Thursday, May 5, 2011

மூன்று கண்டங்களை கடக்க முனையும் முதல்வர்.

இப்போது தமிழக முதல்வருக்கு இதுவரை வாழ்க்கையில் சந்திக்காத இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. கூட்டணி கட்சியுடன் தேர்தலை சந்தித்து பிறகும் கூட, மத்திய கூட்டணி ஆட்சியிலேயே பெறும் துன்பங்களை ஒருசேர சந்திக்கிறார். தனது தலைமையிலான கட்சியில், அண்ணாவால் உருவாக்கப்பட்டு பல முறை தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து, மீண்டும் ஒரு சட்டப்பேரவை தேர்தலை சந்தித்துவிட்டு, இளைப்பாறும் நேரத்தில் இப்படி சோதனையா என்று எண்ணிப்பார்க்க வைக்கிறது. மத்திய அரசில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்புகளுடன் அங்கம் வகிக்கும் கட்சி திமுக.

திமு கழகம் என்பது ஒரு குடும்பம் என்று கலைஞர் சொல்லிவந்த நிலை மாறி, இப்போது தனது குடும்பமே கழகம் என்று கூறும் நிலையை அதாவது குடும்பத்திற்கான உயர் நிலையை அடைந்துவிட்ட காலம் இது. அத்தகைய காலத்திலும் மத்திய அமைச்சர்களில், தனது குடும்பத்தை சேர்ந்த மு.க. அழகிரி, தனது மருமகன் மாறன் மகன் தயாநிதி மாறன், ஆகியோரை அமைச்சர்களாக அமர்த்தி, கலைஞர் அழகு பார்க்கும் காலம் இது. அப்படிப்பட்ட காலத்திலேயே இப்படி ஒரு இன்னலா? அந்த காங்கிரஸ் தலைமையின் நேரடி வழிகாட்டலில் செயல்படும் மத்திய அரசின் இரும்புக் கரமான சீ.பி.ஐ. என்ற ஒரு ஆக்டோபாஸ் பிடியில் தங்கள் குடும்பமும், அதன்மூலம் கழகமும் சிக்கி விட்டதே என்று எண்ணி, எண்ணி, மாய்ந்துகொண்டு இருக்கும் நிலைக்கு கலைஞரை தள்ளியது எந்த சக்தி?

முதலில் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான ஆ.ராஜாவை ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் திஹார் சிறையில் அடைத்துவிட்டனர். அடுத்து மகள் கனிமொழியை சீ.பி.ஐ. தனது ச்பெக்டறம் வழக்கில், துணை குற்றப்பத்திரிகை என்று ஒன்றை உருவாக்கி அதில் சேர்த்துவிட்டனர். அந்த கனிமொழிக்கு மே ஆறாம் நாள் சீ.பி.ஐ. விசாரணை எனும் சமன் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த நேரம் கனிமொழி கைது செய்யப்படுவாரா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக ஆகிவிட்டது. டில்லிக்கு கனிமொழியுடன் கழக எம்.பி..க்கள் டி.கே.எஸ்.இளங்கோவனும், டி.ஆர்.பாலுவும் சென்றுள்ளனர்.அடுத்து ராஜாத்தி அம்மாள், விஜயா தாயன்பன், மாநில அமைச்சர் பூங்கோதை ஆகியோருடன் மாநில உள்துறை செயலாளர் ஞானதேசிகனும் சென்றதாக ஒரு செய்தி. அது உண்மையானால் அதுகூட எதிர்காலத்தில் இன்னொரு குட்ரகுச்சாட்டாக எழுந்துவிடும். அரசு அதிகாரிகளை தனது குடும்ப பிரச்னைக்கு பயன்படுத்தினார் என்று கூட குற்றச்சாட்டு எழலாம்.

எப்படியோ இந்த முதல் கண்டமான மே ஆறாம் நாள் எனபதை கடக்கவேண்டுமே என்று கலைஞர் நினைக்கிறார். அடுத்து அதில் கைது செய்யப்பட்டாலோ, அல்லது பிணையில் வந்தாலோ, அடுத்து மே பன்னிரெண்டாம் நாள், அமுலாகக பிரிவு கனிமொழிக்கு நேரில் ஆஜராக சமன் அனுப்பியுள்ளது. அதில் என்ன நடக்குமோ என்பது இரண்டாம் கண்டம் என்று அவருக்கு படும். அதையும் அடுத்து மூன்றாம் கண்டம் மே பதிமூன்றாம் நாள் வெளிவரப்போகும் தேர்தல் முடிவுகள். அதில் தானும், தனது குடும்பமும் [ கட்சியும்] ஆட்சியை இழந்தால் உறுதியாக வழக்குகளில் பின்னப்பட்டு சிறைஎக வேண்டியிருக்கும் என்பதும் இன்னொரு புறம் மிரட்டிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்த பகுத்தறிவுவாதிக்கு, மூன்று கண்டங்களை இந்த மாதம் கடக்க செய்துள்ளது.

Wednesday, May 4, 2011

பூந்தமல்லி சிறைவாசிகளுக்கு தீர்வா?

நேற்று துணை மாவட்ட ஆட்சி தலைவர் கொடுத்த வாக்குறுதிகளை ஒட்டி, பட்டிநிபோரில் ஈடுபட்டிருந்த ஈழ அகதிகள் சிறைக்குலேயே பட்டினிபோரை முடிவுக்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து தமிழக அரசு, ஈழ அகதிகளை பூந்தமல்லி சிறப்பு முகாம் என்ற பெயரில், சிறையில் அடைத்து வைத்திரு எதிர்த்து சிறைக்குலேயே பட்டினிப்போர் நடத்தி, பலமுறை வாக்குறுத் அடிப்படையில் அதை முடித்துக் கொண்ட சிறைவாசிகள் இந்த முறை அங்கள் போராட்டத்தை சாகும்வரை நீடிப்பதாகவும், வருகிற பதினைந்தாம் நாளுக்குள் பதில் வராவிட்டால் உயிரை விட முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

அதையொட்டி அவர்களுக்கு ஆதரவாக வெளியே தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு போராட்டத்திற்கு, " நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம்" அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்கியபோது கைது செய்யப்பட்டு, விடுதலையானதும், தமிழக அரசுக்கு புதிய தலைவலியை கொடுத்தது. அதையே வின் காட்சி ஊடகத்தில் விளக்கும் போது, நேற்றைய நிகழ்ச்சியில், கலைஞர் ஆட்சியின் கடைசீ காலத்திலாவது, மனித உரிமைகளை மதித்து நடக்க கூடாதா? என்று வினவி இருந்தார்கள்.தங்கள் மீதான வழக்குகளில் குற்ற பத்திரிக்கை அளிக்க கோரியும், பிணையில் விடுவிக்க கோரியும் தானே ஈழ அகதிகள் போராடுகிறார்கள் என்றும் எடுத்துரைத்து இருந்தனர்.உலக தமிழர்கள் மத்தியில் இதிலாவது கலைஞர் நற்பெயர் வாங்க முயற்சிக்க கூடாதா என கேட்டிருந்தனர். ஊடக பரப்புரைகளை கவனமாக கவனிக்கும் தமிழக முதல்வர், தான் டில்லியுடன் சண்டை போடும் நேரத்தில், மே ஆறாம் நாளும், மே பதின்மூன்றாம் தனது தலைக்கு மேல் வாளாக தொங்கும் நேரத்தில், இந்த ஈழ அகதிகள் விசயத்திலும் தொடர்ந்து மத்திய அரசை மகிழ்விக்க வேண்டி, தமிழர் விரோத போக்குகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமா? என்று எண்ணினாரோ தெரியவில்லை.

நேற்றே சிறையில் உள்ள ஒரு சந்திரகுமாருக்கு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டு, மற்ற இருவருக்கு சில நாட்களில் தாக்கல் செய்யப்படும் என்றும், வழக்கே இல்லாத ஒருவருக்கு விடுதலை செய்யப்படும் என்றும் உறுதி கொடுத்துள்ளனர். இதுவே அந்த சிறைவாசிகளை பட்டினி போரை திரும்ப பெற செய்துவிட்டது.

Monday, May 2, 2011

ஒசாமாவை கொல்ல சொன்னது ஒபாமாவின் அரசியலா?

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் நள்ளிரவில் நடந்த அமெரிக்காவின் அதிரடிப் படை தாக்குதல் வெற்றி. இது பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி என்கிறது அமெரிக்கா. பின்லேடன் ஆப்கானிஸ்தான் காடுகளிலும், மலைகளிலும் மறைந்து வாழவதாக அமெரிக்க கூறிவந்தது பொய்யா? உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதி என்று ஒரு பிம்பத்தை அமெரிக்கா பின் லேடனுக்கு உருவாக்கி கொடுத்திருந்தது. அதனால்தான் அவர் காடுகளிலும், மலைகளிலும் வாழ்கிறார் என்று வசனம் எழுதினார்கள்.

இப்போது அப்படி கூறியது ஒரு " கண் துடிப்பா" என்ற விவாதம் துவங்கியுள்ளது. இப்போது ஒசாமா பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தின் அருகே உள்ள இடத்திலேயே வாழ்ந்தார் என்றும், சுட்டு கொல்லப்பட்டார் என்றும் அமெரிக்க கூறுகிறது. எண்ணூறு மீட்டர் தூரத்தில் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் இருந்தது என்று தெரிய வந்துள்ளது. அப்படியானால் பாகிஸ்தான் ராணுவம்தான் அந்த இடத்தில் அவரை வைத்து பாதுகாத்து வந்ததா? பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் அமெரிக்க இந்த ராணுவ நடவடிக்கையை எடுத்ததாம். யார் காதில் யார் பூ வைக்க இருக்கிறார்கள்?

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கூறுகிறார்: பாகிஸ்தான் இந்த ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்காவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து என்று.அப்படியானால் இது அமெரிக்காவும், பாகிஸ்தானும் சேர்ந்து நடத்திய தாக்குதலா? திடீரென பாகிஸ்தானில் தலைநகர் அருகே அதுவும், ராணுவ தலைமையகம் அருகே அமெரிக்கா வந்து ஒரு நள்ளிரவு தாக்குதலை நடத்துமாம், பாக். அரசுக்கு தெரியாமலே, பாக். ராணுவத்திற்கு தெரியாமலே அது நடக்குமாம். பாக். ராணுவம் தலையிடாமல் அந்த நடவடிக்கை வெற்றி அடையுமாம். எல்லோரும் நம்பவேண்டும்.

ஏப்ரல் 29 ஆம் நாளே அமெரிக்க அதிபர் ஒபமா கையெழுத்திட்ட நடவடிக்கை இது. என்ன நடவடிக்கை? ஒசாமாவை கைது செய்ய, உயிரோடு பிடித்துவர நடவடிக்கை இல்லை. " கொலை செய்ய" நடவடிக்கையில் கைஎழுத்திட்டாராம். ஏன் அவரை உயிரோடு பிடிக்க முயலவில்லை? அவர் இறந்ததும் ஏன் அவரது உடலை உலக மக்களுக்கு காட்டவில்லை? ஏன் அவசர,அவசரமாக ஒசாமா உடலை டி.ஏன்.ஏ. செய்தார்கள்? அபப்டி டி.ஏன்.ஏ. வை சில மணி நேரத்திற்குள் செய்யமுடியாது என்று நமது " தடவியல் நிபுணர் சந்திரசேகர்" கூறுகிறாரே? அப்படியானால் அதுவும் உணமையில்லையா? ஏன் அவரது உடலை ஆப்கான் கொண்டுசென்று கடலில் புதைக்க வேண்டும்?

ஒசாமா உண்மையில் அங்கே இருந்திருந்திருந்தால், அவர்தான் உலக பயங்கரவாதி என்பது உண்மையானால், அவரை உயிரோடு பிடிக்க முயலவேண்டும். அல்லது அவரது உடலை உலக நாடுகளுக்கும், ஊடகங்களுக்கும் காட்டவேண்டும். அவற்றையெல்லாம் செய்யாத அமெரிக்கா அவசர,அவசரமாக ஏன் இத்தனை காரியங்களை செய்யவேண்டும்? ஓசமா உண்மையில் உயிரோடு இருந்தாரா? இல்லை. இயற்கையாக இறந்துவிட்டார் ஏற்கனவே என்று அமெரிக்காவுக்கு தெரியுமா? அதனால்தான் இப்படி ஒரு நாடகமா? அதன்மூலம் ஒபாமாவிற்கு புதிய புகழ் வரவேண்டுமா?

ஓசம்மா தான் கொல்லப்பட்டவர் என்றால், அவர் ஏன் தனது மாபெரும் பயங்கரவாத அமைப்பை விட்டுவிட்டு தனியே தங்க வேண்டும்? அவர் ஏற்கனவே தனக்கு பின்னால் ஒரு தலைமையை ஏற்படுத்திவிட்டு, வயதான காலத்தில் தனக்கு ஒய்வு வேண்டும் என்று பாகிஸ்தான் பங்களாவில் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்தாரா? அது அமெரிக்காவிற்கு தெரிந்தும்செத்தபாம்பைஅடிப்பதுபோலஒருநடவடிகையா? 'உலகவணிகமைய"தாக்குதலை அமெரிக்காவில் நடத்தியதற்கு மூளையாக இருந்தவர் என்று கருதப்படுவதாக ஊடகங்கள் சொல்கின்றனவே? அதுவும் உறுதி செய்யப்படாததுதானா?

இத்தனை சந்தேகம் நமக்கு ஏன் வருகிறது? ஒருபுறம் டிஸ்கவரி அலைவரிசையில் ஈராக்கில் நடந்த அமெரிக்க சேட்டைகள் முழுவதும் நாடகம்தான் என்று போட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததனால் வந்ததா? ஈராக்கில் "பேரழிவு ஆயுதங்கள் இருந்தன" என்பது முழுபொய் என்று இப்போது பிரான்ஸ் நாட்டு சார்பாகவும், ஐ.நாவில் காலின் பவுல் சொன்னது பூரா போய் என்றும் இப்போது டிஸ்கவரி அலைவரிசை அமபலப்படுத்துகிறதே? அதுபோல இந்த ஒசாமா கொலையும் பின் ஒருநாள் வெளியாகுமா?

எது எப்படியோ. ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. ஒபாமாவிற்கு அமெரிக்காவில் ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் எதிர் கட்சி செல்வாக்கு கூடிவருகிறது. அமெரிக்க செனட்டிலும் ஆதரவு குறைந்து வருகிறது. இப்போது ஏதாவது நாடகம் நடத்தி, தனது செல்வாக்கய் கூட்டிக்கொள்ள வேண்டும். இது அமெரிக்க அதிபருக்கு இருக்கும் கட்டாய சூழல். அதற்கு அமெரிக்கக் மக்களது நாடி, நரம்புகளை ஆராய்ந்தால், " பயங்கரவாத எதிர்ப்பு உணர்வு" அங்கே செல்வாக்கு செலுத்துகிறது. அதை இந்த கருப்பு புஷ் கையிலெடுக்க வேண்டும். இது ஒபாமாவிற்கு உள்ள நிர்ப்பந்தம்.

தானே கையெழுத்து போட்டு, மாபெரும் பயங்கரவாதியை, அதுவும் உலக பயங்கரவாதி என்று அமெரிகாவாலேயே அதீதமாக மிகைப்படுத்தப்பட்டவரை, அழித்தொழித்தார் என்ற பெரிய புகழ் சாதாரணமாக கிடைக்குமா? அவரை அதாவது அப்படி ஒரு பயங்கரவாதியை ஆப்கான் காடுகளில் போய் அழிப்பது எளிதாக சாத்தியமில்லை. அதனால்தான் அவரை பாகிஸ்தான் நகர் பகுதியில் தயார் செய்தார்களா? எப்படியானாலும் அமெரிக்க மக்களது பெரும்பான்மை ஆதரவை இன்று ஒபமா பெற்றுவிட்டார். அவருக்கும், அவரது அரசியலுக்கும் ஒரு மாபெரும் வெற்றி.

பேராசிரியர் சரஸ்வதி கைது.

ஈழ அகதிகளை பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாம் என்றபெயரில் ஒரு கொடுஞ்சிறைக்குள், தமிழக அரசு வைத்து பூட்டியுள்ளது. அந்த ஈழ அகதிகள் சிறிய, சிறிய குற்றங்கள் சாட்டப்பட்டு, அதற்கான நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து செல்லப்படுபவர்கள். அவர்கள் தொடர்ந்து தாங்கள் தங்களது குடும்பங்களுடன் சேர்ந்து இருக்க முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் தங்களது வழக்கை தொடர்ந்து நடத்துவோம் என்றும் பல முறை தமிழக முதல்வர் கலைஞரிடம் முறையிட்டு விட்டனர். ஈவிறக்கம் இல்லாத தமிழக அரசு, அவர்களை தேவையிலாமல் விசாரணை காலத்திற்கும் பிணையில் விட மறுத்து, சிறப்பு அகதிகள் முகாம் என்ற பெயரில் பூன்னமல்லீ சிறையில் வைத்துள்ளார்கள்.

பல முறை தங்களது பிணை விடுதலைக்காக அவர்கள் பட்டினி போர் நடத்தியும் கூட, தனக்கு உள்ள புலிகள் மீதான வெறுப்பை மனதில் கொண்டு தமிழக முதல்வர் அவர்களது பிணை விடுதலைக்கு கூட இணங்கவில்லை. ஏற்கனவே ராஜிவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டவர்கள், இதே பூந்தமல்லி சிறையில் அதாவது சிறப்பு சிறையில் தனிமைசிறையில்வைக்கப்பட்டிருந்த போது, உச்சநீதிமன்றம் அதை எதிர்த்து கருத்து சொன்னது. விசாரண காலத்தில் ஏதோ கடும் தண்டனை கைதி போல அவர்களை, பூந்தமல்லி சிறையில் தனிமை சிறையில் வைக்க கூடாது என்றது.

அதே சிறைக்கூடம்தான் இப்போது இந்த சிறிய விசாரணை கைதிகளுக்கு அடைக்கப்படும் இடமாக அமைந்திருக்கிறது. இத்தகைய மனித உரிமை மீறலை தமிழக முதல்வர் சர்வ சாதரணமாக செய்து வருகிறார். இதை எதிர்த்து தங்களை பிணை விடுதலை செய்ய கோரி அந்த ஈழ தேச தமிழர்கள் பூந்தமல்லி சிறையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சோறு, தண்ணி இல்லாமல் பட்டினி போர் நடத்தி வருகிறார்கள். இதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய கோரியும், தமிழ் உணர்வாளர்கள் நடத்திய பட்டினி போரில், நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையத்தின் அமைப்பாளர், பேரா. சரஸ்வதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த பட்டினி போரில் இன்று முப்பது தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறிய தமிழக காவல்துறையினர், அவர்களை குமணன் சாவடி அருகே, பூந்தமல்லி சிறை முன்பு கைது செய்து அங்குள்ள " பூந்தமல்லி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில்" அடைத்து வைத்துள்ளனர். இதை கண்டித்தும், அகதிகளை விடுதலை செய்ய கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தந்திகள் அனுப்ப உணர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Saturday, April 30, 2011

கொழும்புக்கு சென்னை கொடுத்த பதிலடி.

இன்று ஏப்ரல் கடைசி நாளன்று, சென்னை தமிழ்நாடு சார்பாக , கொழும்புக்கு எதிராக திரண்டு வந்தது. அதாவது நாளை மே முதல் நாளன்று மஹிந்த ராஜபக்ஷே , ஐ.நா.வின் நிபுணர் குழு அறிககையை எத்ரித்து பெறும் பிணியை நடத்த இருப்பதாக செய்தி வந்தபோது, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு கொந்தளித்தது அதன் விளைவாக " நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம்" ஒரு பேரணியை ராஜபக்சேக்கு எதிராக, அவர் மீதானா ஐ.ந. நிபுணர் குழு முன்வைத்த ' போர்குற்றங்களை விசாரித்து தண்டிக்க வேண்டி, அகில உலக சமூகத்தை கேட்டுக்கொண்டு" ஒரு பேரணியை முந்திய நாளான ஏப்ரல் முப்பதிலேயே நடத்த திட்டமிட்டனர். தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்க, மீனவர் தலைவர் அமரர் ஜீவரத்தினம் மகள் டாக்டர் பானுமதி பாஸ்கர் துவக்க உரை நிகழ்த்த , பேரணி சரியாக குறிப்ப்பிட்ட நான்கு மணிக்கே, சென்னை கடற்கரை கண்ணகி சிலையிலிருந்து தொடங்கியது.

ஊர்வலத்தில் பல தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டாலும், சிறப்பு அம்சமாக, பல்வேறு மீனவர் அமைப்புகளும், மனித நேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய தௌஹித் ஜாமாத், போன்ற முஸ்லிம் தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டது முக்கிய செய்தியாகும். அது தவிர தமிழக மீனவர்கள், இந்தியா மட்டைபந்து விளையாட்டில் வெற்றி பெற்றதற்காக, சிங்கள கடல்படை வெறியர்களால் அன்று இரவே கொலை செய்யப்பட்டு அவரகளது உடல்கள் சின்ன, பின்னப்படுத்தப்பட்டு கடலில் எறியப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ராமேஸ்வரம்--தங்கச்சி மடத்தை சேர்ந்த நான்கு மீனவர்களான கொல்லப்பட்ட விட்சன், அன்தனிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகியோரது படங்களை மீனவ இளைஞர்கள் தூக்கி வர, அவற்றிக்கு பானுமதி பாஸ்கர் மாலை அணிவித்து மலர்கள் தூவ, மடர்வர்களும் மலர்கள் தூவிய காட்சி வந்திருந்த அனைவர் மனிதிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த ராஜபக்ஷே உருவம் அணிந்த ஒருவர் கைது செய்யப்பட்டு இழுத்துவரப்பட்டது சிறப்பாக இருந்தது. முஸ்லிம் அமைப்புகளின் கொடிகள், தமிழர் அமைப்புகள் கொடிகள், மற்றும் பல மீனவர் அமைப்புகளின் கொடிகள் அங்கே குவிந்து வந்தது முழு தமிழகமும் வந்தது போல இருந்தது. புதிய தமிழகம் கோடிகளுடன் கலந்து கொண்டது. நாம் தமிழர் அமைப்பு கோடிகளுடன் கலந்து கொண்டது. தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம், இந்திய மீனவர் சங்கம், அகில இந்திய பாரம்பர்ய மீனவர் சங்கம், தென்னிதிய மீனவர் பேரவை, போன்ற பல மீனவர் அமைப்புகளுடன், காஞ்சி மக்கள் மன்றம், காஞ்சி தமிழர் உலகம், ஆகியனவும், யாதவர் மஹாசபாவும், கட்டிட தொழிலாளர் சங்கமும், கலந்து கொண்டன. இறுதியில் ஒவ்வொரு அமைப்பை செர்ந்டஹ்வைர்களும் கண்டன உரை நிகழ்த்தினர். பெண்கள் அதிகம் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் ராகவேலு, அருள், பாண்டிமாதேவி, அஜிதா, ஆகியோரும் கலந்துகொண்டனர். தியாகு, டி.எஸ்.எஸ். மணி, விடுதலை ராஜேந்திரன், குணசீலன், தயாளன், மகேஷ், ரூபேஷ், கபடி மாறன், அயோத்தியா குப்பம் மக்கள், தமீம் அன்சாரி, எஸ்.எம்.பாகர், திரைப்பட இயக்குனர் கௌதமன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Friday, April 29, 2011

அதென்ன ஹெட்லயன்ஸ் டுடே கண்டுபிடிப்பு?

அய்யா தளர்ந்து போனார். செய்திகள் சாதகமா இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டும் வீட்டிற்கு உள்ளேயே வந்து குவியுது. பேரன் என்று சொல்லிக்கொல்பவரை அழைத்து மனதார திட்டினார். சீ.பி.ஐக்கு தூண்டுதல் வேலை பார்கிறாயா என்று குற்றம் சாட்டினார். தேர்தல் முடிவுகள் இப்போதே கவிழ்கின்றன என்று நினைத்தார். தொண்டர்கள் சோர்வு பற்றி கேள்விப் பட்டார். வருத்தப்பட்டார். ஏதாவது செய்யவேண்டும் என்றார். யாரிடம் ஊடகம் இருக்கிறதோ அவர்தானே செய்ய முடியும் என்றனர். இது அகில இந்திய ஊடகம் மூலம் மட்டுமே முடியும் என்றார்.

முடிவு திமுகவிற்கு சாதகம் என்றால், டில்லி அதிகாரிகல்பயப்படுவர் என்றார். அடஹ்ர்கு ஏற்பாடு செய்கிறேன் என்று இளைய அமைச்சர் தயாநிதி கூறினார். ஏற்கனவே தயாளு மீது, கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் வரும்போது, காங்கிரஸ் தலைமை மீது செல்வாக்கு செலுத்த யாரை அனுப்ப என்ற விவாதம் கிளப்பப்பட்டது. டி.ஆர்.பாலுதான் இருக்கிறாரே என்று குடும்ப தலை கூறியது. தயாவை அனுப்பு என்று மூத்த மகள் கூற, அவன் எவ்ண்டாம் என்றது தலை. நம்பிக்கை இன்னமும் தம்பி மீது வரவில்லை என அவரது ஆதரவு கும்பல் குடும்பத்திற்குள் முனு, முணுத்தது. செய்துகாட்டுகிறேன் என்ற அந்த இளைய அமைச்சர் அதற்கான வேலைகளை எடுத்தார். அதில் ஒன்று ஏற்கனவே தனது பணம் நூறு கோடி கொடுத்து வைத்த அந்த தேசிய அலைவரிசை பயன்பட்டது.

ஏற்கனவே அவர்கள் எடுத்துவைத்த ஒரு ஆய்வில் ஆறாயிரம் பேரை சந்தித்து இருந்தனர். அதை அடிப்படையாக வைத்து இப்போது அணைக்கு ஒன்றை இறக்கிவிடலாம். அது முதலில் தொண்டர்களின் மன உணவை எழுப்பிவிடும்.யாரும் பாதியிலேயே வாக்கு எண்ணிக்கை இடத்திலிருந்து இடம் பெயர் மாட்டார்கள். அடுத்து டில்லி கொஞ்சம் அடக்கி வாசிக்கும். அதன்மூலம் ஸ்பெக்ட்ரம் கதையை தள்ளிப் போடலாம். அடுத்து பெரியவருக்கு திருப்தியை கொடுத்து, அதன்மூலம் உற்ச்சாகம் மூட்டலாம். இதற்கு பெயர் கார்பொரேட் பாணி கணக்கு, மற்றும் விதைத்தல். அது இங்கும் அமுலாகிவிட்டது.

பிறகு எதற்காக அந்த காட்சி ஊடக நேர்காணலிலேயே, நீங்கள் வெற்றி பெற்று வந்தால் முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை சொல்லிவன்ம்த நான்தான் என கூறவேண்டியதுதானே? அதைமட்டும் திமுக போது குழு முடிவு செடியும் என்று என் கூறுகிறார். அவருக்கு தெரியும் இது திருப்தி படுத்த வெளியிட்ட கணக்கு என்று. அது என்ன கணக்கு? திமுக.கூட்டணி 129 இடங்களை பிடிக்கும் என்ற கணக்குதான்.

ராஜபக்சேவை மே தினத்திற்கு முந்திய நாளே சென்னை எதிர்க்கிறது.

தமிழின படுகொலையை, தமிழின அழிப்பை கொடூரமாக நடத்தி, இன்னமும் அதே வெறியுடன் தமிழின சுத்திகரிப்பை தமிழீழத்தில் நடத்திவரும் கொடியவன் ராஜபக்சே, தன்னை ஐ.நா. மன்றம் "போர் குற்றவாளி" என்று முத்திரை குத்துவதற்கான முகாந்திரத்ஜ்தை வெளியிட்டு விட்டதே என்று ஆத்திரப்பட்டு, அதை மே முதல் நாள் அன்று கொழும்பு நகரில் அரங்கேற்ற ஒரு பேரணியை வைத்துள்ளது கண்டு தமிழுள்ளங்கள் வெதும்பின. அதன்விளைவு, தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு நாள் முன்பு ஏப்ரல் 30 இலேயே ஒரு பேரணியை ஏற்பாடு செய்ய "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம்" முடிவு செய்தது.

தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தனது அறிக்கையில் அதை தெரிவித்துள்ளார்.மாலை நான்கு மணிக்கு கடற்கரை உள்சாளையிளிருந்து பேரணி புற[ப்படும். அது உழைப்பாளர் சிலை வரை செல்லும். அங்கே நான்கு மீனவர்கள் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அவர்களுக்கு நினைவு அஞ்சலி நடத்தப்படும். மீனவர் குழந்தைகளும், மீனவ பெண்களும் மற்றும் ஆர்வமுள்ள தமிழின ஆதரவு அமைப்புகளும் அந்த பேரணியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். பரவலாக கொடுக்கப்பட்டுள்ள துனடரிக்கைகள் மூலம் thaமிழர்களே அணிதிரளுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரணி ஐ.நா.வின் நிபுணர் குழு அறிககையை அமுலாக சொல்லியும், கிரிக்கெட் ஆட்டத்தின் உலகக் கோப்பையை இந்தியா வென்றதால் ஆத்திரப்பட்ட சிங்கள கடற்படை கொடூரமாக கொன்று குவித்த நான்கு தமிழ் மீனவர்களுக்காகவும் முழக்கங்களை எழுப்பிய வண்ணம் பேரணி செல்லும் என்றும் தெரிவிக்கிறார்.