Friday, May 6, 2011

ஜன லோக்பால் சட்டம் வந்தாலும், அமுலாக முடியுமா?

லோக்பால் மசோதா ஊழலை ஒழிக்க வருகிறது. சரி. நல்லதுதான். இல்லை. வரவில்லை. 42 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு வராமல் அதை தடுத்துவிட்டார்கள். ஒ. அப்படியா.ஜனலோக்பால் சட்டமானாலும் அமுலாகுமா இப்போது அன்னா ஹசாரே எழுப்பிய நெருப்பில் அது புற்றுயிர் பெறும். நல்லதுதானே. அதற்கு ஆடஹரவாக மக்கள் நாடெங்கும் எழுச்சி பெற்றுள்ளனர் என்று ஊடகங்கள் மூலம் தெரிகிறது. அதுவும் நல்ல அறிகுறிதான். நாட்டிற்கு இப்போது பெரிய இடங்களில் நடக்கும் ஊழலையும் தடுக்க ஒரு சட்டம் வேண்டும் அல்லவா? ஆமாம், ஆமாம். கட்டாயமாக. அதை அன்னா ஹசாரே கொண்டுவருகிறார என கொள்ளலாமா? அவர் எப்படி ஆள் என்று தெரியவில்லையே? அவர் யாரை இருந்தாலும், எப்படிப் பட்டவராய் இருந்தாலும் கொண்டுவரும் ஜனலோக்பால் சட்டம் நல்லதுதானே? உண்மைதான்.

மக்கள் எழுச்சி மூலம், குடிமக்கள் சார்பாக பாதி பேர் மசோதா தயாரிப்பு குழுவில் இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கடைசியாக ஏற்றுக்கொண்டு விட்டதே? ஆமாம், ஆமாம். அதில் இருக்கும் அப்பா சாந்தி பூஷன், மற்றும் மகன் பிரஷாந்த் பூஷன் பற்றி என்னவெல்லாமோ புகார்கள் வந்ததே? அவிஎல்லாம் இந்த அமரசிங் கிளப்பி விட்ட கதை என்கிறார்களே? இல்லாவிட்டாலும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் எந்த அவ்ழக்கிற்கும் பல லட்சம் ஒவ்வொரு அமர்வுக்கும் வாங்குபவர்கள்தானே? ஆனால் இந்த நாட்டின் மேட்டுகுடிகளுக்கு கூட, சமீபத்திய நாட்டின் அவமானம் ஊழல் குற்றங்களில்தான் என்ற கோபம் இருக்கிறதே? அதனால் அவர்களும் இதுபோன்ற மசோதா தாயரிக்க மனதார வருவார்கள்தானே? இருக்கும், இருக்கும்.

அப்படி ஒரு சட்டம் வந்துவிட்டால் இந்த மாபெரும் ஊழல்கள் நடக்காமல் இருந்துவிடுமா? அதுதானே தெரியவில்லை. சரி. நடந்துள்ள ஊழல்களின் பட்டியலிலிருந்து அதன் பண்பு என்ன என்று பார்ப்போம். அதாவது ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதில் ஒரு கோடியே எழுபத்தாறு லட்சம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தும் ஊழல். அதில் லாபம் பெற்றவர்கள் யார்? அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். அவர்கள்தான் இப்போது கமிசன் வாங்கியதற்காக,சிறை கம்பி எண்ணிக்கொண்டு இருக்காங்களே? முழு லாபத்தை பெற்றவர்கள் யார்? அது கார்போரேட்கள். அதாவது உலக பெரும் முதலாளிகள். அந்த முதலாளிகள் இங்கே நுழைய என்ன செய்தார்கள்? நீரா ராடியா போன்ற தனகளது வணிக தரகர்களை இறக்கி விட்டார்கள். அந்த நீரா ராடியா போன்றோர் அது பற்றி என்ன சொல்கிறர்கள்? அது வணிக தர்மம் என்கிறார்கள். அப்படியானால் அது யாருடைய வணிக தர்மம்?

உலக பன்னாட்டு மூலதன நிருவங்கலான கார்போரேட்கள் ஒரு அவ்ங்கத்தை செய்ய, தங்களது போது தொடர்பு அதிகாரி மூலம், எந்தெந்த ஆட்களுக்கு எவ்வளவு தொகைகள் கொடுக்க வேண்டும் என்று திட்டமிடுகிரரகள். அப்படி திட்டமிடுவதும், அதற்கேற்ப கொடுப்பதும் அவர்களது தொழில் தர்மம் என்கிறார்கள். அவ்வாற்று அடித்து கூறும் கார்போறேட்களை உலகம் முழுவதும் இறக்கிவிட்டிருப்பதுதானே உலகமயமாக்கல் கொள்கை. அந்த கொள்கை இருக்கும் வரை, அந்த கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிக்கும் வரை, இந்த கார்பொரேட் வணிகம் கோடி கட்டி பறக்கும். அதற்கு ஏற்றார்போல முடிவு செய்யும் இடத்தில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளுக்கும், கமிசன்கள் போய்சேரும்.

அப்படியானால் இந்த ஜனலோக்பால் சட்டம் வந்தாலும் இத்தகைய ஊழலை ஒழிக்க முடியாதா? இந்த சட்டம் தீவிரமாக அமுலானால் என்னதான் செய்யமுடியும்? ஊழல் செய்த ஒரு அரசியல்வாதியை உள்ளே தள்ள முடியும். ஒரு அதிகாரியை உள்ளே தள்ளமுடியும். அப்புறம்? இன்னொரு அரசியல்வாதி அதே ஊழலை அதிக கமிசனுக்கு செய்வார். இன்னொரு அதிகாரி அதே ஊழலை அதிக கமிசனுக்கு செய்வார். அபப்டியானால் ஊழல் தொடர்வதை இந்த சட்டம் ஒன்றும் செய்ய முடியாதா? ஊழலை தங்களது தொழில் தர்மம் என்று கருதும் கார்போரேட்கள் இருக்கும்வரை ஊழல் தொடர்வதை வேடிக்கை பார்க்கத்தான் முடியும்.

அதற்கு வேறு வ்ழியே கிடையாதா? இந்த கார்போரேட்கள் வருவதற்கு முன்பு, இந்தியா எப்படி இருந்தது? இந்த அளவுக்கு ஊழல் இல்லாமல் இருந்தது. அப்போது பெரும் உதலாளிகள் இந்தியாவில் இல்லாமலா இருந்தார்கள்? இருந்தார்கள். ஆனால் வாய் அடக்கி கொண்டு இருக்கும் நிலை இருந்தது. அதற்கு என்ன சட்டம் உதவியது? "ஏகபோக வணிக கட்டுப்பாடு சட்டம்" [ monopoly Trade Restriction Act ] அதாவது எம்.ஆர்.டி.பி. என்ற சட்டம் இருந்தது. அந்த சட்டம் இப்போது எங்கே போனது? நரசிம்ம ராவ் ஆட்சியில் அமெரிக்க பொருளாதார கொள்கையான காட், டன்கள், மற்றும் உலகமயமாக்கலுக்கான, தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகியவை வந்த போது, மெல்ல, மெல்ல இந்திய அரசு அந்த எம்.ஆர்.டி.பி. சட்டத்தை இல்லாமல் செய்துவிட்டது.

அப்படி ஒரு கடும் சட்டம் வந்தால் நல்லதா? அதுபோல ஒரு " கார்பொரேட் வணிக கட்டுப்பாடு சட்டம்" கொண்டுவராமல், இந்த பெரும் மகா ஊழல்களை தடுக்க எந்த சாத்தியமும் இல்லை. அப்படி சட்டம் வந்தால்தான் ஊழலை செய்த கார்போறேட்களுக்கு அபராதாம் போட்டு, அவர்களை வணிகம் செய்யவிடாமல் தடை கொடுக்கலாம். இந்த உண்மை ஆனா ஹசறேக்கு தெரியாதா? அவர் அரசியல் பொருளாதாரம் பற்றிய அறிவு பெற்றவர் அல்ல. அதுமட்டுமின்றி அவர் கார்போஎட்களுக்கு எதிரான கொள்கை கொடவர்கா தெரியவில்லை. சரி. இந்த விவரம் சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் வகையறாக்களுக்கு விளங்காதா? அவர்கள் தனகளது தொழிலில், தினசரி கார்போறேட்களை சார்ந்து இருப்பவர்கள். அப்படியானால் மறுபடி இந்த விவரத்தை பொதுமக்கள் தான் எடுக்க வேண்டுமா?

Thursday, May 5, 2011

கனிமொழி கைது ஒரு தயாநிதி சதியா?

குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்து இந்த சதி அரங்கேறப் போகிறது. நாளை மே ஆறாம்நாள், டில்லியில் சீ.பி.ஐ. நீதிமன்றத்தில், ஏற்கனவே குற்றப் பட்டிஹ்திரிகையில் சேர்க்கப்பட்ட கனிமொழியும், கலைஞர் காட்சி ஊடக மேலாண்மை இயக்குனர் சரத் குமார் ரெட்டியும், கைது செய்யப்படுவார்கள் என்பதும், அவர்களுக்காக வாதாட நியமிக்கப்படும் ராம்ஜெத்மாலினி எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு பிணை கிடைக்காது என்பதும், மன்னர் குடும்ப தலைவரான தலைவர் கலைஞருக்கு தெரிந்த செய்தியாக இருக்கிறது.

கனிமொழியின் மனச்சாட்சியிடம் பேசினால், தான் நேரடியாக எந்த பரிமாற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதையே அது சொல்கிறது. மூத்தாள் குற்றம் செய்தால் கேட்காது உலகம், ஆனால் இரண்டாம் மனைவி வீட்டு பிள்ளைகள் என்றால் இலகாரம்தான் என்பது தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து, நகரங்கள் வரை உலாவும் ஒருவித நிலப்பிரபுத்துவ பண்பாடு. அதனால்தான் மூத்தாள் வீட்டு பங்கு அறுபது விழுக்காடுஎன்றாலும், மூத்த்டால்தான் பண பரிமாற்ற நேரத்தில் இயக்குனராக இருந்தவர் என்பதும், இன்றும் கலைஞர் காட்சி ஊடக இயக்குனராக இருக்கிறார் என்பதும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், மொத்தால் பிள்ளைகள் ஒருவர் துணை முதல்வர் என்றும், இன்னொருவர் மத்திய அமைச்சர் என்றும் இருப்பதால் அதை காரணம் காட்டி, சம்பந்தப்பட்ட சீ.பி.ஐ.அதிகார்களை ஒருவரால் தற்போதைக்கு இயக்க முடிகிறது என்று சொல்கிறது குடும்ப கணக்கு.

கனிமொழிக்கு நேரடியாக தொடர்பு இல்லையென்றாலும், ராசாத்திக்கு இருக்கிறதல்லவா என்று அந்த டில்லி வட்டாரங்கள் பதில் கேள்வியையும் கேட்கிறார்கள். ஆனால் பங்கு என்பது எல்லோருக்கும் அதாவது அண்ணன், தம்பி எல்லோருக்கும் போயுள்ளதே என்கிறது மறு தரப்பு. எது எப்படியோ இது குடும்பத்திற்குள்ளே இருந்து கொண்டே குழி பறிக்கும் செயல்தானே என்று அந்த தயாநிதி பற்றி அவர்கள் பேசுகிறர்கள். அப்படியானால் டில்லி திஹார் சிறையில் பங்களுக்கு தனி பிரிவு இருக்கிறதா என்றால் அதுவும் இருக்கிறது என்கிறார்கள். அன்கேவ் கனி இருந்தால், அதே இடம் மூத்தாளுகும் கிடைக்க வேண்டுமே என்று நியாயம் பேசுவோர் கேட்கிறார்கள்.

சரி.இது இரண்டவத்சு வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகை அதாவது துணை குற்றப் பத்திரிக்கை எண்: ஒன்று என்றால், அடுத்து துணை குற்றப் பத்திரிக்கை எண்: இரண்டு எனபதில் என்ன வரும் என்று கேட்டோம். அதில் பணம் எடுத்துய் சென்றது வரும். சரி. அப்படியானால் ராஜா மூலம் வந்த கமிசன் பணம் வெளிநாடுகளுக்கு சென்றது பதிவு செய்ய்ப்படும். அதுவும் ஏற்கனவே குற்றப் பத்திரிகையில் உள்ளவர்களை பற்றியே மீண்டும் வரும். அத்தோடு சரியா? என்றால் இல்லை. 2001 ஆம் ஆண்டிலிருந்து .ச்பெக்டறம் விற்பனையில் முதலில் வருபவருக்கு, முதலில் கொடுத்தது என்ற அடிப்படையில் வேண்டிய நிறுவனங்களுக்கு கொடுத்து, அதற்கு பதில் கமிசன் வாங்கி கொண்டதும் வரும் என்றனர். அது என்ன? என்றால், அப்போது அமைச்சராக இருந்த அருண் ஷௌரியும், அடுத்து அமைச்சர்கா இருந்த தயாநிதியும் வருவார்கள் என்றனர். அதில் தயாநிதியின் சன் காட்சி ஊடக டீ.டி.எச்.க்கு, 765 கோடி பணம் கைமாறியது என்ற ஒரு குற்றச்சாட்டும் சேர்க்கப்படும் என்கிறர்கள்.

முதலில் தனது போட்டியாளரான கனிமொழியை ஒழித்து விடலாம் என்றும், பிறகு தனக்கு வருவதற்குள் குழப்பி விடலாம் என்றும் தயா நினைக்கலாம். ஆனால் அவரால் பாதிக்கப்பட்ட டாடா நிர்வாகம் எப்படி சும்மா இருக்கும்? அதுவும் இதே நியாயங்களின் அடிப்படையில் பழி வாங்காதா?

மூன்று கண்டங்களை கடக்க முனையும் முதல்வர்.

இப்போது தமிழக முதல்வருக்கு இதுவரை வாழ்க்கையில் சந்திக்காத இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. கூட்டணி கட்சியுடன் தேர்தலை சந்தித்து பிறகும் கூட, மத்திய கூட்டணி ஆட்சியிலேயே பெறும் துன்பங்களை ஒருசேர சந்திக்கிறார். தனது தலைமையிலான கட்சியில், அண்ணாவால் உருவாக்கப்பட்டு பல முறை தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து, மீண்டும் ஒரு சட்டப்பேரவை தேர்தலை சந்தித்துவிட்டு, இளைப்பாறும் நேரத்தில் இப்படி சோதனையா என்று எண்ணிப்பார்க்க வைக்கிறது. மத்திய அரசில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்புகளுடன் அங்கம் வகிக்கும் கட்சி திமுக.

திமு கழகம் என்பது ஒரு குடும்பம் என்று கலைஞர் சொல்லிவந்த நிலை மாறி, இப்போது தனது குடும்பமே கழகம் என்று கூறும் நிலையை அதாவது குடும்பத்திற்கான உயர் நிலையை அடைந்துவிட்ட காலம் இது. அத்தகைய காலத்திலும் மத்திய அமைச்சர்களில், தனது குடும்பத்தை சேர்ந்த மு.க. அழகிரி, தனது மருமகன் மாறன் மகன் தயாநிதி மாறன், ஆகியோரை அமைச்சர்களாக அமர்த்தி, கலைஞர் அழகு பார்க்கும் காலம் இது. அப்படிப்பட்ட காலத்திலேயே இப்படி ஒரு இன்னலா? அந்த காங்கிரஸ் தலைமையின் நேரடி வழிகாட்டலில் செயல்படும் மத்திய அரசின் இரும்புக் கரமான சீ.பி.ஐ. என்ற ஒரு ஆக்டோபாஸ் பிடியில் தங்கள் குடும்பமும், அதன்மூலம் கழகமும் சிக்கி விட்டதே என்று எண்ணி, எண்ணி, மாய்ந்துகொண்டு இருக்கும் நிலைக்கு கலைஞரை தள்ளியது எந்த சக்தி?

முதலில் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான ஆ.ராஜாவை ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் திஹார் சிறையில் அடைத்துவிட்டனர். அடுத்து மகள் கனிமொழியை சீ.பி.ஐ. தனது ச்பெக்டறம் வழக்கில், துணை குற்றப்பத்திரிகை என்று ஒன்றை உருவாக்கி அதில் சேர்த்துவிட்டனர். அந்த கனிமொழிக்கு மே ஆறாம் நாள் சீ.பி.ஐ. விசாரணை எனும் சமன் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த நேரம் கனிமொழி கைது செய்யப்படுவாரா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக ஆகிவிட்டது. டில்லிக்கு கனிமொழியுடன் கழக எம்.பி..க்கள் டி.கே.எஸ்.இளங்கோவனும், டி.ஆர்.பாலுவும் சென்றுள்ளனர்.அடுத்து ராஜாத்தி அம்மாள், விஜயா தாயன்பன், மாநில அமைச்சர் பூங்கோதை ஆகியோருடன் மாநில உள்துறை செயலாளர் ஞானதேசிகனும் சென்றதாக ஒரு செய்தி. அது உண்மையானால் அதுகூட எதிர்காலத்தில் இன்னொரு குட்ரகுச்சாட்டாக எழுந்துவிடும். அரசு அதிகாரிகளை தனது குடும்ப பிரச்னைக்கு பயன்படுத்தினார் என்று கூட குற்றச்சாட்டு எழலாம்.

எப்படியோ இந்த முதல் கண்டமான மே ஆறாம் நாள் எனபதை கடக்கவேண்டுமே என்று கலைஞர் நினைக்கிறார். அடுத்து அதில் கைது செய்யப்பட்டாலோ, அல்லது பிணையில் வந்தாலோ, அடுத்து மே பன்னிரெண்டாம் நாள், அமுலாகக பிரிவு கனிமொழிக்கு நேரில் ஆஜராக சமன் அனுப்பியுள்ளது. அதில் என்ன நடக்குமோ என்பது இரண்டாம் கண்டம் என்று அவருக்கு படும். அதையும் அடுத்து மூன்றாம் கண்டம் மே பதிமூன்றாம் நாள் வெளிவரப்போகும் தேர்தல் முடிவுகள். அதில் தானும், தனது குடும்பமும் [ கட்சியும்] ஆட்சியை இழந்தால் உறுதியாக வழக்குகளில் பின்னப்பட்டு சிறைஎக வேண்டியிருக்கும் என்பதும் இன்னொரு புறம் மிரட்டிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்த பகுத்தறிவுவாதிக்கு, மூன்று கண்டங்களை இந்த மாதம் கடக்க செய்துள்ளது.

Wednesday, May 4, 2011

பூந்தமல்லி சிறைவாசிகளுக்கு தீர்வா?

நேற்று துணை மாவட்ட ஆட்சி தலைவர் கொடுத்த வாக்குறுதிகளை ஒட்டி, பட்டிநிபோரில் ஈடுபட்டிருந்த ஈழ அகதிகள் சிறைக்குலேயே பட்டினிபோரை முடிவுக்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து தமிழக அரசு, ஈழ அகதிகளை பூந்தமல்லி சிறப்பு முகாம் என்ற பெயரில், சிறையில் அடைத்து வைத்திரு எதிர்த்து சிறைக்குலேயே பட்டினிப்போர் நடத்தி, பலமுறை வாக்குறுத் அடிப்படையில் அதை முடித்துக் கொண்ட சிறைவாசிகள் இந்த முறை அங்கள் போராட்டத்தை சாகும்வரை நீடிப்பதாகவும், வருகிற பதினைந்தாம் நாளுக்குள் பதில் வராவிட்டால் உயிரை விட முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

அதையொட்டி அவர்களுக்கு ஆதரவாக வெளியே தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு போராட்டத்திற்கு, " நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம்" அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்கியபோது கைது செய்யப்பட்டு, விடுதலையானதும், தமிழக அரசுக்கு புதிய தலைவலியை கொடுத்தது. அதையே வின் காட்சி ஊடகத்தில் விளக்கும் போது, நேற்றைய நிகழ்ச்சியில், கலைஞர் ஆட்சியின் கடைசீ காலத்திலாவது, மனித உரிமைகளை மதித்து நடக்க கூடாதா? என்று வினவி இருந்தார்கள்.தங்கள் மீதான வழக்குகளில் குற்ற பத்திரிக்கை அளிக்க கோரியும், பிணையில் விடுவிக்க கோரியும் தானே ஈழ அகதிகள் போராடுகிறார்கள் என்றும் எடுத்துரைத்து இருந்தனர்.உலக தமிழர்கள் மத்தியில் இதிலாவது கலைஞர் நற்பெயர் வாங்க முயற்சிக்க கூடாதா என கேட்டிருந்தனர். ஊடக பரப்புரைகளை கவனமாக கவனிக்கும் தமிழக முதல்வர், தான் டில்லியுடன் சண்டை போடும் நேரத்தில், மே ஆறாம் நாளும், மே பதின்மூன்றாம் தனது தலைக்கு மேல் வாளாக தொங்கும் நேரத்தில், இந்த ஈழ அகதிகள் விசயத்திலும் தொடர்ந்து மத்திய அரசை மகிழ்விக்க வேண்டி, தமிழர் விரோத போக்குகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமா? என்று எண்ணினாரோ தெரியவில்லை.

நேற்றே சிறையில் உள்ள ஒரு சந்திரகுமாருக்கு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டு, மற்ற இருவருக்கு சில நாட்களில் தாக்கல் செய்யப்படும் என்றும், வழக்கே இல்லாத ஒருவருக்கு விடுதலை செய்யப்படும் என்றும் உறுதி கொடுத்துள்ளனர். இதுவே அந்த சிறைவாசிகளை பட்டினி போரை திரும்ப பெற செய்துவிட்டது.

Monday, May 2, 2011

ஒசாமாவை கொல்ல சொன்னது ஒபாமாவின் அரசியலா?

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் நள்ளிரவில் நடந்த அமெரிக்காவின் அதிரடிப் படை தாக்குதல் வெற்றி. இது பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி என்கிறது அமெரிக்கா. பின்லேடன் ஆப்கானிஸ்தான் காடுகளிலும், மலைகளிலும் மறைந்து வாழவதாக அமெரிக்க கூறிவந்தது பொய்யா? உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதி என்று ஒரு பிம்பத்தை அமெரிக்கா பின் லேடனுக்கு உருவாக்கி கொடுத்திருந்தது. அதனால்தான் அவர் காடுகளிலும், மலைகளிலும் வாழ்கிறார் என்று வசனம் எழுதினார்கள்.

இப்போது அப்படி கூறியது ஒரு " கண் துடிப்பா" என்ற விவாதம் துவங்கியுள்ளது. இப்போது ஒசாமா பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தின் அருகே உள்ள இடத்திலேயே வாழ்ந்தார் என்றும், சுட்டு கொல்லப்பட்டார் என்றும் அமெரிக்க கூறுகிறது. எண்ணூறு மீட்டர் தூரத்தில் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் இருந்தது என்று தெரிய வந்துள்ளது. அப்படியானால் பாகிஸ்தான் ராணுவம்தான் அந்த இடத்தில் அவரை வைத்து பாதுகாத்து வந்ததா? பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் அமெரிக்க இந்த ராணுவ நடவடிக்கையை எடுத்ததாம். யார் காதில் யார் பூ வைக்க இருக்கிறார்கள்?

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கூறுகிறார்: பாகிஸ்தான் இந்த ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்காவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து என்று.அப்படியானால் இது அமெரிக்காவும், பாகிஸ்தானும் சேர்ந்து நடத்திய தாக்குதலா? திடீரென பாகிஸ்தானில் தலைநகர் அருகே அதுவும், ராணுவ தலைமையகம் அருகே அமெரிக்கா வந்து ஒரு நள்ளிரவு தாக்குதலை நடத்துமாம், பாக். அரசுக்கு தெரியாமலே, பாக். ராணுவத்திற்கு தெரியாமலே அது நடக்குமாம். பாக். ராணுவம் தலையிடாமல் அந்த நடவடிக்கை வெற்றி அடையுமாம். எல்லோரும் நம்பவேண்டும்.

ஏப்ரல் 29 ஆம் நாளே அமெரிக்க அதிபர் ஒபமா கையெழுத்திட்ட நடவடிக்கை இது. என்ன நடவடிக்கை? ஒசாமாவை கைது செய்ய, உயிரோடு பிடித்துவர நடவடிக்கை இல்லை. " கொலை செய்ய" நடவடிக்கையில் கைஎழுத்திட்டாராம். ஏன் அவரை உயிரோடு பிடிக்க முயலவில்லை? அவர் இறந்ததும் ஏன் அவரது உடலை உலக மக்களுக்கு காட்டவில்லை? ஏன் அவசர,அவசரமாக ஒசாமா உடலை டி.ஏன்.ஏ. செய்தார்கள்? அபப்டி டி.ஏன்.ஏ. வை சில மணி நேரத்திற்குள் செய்யமுடியாது என்று நமது " தடவியல் நிபுணர் சந்திரசேகர்" கூறுகிறாரே? அப்படியானால் அதுவும் உணமையில்லையா? ஏன் அவரது உடலை ஆப்கான் கொண்டுசென்று கடலில் புதைக்க வேண்டும்?

ஒசாமா உண்மையில் அங்கே இருந்திருந்திருந்தால், அவர்தான் உலக பயங்கரவாதி என்பது உண்மையானால், அவரை உயிரோடு பிடிக்க முயலவேண்டும். அல்லது அவரது உடலை உலக நாடுகளுக்கும், ஊடகங்களுக்கும் காட்டவேண்டும். அவற்றையெல்லாம் செய்யாத அமெரிக்கா அவசர,அவசரமாக ஏன் இத்தனை காரியங்களை செய்யவேண்டும்? ஓசமா உண்மையில் உயிரோடு இருந்தாரா? இல்லை. இயற்கையாக இறந்துவிட்டார் ஏற்கனவே என்று அமெரிக்காவுக்கு தெரியுமா? அதனால்தான் இப்படி ஒரு நாடகமா? அதன்மூலம் ஒபாமாவிற்கு புதிய புகழ் வரவேண்டுமா?

ஓசம்மா தான் கொல்லப்பட்டவர் என்றால், அவர் ஏன் தனது மாபெரும் பயங்கரவாத அமைப்பை விட்டுவிட்டு தனியே தங்க வேண்டும்? அவர் ஏற்கனவே தனக்கு பின்னால் ஒரு தலைமையை ஏற்படுத்திவிட்டு, வயதான காலத்தில் தனக்கு ஒய்வு வேண்டும் என்று பாகிஸ்தான் பங்களாவில் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்தாரா? அது அமெரிக்காவிற்கு தெரிந்தும்செத்தபாம்பைஅடிப்பதுபோலஒருநடவடிகையா? 'உலகவணிகமைய"தாக்குதலை அமெரிக்காவில் நடத்தியதற்கு மூளையாக இருந்தவர் என்று கருதப்படுவதாக ஊடகங்கள் சொல்கின்றனவே? அதுவும் உறுதி செய்யப்படாததுதானா?

இத்தனை சந்தேகம் நமக்கு ஏன் வருகிறது? ஒருபுறம் டிஸ்கவரி அலைவரிசையில் ஈராக்கில் நடந்த அமெரிக்க சேட்டைகள் முழுவதும் நாடகம்தான் என்று போட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததனால் வந்ததா? ஈராக்கில் "பேரழிவு ஆயுதங்கள் இருந்தன" என்பது முழுபொய் என்று இப்போது பிரான்ஸ் நாட்டு சார்பாகவும், ஐ.நாவில் காலின் பவுல் சொன்னது பூரா போய் என்றும் இப்போது டிஸ்கவரி அலைவரிசை அமபலப்படுத்துகிறதே? அதுபோல இந்த ஒசாமா கொலையும் பின் ஒருநாள் வெளியாகுமா?

எது எப்படியோ. ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. ஒபாமாவிற்கு அமெரிக்காவில் ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் எதிர் கட்சி செல்வாக்கு கூடிவருகிறது. அமெரிக்க செனட்டிலும் ஆதரவு குறைந்து வருகிறது. இப்போது ஏதாவது நாடகம் நடத்தி, தனது செல்வாக்கய் கூட்டிக்கொள்ள வேண்டும். இது அமெரிக்க அதிபருக்கு இருக்கும் கட்டாய சூழல். அதற்கு அமெரிக்கக் மக்களது நாடி, நரம்புகளை ஆராய்ந்தால், " பயங்கரவாத எதிர்ப்பு உணர்வு" அங்கே செல்வாக்கு செலுத்துகிறது. அதை இந்த கருப்பு புஷ் கையிலெடுக்க வேண்டும். இது ஒபாமாவிற்கு உள்ள நிர்ப்பந்தம்.

தானே கையெழுத்து போட்டு, மாபெரும் பயங்கரவாதியை, அதுவும் உலக பயங்கரவாதி என்று அமெரிகாவாலேயே அதீதமாக மிகைப்படுத்தப்பட்டவரை, அழித்தொழித்தார் என்ற பெரிய புகழ் சாதாரணமாக கிடைக்குமா? அவரை அதாவது அப்படி ஒரு பயங்கரவாதியை ஆப்கான் காடுகளில் போய் அழிப்பது எளிதாக சாத்தியமில்லை. அதனால்தான் அவரை பாகிஸ்தான் நகர் பகுதியில் தயார் செய்தார்களா? எப்படியானாலும் அமெரிக்க மக்களது பெரும்பான்மை ஆதரவை இன்று ஒபமா பெற்றுவிட்டார். அவருக்கும், அவரது அரசியலுக்கும் ஒரு மாபெரும் வெற்றி.

பேராசிரியர் சரஸ்வதி கைது.

ஈழ அகதிகளை பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாம் என்றபெயரில் ஒரு கொடுஞ்சிறைக்குள், தமிழக அரசு வைத்து பூட்டியுள்ளது. அந்த ஈழ அகதிகள் சிறிய, சிறிய குற்றங்கள் சாட்டப்பட்டு, அதற்கான நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து செல்லப்படுபவர்கள். அவர்கள் தொடர்ந்து தாங்கள் தங்களது குடும்பங்களுடன் சேர்ந்து இருக்க முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் தங்களது வழக்கை தொடர்ந்து நடத்துவோம் என்றும் பல முறை தமிழக முதல்வர் கலைஞரிடம் முறையிட்டு விட்டனர். ஈவிறக்கம் இல்லாத தமிழக அரசு, அவர்களை தேவையிலாமல் விசாரணை காலத்திற்கும் பிணையில் விட மறுத்து, சிறப்பு அகதிகள் முகாம் என்ற பெயரில் பூன்னமல்லீ சிறையில் வைத்துள்ளார்கள்.

பல முறை தங்களது பிணை விடுதலைக்காக அவர்கள் பட்டினி போர் நடத்தியும் கூட, தனக்கு உள்ள புலிகள் மீதான வெறுப்பை மனதில் கொண்டு தமிழக முதல்வர் அவர்களது பிணை விடுதலைக்கு கூட இணங்கவில்லை. ஏற்கனவே ராஜிவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டவர்கள், இதே பூந்தமல்லி சிறையில் அதாவது சிறப்பு சிறையில் தனிமைசிறையில்வைக்கப்பட்டிருந்த போது, உச்சநீதிமன்றம் அதை எதிர்த்து கருத்து சொன்னது. விசாரண காலத்தில் ஏதோ கடும் தண்டனை கைதி போல அவர்களை, பூந்தமல்லி சிறையில் தனிமை சிறையில் வைக்க கூடாது என்றது.

அதே சிறைக்கூடம்தான் இப்போது இந்த சிறிய விசாரணை கைதிகளுக்கு அடைக்கப்படும் இடமாக அமைந்திருக்கிறது. இத்தகைய மனித உரிமை மீறலை தமிழக முதல்வர் சர்வ சாதரணமாக செய்து வருகிறார். இதை எதிர்த்து தங்களை பிணை விடுதலை செய்ய கோரி அந்த ஈழ தேச தமிழர்கள் பூந்தமல்லி சிறையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சோறு, தண்ணி இல்லாமல் பட்டினி போர் நடத்தி வருகிறார்கள். இதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய கோரியும், தமிழ் உணர்வாளர்கள் நடத்திய பட்டினி போரில், நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையத்தின் அமைப்பாளர், பேரா. சரஸ்வதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த பட்டினி போரில் இன்று முப்பது தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறிய தமிழக காவல்துறையினர், அவர்களை குமணன் சாவடி அருகே, பூந்தமல்லி சிறை முன்பு கைது செய்து அங்குள்ள " பூந்தமல்லி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில்" அடைத்து வைத்துள்ளனர். இதை கண்டித்தும், அகதிகளை விடுதலை செய்ய கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தந்திகள் அனுப்ப உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Saturday, April 30, 2011

கொழும்புக்கு சென்னை கொடுத்த பதிலடி.

இன்று ஏப்ரல் கடைசி நாளன்று, சென்னை தமிழ்நாடு சார்பாக , கொழும்புக்கு எதிராக திரண்டு வந்தது. அதாவது நாளை மே முதல் நாளன்று மஹிந்த ராஜபக்ஷே , ஐ.நா.வின் நிபுணர் குழு அறிககையை எத்ரித்து பெறும் பிணியை நடத்த இருப்பதாக செய்தி வந்தபோது, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு கொந்தளித்தது அதன் விளைவாக " நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம்" ஒரு பேரணியை ராஜபக்சேக்கு எதிராக, அவர் மீதானா ஐ.ந. நிபுணர் குழு முன்வைத்த ' போர்குற்றங்களை விசாரித்து தண்டிக்க வேண்டி, அகில உலக சமூகத்தை கேட்டுக்கொண்டு" ஒரு பேரணியை முந்திய நாளான ஏப்ரல் முப்பதிலேயே நடத்த திட்டமிட்டனர். தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்க, மீனவர் தலைவர் அமரர் ஜீவரத்தினம் மகள் டாக்டர் பானுமதி பாஸ்கர் துவக்க உரை நிகழ்த்த , பேரணி சரியாக குறிப்ப்பிட்ட நான்கு மணிக்கே, சென்னை கடற்கரை கண்ணகி சிலையிலிருந்து தொடங்கியது.

ஊர்வலத்தில் பல தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டாலும், சிறப்பு அம்சமாக, பல்வேறு மீனவர் அமைப்புகளும், மனித நேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய தௌஹித் ஜாமாத், போன்ற முஸ்லிம் தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டது முக்கிய செய்தியாகும். அது தவிர தமிழக மீனவர்கள், இந்தியா மட்டைபந்து விளையாட்டில் வெற்றி பெற்றதற்காக, சிங்கள கடல்படை வெறியர்களால் அன்று இரவே கொலை செய்யப்பட்டு அவரகளது உடல்கள் சின்ன, பின்னப்படுத்தப்பட்டு கடலில் எறியப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ராமேஸ்வரம்--தங்கச்சி மடத்தை சேர்ந்த நான்கு மீனவர்களான கொல்லப்பட்ட விட்சன், அன்தனிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகியோரது படங்களை மீனவ இளைஞர்கள் தூக்கி வர, அவற்றிக்கு பானுமதி பாஸ்கர் மாலை அணிவித்து மலர்கள் தூவ, மடர்வர்களும் மலர்கள் தூவிய காட்சி வந்திருந்த அனைவர் மனிதிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த ராஜபக்ஷே உருவம் அணிந்த ஒருவர் கைது செய்யப்பட்டு இழுத்துவரப்பட்டது சிறப்பாக இருந்தது. முஸ்லிம் அமைப்புகளின் கொடிகள், தமிழர் அமைப்புகள் கொடிகள், மற்றும் பல மீனவர் அமைப்புகளின் கொடிகள் அங்கே குவிந்து வந்தது முழு தமிழகமும் வந்தது போல இருந்தது. புதிய தமிழகம் கோடிகளுடன் கலந்து கொண்டது. நாம் தமிழர் அமைப்பு கோடிகளுடன் கலந்து கொண்டது. தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம், இந்திய மீனவர் சங்கம், அகில இந்திய பாரம்பர்ய மீனவர் சங்கம், தென்னிதிய மீனவர் பேரவை, போன்ற பல மீனவர் அமைப்புகளுடன், காஞ்சி மக்கள் மன்றம், காஞ்சி தமிழர் உலகம், ஆகியனவும், யாதவர் மஹாசபாவும், கட்டிட தொழிலாளர் சங்கமும், கலந்து கொண்டன. இறுதியில் ஒவ்வொரு அமைப்பை செர்ந்டஹ்வைர்களும் கண்டன உரை நிகழ்த்தினர். பெண்கள் அதிகம் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் ராகவேலு, அருள், பாண்டிமாதேவி, அஜிதா, ஆகியோரும் கலந்துகொண்டனர். தியாகு, டி.எஸ்.எஸ். மணி, விடுதலை ராஜேந்திரன், குணசீலன், தயாளன், மகேஷ், ரூபேஷ், கபடி மாறன், அயோத்தியா குப்பம் மக்கள், தமீம் அன்சாரி, எஸ்.எம்.பாகர், திரைப்பட இயக்குனர் கௌதமன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.