Wednesday, July 22, 2015

ஜூலை-23.1999.படிப்பினைகள்...[ தொடர்ச்சி..]

ஜூலை-23.1999.படிப்பினைகள்...[ தொடர்ச்சி..]
--------------------------------------------------------------------
                     பேரணியையும், கூட்ட நெரிசலையும் கண்ட தமிழ் மாநிலக் காங்கிரசின் வில்லிவாக்கம் ச.ம.உ. ஜே.எம்.ஹாரூன் ஏற்கனவே ஜீப்பிலிருந்து இறங்கியிருந்ததால், ஜீப்பிற்கு முன்னே சென்று காவல்துறை அதிகாரிகளிடம் பேசி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ,பேரணித் தலைவர்களை அழைத்துச் செல்வதற்கான முயற்சியில் இருந்தார். ஊர்வலத்தின் பின்புறம் எதோ தகராறு நடக்கிறது. முன்புறம் காளர்கள் மரிப்பது போல பேரணியை முன் செல்ல விடாமல் இருக்கின்றனர்.திடீரென வலதுபுறம், ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு உள்ளே இருந்து, "கற்கள்" ஜீப்பை நோக்கியும், தலைவர்களை குறி வைத்தும், தொடர்ந்து எறியப்படுகிறது. தொண்டர்கள் கிருஷ்ணசாமியை காப்பாற்றவும், மற்றும் தலைவர்களை காப்பாற்றவும், ஜீப்பில் ஏறி, தங்கள் உடல்களால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள்.திடீரென ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் உள்ளிருந்து, ஒரு காவலரின் "துப்பாக்கி" குண்டு ஜீப்பை நோக்கி பறந்து வந்து முட்டி கீழே விழுகிறது. இந்த நேரத்தில்,"ஆல்பா,பாட்டா" என்று ஒரு "கட்டளை" அதிரடி காவல்துறைக்கு வாய் மூலம் குரலாக கொடுக்கப்படுகிறது. இதை கீழே நின்ற ஹாரூன் பாய் மட்டுமே கேட்டு பிறகு பதிவு செய்கிறார்.அந்த கட்டளை சொற்களுக்கு கட்டுண்ட காவல் அதிரடிப் படை பேரணி மீது கண்டபடி தாக்கத் தொடங்குகின்றனர்.

     சிதறி மக்கள் எல்லாம் ஓட, தாமிரபரணி ஆற்றை நோக்கி ஓடுகின்றனர். அப்போது ஒரு "கல்" ஜீப்பின் ஓட்டுனர் மீது வந்து விழுகிறது.அடி தாங்க மாட்டாமல் பயந்துபோன ஓட்டுனர்,ஜீப்பை கண்டபடி ஒட்டி,தலைவர்களும் அவர்களை காப்பாடர வந்த தொண்டர்களுடனும், கொக்கிரகுளம் ஊருக்குள் நேரே சென்று, இடதுபுறம் திருப்பி, ஆட்சித் தலைவர் அலுவலகம் பின்னால் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று நிறுத்துகிறார்...பிறகு நடப்பதும்..மய்ர்கூசெரியும் செய்திகள்தான்...[ நான் இப்போது பணிக்கு செல்கிறேன்...வந்து எழுதுகிறேன்...மன்னிக்கவும்]
     

No comments:

Post a Comment