Tuesday, March 29, 2011

மதிமுக தொண்டர் குரல் வைகோவிற்கு கேட்குமா?

வைகோ ஜெயலலிதா மீது உள்ள கோபத்தால் அதிமுகவை தோற்கடிக்க கங்கணம் கட்டுவதாக செய்திகள் வரும்போது, அதற்கு ஏற்றார்போல அவரது மனச்சாட்சி என்று அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத்தும் தினமலர், ஜூனியர் விகடன் என மறைமுகமாக இதே கருத்தை நேர்கானல்களாக கொடுத்துவருவதும் மதிமுக தொண்டர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இதே விஷயத்தை வேறு கோணத்தில் காண்கிறார்கள்.

அதிமுக ஆட்சி வந்தால் அவர்களது குறி முழுவதும் திமுகவை அழிப்பதிலேயே இருக்கும். அப்பது அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசுபவர் வைகோவாக மட்டுமே இருப்பார். ஆனால் திமுக ஆட்சி வந்துவிட்டால் அவர்கள் உடனடியாக மதிமுக கட்சியின் தொண்டர்களையும் தலைவர்களையும் இழுத்துப்போடும் வேலையையே பார்ப்பார்கள். அதனால் மதிமுக அழியும். ஆகவே திமுக வை ஆடஹ்ரிப்பது எந்த வகையிலும் மதிமுகவிற்கு சாதகமான ஒன்று அல்ல. இவ்வாறு அவர்கள் கருதுகிறார்கள். வைகோ காதுகளுக்கு இந்த செய்தி செல்லுமா?

திமுக தொண்டரின் மனச்சாட்சி.

சென்னையில் தென்சென்னை தொடர்ந்து திமுக தோற்கும் இடமாக மாறிவருவது திமுக தொண்டர்கள் மத்தியல் கவலை அளித்துவருகிறது. ஏற்கனவே தென் சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதி, அவ்வப்போது அதிமுக வசம் சென்று விடுவதில் அவர்கள் கோபத்தில் உள்ளனர். தென் சென்னையின் நாடாளுமன்ற தொகுதியும் அதிமுக வசம் சென்றுவிட்டதே என்ற கவலையும் அவர்களுக்கு உண்டு. மயிலாப்பூர் தொகுதியில் இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைவர் கொடுத்துவீட்டரே என்று அவர்கள் வ்ருந்தி வருகிறார்கள். ஏற்கனவே மயிலாப்பூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி உறப்பினர்களின் தொகுதிகளில், பதின்மூன்றில் ஐந்தை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்ததற்கே மனச் சங்கடத்தில் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இப்போது ஆயிரம் கலாட்ட செய்து அதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு தானே கடைசியில் வேட்பாளராக நின்றது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது சொனியாஅவையே ஏமாற்றிய தங்கபாலு தந்திரம் என்றுதான் திமுக தொண்டர்கள் எண்ணுகிறார்கள். அதேசமயம் தங்கள் கட்சியான திமுகவை மீண்டும் எப்படி இந்த தொகுதியில் வலுப்படுத்துவது என்று சிந்திக்கிறார்கள். காங்கிரஸ் இந்த முறை வெற்றி பெற்றால் மயிலை தொகுதி நிரந்தரமாக காங்கிரஸ் தொகுதியாக போய்விடும் என்று அச்சப்படுகிறார்கள்.

திமுகவில் தான்தான் வேட்பாளராக அடுத்தமுறை வரவேண்டும் என்று எண்ணுபவர்களும், தான்தான் அடுத்தமுறை வேடப்பலராக ஆவோம் என்று எண்ணுபவர்களும் நிறைய இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருமே தொகுதியை நிரந்தரமாக காங்கிரஸ் கையில் கொடுத்துவிட தயாராயில்லை. அதற்காகவே காங்கிரஸ் கட்சி இந்த முறை தோற்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இது ஒரு திமுக தொண்டர் கூறிய மனச்சாட்சி வாக்குமூலம்.

வைகோவின் தேர்தல் புறக்கணிப்புக்கு அர்த்தம் என்ன?

வைகோ தான் அங்கம் வகித்த அதிமுக கூட்டணியில் சரியான பங்கு கொடுககவில்லை என்ற மனக்குறைக்கு பிறகு வெளியேறினார் எனபதும், அதையொட்டி தேர்தல் புறக்கணிப்பு என்று அவர் அறிவித்ததாக ஊடகங்களில் வந்ததும் நமக்கு தெரியும்.. ஆனால் அவர் அவரது கட்சியின் தீர்மானத்தில், மதிமுக தேர்தலில் இந்தமுறை போட்டியிடப்போவதில்லை என்றுதான் தெரிவித்திருந்தார்.அப்போதும் பலர் வருத்தப்பட்டது என்னவென்றால், மதிமுக தனித்து போட்டியிட்டிருக்கலாமே என்பதுதான். அதற்கும் வைகோ பதில் கூறியிருந்தார். அதாவது அப்படி தனித்து போட்டியிட்டிருந்தால், திமுக--காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து எதிர்க்கட்சி கூட்டணியின் வாக்குகளை பிளவு படுத்துவதற்க்காக நிற்பதாக அபாண்டமாக பழி சுமத்தி விடுவார்கள் என்று அறிவித்தார்.

வைகோவின் அந்த வாக்குவாதம் நமக்கும் ஏற்புடையதாக இருந்தது. இப்போது புதிய செய்தி மக்களை குழப்ப வந்திருக்கிறது. வைகோ தனது கட்சிக்காரர்களிடம் வேறுவிதமான வழிகாட்டலை கொடுப்பதாகவும், அது அதிமுக கூட்டணியின் அல்லது அதிமுக கட்ச்சியின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதர்க்காக திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதற்காக அதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் தொகுதிகளில் கூட அதிமுகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறும் அவர் வழிகாட்டல் கொடுக்கிறார் என்பதே அந்த அதிர்ச்சி செய்தி.இதி நம்பகமாக இல்லை எனபதுதான் நமக்கு வைகோ மீது உள்ள பற்று காட்டுகிறது.

ஆனால் வருகின்ற செய்தி என்னவென்றால், கோவை பகுதியில் வைகோ கொடுத்த வழிகாட்டல்படி, அதிமுகவை தோற்கடிக்க திமுக வேட்பாளரான கண்ணப்பனை ஆதரிக்க சொல்லியிருக்கிறார் என்றும், அதை அங்குள்ள மதிமுக கட்சிக்காரர்கள் எதிர்கிறார்கள் என்றும் கூறுகிறர்கள். அதாவது கண்ணப்பன் மதிமுக கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு திமுக சென்றவர் என்றும் அவரை எப்படி ஆதரிக்க முடியும் என்றும் கேட்கிறார்களாம். அப்படியானால் காங்கிரஸ் கட்சி துரோகம் செய்ததால், தமிழர்கள் அதை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியது என்னாயிற்று? பார்வதியம்மாளின் சாம்பலை கரைக்க முன்னிற்கும் வைகோ எப்படி அந்தம்மாளின் சிகிச்சைக்கு கூட வழிகொடுக்காத திமுக, காங்கிரஸ் கட்சிகளை ஆதரித்து அதேநேரம் செயல்படுத்த உத்தரவிடமுடியும்? அப்படி வைகோ செய்திருப்பார் என்று நாம் நம்ப வில்லை.


தமிழீழ தேசியத்தாய் பார்வ்தி அம்மாளின் சாம்பலை சென்னையில் மட்டுமின்றி, குமரியிலும், கரைக்க முற்படும் வைகோ எப்படி அந்த சாம்பலுக்கு துரோகம் செய்த கருணாநிதியையும், சோனியாவையும் ஆடஹ்ரிக்க முடியும்? நடக்கவே நடக்காது என்பதே நமது வாதம். வைகோவிற்கு இப்போது ஜெயலலிதாதான் முதல் எதிராக டேஹ்ரிகிறார் என்றும், ஆகவே இது நடந்திருக்கும் என்றும் கூறுவோரிடம் நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்த காங்கிரஸ் தலைமையை எப்படி வைகோ ஆதரிக்க சொல்லமுடியும்? இன ழிப்பு போரை நடத்தியது இந்திய அரசுதான் என்று அறிவித்த வைகோ எப்படி அதை மாற்றி எழுத தனது அணிகளுக்கே கூறமுடியும்? அதிமுகவிற்கு நாம் யார் என்று காட்டவேண்டும் என்றால், அதற்கு அவர்களை பல இடங்களிலும் தோற்கடித்து காட்டுவதே சிறந்த வழி என்றி அவர் கூறியதாக கூறுகிறார்கள். அப்படி கூறியிருந்தால் அதை எப்படி மதிமுக தொண்டர்கள் ஏற்பார்கள்?

வைகோ தான் பார்வதியம்மாள் சாம்பலை எடுத்க்துக்கொண்டு அமெரிக்கா செல்வதாக அந்த தகவல்கள் கூறும்போது அவர் எப்படி தேர்தலில் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பார் என்பதே நமது கேள்வி.இது திமுக தலைவரின் கெட்டிக்காரத்தனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிழையான முத்திரை குத்த்டுதலா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த சந்தேகங்கள் தீர தமிழின அழிப்புக்கு துணை நின்ற காங்கிரஸ்-திமுக கூட்டணியை தோற்கடிக்க கூறி வைகோ அறிவிக்கவேண்டும் என்று கூறுவோரும் உண்டு. அதைத்தான் சீமான் உறுதிபட கூறுகிறாரே? அப்படிப்பட்ட கொள்கையில் ஊறி எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வைகோவும் தொண்டர்கள், மதிமுக கட்சிக்காரர்கள் உடனடியாக சீமானின் கட்சிக்குதாவிவிட மாட்டார்களா?

Monday, March 28, 2011

எதிர் வேட்ப்பாளரை தேர்வு செய்த கருணாநிதி.

திருவாரூரை கருணாநிதி தேர்வு செய்து நிற்பது ஒரு விபத்தா? அல்லது முன்பே திட்டமிட்ட ஒரு செயலா? முன்பே திட்டமிட்டு எதிர் வேட்பாளரையும் தயார் செய்தார் கருணாநிதி என்று உண்மைகள் கூறுகின்றன. அதிமுக வேட்பாளராக குடவாசல் ராஜேந்திரன் நிற்க வைக்கப்பட்டவுடன் அதிமுகவில் பல தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால் ராஜேந்திரன் தனது அடாவடியை அங்கே உள்ள தலித் மக்களிடமும், மற்ற சமூகங்களிடமும் தொடர்ந்து காட்டியவர் முதல்வர் என்பதற்காக மக்கள் வாக்கு அழித்துவிடுவார்கள் என்று கலிஞர் நினைக்கவில்லை. சிபிஎம் கட்சி செல்வாக்கு தன்னை பாதிக்கலாம் என்றும் வருக்கு தெரியும்.

அதனால் எதிர் வேட்பாளரை அதிமுகவிலிருந்து நிறுத்தும் பொது தனக்கு அதில் தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று விரும்பினார். ஓராண்டு முன்பே அதற்காக நிழல் மனிதரை கலாட்சேத்ரா காலனியில் சிறப்பு உளவு துறை மூலம் நேருக்க தொடங்கினார். அவர்களது மிடாஸ் நிறுவனத்திற்கு கட்சி வேறுபாடு பார்க்காமல் சாராய வர்த்தகத்திற்கு வழிச்ய்த்து கொடுத்ததை எடுத்து சொல்லசெய்தார். அந்த நேரம் குடவாசல் ராஜேந்திரன் திமுகவில் சேர அறிவாலயம் வரை வந்துவிட்டார். அவர் தங்கள் கட்சிக்குள் வந்தால் ஏற்கனவே தங்கள் ஆட்சியில் கோளை வழக்கு போடப்பட்டவர் என்பதால் அவப்பெயர் தனக்கு வரும் என்று கூறி கூட்டி வந்த திமுக தலைவர் பூண்டி கலைசெல்வனிடம் மறுத்துவிட்டார். அந்த இருவரும் சொந்தங்கள் என்பதை நாடறியும்.

குடவாசல் ராஜேந்திரன் தலித் மக்களால் மட்டுமல்ல, மற்ற கொலை போன்ற வன்முறை வழக்குகளை கொண்டவர் என்பதால் அவரே தன்னை எதிர்த்து தோல்வி அடைய சரியானவர் என்று கருணாநிதி கணித்தார். . ஒரு பார்ப்பன பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் என்ற பெயரும் இருப்பதை கருணாநிதி அறிந்தே இருந்தார். இத்தகைய ஒருவர் தன்னை எதிர்த்தால் தான் எளிதாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் எனவும் கணித்தார். எதிர் தரப்பில் தனது ஆட்கள் மூலம் முதல் வேட்பாளர் பட்டியலை அம்மாவிற்கு தெரியாமல் வெளியிட்ட பாணியிலேயே இதையும் செய்தார். இப்போற்ற்ஹு தைறியமாக இருக்கிறார். ஐந்து ஆண்டுகளாக எந்த அரசியலிலும் ஈடுபடாத ராஜேந்திரன் கடைசியாக அறிவிக்கப்பட்டார். நல்ல முறையில் அவரை கவனிக்கவும் கருணாநிதி பூண்டி கலைச்செல்வனிடம் கூறியுள்

சோனியாவை ஏமாற்றிய தங்கபாலு.

சோனியாவை தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்ப்பாலர்களை தேர்ந்தெடுப்பவர் என்று வெளியே சொல்லிவிட்டு, சோனியாவிற்கும், ராகுலுக்கும் புரியாத ஒரு புதிய தந்திரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இப்போது அரங்கேற்றிவிட்டார். அதாவது காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பில் தனது பெயரை வேட்பாளராக அறிவிக்காமல், தனதுமனைவிஜெயந்திபெயரைஅறிவிக்கச்செய்துவிட்டு,அதற்கு எதிரப்பு வந்தும்கூட கண்டுகொள்ளாமல் கடந்த சனிக்கிழமை அன்று காலையிலிருந்து மாலைவரை விசிக,காங்கிரஸ்,திமுக,பாமக, என்று ஒவ்வொரு கட்சியின் மயிலை கிளை பொறுப்பாளர்களையும் அழைத்து சித்திரக்குளம் அருகே கல்யாணமண்டபத்தில் வைத்து, ஒவ்வொரு கட்சியின் ஒவ்வொரு பகுதி அமைப்பிற்கும் பத்தாயிரம் ரூபாயை அளித்து, மொத்தம் 150 அமைப்புகளுக்கு ஒன்றரை கோடி ரூபாயை விநியோகம் செய்தார்.

மனைவி ஜெயந்திக்காக இவ்வளவு தூரம் செய்பவரா பரவாயில்லையே என்று காங்கிரஸ் பெண்கள் மகிழ்ந்திருக்கும் வேளையில் இப்போதுதான் அதன் உண்மை முகம் வெளிவந்ததுள்ளது. இத்தனை திட்டங்களும் தங்கபாலு முன்கூட்டியே போட்டுவைத்திருந்ததுதான் என்று காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார்கள். அதையொட்டி உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடுமையான ஒரு குறிப்பை காங்கிரஸ் தலைமைக்கு இன்று காலை அனுப்பியுள்ளார்.இவ்வாறு சோனியாவையும், ராகுலையும் ஏமாற்ற தங்கபாலு யார் தைரியத்தில் செய்கிறார் என்ற கேள்விக்கு எந்த குழந்தையும் கலைஞர் தைரியத்தில்தான் என்று கூறிவிடும்.இனியும் தொடராது காங்கிரஸ் உறவு என்று எண்ணிய கலைஞர் தங்கபாலுவை தனது கைக்குள் வைத்துக்கொண்டுள்ளார். ஐந்து கல்லூரிகளை ஆளும் தங்கபாலு, அதுதவிர ஒரு காட்சி ஊடகத்தை நடத்தும் தங்கபாலு,அதற்கே உரித்தான ஆள் பலம், பண பலம், தந்திரம் இல்லாமல் இருப்பாரா? ஞாயிறு இரவு தான் வாழும் கஸ்தூரிபாய் நகரில் மின்வெட்டு ஏற்பாடு செய்துவிட்டு, அந்நேரம் பணத்தை கட்டு, கட்டாக தனது வீட்டிலிருந்து வெளிஎடிர்நார் என்பது தனது தேர்தல் வேளைக்கு அவர் செய்த தயாரிப்புதானே?

காங்கிரஸ் தலைமையை தனது வேட்பாளர் தேர்வில் மட்டும்தான ஏமாற்றினாரா தங்கபாலு? கிரிஷ்ணகிரி வேட்பாளர் டேஹ்ர்விலும் இதே[போல தலைமையை ஏமாற்றினார். கிரிஷ்ணகிரிக்கு தனது காட்சி ஊடகத்தில் அழகியல் கலை கற்றுத்தரும் ஹசீனசய்யதை காங்கிரஸ் வேட்பாளராக கொண்டுவந்தார் தங்கபாலு. பெண் முஸ்லிமுக்கு முஸ்லிம்கள் வாக்கு கிடைக்காது என்று எதிர்தரப்பு காங்கிரசார் புருடா விட, உடனே அதுபற்றி கெட்ட காங்கிரஸ் தலைமைக்கு தானே ஒரு ஆண் முஸ்லிம் வேட்பாளரை தருகிறேன் என்று திருவல்லிகேநியிளிருந்து மக்பூல் ஜான் என்பவரை போடவைத்தார். தங்கபாலுவின் மிரட்டலில் பயந்த மக்பூல் ஜான் கிரிஷ்ணகிரிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவே செல்லவில்லை. தாமதமாக தனக்கு உத்தரவு கிடைத்ததால் தயார் செய்து குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லமுடியவில்லை என்று கூறிவிட்டார். ஹசீனாவிடம் தங்கபாலு ஐம்பது லட்சம் வாங்கி, அதில் பத்து லட்சத்தை மபூளுக்கு கொடுத்து எம்மற்றிவிட்டார் என்று காங்கிரஸ் பெண் கவுன்சிலர் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளார்.

இது ஒரு புதிய முறையில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரை மாற்றும் தந்திரம். மயிலாப்பூரில் நடந்தது இன்னொரு புதிய தந்திரம். இவையெல்லாமே இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உள்ள தேர்தல் முறைகளில் உள்ள ஓட்டைகளை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல காய் நகர்த்தும் தந்திரம்.தனக்கு பின்னால் கட்சியில் பெருத்த செல்வாக்கு இல்லாத தங்கபாலு இதுபோன்ற தந்திரங்களை கையாண்டுதான் பெரிய கோஷ்டிகளான சிதம்பரம்,வாசன் கோஷ்டிகளை தோற்கடிக்கமுடியும் என்பது அவர்களது வாதம்.


இதுபோன்ற தந்திரங்களை தங்கபாலுவிற்கு கற்றுக்கொடுத்தது திமுக தலைமை. ஏன் என்றால் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி ஒரு தந்திரம் செய்துள்ளார். தனது வேட்புமனு நிராகரிக்கப்படுமோ என்ற பயத்தில் மாற்று வேட்பாளராக கட்சியின் இன்னொரு நபர் வந்துவிடக்கூடாதே என்பதற்காக தனது மனைவியையே மாற்று வேட்பாளராக போட்டுவிட்டார். திமுக காரர்கள் தன்காளுக்குள் புழுங்கிகொண்டார்கள். ஏன் என்றால் அது கட்சி தொண்டர்களுக்கே எத்ரிராக, கட்சி வழக்குக்கே எதிரப்பாக,நடத்தப்பட்ட செயல். ஆனால் தலைவர் கலைஞரிடம் கேட்டுக்கொண்டு செய்த செயல் என்று பொன்முடி தரப்பு கூறுகிறது. அதே தந்திரத்தை தனது கைத்தடியாக இருந்துவரும் தங்கபாலுவிற்கும் கலைஞர் சொல்லிக்கொடுத்துள்ளார் என்பதுதான் கவனிக்கத்தக்கது.

கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கில் உள்ள சிபியை மூலம் ராஜாவை கைது செய்து சிறையில் தள்ளி, தாயாளு, கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தயார் செய்ய ஏற்பாடு செய்யும்போது, திருச்சி சிவாவை பொது கணக்கு குழு தேர்தலில் தோற்கடிக்க செய்யும்போது, ஏன் சோனியா அறிவித்த வேட்ப்பாலர்களை தங்கபாலு மூலம் திமுக தலைமை தந்திரங்களை சொல்லிக்கொடுத்து மாற்றக்கூடாது என்பதே அந்த
கோஷ்டியின் கேள்வி. இவாறு தமிழ்நாட்டு டேஹ்ர்தலில் ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு எத்ரிராக காய் நகர்த்தல் வேலையை செய்துவருகிறார்கள்.

Sunday, March 27, 2011

புலிகள் பெயரில் அடுத்த கப்சா தயாரித்தவர் ஜாபரா?

இப்போது வெளிவந்துள்ள அந்த தமிழ்நாட்டு வார இருமுறை ஏட்டில், கடைசி பக்கத்தில் வந்துள்ள செய்தி மீண்டும் புலிகள் தமிழீழ பகுதிகளில் நடமாடுவதாகவும், தாக்குதல் நடத்தியதாகவும் கூறுகிறது. இதே ஏட்டில் இதே போல "ராமு"கதை வெளிவந்ததை நமக்கு நினைவுபடுத்துகிறது. அதை வெளிக்கொண்டு வருவதில் யாருடைய பெயரில் கட்டுரை வெளிவந்ததோ அதே பெயரில் தான் இப்போதும் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது. அந்த கட்டுரையாளர் எப்போதுமே தன்னை புலிகளின் எதிரி என்றும், அதையும் தாண்டி தமிழர்களின் எதிரி என்றும் வெளிப்படையாக அறிவித்துக்கொள்பவர்.

இந்த செய்தியில் புலிகள் காட்டில் இருந்து வந்து ஹபரணையில் சிங்கள ராணுவ பெரிய அதிகாரியை தாக்கி கொன்றதாக கதை எழுதப்பட்டுள்ளது. அந்த ஹபரணை என்பது அனுராதபுரம் தொடங்கி திருமலை செல்லும் வழியில்,திருக்கொண்டையாமேடு வீதிக்கும், குருநகல் தொடங்கி திருமலை பெருந்தெரு செல்லும் வழியில் இருக்கிறது.அங்கே முகாமிட்டிருந்த சிங்கள ராணுவ அதிகாரிகள் வெள்ளை கொடியோடு வந்த நடேசன் மற்றும் தோழர்களை கொன்றவர்கள் என்றும் இது ஒரு பழிவாங்கும் படலம் என்பதாகவும் எழுதியுள்ளனர. அதுமட்டுமின்றி அந்த படுகொலைகளை பொன்சேகா செய்யவில்லை என்றும், கொத்தப்பாய் தான் செய்தார் என்றும் இடைசெருகல் அந்த செய்தியில் உள்ளது. அதாவது பொன்சேகாவை காப்பாற்ற எடுக்கும் முயற்சி போலவும் தெரிகிறது.


இப்போது போன்செகவிர்க்காக வர்ந்துகட்டுபவர்கள் இந்திய அரசின் வெளிவிவகார துறையான"ரா"அமைப்பினர் என்பது தெரிந்த செய்தி. அப்படியானால் இந்த செய்தியின் மூலம் ரா அமைப்பின் ஏதோ ஒரு தேவை நிறைவேறும். ஏற்கனவே புகழேந்திரன் மாஸ்டர் ஆட்களை இதே உளவுத்துறை யாழ் அனுப்பியிருப்பதும் நமக்கு தெரியும். அவர்களது விளையாட்ட இது என்பது தெரியவில்லை. அப்படியானால் அந்த வேலையை செய்வதன்மூலம் புலிகள் மீது பழியை போடுவதிலும் இவர்களுக்கு வெற்றி. அதேசமயம் பொன்சேகாவை நல்லவர் என்று கூறுவதிலும் வெற்றி. அதேசமயம் வெள்ளை கோடி போராளிகளை கொன்றதை ஐ.நா. போர்குற்றமாக எடுக்க விரும்பினால் அதற்க்கான ஆதாரங்களை தரவேண்டிய ராணுவ அதிகாரியை கொல்வதன் மூலம், அல்லது இல்லாமல் செய்வதன் மூலம், கோத்தப்பஎவையும் காப்பற்றிவிடலாம்


எப்படியோ இத்தனைக்கும் உதவிய ஜாபரை டில்லிஇலிருந்து திரும்பியதும் என்னதான் சாதிக் பாட்ச விவகாரத்தில் பிடித்தாலும், இதை உங்களுக்கு செய்து தருகிறேன் என்று அவர் பேரம் பேசிவிட்டாரா? அதனால்தான் அவர் ஏற்பாடு செய்து வெளிவரும் அதே ஏட்டில் மட்டுமே இதை அதே ஊடகவியலாளர் மூலம் எழுத வைத்தாரா? டில்லி சென்று திரும்பியதும் ஜாபர் செய்யும் அடுத்த இமாலய பணி இதுதானா?. . ஆனால் இங்கே ஐ.பி.இடம் மாட்டிய ஜாபரை, தப்பிக்கவைக்க "ரா" வழிசெய்யுமா என்ற கேள்வியும் எழுகிறது.

திமுக.வை தோற்கடித்த காங்கிரஸ்.

திருச்சி சிவா, திமுகவில் ஒரு சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல: கட்சிக்கு தலைமைக்கு விசுவாசமான ஊழியர். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதே குறிப்பறிந்து கச்சு தல்லைமைக்கு விசுவாசமாக பணியாற்றுவார் என்பதற்காகத்தான். அதுவும் கட்சியில் இருக்ககூடிய தலைமையின் குடும்ப உறுப்பினரான மத்திய அமைச்சரே கட்சித்தலைமைக்கு எதிராக காய் நகர்த்தும் நேரத்தில் கட்சி விசுவாசி அங்கே நாடாளுமன்றத்தில் இயங்க வேண்டும் என்றுதான் தலைமை சிவாவை அனுப்பி வைத்தது.அத்தகு இப்போது காங்கிரஸ் தலைமை எதிராக காய் நகர்த்துகிறது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை திமுக கட்சித்தலைமையின் கழுத்துக்கு கத்தியாக இருக்கும் இந்நேரத்தில், அதை பிஏசி என்றழைக்கப்படும் " பொது கணக்கு குழு"விற்கு உறுப்பினர் தேர்வு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் நடத்தப்பட்டது. அதில் திமுக. சார்பாக சிவா நிறுத்தப்பட்டார். முறைப்படி ஆளும்கூட்டணிக்குள் ஒவ்வொரு கட்சியும் அடுத்த கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும். ஆனால் சிவாவிற்கு காங்கிரஸ் வாக்களிக்க தனது உறுப்பினர்களுக்கு சொல்லவில்லை. மாறாக காங்கிரஸ் முயற்ச்சியில் பழைய பிரதமர் குஜ்ரால் மகன் சுயேட்சையாக நிறுத்தப்பட்டு காங்கிரஸ் உறுப்பினர்களால் வாகளிக்கப்பட்டு வெற்றபெற ச்செய்தார்கள்.சிவா தோல்வி அடைந்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி "பொது கணக்கு குழு" தீவிரமான விசாரணையை நாடாளுமன்றத்திர்க்குல்லேயே தொடங்கியுள்ள நேரத்தில் முரளி மனோகர் ஜோஷி என்ற பாஜக முன்னாள் அமைச்சர் அதை எடுத்துள்ள நிலையில் இந்த உறப்பினர் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது.அந்த ஊழல் வழக்கில் திமுகவை பழி வாங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு செயல்படுவதாக தெரிகிறது. அத்தகைய திட்டத்தில் ஒரு அங்கம்தான் திருச்சி சிவாவை தோற்கடித்த காங்கிரசின் சாதியம். ஆனால் அதற்க்கான திட்டத்தையும் காங்கிரசுக்கு சொல்லிக்கொடுத்தது தயாநிதிதான் என்கிறார்களே