Friday, April 15, 2011

பணம் கொடுத்தும், திருப்பி அடிக்கிறானே?

அய்யா. திமுக பணம் கொடுத்தது உய்னமைதான். அதை திமுககாரர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் வாதம் இப்போது வேறு. அதாவது தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு வெளிவந்த கருத்து கணிப்பில் எல்லாம் எங்கள் திமுக தோற்கும் என்று வந்தது உண்மைதான். ஆனால் நாங்கள் அதற்குபிறகு அனேகமாக எல்லா இடங்களிலும் பணம் கொடுத்துள்ளோமே? பணம் வாங்கியவர்கள் எப்படி எங்களுக்கு போடாமல் இருப்பார்கள்? இதுதான் இப்போது திமுகவின் வாதம்.

இன்னும் ஒருமாதம் இருக்கிறது வாக்கு எண்ணிக்கை நடக்க. அதற்குள் திமுக தோற்கும் என்ற நிலையை அவர்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த தயாரில்லை. அல்லது அப்படி ஒப்புக்கொள்ள தயாரில்லை. அதற்காக சில தர்க்க வாதங்களை கிளப்பி விடுகிறார்கள். அதில் இதுவும் ஒன்று. திமுக செய்த நல்வாழ்வு திட்டங்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்கிறார்கள். அது என்ன நல்வாழ்வு திட்டம் என்று கேட்டால், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்கிறார்கள். அதுமட்டுமல்ல கலைஞட் காப்பீட்டு கழகம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல வண்ண தொலைக் காட்சி என்கிறார்கள். எழுபாதயிரம் ரூபாய்க்கு வீடு கட்டி கொடுத்து, குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றியமை என்கிறார்கள். இவைகள் எல்லாமே உண்மைதான். இவற்றிற்கு ஒரு பிரிவினர் அதாவது அதனால் லாபம் பெற்றோர் அதாவது வறுமையின் எல்லைகூட்டிற்கு கீழே உள்ளவர்களில் ஒரு பிரிவினர் வாக்கு போட்டிருக்க கூடும் என்பது உண்மைதான்.

ஆனால் அதுமட்டுமே இன்று தேர்தலை தீர்மாநித்திருக்குமா? நாங்கள் கொடுத்த பணத்திற்கு நன்றி காட்டமாட்டார்களா? என்று வினவுகிறார்கள். அதனால்தான் வாக்கு பதிவு இதுவரை இல்லாத அளவில் வரலாற்று காணாத அளவில் 77 விழுக்காட்டை தாண்டுகிறது என்கிறார்கள். புதிதாக வாக்காளர்களாக சேர்ந்துள்ள என்பது லட்சம் இளைஞர்கள் எங்கே போட்டிருப்பார்கள்? என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. உங்கள் தலைமை கொடுத்த பணம் முழுவதும் மக்களுக்கு பொய் சேர்ந்தததா? எவ்ன்றால் அவர்களிடமிருந்து பதில் இல்லை.

திமுக தொண்டர்கள் திமுக தலைமைக்கு முன்பு போல விசவாசமாக இருக்கிறார்களா? என்றால் பதில் இல்லை. அதனால் கொடுத்தனுப்பிய பணமும் முழுமையாக மக்களிடம் போயசெரவில்லை என்றால் அதற்கும் பதில் இல்லை. இலவசம் மற்றும் பணம் பற்றி மட்டுமே தேர்தலை சிந்திக்கிறார்கள். வழமையான அரசு எதிர்ப்பு உணர்வு பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. ஏறிவரும் விலைவாசி பாத்தித்த்டிருக்குமா என்றால் தெரிவதில்லை. எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள குறைகளை அதாவது அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பற்றி மட்டுமே சிந்த்த்டித்து வரும் ஹிமுக தொண்டரால் இன்றும் புரியப்போவது இல்லை.

பணம் கொடுத்தவர்களால பணம் வாங்கியவர்களின் வாக்குகளை பிசிறில்லாமல் உதய சூரியனுக்கு போடவைக்க முடியுமா என்றால் திமுக தொண்டர்கள் முழிக்கிறார்கள். சென்னையில் தொண்ணூறாம் வட்டத்தில் நாட்டும் பகுதி செயலாளர் காமராஜ் ஹான்கள் கொடுத்த பணம் பெற்றவர்கள் சரியாக போடுகிரரகளா? என்று சோதிக்க வாக்கு அளிக்கும் இடத்திலேயே ஆள் போட்டிருந்தார். அவர்கள் கூட 9000 வாக்குகளில் 6000 வாக்குகள் தான் பெறமுடிந்தது என்கிறார்கள். பென்னாகரம் இடைதேர்தலில் பணம் வாங்கியவர்களில் பாதி பேர்தான் வாக்களித்தார்கள் என்பது திமுக கணக்கு. அப்படியானால் இந்த போது தேர்தலில் எத்தனை பணம் வாங்கியவர்கள் வாக்களித்தார்கள் என்பது ஒரு சிறிய கணக்கு. அந்த கணக்கையும் எடுத்து பார்த்து நாம் சிந்திக்க வேண்டும்.

Thursday, April 14, 2011

ரஜினிகாந்த் ஏன் குழம்புகிறார்?

ஏப்ரல் பதிமூன்றில் வாக்களித்த திரையுலகினர் அனைவருமே வெளியே வந்து ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக மறைமுக வார்த்தைகளில் சொன்னார்கள். அதில் நடிகர் சூரியாவும், விஜய்யும் அடக்கம்.ஆனால் ரஜினி மட்டும் மாட்டிக்கொண்டார். ஏற்கனவே ரஜினியை மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தார். பிறகு அவரை எதிர்த்து நிற்கும் சைதை.துரைசாமியும் போபி பார்த்தார். அதனால் ரஜினி யாருக்கு ஆதரவு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ரஜினிக்கு தமிழ்நாட்டில் அதிகமாக வாக்குகள் இருப்பதாக ஒரு மாயை நிலவி வருகிறது. ரஜினி குரல் கொடுக்கப்போகிறார் என்று இரு தரப்பும் கூறி வந்தனர்.

கலைஞருக்கு ஏற்பாடு செய்யப்ப்பட்ட ஒரு திரை உலக விழாவில் நடிகர் அஜித் திமுகவின் அடாவடி தனத்தை எதிர்த்து பேசிவிட்டார். கலைஞர் முன்னிலையில் அந்த பேச்சை ரஜினி எழுந்து நின்று கைதட்டி வரவேற்று விட்டார். அதன் பிறகுதான் திரை உலகினர் கலாநிதி-தயாநிதி குடும்பத்திடம் படும் பாடு வெளியே தெரிய தொடங்கியது. பிறகு விஜய் அவர்களிடம் பட்ட பாடு எஸ்.எ.சந்திரசேகர் மூலம் வெளியே வந்தது.இத்தகைய நிலையில் திரை கலைஞர்கள் எல்லோருமே எதிர்ப்பு உணர்வில் இருக்கிறார்கள் என்ற கருத்து மிகை அல்ல. நேரடியாக காங்கிரசை எத்ரிகிறேன் என்று கூறிவிட்டு, திமுகவையும் எத்ரித்து சீமான் ஊர், ஊராக பேச எவண்டி வந்தது. அப்போது நான் மட்டுமல்ல, திரை உக்லகமே இந்த ஆளும் குடும்பத்திற்கு எதிராகத்தான் உள்ளது என்றும், அவர்கள் அனைவரும் பின்னாலிருந்து தன்னை உற்ச்சாகப்படுத்தி வருவதாகவும் அவர் கூறிவிட்டார்.

இப்போது ரஜினி வாகளித்டு விட்டு வெளியே வந்தார். ஊடகத்தாரிடம் பேசினார். விலைவாசி உயர்வு மக்களை வாக்களிக்கவைத்துவிட்டது என்றார். யார்க்கு என்று கூறவில்லை. அது தேவையுமில்லை. ஊழலை எத்ரிக்கும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு என்றார். அதில் பொய் கலந்து கொள்ள விரும்பினேன் என்றார்.உடல் சரியில்லாததால் செல்லவில்லை என்றார். எதையோ அதன்மூலம் சொல்லவந்தார்.தமிழ்நாட்டில் உள்ள ஊழல் என்ற கேள்விக்கு அது வேண்டாம் என்று கூறிவிட்டார். கருத்தை வெளிப்படையாக சொல்ல தயக்கம் என்பதை வெளிப்படுத்தினார். விவாசாயிகள் நலனுக்கான அரசு வரவேண்டும் என்றார். அதன்பிறகு அவரது வாக்கு போட்ட படம் ஊடகங்களில் வெளிவந்தது. அதில் இரட்டை இலைக்கு போட்டதுபோல படம் இருந்தது.மதியமே காட்சி ஊடகங்கள் ரஜினியின் நேர்காணலை வெளியிட்டன. அதுவே இரண்டு விழுக்காடு வாக்குகளை திமுகவிற்கு எதிராக திருப்பி விட்டதாக கூறுவோரும் உண்டு.

அதற்கு விளக்கம் சொல்ல நிர்பந்தம் வந்தது. மாலையில் ,கலிஞர் எழுதிய,"பொன்னர் சங்கர்" படம் முன் திரையிடல் நடந்தது. ரஜினி அழைக்கப்பட்டார். முதல்வரின் அழைப்பு என்பது புரிந்த்து. அங்கு சென்ற ரஜினி முதல்வரின் உதவியாளர்களிடம் பேசினார். ஊடகங்கள் திரும்ப திரும்ப வாக்களிப்பதை படம் பிடிக்க வேண்டி கையை மின்னணு இயந்திரத்தில் வைக்க சொன்னார்கள் என்றும், அது தவறாக இரட்டை இலையில் உள்ள வளர்மதி பெயர் முன் சென்ற போது படம் எடுத்து விட்டனர் என்றும் ஊடகங்கள் மீது பழியை போட்டு தப்பித்தார். இந்த அளவு பொய் சொல்லித்தான் தம்ழ்நாட்டு ஆள்வோரிடம் ரஜினியே தப்பிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.?.

தங்கபாலு முகமா? முகமூடியா?

ஜெயந்தி தங்கபாலு, அதாவது தங்கபாலுவின் மனைவி தன்னிடம் தயாள சீட்டு இருந்தாலும் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி,வாக்கு சாவடி முன்பே ஊடகங்களிடம் கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஏன் அவரது பெயர் விடுபட்டது? எப்படி விடுபட்டது? தங்கபாலு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருப்பவர். அவரது மனைவி சாதாரண குடும்ப பெண் என்பதல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையிலிருந்து முடிவு செய்யப்ப்பட்ட வேட்பாளர் பட்டியலில், சென்னையில் மயிலாப்பூர் என்ற பிரபல தொகுதிக்காக கட்சி மேலிடத்தால் நியமிக்கப்பட்டவர். அந்த தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியில் பலர் வேட்பாளராக முயற்சித்தனர். முன்னாள் சட்ட மன்ற உறப்பினர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் வாசன் கோஷ்டியில் சேர்ந்து ம்ய்லாவ்ரே வேட்பாளராக முயற்சித்தார். சிதம்பரம் கோஷ்டியில் சேர்ந்த கராத்தே தியாகராஜன் தனக்கு தான் மயிலாப்பூர் தொகுதி வந்து சேரும் என்று சிதம்பரத்தை நம்பி எதிர்பார்த்திருந்தார். அதற்கான வேலைகளையும் செய்ய தொடங்கிவிட்டார். ஆர்.வெங்கட்ராமன் என்ற முன்னாள் குடியரசு தலைவரின் பேத்தி தங்களது பாரம்பர்ய இடமான மயிலாப்பூர் தொகுதியை ராகுல் மூலம் கேட்டாராம். கொட்டிவாக்கம் ரவி என்பவர் தான் மீனவர் என்பதால் இந்த தொகுதியில் அதிகமாக உள்ள மீனவர்கலஹு பிரதிநிதியாக தனக்கு தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று ராகுலிடம் கேட்டிருந்தாராம்.

மேற்கண்ட அனைவருக்கும் பட்டை நாமம் போட்டுவிட்டு தனக்கு வேண்டிய குலாம் நபி ஆசாத் மூலம் தனது மனைவிக்கு இந்த தொகுதியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு வாங்கினாராம். அதுவும் கூட தங்கபளுவிற்கு வாங்க முடியாது காங்கிரஸ் கட்சியின் புரிதல்படி மாநில தலைவர் மாநிலம் எங்கும் இறங்கி தேர்தல் பணி செய்யவேண்டும் என்றும் அதனால் தங்கபாலுவின் மனைவிக்கு தொகுதியை ஒதுக்கி கொடுங்கள் என்ற வரத்து வேண்டுகோள் ஆசாத் மூலமாக அகில இந்திய தலைமையிடம் எடுபட்டது என்றும் கூறினார்கள்.
அவ்வாறு ஜெயந்தி தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளராக ம்ய்லபோருக்கு அறிவிக்கப்பட்டவுடன், அதுவரை தன்னை வேட்பாளராக அர்விப்பார்கள் என்று எதிர்பார்த்த கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களிடம் குமுற, அவர்கள் நான்கு நாட்களுக்கு தங்கபாலுவின் வீடு, காங்கிரஸ் கட்சியின்
தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவன் ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடி ஆர்ப்பாட்டமும், தங்கபாலு கொடும்பை எரிப்பும் செய்தனர். அத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான மங்கள்ராஜ் அறிவிக்கப்பட்ட காங்கிரசின் அதிகாரபூர்வமான வேட்பாளர் ஜெயந்தி தங்கபளுவிர்காக பணியாற்ற தொடங்கினார். இவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்தவர்.ஆனாலும் தங்கபாலு கோஷ்டியின் வேட்பாளருக்காக இறங்கினார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வந்தது. ஜெயந்தி தங்கபாலு தனது வேட்புமனுவுடன் வட்டாட்சியர் அலுவலகம் வர, கராத்தே ஆட்கள் வெளியே கலவரம் செய்ய, மங்கள்ராஜ் கட்சி விசுவாசத்துடன் ஜெயந்திக்கான வேட்புமனுவிற்கு, சாட்சி கையெழுத்திட வந்து சேர்ந்தார். அப்போது ஜெயந்தி கொடுத்த வேட்புமனு பிரதிகள் வழமையாக கொடுக்க வேண்டிய நான்கு தாள்களாக இல்லாமல், இரண்டு தாள்கள்தான் இருந்தன என்று இப்போதும் மங்கள்ராஜ் கூறுகிறார்.அப்போது ஜெயந்தி கையெழுத்து போடாத ஒரு தாளில்கூட மங்கள்ராஜ் ஐத்து சொல்லி கையெழுத்து போடவைத்துளார். வழமையாக மாற்று வேட்பாளராக மாவட்ட தலைவர் மனு செய்வார் என்ற பழக்கப்படி மங்கள்ராஜ், தங்கபாளுவிடம் வினவ, அவர் நானே போட்டுவிடுகிரேனே மாற்று வேட்பாளராக என்று கூறியதை பெரிதாக அன்று எண்ணாமல் மங்கள்ராஜ் சரி என்று கூறிவிட்டார்.

ஆனால் பிறகு நடந்த கதை மன்கராஜை சிந்திக்க வைத்து விட்டது.ஜெயந்தி தங்கபாலு முன்வைத்த வேட்புமனு தாள்களில், முன்வைக்க வேண்டிய நான்கு தாள்களில் இரண்டை மட்டுமே முன்வைத்தார். அதனால் மார்ச் இருபத்தேழாம் நாள் இரவில் வட்டாட்சியர் அழைப்பு ஜெயந்தியிடம் ஒரு கைஎழ்குத்துடன் எதையோ அறிவ்த்தது என்கிறார் மங்கள்ராஜ். அதுதான் அடுத்த நாள் ஜெயந்தியின் வேட்புமனு செல்லுபடி ஆகவில்லை என்றும் மாற்று வேட்பாளரான தங்கபாலுவின் வேட்புமனு ஏற்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. அப்போதே இது ஒரு சதி என்றும் ஒரு குற்றவாளியான தங்கபாலுவிற்கு வேலை செய்ய முடியாது என்றும் மாவட்ட தலிவர் மங்கள்ராஜ் முடிவு செய்துள்ளார். அதை காரணமாக வைத்து இப்போது தேர்தலுக்கு மறுநாள், மாநில தலிவர் தங்கபாலு, சிதம்பரம் கோஷ்டியான கராத்தே தியாகராஜனையும், வாசன் கோஷ்டியான எஸ்.வி.சேகரையும், ஈ.வி.கே.எஸ்.இலன்கோவம் கோஷ்டியான மங்கள்ராஜ் அவர்களையும் கட்சியிலிருந்து மாநில தலிவர் தங்கபாலு விலக்கிவிட்டார்.

இப்போது மங்கள்ராஜ் கூறும்த்கவல்கள் அதிர்ச்சியாக இருகின்றன. 25 ---10 --2010 இல் வெளியிடப்பட்ட கடைசி வாக்காளர் பட்டியலில் தங்கபாலுவின் பெயரும், தங்கபாலு மனைவி ஜெயந்தி பெயரும் இல்லை என்கிறார் மங்கள்ராஜ். அதற்கு பிறகு தங்கபாலு பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என்று தெரியவில்லை என்கிறார்.இப்போது ஜெயந்தி பெயர் மட்டும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதும், தங்கபாலு பெயர் ஒருக்கிறது என்பதும் தங்கபாலுவிற்கு தெரியாமல் நடக்காது என்கிறார் அவர். அதன்மூலம் ஜெயந்திக்கு எதிராக, அதாவது தனது மனைவிக்கு எத்ரிராக தங்கபாலு செய்த சதி இதில் தெரிகிறது என்கயார் அவர். அது மட்டுமல்ல. தங்கபாலுவின் மகன், மகள் ஆகிய இருவர் பெயரும் இரண்டு இடங்களில், இரண்டு வேவீறு முகவரிகளில் இருக்கிறது என்றும் அவர் ஆதாரம் தருகிறார்.

தங்கபாலு மகள் இந்திரா பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியில் இருக்கிறது. ஒன்று பாகம் எண் 107 இல், வரிசை எண் 413 இல் இருக்கிறது. அதே முகவரியான 32 /12 கஸ்தூரிபாய் நகரில்,இரண்டாவது முக்கிய சாலையில், அந்த எண்ணையே 32 / A -12 என்ற முகவரியில் தங்கபாலுவின் மகனான கார்த்திக் பெயர் வரிசை எண் 447 இல் இருக்கிறது. அதேபோல இந்திரா பெயர் இன்னொரு முகவரியான கஸ்தூரிபாய் நகர் ஆறாவது முக்கிய சாலையில் 108 வது பாகத்தில், வரிசை எண் 604 இல் 12 / 16 என்ற வீட்டு என்னில் இருக்கிறது. அதே எண்ணில் 24 /120 என்ற முகவரியில் வரிசை எண் 644 இல் தங்கபாலுவின் மகன் கார்த்திக் பெயர் இருக்கிறது. அதாவது தங்கபாலுவின் மகனும், மகளும் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இறக்கிறார்கள். இதுவே பெரிய குற்றம். ஆனால் அவரது மனைவி பெயரை மட்டும் வாக்காளர் பாட்டிலில் இருந்து தங்கபாலு நீக்க வைத்துள்ளார். ஒருபுறம் அன்னை சோனியாவிற்கும் துரோகம், இன்னொரு புறம் தேர்தல் ஆணையத்திற்கும் துரோகம், அனைத்தியு விட தனது மனைவிக்கே துரோகம் செய்ஹ்டுள்ளார் எங்கள் மாநில தலைவர் என்று மங்கள்ராஜ் கொந்தளிக்கிறார்.

Monday, April 11, 2011

மின்தடை ஏற்படுத்தியவர்கள் கொள்ளைக்காரர்கள்- ஆதாரம் அம்பலம்.

.
தமிழ்நாடெங்கும் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மின் தடை என்பது ஒரு சாதாரண விசயமாக ஆகிவிட்டது. கிராமங்களில் விவசாயம் செய்ய மோட்டார் போட மின்சாரம் இல்லை. விவசாயத்தை நம்பி பிழைக்கும் மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் சிறு தொழில்கள் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. விசைத்தறிகள் ஓடவில்லை. தறித்தொழிலாளி பட்டினி கிடக்கிறான்.பல சிறு தொழில்கள் மின்தட்டுப்பாட்டினால் நசிந்து போய்விட்டன. பெரும் ஆலைகளுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக இந்த மின்வெட்டு மூலம் சிறு தொழில்களையும்,விவசா
யத்தையும் காவு கொடுத்தது கலைஞர் ஆட்சி என்ற அவப்பெயர் வந்துசேர்ந்தது.


அதற்கெல்லாம் பதில் சொல்கிறார் முதல்வர் கலைஞர் புதிய தொழிற்சாலைகளை தனது ஆட்சி திறந்ததால் , மின்சாரம் தடைப்பட்டது என்கிறார் அத்தகைய புதிய தேவைகளுக்கு மின்சாரம் உற்பத்தி ஏன் செய்துகொள்ளவில்லை என்று கேட்டோமானால், முந்திய அதிமுக ஆட்சியில் மின் உற்பத்திக்கான புதிய ஆலைகளை அமைக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் உண்மை என்ன என்று நாம் கண்டுபிடிக்கவேண்டியுள்ளது.


இப்போது கிடைத்திருக்கும் விவரங்களில் இருந்து, தனியார் ஆலைகளுக்கு அதிக கட்டணம் கொடுத்து, அதன்மூலம் மின்சாரம் பெற்ற தமிழ்நாடு மின்வாரியம் செய்த பிழைதான் மின்தடைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. அரசு மாநிலத்தின் தேவைகளுக்கு ஒப்ப தனது மின் உற்பத்தியை பெருக்கி கொண்டிருந்தால்
இந்த மின்தடைக்கு வாய்ப்பில்லை. 1999 ஆம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில், தனியார் மின் உற்பத்தி ஆலைகளுக்கு வித்திடப்பட்டது. சென்னை பேசின் பிரிட்ஜில் இருந்த . .அரசு மின் உற்பத்தி ஆலையை தனியாரான ஜி.எம்.ஆர். என்ற நிறுவனத்துக்கு கருணாநிதி அரசு கொடுத்தது.அவர்கள் அன்றிலிருந்தே அடக்க செலவை அதிகமாக காட்டி, அதன்மூலம் மின்சாரத்தை ஒவ்வொரு யுனிட்டிற்கும் மிக அதிகமான விலை வைத்து தமிழ்நாடு மின்வாரியத்திற்கு விற்க தொடங்கினார்கள்.


பேசின் பிரிட்ஜின் ஜி.எம்.ஆர், தர்மபுரியின் சாமல்பட், மதுரை சமயநல்லூர் மின் ஆலை, திருவையாறு அருகே பிள்ளை பெருமாள் நல்லூர் அப்போல்லோ திட்டம் ஆகியவை அதிக விலைக்குமின்சாரத்தைமின்வாரியத்திற்குகொடுத்துவரத்தொடங்கின. அந்த ஆலைகளில் நாப்தா மூலம் மின் உற்பத்தியை மின்வாரியம் துரிதப்படுத்தியது. எப்போதெல்லாம் பெட்ரோலிய விலை கூடுகிறதோ அப்போதெல்லாம் நாப்தா விலை
கூடத்தொடங்கியது. அதை தனியார் ஆலைகள் வாங்கும் விலை பற்றி கணக்கு பார்க்க மின்வாரியத்திற்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. மின்சாரத்தை யூனிட்டிற்கு
மூன்று ரூபாய், மூன்றரை ரூபாய் என்று வாங்கி கொண்டிருந்த மின்வாரியம் இந்த தனியார்களிடம் ஒரு யூனிட் ஏழு ரூபாய்க்கு என்று வாங்க தொடங்கினார்கள்.


மத்திய அரசின் கையில் இருந்த பவர் டிரேடிங் கார்பொரேஷன் தனது பங்குகளை ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் தனியாருக்கு விற்று விட்டதால், அதுவும் தனியார் இலாபங்களுக்கான ஒரு கார்பரேஷனாக ஆகிவிட்டது. அந்த நிறுவனத்திடம் மின்சாரத்தை வாங்கும் தமிழ்நாடு மின்வாரியமும், ஒரு யூனிட் மின்சாரத்தை ஏழு ரூபாய் கொடுத்து வாங்க தொடங்கியது. இப்போது அந்த நிறுவனம் மூலம் மின் வாரியம் பெறும் மின்சாரத்திற்கு ஐந்து ரூபாய்,எழுபது பைசா கொடுக்கிறது. இந்த அதிக விலை போல, ஜி.எம்.ஆர் நிறுவனத்திடமிருந்து, 600 மெகாவாட் மின்சாரத்திற்கு, நமது மின்வாரியம் யூனிட்டிற்கு
ஒன்பது ரூபாய் கொடுத்து வருகிறது. இதன்விளைவாக இப்போது தமிழ்நாடு மின்வாரியம் 15000 கோடி நட்டம் அடைந்துள்ளது.41000 கோடி கடனில் உள்ளது.


ஏன் இந்த அவல நிலை? முந்திய ஆட்சியை கருணாநிதி குறை சொல்வது உண்மையா? 2002 ஆண்டு அதிமுக ஆட்சியில் த.நா.மின் வாரியமும், என்.டி.பி.சீ [நேஷனல் டிரேடிங் பவர் கார்பரேஷன்].யும் சேர்ந்து வடசென்னை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றிற்கான ஒப்பந்தம் போட்டார்களே? அதை பின்னால் வந்த கருணாநிதி ஆட்சி ஏன் நிறைவேற்ற வில்லை? அதேபோல 2004 ஆண்டு தூத்துக்குடியில் த .நா.மின் வாரியமும், நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனும் சேர்ந்து ஒரு மின் உற்பத்தி நிலையம் ஒப்பந்தம் போட்டார்களே, அதையும் கருணாநிதி ஆட்சி ஏன் நிறைவேற்ற வில்லை? இப்போது சென்ற ஆட்சியில் மின் உற்பத்திக்கான திட்டம் போடவில்லை என்று பொய் சொல்லும் கருணாநிதி இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?


புதிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கினாலும் மூன்று ஆண்டுகளுக்குள் அது உற்பத்தியை கொடுத்துவிடும். அப்படி தனது ஆட்சியில் ஐந்து ஆண்டுகளாக என் ஏற்படுத்தவில்லை? 2002 ஆண்டு ராமனாதபுரம் அருகே உள்ள வழுதூரில் , 200 மெகா வாட் உற்பத்தி செய்யும் ஒரு இயற்கை வாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலையை ஒ.என்.ஜி.சீ. மூலம் உருவாகினார்கள் அதை ஏன் கருணாநிதி ஆட்சி வெறும் நூறு மெகாவாட் மின் உற்பத்தியாக குறைத்து உற்பத்தி செய்கிறது? அதேபோல தஞ்சை குத்தாலம் அருகே 100 மெகாவாட் உற்பத்தி செய்யும் வாயு மூலம் மின் உற்பத்தி நிலையத்தை 2005 ஆண்டு ஏற்பாடு செய்தார்களே? அதை ஏன் உற்பத்தியே இல்லாமல் கருணாநிதி ஆட்சி முடக்கி போட்டுள்ளது?




மேற்கண்ட அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் எதிர்கால தேவைகளை கணக்கில் கொண்டு ஏற்பாடு செய்யப்ப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை முடக்கி போட்ட கருணாநிதி அதன்மூலம் அடைந்த லாபம் என்ன? மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உதவியாளர் இளங்கோ, இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறார். அவர் ஒரு சாதாரண கிளார்க்காக மின் வாரியத்தில் பணியாற்றி வந்தவர். அவர் இப்போது ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார் என்று மின்வாரியத்தில் உள்ள அனைவரும் கூறுகின்றனர். அவர் இப்போது இந்த தேர்தலில் கருணாநிதி நிற்கின்ற திருவாரூருக்கு அருகே, நன்னிலத்தில் திமுக வேட்பாளராக நிற்கிறார. மின்சார அமைச்சருக்கு தேர்தல் வாய்ப்பு கொடுக்காத கருணாநிதி, ஏன் இந்த மின்சார அமைச்சரின் உதவியாளராக இருந்த இளங்கோவிற்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்? அந்த உதவியாளர் இளங்கோ இன்று புதிய சட்டமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள பிரியதர்ஷினி விடுதிக்கு சொந்தக்காரர் என்பதும் உண்மையா?


இந்த இளங்கோ தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி தமிழ்நாடு மின் வாரியம் நட்டமடைவதற்கு காரணமாக இருந்தவர். அதனாலேயே நமது மக்களுக்கு போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. அது மட்டுமின்றி தமிழ்நாடு மின்வாரியமும் பெருத்த நட்டத்தை சந்தித்து கொண்டு இருக்கிறது.ஒரு மாதத்திற்கு 1600 கோடி வருமானம் பெறும் மின் வாரியம், மாதம் 3000 கோடி செலவு செய்து கொண்டு இருக்கிறது.அதில் முக்கிய செலவு மின்சாரத்தை அதிக விலைக்கு தனியாரிடமிருந்து வாங்குவதால் தான். அப்படி வாங்கும் போது இளங்கோ பெற்று வரும் கமிஷன் தொகைக்காக அதில் பெரும பகுதியை முதல்வரின் பங்குக்கு போவதற்காக,தமிழ்நாட்டில் அரசே ஏற்பாடு செய்த மின் உற்பத்தி நிலையங்களையும் கிடப்பில் போட்டுவிட்டு, நட்ட கணக்கு காட்டி வருகிறது கருணாநிதி அரசு

Saturday, April 9, 2011

விஜயகாந்திற்கு விளம்பரம் தரும் சன் டிவி,,கலைஞர் டிவி?

விஜயகாந்த் சேர்ந்து விட்டதால், அதிமுக கூட்டணி வெற்றிபெற்றுவிடும் என்ற எண்ணம் திமுகவை பற்றிக் கொண்டுள்ளது. அதன்விளைவாக விஜயகாந்த்தை தரகுறைவாக விமர்சிக்க தொடங்கினார்கள். அடஹ்ர்காக வடிவேலுவை அம்ர்த்திவிட்டார்கள். பாவம். அவரும் இந்த ஆண்டில் வேறு படம் எதுவும் இல்லையே. இந்த தேர்தல் படத்தில் கற்றுக்கொடுத்த வசனத்தையே மீண்டும், மீண்டும் சொல்லுவோம் என்று விஜயகாந்த் விமர்சனத்தை தரக்குறைவாகவே செய்து வருகிரார. அந்த பேச்சுகளையும், அதேபோல விஜயகாந்த் ஒருவரை அடிப்பது போல பதிவான காட்சியையும் திரும்ப, திரும்ப போட்டால் அதன்மூலம் அவருக்கு உள்ள பொதுவான பெயர் கெட்டுப்போகும் என்பது திமுக தலைமையின் எண்ணம்.

ஆனால் நடந்தது என்ன? விஜயகாந்த் ஆதரவு வாக்குகள் யாருமே இதனால் பாதிக்கப்படவில்லை. மாறாக திமுக அதரவு சிந்தனையாளர்களே இதை பெரிதாக எண்ணி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வது எல்லா ஊரயுக்கும் போயசெரவில்லை. அப்படி தனது பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் அதிமுக அணிக்கு செய்யப்படுவது பற்றி எடுத்து சொல்ல விஜயகாந்திடம் எந்த ஊடக ஏற்பாடும் இல்லை. பெரிய ஊடகங்கள் திமுக சார்பாக இருப்பதால் விஜயகாந்திற்கு விளம்பரம் யாரும் கொடுப்பதில்லை.ஆனால் இந்த விஜயகாந்த் இழிவுபடுத்தல் ஏற்பாட்டை தி,முக வின் ஊடகங்களான சன் மற்றும் கலிஞர் டிவிக்கள் திரும்ப திரும்ப போடுவதால் அதுவே விஜயகாந்திற்கு விளம்பரமாக போய்விட்டது.

கோடி ரூபாய் செலவழித்தாலும் விஜயகாந்திற்கு இந்த அளவு விளம்பரம் கிடைக்காது. அதை செய்வதில் கலிஞர் தன்னையும் அறியாமல் தவறு செய்துவிட்டார். இப்போது விஜயகாந்த் ஒரு பெரும் சக்தி என்று திமுக வே ஊரெல்லாம் சொல்ல்வதுபோல ஆகிவிட்டது.

அன்னா ஹசாரே பின்னால் மக்கள் திரண்டதால்,........

ஊழலை எதிர்க்கும் அரசியல் ஆட்டத்தை ஊழலை எதிர்க்கும் மக்கள் பங்களிப்புடன் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கிடைத்த வெற்றிதான், இன்று மத்திய அரசு இறங்கி வந்து வரைவு நகல் தயாரிப்பு குழுவில் பாதி விழுக்காடு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கிறோம் என ஒப்புக்கொண்டது. அது காந்தியவாதி அண்ணாவிற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல அவருக்கு பின்னால் திரண்ட இந்திய மக்களது மாபெரும் வெற்றி. உலக கோப்பையை இந்தியா மட்டைப்பந்து ஆட்டத்தில் பெற்றதைவிட, காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் களவாண்ட அரசியல்வாதிகாய் கைது செய்வதற்கான ஒரு சட்டத்தை உருவாக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு பெரும் வெற்றிதான்.

அன்னா ஹசாரே நல்லவரா? கெட்டவரா? என்று பட்டிமன்றம் நடத்த சென்னையில் ஒரு ஹன்டேயும், மும்பையில் ஒரு சரத் பவரும் முயலலாம். ஆனால் இந்திய மக்களை பொறுத்தவரை நம்மை பொறுத்தவரை அவர் இப்போது எடுத்த கோரிக்கையும், அதை நிறைவேற்ற எடுத்த போராட்ட முறையும் பொதுமக்களை ஈர்த்தது: பல்லாயிரக்கணக்கில்,லட்சக்கணக்கில், பங்கு கொள்ள வைத்தது. போராட வைத்தது. இதே நிலை தொடருமானால் அடுத்து சிறை நிரப்பும் போராட்டம் என்றும், கைதுகளுக்கு அஞ்சவில்லை என்றும் நடுத்தர வர்க்கம் உட்பட அறிவித்து ஆனாவுடன் நின்றது ஆள்வோரை ஆட்டிவிட்டது.


நமது சென்னையில் கூட காந்தி சிலை அருகே இரவிலும் நூற்றுக்கணக்கில் கூடிய நடுத்தரவர்க்கத்தார் காவல் துறை கைது செய்வோம் ன்று பயமுறுத்திய போது, பயப்படாமல் கைதாக தயார் என்று கூறியதே அதுதான் ஒரு மக்கள் புரட்சிக்கான சூழல் கணிந்து உள்ளது என்பதை காட்டியது. அதுதான் ஆள்வோரை அஞ்ச வைத்து அடிபணிய செய்துள்ளது. எத்தனை நாள்தான் லிபியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் மக்கள் எழுச்சியை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது என்று நமது நடுத்தர வர்க்கம் எண்ணிவிட்டது போலும்.

மக்கள் சார்புடன், மக்கள் பங்களிப்புடன் ஒரு சட்டத்தை எழுதுவது என்பது சொல்வதற்கு எளிது. ஆனால் இன்றுதான் அதற்கு ஆள்வோறது அனுமதி கிடைத்துள்ளது. உச்சகட்ட ஊழலை இந்திய ஆள்வோர் செய்த பிறப்பது அதைகண்டு மக்கள் கோபம் கொண்டு கொத்தித்த பிற்பாடு இது நடந்துள்ளது. அவர்கள்தான் ஜெயபிரகாஷ் நாராயணனின் முழு புரட்சியின் வேகத்தை பார்த்தவர்கள் ஆயிற்றே?
அதனால் சாதுர்யமாக ஒரு மக்கள் புரட்சியை தவிர்த்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.

Thursday, April 7, 2011

மீண்டும் தேசிய முன்னணி உருவாகிறதா?

கோவையில் அம்மையார் செல்வி.ஜெயலலிதா எதோ கருணாநிதி அரசை தூகிஎரிய சூளுரை விடுத்தார் என்று மட்டும் பார்க்கமுடியவில்லையே? அதற்காக எல்லா கட்சிகளையும் கொண்ட ஒரு மெகா கூட்டணியை அமைத்தார் என்று மட்டுமே சிந்திக்க முடியவில்லையே? தமிழ்நாட்டில் ஆட்சி மாட்ட்ரத்தை மாட்டுமே மனதில் வைத்து தேர்தலை சந்திக்கிறார் என்று எண்ணிப் பார்க்கமுடியவில்லையே? ஊழல் செய்கிறார் கருணாநிதி என்று மட்டுமே கொப்பப்படுவதாக தெரியவில்லையே? கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டத்தான் கொதித்தேழுந்துள்ளார் என்று எண்ணிப் பார்க்க முடியவில்லையே?

அதற்கு பதில் அல்லது அதையும் விட கூடுதலாக தமிழ்நாட்டை வீட்டு வெளியே பார்க்கும் பார்வையும் அல்லவா தெரிகிறது? எதோ இடதுசாரி கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டதால் மட்டுமே இப்படி கூறுகிறேனா? இடதுசாரிகள்தான் அவரது கூட்டணியின் அங்கமாயிற்றே? அதில் சிபியின் தா.பாண்டியன் தவிர, டி.ராஜா தவிர, தமிழர் அல்லாத ஏ.பி.பரதனும், சி.பி.எம்.இன் ஜி.ராமகிருஷ்ணன் தவிர அகில இந்திய செயலாளர் பிரகாஷ் கரந்தும் கலந்து கொண்டதை வைத்து மட்டும் சொல்ல முடியுமா? அவர்கள் இருவருக்கும் கேரளாவில் இதே நேரம் சட்டமன்ற தேர்தல் நடப்பதால் இந்த வட்டாரத்தில்தான் சுற்ற வேண்டும் என்பதால் கோவை கூட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று சமாதானம் சொல்லிவிடலாம்.

அது நமது கலைஞருக்கும் பெரும் தலைவலியாக தோன்றாது. ஆனால் ஏன் கோவை அதிமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வந்தார். கோவையில் கொங்கு வேளாளர் வாக்குகளை அதிமுக அதிகமாக பெற்றாலும், ஒரு கொங்கு முன்னேற்ற கழகத்தை கலைஞர் வளைத்து போட்டிருப்பதால், என்னதான் கொங்கு இளைஞர் கழகத்தை அம்மா வளைத்து போட்டாலும் அந்த சமூக வாக்குகள் பிரிந்து எதிர்ப்புறம் போய்விடுமோ என்ற அச்சத்தில்தான், கொங்கு வாக்குகளுடன் நாயுடுக்கள் வாக்குகளும் வேண்டும் என்பதற்காக என்னதான் விஜயகாந்த் தன பக்கம் இருந்தாலும், வைகோ எத்ரிப்புரம் போய்விட்டாரே என்ற காரணத்திற்க்காக, சந்திரபாபு நாயுடு மூலம் அந்த தெலுங்கு வாக்குகளை பெறத்தான் செய்துள்ளார் என்று ஜெயலலிதாவின் தந்திரத்தை சுருக்கி பார்க்க முடியுமா?

இப்படி சுருக்கி தமிழ்நாட்டளவில் ஜெயலலிதாவின் சூத்திரத்தை பார்ப்பது ஒரு வகை பார்வை.அந்த பார்வைப்படி செல்வி.ஜெயலலிதா இந்த கோவை கூட்டத்தை வெறும் தமிழ்நாட்டு வெற்றிக்காக மட்டுமே நடத்தினார் என்றால், தேர்தலுக்கு பிறகு கிடைக்கும் தொகுதி எண்ணிக்கையை கணக்கில் வைத்து காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்வார் என்றே நினைக்க தோன்றும். இத்தகைய ஒரு கணக்கு எங்கும் இந்திய லவில்கூட பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் கோவை கூட்டம் இத்தகைய கணக்கிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

கோவை கூட்டத்தில் பிரகாஷ் கரத் பேசும்போது, இது தமிழ்நாட்டிற்கு மட்டும் எதிர்பார்க்கும் தேர்தல் முடிவு அல்ல என்றும் அகில இந்திய ளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் பேசியதிலிருந்து மட்டும் நம் சிந்திக்கவில்லை. ஏன் என்றால் பிரகாஷ் கரத் இந்த கருத்தை ஒரு வாரமாகவே கூறிவருகிறார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க சந்திரபாபு நாயுடு பேசியது உண்மையில் யாரை எட்டவில்லை என்றாலும் அறிவாலயத்தின் தலைவருக்கு அத்ர்ச்சியாகவே இருக்கும். ஏன் என்றால் கருணாநிதிக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் எந்த ஒரு முரண்பாடும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை.

அப்படியானால் ஏன் அவர் அப்படி பேசவேண்டும்? திமுக காங்கிரசுடன் சேர்ந்து இருப்பதால் மட்டுமே எதிர் குரலாக அபப்டி பேசினார் என எடுத்துக் கொள்ளலாமா? ள்ளது அதற்கும் மேலே ஏதாவது அரசியல் இதில் இருக்கிறதா? சந்திரபாபு நாயுடுவிற்கு ஆகாத கட்சி, எதிரான கட்சி, காங்கிரஸ் கட்சிதான். அதனால் சந்திரபாபு நாயுடு வந்தது, கலந்து கொண்டது, பேசியது எல்லாமே காங்கிரஸ் எதிர்ப்பை அடிப்படையாக கொண்டதுதான். பக்கத்து ஆந்திராவில் காங்கிரஸ் எத்ரிப்பில் மட்டும்தான் நாயுடு நிற்கிறார்.ஆகவே இங்கே கோவையில் நடந்த அதிமுக கூட்டணி கூட்டம் அல்லது தமிழ்நாட்டு டேஹ்ர்தல் கூட்டணி வியூகம் காங்கிரஸ் எத்ரிப்பு நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது.

அதற்கு இங்குள்ள தேர்தலில் திமுக எதிர்ப்புதான் பேசவேண்டும். எப்போது சோனியா வருவது உறுதியானதோ, எப்போது கருணாநிதி எதிர்ப்பு என்று எல்லோரும் நம்பிய ராகுல் வருவது உறுதியானதோ, அதற்கு பிறகுதான் இந்த கோவை கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனால்தான் கடைசிநேரத்தில் அதிக கால அவகாசம் இல்லாமலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் கோவை கோட்டத்திற்கு வந்த தலிவர்களுக்கு நன்றி என்று ஜெயலலிதா அங்கெ பேசினார். சோனியாவும், ராகுலும் கருணாநிதியின் தேர்தல் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று எல்லோரும் சொல்லிவரும்போது அப்படி நடந்தாலும் லாபம்தான் என்று எண்ணியிருந்த ஜெயலலிதா, அவர்கள் இருவரும் வருவது உறுதியானவுடன் அவசர,அவசரமாக கோவையில் கூட்டணிகட்சி தலிவர்களின் கூட்டம் என்று அறிவித்தார். அதை பயன்படுத்தி ஒரு அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணியை கட்டுவதற்கான முஸ்தீபை தொடங்கி வைத்துள்ளார்.

இப்போது இந்த காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணியில் இடது சாரிகளும் இருப்பதால், அது ஒரு பிஜேபி எதிர்ப்பு முன்னணியாகவும் ஆகிவிட்டது. அதாவது காங்கிரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம் என்ற அகில இந்திய அளவிலான முன்னணிக்கு விதை போட்டு விட்டது. அத்தகைய முன்னணி நிச்சயமாக இடதுசாரிகளையும், முஸ்லிம்களையும், கிருத்துவர்களையும் தன்னகத்தே இழுத்து கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி ஒரு முன்னநிதானே விபிசிங்கால் தொடங்கப்பட்டது? அதற்கு பெயர் தேசிய முன்னணிதானே? அந்த முன்னணியை தொடங்கியது சென்னையில்தானே? அதற்கு கலைஞர்தானே அடிக்கல் நாட்டினார்? அந்த முன்னணி காங்கிரசை இந்தியாவிலிருந்து விரட்ட ஏற்பட்டதுதானே? அந்த காங்கிரசுடன் இப்போது கலைஞர் பிரிக்க முடியாத ஸ்பெக்ட்ரம் உறவுடன் கலந்து விட்டாரே?

அதனால்தான் அம்மையார் அந்த அரசியல் தந்திரத்தை கையில் எடுத்து விட்டாரா? காங்கிரஸ் கட்சி இன்று அகில இந்திய அளவில் காமன்வெல்த் விளையாட்டு ஊழல், கார்கில் வீரர்களுக்கு வீடு கட்டும் ஆதர்ஷ் ஊழல், ஐ.எஸ்.ஆர்.ஒ. ஊழல் என்று சஈக்யதொடு மட்டுமின்றி, திமுக என்ற பங்காளி மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் சிக்கியுள்ளது என்பதால் நாடு தழுவிய ஒரு பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. அந்த எதிர்ப்பை பயன்படுத்தி மாற்று ஒன்றை ஏற்படுத்த வலு இல்லாத நிலையில்தான் பிஜேபி.யும் இருக்கிறது. அதனால் ஒரு சரியான மாற்று இந்திய நாட்டிற்கு தேவைப்படுகிறது.

அத்தகைய சூழலில்தான் இந்த புதிய முயற்சி செய்யப்படுகிறது. நீங்கள் அந்த ம்மையாரின் செயலுக்கு தேவையில்லாமல் வக்காலத்து வாங்க பார்கிறீர்கள் என்றும் சிலர் நம்மை கேலி செய்யலாம். அவர்கள் வரலாற்றை மறந்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏன் என்றால் சல்வி.ஜெயலலிதா கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு முயற்ச்சியை செய்துவருகிறார்.அதுதான் அவர் அவ்வப்போது, சந்திரபாபு நாயுடு கட்சி தலைவர்களுடனும், சரத் யாதவ் போன்ற ஐக்கிய ஜனதா தலைவர்களுடனும், அஜித்சிங் போன்ற தலிவர்களுடனும் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள். அதாவது இந்த தலிவர்கள் போயஸ் தோட்டம் வந்திருந்து பேசினார்கள் என்பது முக்கியமான செய்தி.

ஆகவே இந்த மீண்டும் ஒரு தேசிய முன்னணி என்பது பகிரங்கமாக அறிவிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அதை நுகர்ந்து கொள்ளும் சிறுபான்மை சமூகமும், இடது சாரி சிதனைகளும், மதச்ச்கார்பற்ற சக்திகளும், ஜெயலலிதா அம்மையார் அணிக்கு வாக்களிக்க முன்வருவார்கள். அதுவே இன்றைய ஊழல் எதிர்ப்பு அலைவரிசையில் முதலிடம் பிடிக்கும் என்றும் தெரிகிறது.