொல்லப்படாதது? பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சர். அதனால் இந்திய அரசியல்வாதிகளிடம் உள்ள கருப்பு பணம், சொத்து குவிப்பு வழக்கு எல்லாவற்றிற்கும் அடிபப்டையில் "தடம்" எடுத்து கொடுக்க வேண்டிய அமைச்சகத்தை "கையில்" வைத்து கொண்டுள்ளார். எபப்டியாவது குடியரசு தலைவராக ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். அவர் துடிக்க காரணமே ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகாவது, இந்திராகாநதிக்கு பதிலாக தனக்கு வரவேண்டிய "பிரதமர்" நாற்காலி கிடைக்கும், என்ற தனது எதிர்பார்ப்பு ஏமாற்றமாக போய்விட்டதே என்ற கவலை அவருக்கு.அதனால் இப்போது கிடைக்கும் வாய்ப்பையாவது பயன்படுத்தி,எப்படியோ குடியரசு தலைவராக ஆகி விடவேண்டும் என்று துடிக்கிறார். ஐயோ பாவம். அது வயதின் கோளாறு. 

                                அதற்காக தனது அமைச்சகத்தை பயன்படுத்துவதுதான் போருக்க முடியவில்லை. நிதி திரட்டுவதில், சொத்து சேர்ப்பதில், ஊழல் செய்வதில் மாட்டிக்கொண்ட அந்த கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்களும், வெளியே இருந்து ஆதரவு தருகின்ற, ஆதரவு தராத தலைவர்களும், காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக அமைந்துள்ள தலைவர்களும், இது போன்ற வழக்குகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் மீது ஏற்கனவே சீ.பி.அய். வழக்குகளை போட்டு சிலரை, சிறையிலும், சிலரை வெளியிலும், சிலரை சிறையில்  தள்ளி பிணையிலும், வைத்திருக்கிறது. அவர்களையும், அவர்களது கட்சியையும் இந்த வழக்குகை கூறியே "பியார்நாபிற்கு" ஆதரவு என்ற நிலையை எடுக்க வைக்கலாம் என்று பிரணாப் சிந்திக்கிறார். 


                    அதன்விளைவே 2007 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் மாட்டிக் கொண்ட  முலாயம் சிங் யாதவ், அவரது மகனும் இன்றைய உத்திர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஆகியோரை மிரட்டியே பிரனாபிற்கு அடஹரவு என்று கூறவைத்து விட்டார்கள். அதேபோல அவர்களின் எதிரியான மாய்வதியும் "தாஜ்மஹால்" ஊழலில் சிக்கி சீ.பி.அய். விசாரணையில் இருக்கிறார். அதை வைத்து அவரது ஆதரவையும் வாங்கி விட்டார். அடுத்து சிறைக்குள் இருக்கும் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி. அவரை வெளியே விடவேண்டுமானால் என்று கூறி மக்கள் செல்வாக்கை சமீபத்திய தேர்த்லின் மூலம் நிரூபித்த ஜகன்மோஹனையும் மிரட்டி, சீ.பி.அய். வழக்கி காட்டி அவரது ஆதரவையும் பிரணாப் பெற்று விட்டார்.  திமுக தலைவர் ":கூனியூருக்கு செல்வதர்காக் இங்கிருந்தே குனிந்து செல்பவர்".அதனால் அவர் இரண்டு ஜி வழக்கை எண்ணியே ஆதரவு பிரனாபிற்கு என்று கூறிவிட்டார். பா.ம.க.நிறுவனரோ, சிறிது அசையாமல் இருந்தார். ஒரு கொலை வழக்கில் அவரது சகோதரரை கைது செய்த சீ.பி.அய்.  அவரது  ரத்த உறவான டாக்டர் தனராஜ் என்ற முன்னாள் எம்.பி. யை கைது செய்த உடனே அவரும் பிரனாபிற்கு ஆதரவு என்று கூறிவிட்டார்.  சிவா சேனா எந்த அவ்ழக்கில் சீ.பி.அய்.இடம் சிக்கி கொண்டதோ தெரியவில்லை. அவர்களும் ஆதரவு பிரானாபிற்கு. . சந்திரபாபு நாயுடு ஏன் இதில் மாட்டினார் என்பது தெரியவில்லை. மம்தாவை எதிர்க்கவும், சீ.பி.அய். எம் இன் ஆதரவை பெறவும், "வங்காளி " என்ற அடையாளத்தை பயன்படுத்த பிரணாப் தயங்கவில்லை. மொத்தத்தில் "ஊழலையும், குற்ற வழக்குகளையும்," பயன்படுத்தியும்,  "இனவெறியை" பயன்படுத்தியும் ஒரு மனிதர் தனது குடியரசு தலைவர் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். கேவலம். வெட்கம்.  

                     பிரனாப் முகர்ஜி சீ.பி.அய்.என்று சொல்லகூடிய "மத்திய புலனாய்வு துறையின் " வேட்பாளர் என்பது வெள்ளிடை மலையாக தெரிந்து விட்டது. அதையும் தாண்டி தமிழர்களுக்கு துரோகம் செய்யும் சிங்கள மூதாதையர் என்ற மனோபாவம் கொண்டவர் எனபதும, அதை வைத்தே "ஈழத்தமிழர் படுகொலையில்" சம்பந்தப்பட்டவர் என்பதும், அவருக்கு "கலைஞர் கொடுக்கும்" ஆதரவிற்கான கூடுதலான காரணம் எனபதும் புரிந்து விட்டது. கையில் ரத்த கரையுடன் அந்த மனிதர் வருகிறார். தமிழர்களே, எச்சரிக்கை. 

Tuesday, June 19, 2012

மியான்மரிலும் முஸ்லிம்களை தாக்கும் பவுத்தர்கள்?



        இன்று சென்னை பெசன்ட் நகரில், கடற்கரையில் பெரிய ளவில் காவலர்கள் நிற்க, திடீரென முஸ்லிம்கள் ஆங்கும், பெண்களுமாக நூற்றுக் கணக்கில் திரண்டு வந்துவிட்டார்கள். கடற்கரைக்கு காற்று வாங்க வந்த முதியவர்களும், பெண்களும், காதல் ஜோடிகளும் ஆச்சர்யமாக பார்க்க, ஒரு காவல் வலையய்த்திற்க்குள் அந்த முஸ்லிம் பெருமக்கள் கடற்கரையில் ஐந்து மணி சுமாருக்கு நீண்ட வரிசையில் நின்று "தொழுகை" நடத்திவிட்டு, ஒரு சிறிய பேரணி போல சாலையை கடந்து, உழைக்கம் இட்டுக் கொண்டே, காவலர்கள் வைத்திருந்த வளையத்திற்குள் வந்தார்கள். அது என்னமோ சத்தியத்திற்கு கட்டுப்பட்டது போல அவர்கள்  செயல்பட்டார்கள்.   அவர்கள் உயர்த்தி பிடித்த வண்ண பதாகையில் "நேற்று இலங்கை, இன்று மியான்மர் [பர்மா]" என்று எழுதி இருந்தது. பல வண்ண படங்களும் அதில் அச்சிடப்பட்டிருந்தன. அந்த படங்கள் முஸ்லிம் மக்களை மியன்மாரில் புத்த பிக்குகள் அடிப்பதும். உதைப்பது காட்சிகளாக இருந்தது.

      மியன்மாரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய புத்த பிக்குகளை கண்டித்து, அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை "இந்திய தௌஹித் ஜமாஅத்" நடத்தினர். அவர்களது தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர் பெயர் அதில் போட்டிருந்தது. அவரும் அங்கே வந்திருந்தார். பாக்கரும், இக்பாலும், பிர்தொசும், சிலரும் அங்கே இரண்டாவது தெருவில் இருந்க்கும் "அய்.நா.அகதிகள் அலுவலகம்" சென்று மனு கொடுத்து விட்டு வந்தார்கள். அந்த அய்.நா. அலுஅலகத்தில் தங்கள் டில்லி அலுவலகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள் என்று அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அதன் பிறகும் அவர்கள் முழக்கமிட்டு கொண்டே இருந்தார்கள். இலங்கையில் சிங்கள பவுத்த பிக்குகள் முஸ்லிம்களின் வழிபட்டுதலன்களை இடிக்கிறான். மியான்மரில் புத்த பிக்குகள் முஸ்லிம்களை எட்டுகிறார்கள், கொல்லுகிறார்கள், முஸ்லிம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்  என்று அவர்கள் முழக்கமிட்டார்கள். 

       பவுத்தம் பேசுவது சமாதானம். செயல்படுத்துவதோ வன்முறை. என்று அவர்கள் முழக்கமிட்டார்கள். மியன்மார் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் விரட்டப்பட்டு வன்கால தேசம் நோக்கி ஓடிவருகிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள். மத சுதந்திரத்தை சமாதனம் பேசும் பவுத்தம் ஏன் இலங்கையிலும் மதிக்கவில்லை, மியன்மாரிலும் மதிக்க வில்லை என்று அவர்கள் கேள்வி கேட்டார்கள். இந்திய தௌஹித் ஜமாஅத் முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல, எந்த மதம் பத்திக்கப்பட்டாலும் போராடும் என்று அவர்கள் கூறினார்கள். கடைசியில் காவல்துறை அந்த முஸ்லிம் ஆண்களையும், பெண்களையும் கைது செய்தது. எண்பத்து ஐந்து பெண்கள் உட்பட, இருநூற்று ஐம்பது பேர் கைது ஆனார்கள். ஆனாலும் எட்டு மணிக்கெல்லாம் விடுதலை செய்யப்பட்டார்கள். பவுத்தம் சமாதானத்திற்கே பெயர் பெடர்து ஆயிற்றே? ஏன் இப்படி இன்கையிலும், மியன்மாரிலும் வன்முறையை மாட்டார் மதங்களின் மீது கட்டவிழ்த்து விடுகிறது? என்ற கேள்வியுடன் நாமும் திரும்பினோம்.

Monday, June 18, 2012

மண்டபம் அகதிகள் முகாமில் ஈழப் பெண்களை கொடுமை படுத்தும் கயவர்கள்


மண்டபம் தாயகம் திரும்பியோர் முகாம் இராமேசுவரத்திலிருந்து 21 கிமீ தூரத்தில் கடலோரத்தில் அமைந்திருக்கும் அகதிகள் முகாம் ( பேச்சு வழக்கு )

31.01.2005 வரை இங்கே 52,332 தாயகம் திரும்பியோர் 14,031 குடும்பங்களுடன் 103 முகாம்களில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இன்று அதிகரித்திருக்க கூடும் . 

இம்முகாம்களில் வாழும் மக்களுக்கு மனிதர்கள் என்ற அடிப்படை மரியாதை கூட மறுக்கப்படுகிறது . பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளின் முடியை பிடித்து இழுப்பதும் , நீ விடுதலைப்புலிதானே என திடீரென்று கொடுமைப்படுத்துவதும் சொல்லி மாளாது . HUMAN RIGHTS , HUMANITY என்று கூக்குரலிடும் இச்சமுதாயம் இந்த விடயங்களில் மட்டும் அடக்கி வாசிக்கிறது , ஊடகங்களுடன் .

இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்டபம் அகதிகள் முகாமில் காவல் துறையினரின் பாலியல் வன்முறையால் சில பெண்கள் பாதிக்கபட்டுள்ளதாக செய்தி நண்பர்களிடம் இருந்து வந்துள்ளது. வெளியே சொல்ல முடியாமல் , சொன்னால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆபத்து வரும் என்ற காரணத்தினால் அவர்கள் இதை சொல்ல தயங்குகின்றனர்... அதிலும் முன்னாள் போராளி குடும்பத்தினர் மிகவும் துன்புறுத்தப்படுகின்றனர். 

முகாமில் இருந்து ஒரு சகோதரி கூறியதில் இருந்து....

ஆனந்தபுரத்தில தீபன் அண்ணா, கடாபி அண்ணா, துர்க்கா அக்கா, விதுசா அக்கா ஆக்களோடு 700 போராளிகள் வீரச்சாவடைந்தது தெரியும்தானே?. அந்த ஆனந்தபுரத்தில அண்ணனும்தானே (தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்) சிறீலங்கா இராணுவத்தின்ர பெட்டிக்குள்ள மாட்டினவர்? அப்போது அவரை எப்படியாவது காப்பாத்தவேணும் என்று போராடி வெளிய கொண்டுவந்த ஆக்கள்ல என்ர அவர் முக்கியமான ஆள். கடாபி அண்ணாவோடதான் இருந்தவர். ஆனந்தபுரத்தில படுகாயத்தோட கடாபி அண்ணனைக் கைவிடவேண்டிய துயரமான சூழலிலும் எப்படியோ அண்ணனக் காப்பாத்திட்டோம் என்று சந்தோசப்பட்டவர். கடாபி அண்ணன நினைச்சுத் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டவர்.

முள்ளிவாய்க்கால்ல மே 09ஆம் நாள் அவரைக் கடைசியாப் பார்த்தது. நீங்க சனத்தோட போங்கோ என்று என்க்கும் பிள்ளையள் இருவருக்கும் சொல்லிற்று, நாங்கள் அண்ணன எப்படியாவது காப்பாத்தவேண்டும். இனி என்ன நடக்குமெண்டு சொல்லமுடியாது. பிள்ளையள வடிவாப் பார்த்துக்கொள்ளுங்கோ என்று சொல்லிவிட்டுப்போனவர்தான். அதற்குப் பிறகு பார்க்கவேயில்லை.

மே 18, 2009 நாங்களும் அந்த முள்ளிவாய்க்கால் மண்ணைவிட்டு வெளியேறினோம். அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியாது. மூன்று வருசம் ஆச்சு. ஆமி பிடிச்சு வைச்சிருக்கும், எங்கெங்கையோ சிங்களப் பகுதியில எல்லாம் சிறைகளுக்குள்ள எங்கட ஆக்கள வைச்சிருக்கினமாமே? அங்க எங்கயாவது அவரும் இருப்பார் என்ட நம்பிக்கையோடதான் இதுவரை காத்திருக்கிறன்.

சிலவேளை சண்டையில செத்திருக்கலாம், அல்லது ஆமி பிடிச்சுச் சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் நம்பிக்கைதானே வாழ்க்கை. என்ர அவர் எங்கயாவது உயிரோட இருப்பார் என்டே இதுவரை மனசத் தேத்திக்கிறன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் அவர் நிலைமை என்னவோ என்ட கண்ணீரோடும் காத்திருப்போடும்தான் வாழ்க்கை போகுது. முள்ளிவாய்க்காலால வெளியவந்து மூன்று கிழமையில, அதாவது 2009ஜூன்ல எனக்கு மகள் பிறந்தவர். அப்ப பிறந்த பச்சைப் பிள்ளையோடயும், இந்தப் பிள்ளையள் இருவரோடயும் தடுப்பு முகாமில இருந்து அத்தனை கஸ்டமும்பட்டு போன வருசம் வெளியவந்தேன்.

அதற்குப் பிறகும் வெள்ளைவான்காரர் வந்து என்னை வைச்சிருந்த வீட்டுக்காரருக்கு தொல்லை கொடுத்தார்கள். உன்ர புருசன் எங்க, அவருக்கு என்ன நடந்தது என்டெல்லாம் இனி எங்காவது விசாரிச்சா அல்லது மனித உரிமை அமைப்பு அது இதென்டு திரிஞ்சா உன்னைப் போட்டுடுவம் என்று மிரட்டல், பிள்ளையள்ற நிலைமையை நினைச்சு அழுதழுது நாட்டைவிட்டே வெளியேற முடிவெடுத்து தமிழ்நாட்டுக்கு நானும் பிள்ளையளும் வந்தோம்.

அதுதான் நான் செய்த பெரிய தவறென்று இப்போ நினைக்கிறன். ஊரிலயே பிள்ளையளுக்கும் நஞ்சக்கொடுத்திற்று நானும் செத்துத் தொலைஞ்சிருக்கலாம். போரில செத்ததுகள் கடவுள்கள். கொடுத்து வச்சதுகள். மண்ணுக்கு உரமாப் போயிற்றுதுகள்.

நாங்கள் எல்லாம் தினம்தினம் செத்தபடி இருக்கிறம். இங்க வந்ததும் ஒரு குழு அவுஸ்திரேலியாவுக்குக் கப்பல் போகுது. போறதென்டா முதற்கட்ட கட்டணமா 3 இலட்சம் பணம் தரச்சொன்னாங்கள். இந்த முகாமில நடக்கிற அடி உதைகள், பாலியல் வல்லுறவுகள், எதிர்த்துக் கேட்கிறதுக்கு யார் இருக்கிறார் என்கிற அவதூறுப் பேச்சுக்கள், இதிலெல்லாம் இருந்து தப்பி ஓடிரலாம் என்று இருந்த நகையெல்லாம் வித்து நானும், என்னைப்போல இன்னும் சிலரும் அவங்களுக்கு பணத்தைக் கொடுத்தோம்.

கொஞ்ச நாளுக்குப் பிறகு அவர்களிடம் போய் எப்ப அனுப்புறீங்க? என்று கேட்டா, புலி என்டு சொல்லி உள்ள போட்டுருவம்னு மிரட்டுறாங்கள். சொல்றவங்கள் இந்த ஊர் காரர். அவங்களுக்கு அரசியல் பலம், பின்னணி இருக்கு. எங்களுக்கு ஆரு இருக்கிறது கேட்கிறதுக்கு? யார் சாட்சி? மௌனியா வாய்பொத்திட்டு இனி இதுதான் எங்கட விதி என்டு இந்த முகாமுக்குள்ளயே எல்லாரும் வாழுறம்.

இங்க நிலைமை சொல்லி மாளாது. குடும்பமாக இருக்கிற ஆக்கள் கொஞ்சம் பரவாயில்லை. கஸ்டம் என்டாலும் பல்லக் கடிச்சுக்கொண்டு வாழப் பழகுதுகள். கணவர் இல்லாத பெண்கள், தனியே வந்த இளம்பெண்கள், இளைஞர்கள் படுகிற கஸ்டம் கொடுமையிலும் கொடுமை. படுகாயப்பட்டு வந்த ஆக்கள் அது பொதுமக்களாக இருந்தாலும் சரி, முன்னாள் போராளிகளாக இருந்தாலும், அதில வேறுபாடு இல்லாம எல்லாரும் புலிதான் என்பதுதான் இவங்கட கருத்து.

காயப்பட்ட ஆக்கள் எல்லாரையும் செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி அங்க காயத்தோடயும் வலியோடயும் இருக்கிற அதுகளப்போட்டு செய்யிற சித்திரவதையில அவங்கள் எல்லாம் மனநிலை குழம்பியிருங்கள்.

இப்பிடித்தான் இங்க கொஞ்ச நாளுக்கு முதல் மூன்று பெண் போராளிகள், சரியான சின்னப்பிள்ளைகள் அதுகளக்கொண்டுபோய் எல்லாரும் கும்பல்கும்பலா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அதுகள் மனநிலை குழம்பிப்போய் நடைபிணங்களாயிட்டுதுகள். அதுகளச் சுற்றி என்ன நடக்குதெண்டே அதுகளுக்குத் தெரியாத நிலையில் இங்க கொண்டு வந்து போட்டுட்டுப் போயிற்றாங்கள் பாவியள்! சாப்பாடு வேணும் என்டு கூடக் கேட்காம பரக்கப் பரக்க முழித்தபடி இருக்குங்கள்.

நாங்கள் சிலர் பாவப்பட்டு குளுக்கோஸ் ஏதாவது கொண்டுபோய் இடையிடையே சாப்பிடக் கொடுக்கிறது. அதுகூடப் பயந்துகொண்டேதான் கொடுக்கிறது. அந்தப் பாவங்களுக்கு நாங்கள் உதவி செய்யப்போறதைப் பார்த்தா இங்க இருக்கிற அறுவான்கள் பார்த்தா 'உன்னோடயும் படுக்கிறதாடி?' என்று நாய்பேச்சுப் பேசி அடிப்பாங்கள். நினைக்கிற நேரம் எல்லாம் அந்தப் பிள்ளையளையும், வேறுசில தனியான பெண்களையும் போய் தங்கட விரும்பத்துக்கு ஏத்தமாதிரி நடத்திக்கொள்றது. தலைமயிரைப் பிடிச்சு இழுத்து சும்மா சும்மா அடிக்கிறது. இதெல்லாம் பார்க்க பொறுக்கவே முடியுதில்லை.

என்னை நம்பியிருக்கிற பிள்ளைகளை நினைச்சு நினைச்சு எங்களுக்குள்ளேயே பொருமுறது. உறக்கம் கெட்டு கழிவறைக்குள்ள போய் இருந்து அழுறது. ஒவ்வொரு நாளும் பிள்ளையள் பள்ளிக்கூடம் போற நேரம் வந்து 'என்னடி படுக்க வாறியா...? அல்லது புலி எண்டு சொல்லி உள்ள போடட்டா? உன்னை உள்ள போட்டுட்டா பிள்ளையள் யாரும் கேட்க நாதியற்று நடுரோட்ல நிக்கும் பரவாயில்லையா?' என்று வாய்கூசாமல் கேட்குதுகள். தனிய குழந்தைகளோட இருக்கிற பெண்களுக்கும், ஒற்றை ஆட்களாக இருக்கும் இளையவர்களுக்கும் ஒவ்வொரு நொடியும் இது நரகத்திலும் கேவலம்;. ஆண்போராளிகளும் சில பேர் இப்படித்தான். அதுகளப் போட்டுச்செய்த சித்திரவதையில மனநிலை பிசகி, உடுப்பில்லாம அம்மணமா எதுவும் விளங்காமத் திரியுதுகள்.

எனக்குத் தெரிஞ்சே மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெரியபோராளி... அவருக்குத், தான் ஆரெண்டே தெரியுதில்ல. எனக்கு அவர் மட்டக்களப்பு என்று மட்டும்தான் தெரியும். அவர வன்னியில பார்த்து இருக்கிறன். எந்த ஊர், அவர் யாரு...சொந்தங்கள் எங்க? ஒண்ணும் தெரியாது. யாருக்கும் தெரியுதில்லை. அவர் கீழே காற்சட்டை இல்லாம வானத்தைப் பார்த்து சிரிச்சபடி நிக்கிறார்.

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து கதறி அழத்தான் முடியுது. ஒரு அண்ணா ஒருத்தர் இருக்கிறார், அவருடைய மூன்று சகோதரர்கள் கரும்புலியாப் போயிட்டினம். அம்மா, அப்பா முள்ளிவாய்க்கால்ல செல்லடியில செத்துப் போயிட்டுதுகள். இவர் இங்க தனிய மாட்டிக்கொண்டதுதான் அவர் செய்த பாவம். அவரைக் கொண்டுபோய் நீ புலிதானே...புலிதானே என்டு அடிச்சு, சித்திரவதை செய்து உடம்பு முழுதும் முப்பது இடத்தில காயம். அவருக்கும் மனநிலை குழம்பிப்போயிட்டுது.

எத்தனை கஷ்டங்களையும், உயிர் இழப்புகளையும் தாண்டி இங்க வந்திருப்பம். எதுக்காக? இந்தப் பாழாப்போன உயிருக்காகத்தானே? அந்த உயிரை தமிழ் மண்ணிலேயே இப்படியெல்லாம் வதைக்கிறவங்கள் தமிழர்களா? மனிதர்களா? 8 மணிக்குப் பிறகு முகாமைவிட்டு வெளியே போகமுடியாது. வெளியிலிருந்து முகாமுக்கு யாரும் வந்து பார்க்கக் கூடாது. அப்படியே வருவதாயின் கலெக்டர் அனுமதி வேணும். அப்படி யாரும் அனுமதிபெற்று எம்மைப்பார்க்க வந்து போனால், யார் அவர்? என்ன கொண்டு வந்தவர்? என்ன இருக்கு எண்டு விசாரிச்சு எங்களிடம் இருக்கிற எல்லாத்தையும் பறிச்சுக்கொண்டு போயிருவாங்கள். இந்தப் பயத்தாலேயே ஆராவது சொந்தம், உறவு எண்டு ஆக்கள் வாறதெண்டு சொன்னாலும் வரவேணாம் எண்டு நாங்கள் எல்லாரும் சொல்லியிருவம்.

தலைவர் அண்ணா...எங்களை எப்படியெல்லாம் வளர்த்தவர்? 13 வயசிலயே நாடு, மக்கள், மண் என்டு அவரிட்ட போயிட்டம். அவர் எங்களப் பதினெட்டு வயசுவரைக்கும் படிக்க வைச்சு, கம்ப்யூட்டர், அரசியல் எல்லாம் படிக்க வைச்சு, தாயை விட வடிவா எல்லோ பார்த்தவர். போர், சண்டை, இழப்பு என்டு வலி இருந்ததுதான். மற்றபடி என்ன குறை இருந்தது எங்களுக்கு? அண்ணா என்ன குறை வைச்சவர்?

இன்னைக்கு நாங்க இப்படி இருக்கிற நிலையப் பார்த்தா அவராலேயே தாங்க முடியாது. அண்ணா... வரமாட்டாரா? என்டு தினம் தினம் அழுறம்.

முள்ளிவாய்க்கால்ல செத்ததுகள் எல்லாம் கொடுத்து வச்சதுகள். நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆரு இந்த அநீதியைத் தட்டிக்கேட்கிறது? எங்களுக்கெண்டு யார் இருக்கிறாங்க?' ஏன் இந்தத் தமிழினத்துக்கு இந்த இழி நிலை? சிறீலங்காவிலதான் எதிரியால எங்களுக்கு அந்த நிலையெண்டா இங்க தமிழ்பேசுற தமிழ்நாட்டு ஆக்களாலேயே அதைப்போலக் கொடூரமான நிலையெண்டா நாங்க எங்கதான் போறது...?

இது என்ன தமிழ்நாடு? ஈழத்தமிழனுக்கு யாரும் இல்லையா?. என்ர புருசன் உயிரோட இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. இருக்கவேணும் என்டுதான் நம்பிக்கையோட காத்திருக்கிறன். ஆனால் தலைவர் அண்ணா வந்தா.. உயிர் வந்தமாதிரி. அவர் மட்டுமிருந்தா இந்தப் போராளிகளுக்கு எல்லாம் இந்த நிலை வந்திருக்காது. அந்த ஆளோடயே இருந்து செத்து மண்ணோடு மண்ணாப் போயிருந்தாக் கூட இந்த உயிர் பிறவிப்பயனை அடைஞ்சது எண்டு சந்தோசமா செத்திருக்கலாம். 

இப்படிப்பட்ட கொடூரங்களை தட்டிக் கேட்பார்களா தமிழக தலைவர்கள் ? கருணை காட்டுமா தமிழக அரசு.
படங்கள் : ஜெய்  









தென்னேரி இருளர்களை ஆதிக்க முதலியார் அடிக்கலாம்?



       காஞ்சி மாவட்டம், வாலாஜாபாத் அருகே எட்டாவது கிலோ மீட்டரில், தென்னேரி கிராமம் உள்ளது. அதில் பத்து இருளர் குடும்பங்கள் வீடு கட்டி "நத்தம் புறம்போக்கில்" வாழ்கிறார்கள். நத்தம் புறம்போக்கைத்தான் ,அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்கு மனைக்கான நிலமாக தருவதாக திட்டமிட்டுள்ளது. அந்த நத்தம் புறம்,போக்கில் வாழும் இருளர் மக்களுக்கு, சாதி சான்றிதழ், ரேஷன் அட்டை, மின்சார தொடர்பு ஆகியவற்றை வாட்டட்சியர் செய்து கொடுத்துள்ளார். அடுத்து அந்த மணிகளை "பட்டா" போட்டு தருகிறேன் என்றும் கூறியுள்ளார். 

                         அந்த செய்தியை அதே தென்னேரி கிராமத்தை சேர்ந்த "ஏகாம்பர முதலியாரால்" தாங்கி  கொள்ள முடியவில்லை. அவர் உடனே தனது ஆட்கள் ஐம்பது பேரை அனுப்பி, ஞாயிறு காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணிவரை, அந்த கிராம இருளர்களை வீடு புகுந்து அடிப்பதும், ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் உதைப்பதும், இரண்டு வீடுகளை உடைப்பதும் என "வன்கொடுமைகளை" செய்துள்ளனர். அதுபற்றி புகார் கொடுக்க சென்ற மக்களை மன்றத்தினரிடம், வாலாஜாபாத் காவல் நிலையத்தினர் "புகார் எடுக்க" மறுத்துள்ளார்கள். மக்கள் மன்றத்தினர் அந்த அடிபட்ட பதின்மூன்று இருளர்களையும், மருத்துவமணையில் சேர்த்துள்ளனர். 

                        ஆதிக்க சாதியின் இந்த வான் கொடுமையை, பழ்ஜன்குடி இருளர் மீது காட்டுவதும், அதை புகார் எடுக்க மறுப்பதும், பழ்ஜன்குடி பிரதிநிதியை குடியரசு தலைவருக்கே நிறுத்தும் ஒரு முதல்வர் ஆளும் மண்ணில் "அதிகாரிகளால்" தைரியமாக செய்யமுடிகிறது.