Thursday, May 12, 2011

விடுதலைப் புலிகள் தலைவர் படம் வைத்து வாக்குகேட்ட இயக்கம்.

தமிழ்நாட்டில் ஒரு மாத காலமாக் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரைகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு கட்சியும் தங்களது பரப்புரைகளில், பல தலைவர்களது படங்களை போட்டு விளம்பரங்கள் செய்வதும், சுவரொட்டிகள் ஒட்டுவதுமாக இருந்தனர். அத்ய்தகைய கட்சிகளில், இயக்கங்களில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றும், அங்கீகரிக்கப்படாத ஆனால் பதிவு செய்யப்ப்பட்ட கட்சிகள் என்றும் தேர்ர்தலில் நின்றன. சில அமைப்புகள் பதிவு செய்யப்படாத நிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, தேவநாதன் யாதவ் தலைமையிலான," யாதவ் மகா சபா". அதனால் அவர்கள் ஜார்கண்டில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்சாவிடம் அவர்களது சின்னமான " வில் அம்பு" பெற்று அதையே தங்களது சின்னமாக பயன்படுத்தி தேர்தலில் நின்றனர்.

அதேசமயம் எல்லா கட்சிகளையும் போல அவர்களுக்கும், பல தலைவர்களின் படங்களை போட்டு விளம்பரம் செய்யவேண்டிய கட்டாயம் வந்தது. அதில் காமராஜ், அம்பேத்கர், காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், அழகு முத்து கோன், சுந்தரலிங்கம், என்று பல தலைவர்கள் படங்களை போடும்போது நினைவாக " தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் படத்தையும்" போட்டு விளம்பரங்கள் செய்தனர். சுவரொட்டிகளையும் "பிரபாகரன்" படத்துடன் ஒட்டினர். தமிழ்நாட்டில் நடந்த டேஹ்ர்தலில் இந்த ஒரே இயக்கம்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் படத்தை தாங்கள் நின்ற 53 தொகுதிகளிலும் ஒட்டி, விளம்பரப்படுத்தி பணி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது தமிழின ஆரவல்ர்களால் பாராட்டப்[டுகிறது..

No comments:

Post a Comment