Tuesday, May 10, 2011

ஏகபோகம் தமிழ்நாட்டில் மட்டுமா? இந்தியா பூரா?

சன் காட்சி ஊடக குழுவினரின் ஏகபோகம், ஊடகத்துறை தவிர, திரைத்துறை தவிர, திரையரங்குகள் தவிர, விநியோகத்தர் தவிர, எங்கும் நீடிக்கிறதே என்று பலரும், பல தொழில் செய்பவர்களும் தமிழ்நாட்டில் அதிர்ந்து போவதும் அவர்களே அதற்காக தேர்தலில் மாற்று வாராதா என்று என்குபவர்கலாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். ஆனால் வருகின்ற செய்திகளை தாமதமாக கண்கானித்தால், அதாவது ௨௦௦௯ ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்ததை கணக்கெடுத்தால், அந்த கலாநிதி மாறன் வகையறா, இந்தியா முழுவதும், இந்தி பேசும் மாநிலங்கள் உட்பட தனது ஊடக வலைப்பின்னலை விரிவாக்கி தனது கையில் போட்டுவருகிறார் எனபது புரியும்.


கிடைத்திருக்கும் தகவல்களின் ஆதாரப்படி, எப்.எம்.என்று அழைக்கப்படும் " ரேடியோ" வலைப்பின்னலில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, என்ற தென்னிந்திய மாநிலங்கள் தவிர, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய வட மற்றும் மேற்கு மாநிலங்களிலும் தனகளது "சேவைகளை" விரிவு படுத்தியுள்ளனர். ரெட் எப்.எம். என்றுஅழைக்கப்படும் அந்த "ரேடியோ வலைப்பின்னல்" பொருளாதார பிரச்னைக்கு உள்ளான போது, அவர்களுக்கு நூறு கோடி கொடுத்து, அந்த அலைவரிசைகளில் அதாவது நிறுவனங்களில் 48 .9 விழுக்காடு பங்கை, கலாநிதி மாறன் வாங்கிவிட்டார். அதுதவிர அந்த நிறுவனத்தின் சிறுபான்மை பங்குகள் ஹைதராபாத்தை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்திற்கும், என்.டி.டி.வி. என்ற இருபத்திநாலு மணிநேரமும் ஒளிபரப்பப்படும் அலைவரிசையான காட்சி ஊடகத்திற்கும், மலேசியாவில் உள்ள அனந்த கிரிஷ்ணனுக்கு சொந்தமான ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்கும் சொந்தமாக உள்ளன.


இப்போது மேற்கண்ட பெரும் ஊடக நிறுவனகளுக்கு, சன் குழுமத்துடன் உள்ள வணிக உறவுகள் ஒன்றுக்குள், ஒன்று என்பது புரியப்பட முடியும். இந்த என்.டி.டி.வி. காட்சி ஊடகம்தான், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமர் பெயர் உச்சநீதிமன்றத்தில் சிக்கிக் கொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் வாய் போல செயல்படும் ஊடகம் என்பதால் சில சித்து வேலைகளை செய்தது. அதாவது கபில் சிபில் என்ற வழக்காடும் வல்லமை பெற்ற மத்திய அமைச்சரை, பர்கா தத் என்ற ஊடகவியலாளர் மூலம் கேள்விகளை துளைத்து கேட்கச் சொல்லி, அவற்றிக்கு திறமையாக கபில் சிபல் பதில் கூறினார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பிரதமர் முகத்தை காப்பாற்ற பகீரத முயற்சி எடுத்துக்கொண்டனர். இ[பொது சோனியா குழுவில், ஊடகபெருந்தலை, தாயநிதிக்கு இருக்கும் செல்வாக்கு புரிய முடியும்.


இந்த ரெட் எப்.எம்.என்ற வலைப்பின்னலில் உள்ள ரேடியோக்களை, 93 .5 என்ற மெகா ஹெற்சில் கேட்கலாம். அது, மும்பை, கொல்கத்தா,கான்பூர், ஜாம்ஷெட்பூர், போபால்,ஜபல்பூர், இன்டோர், நாசிக், ஔரந்கதாபாத், நாகபுரி, பெங்களூரு, மைசூர்,மகளூர்,குல்பர்கா, கொச்சி, திருவனத்தபுரம், திருச்சூர்,கண்ணனூர், கோழிக்கோடு, ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், வாரங்கல், ராஜமுந்திரி, திருப்பதி, அகமதாபாத்,வடோதரா, லக்னோ,ஐஸ்வால், அலகாபாத், வாரணாசி, ஜெய்பூர், புவனேஸ்வர், அசன்சால், சிலிகுரி, கான்க்டக், கவ்ஹதி, சில்லாங் ஆகிய உட்பட நாற்பது ரேடியோக்களை கட்டுப்படுத்துகிறது. அவை முதலில் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதை எழு ஆண்டுகள் கழித்து அதன் நலிவு நேரத்தில் நூறு கோடிகளை விட்டெறிந்து சன் குழுமம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பங்குகள்" இந்தியா டுடே" நிறுவனத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு பல சிறு நிறுவனகளால் வாங்கப்பட்டது. அதில்பெரும் பங்கை சன் குழுமம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிவிட்டது.

இதே காரணம்தான் அந்த "இந்திய டுடே" நிறுவனத்தின் "ஹெட்லைன்ஸ் டுடே" யில் இப்போது ஒரு போய் கருத்து கணிப்பை வெளியிட்டு முதல்வரை திருப்தி படுத்தும் வேலையையும் தயாநிதி பார்க்க முடிந்தது. 2009 ஆம் ஆண்டு அகஸ்ட் 14 இல் "சூரியா எப்.எம்." இந்த ரெட் எப்.எம். இற்குள் கொண்டுவரப்பட்டது. 38 நகரங்களில் அது தனது ஒளிபரப்பை செய்யத் தொடங்கியது. முதலில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் , இருந்த அந்த ஒலிபரப்புக்கள், முழுமையாக இந்தி ஓயல்பரப்பாக மாற்றப்பப்ட்டன. அவை இசை, திரப் பாடல்கள் என்று ஒலிபரப்பிவருகின்றன. தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலங்களிலும், இது "ரெட் எப்.எம். என்ற பெயருடனே இயங்கிவருகிறது. அதன் முதலாளிகளாக கலாநிதி மாறனும், ஹன்ஸ்ராஜ் சக்செனாவும், அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் தொலை தொடர்பு என்று சன் கேபிள் விசனும், சன் டி.டி.எச்.உம அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதான் இன்றைய உண்மை கதை. ஆகவே சன் குழுமத்திடம் எந்த இந்திய அரசியல்வாதியும் தப்ப முடியாது. அந்த அக்டோபஸ் முன்னால் அடங்கிப் போயி ஆகவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்கிறார்கள். இது எப்புடி? .

No comments:

Post a Comment