Monday, October 3, 2011

விவரம் தெரிந்தால் "ஏற்றுக் கொள்கிறார்களோ?".

தமிழக முதல்வரின் "உத்தரவுப் படி" செங்கல்பட்டு அகதிகள் முகாம் என்று அழைக்கப்படும் "சிறப்பு அகதிகள்" முகாம் என்ற "சிறப்பு சிறையில்" அடைக்கப்பட்டிருந்த "பதினைந்து" ஈழத் தமிழர்களை, இன்று "விடுதலை" செய்திருக்கிறார்கள் என்பது "செய்தி". இது வெறும் செய்தி மட்டும்தானா? அல்லது "ஒரு மனிதாபிமான " நிகழ்வை தமிழக அரசு செய்திருக்கிறதா? இவையெல்லாம் "சட்டப்படி" எப்போதோ 'செய்திருக்க" வேண்டிய செயல்தான். ஆனால் இதுவரை 'செய்யப்படவில்லை". இப்போது நடந்திருக்கிறது. அப்படியானால் இந்நாள் வரை, "கடந்த ஐந்து ஆண்டுகளாக" ஆண்ட ஒரு "தமிழன்" தனது இனத்திற்கும் "அனுதாபம்" காட்டவில்லை. மனித உரிமைகளுக்கும் "மரியாதை" காட்டவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

இப்போதுள்ள செல்வி.ஜெயலலிதா ஆட்சி " காவல் நிலையத்தில்" நடந்த "காவல் மரணத்திற்காக" சம்பந்தப்பட்ட "அதிகாரிகளை" இடை நீக்கம் செய்துள்ளது. அது "நல்ல செய்திதான். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 'ஆய்வாளர் முதல் காவலர்" வரை உள்ள "கீழ்மட்ட" அதிகாரிகள். அதேசமயம் "பரமக்குடியில்" கொடூரமான "மனிதாபிமானம்" அற்ற "படுகொலைகளை" செய்ததற்கு "காரணமான" பெரிய அதிகாரிகளை அதாவது "அய்.ஜி., டி.அய்.ஜி, மற்றும் எஸ்.பி."ஆகியோரை எந்த நடவடிக்கையும் இன்றி "சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளது" என்பது எதைக் காட்டுகிறது? ஒன்று "அந்த அம்மாவிற்கு" செய்தி கிடைத்தால் "தவறை சரி" செய்ய முயற்சிக்கிறார். அல்லது "சிறிய திகாரிகள்" அளவிற்கு மட்டுமே நடவடிக்கை எடுக்க துணிகிறார். பெரிய "அதிகாரிகள்" விசயத்தில் "கரிசணை" அல்லது "பயம்" வைத்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

தமிழர் அடையாளம் "இதுதானடா".

மூன்று தமிழர் உயிர் காக்கும் போராட்டங்கள் "பட்டினிப் போர்" என்ற அடையாளத்துடன் ஒவ்வொரு நாளும் "தமிழ்நாட்டில்" குறிப்பாக சென்னையில் நடந்துவரும் வேளையில், "கோயம்பேடு" பேருந்து மிளயத்திற்கு அருகில் அடுத்த "சிக்னலில்", திருச்சி சவுந்தரராஜன் இடமான "ஆடோ கேரஜில்" நாற்பத்தைந்து நாட்களுக்கான "பட்டிநிப்போரை" ஏற்பாடு செய்துள்ள, "மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு" ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பினரை வந்து, இருந்து நிகழ்வை நடத்திக்கொள்ளுங்கள் என்று பணித்திருக்கிறது. அதில் "பல கட்சிகள்" பல அமைப்புகள் "ஒரு நாள்" பட்டினி என்பதாக இருந்து வருகிறார்கள். ஞாயிறு அன்று " கிருத்துவ மக்கள் கட்சி" அற்ற்ஹுபோன்ர "பட்டினிப் போரை" நடத்தியது.


அதில் ஒரு செய்தி 'சரியாக" பதிவு பெற்றுள்ளது. "இந்துத்துவா" சக்திகள் தமிழ்நாட்டிலும், உலகம் எங்கிலும், தமிழர்கள் மத்தியில் "கிறித்துவர்களுக்கும்" இஸ்லாமியர்களுக்கும் எதிராக, ஒரு "நச்சு" கலந்த "பரப்புரையை" பரப்பி வரும் வேளையில், இந்த "கிருத்துவ தமிழர்களின்" பங்கேற்பு ஒரு "சாட்டையடியாக" திகழ்ந்துள்ளது. நடிகர் "சரத்குமார்" வந்திருந்து வாழ்த்தி, அந்த "கிருத்துவ மக்கள் கட்சியினருடன்" சேர்ந்து, வெளியே வந்து, "மூன்று தமிழர் உயிர் காக்க" ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அதே இடத்தில் நிகழ்த்தியது மேலும் "சிறப்பாக" அமைந்தது. டில்லியின் "மகிவுக்காக" தமிழ்நாட்டில் "தமிழர் அடையாளத்தை" சிதறடிக்க எண்ணி, "பிற்போக்கு இந்துத்துவா" சக்திகள், "கச்சத்தேவில் உள்ள அந்தோனியார் கோவிலை இடித்து, முருகன் கோவில் கட்டவேண்டும்" என்ற கோரிக்கையை வைத்து வரும் வேளையில், இப்படி சென்னை தலைநகரில், "கிருத்துவ தமிழர்கள்" தங்கள் மற்ற்ஹா அடையாளத்துடன், மூன்று தமிழர் உயிர் காக்கும் போராட்டத்தில் இறங்கியது "உள்ளபடியே" பாராட்டத்தக்கது.

அந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்றுள்ள"எப்.ஏ.நாதன், செயலாளர் டோனி ஆகியோரை நாம் பாராட்டும் அதே நேரம், "தமிழர் அடையாளம்" என்பது "மதம் தாண்டியதுடா,மடையர்களே" என்று உரக்க கூவ வேண்டியுள்ளது.

Sunday, October 2, 2011

காந்தி பிறந்த நாளில் "பட்டினிப் போர்".

"மூன்று தமிழர் உயிர் காக்கும் இயக்கம்" சார்பாக் அதன் அமைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவ்த்தார். காந்தி பிறந்த நாளான அக்டோபர்- 2 ஆம் நாள், முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோரின் "மரண தண்டனையை" ரத்து செய்ய "பட்டினிப் போராட்டம்" நடத்தி கோரிக்கையை முன்வைப்போம் என்று. அதேபோல, சென்னையில் நெடுமாறன் தலைமையிலேயே "காவல்துறை" வழக்கமாக "நாட்டு மக்களுக்கு" தெரியக்கொடாத "ஒரு இடத்தை" கவனமாக தேர்ந்தெடுத்து கொடுப்பதுபோலவே இப்போதும் "கூவம் நதிக்" கரையோரம் கொடுத்திருந்தார்கள். அதுபோல "புதுச்சேரியிலும்" பட்டினிப்போராட்டம் நடந்தது. ஒரு திருமண வரவேற்ப்புக்கு "புதுச்சேரி" சென்ற நாங்களும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டோம். அங்கே "பெரியார்வாதிகள்" ஐந்து இயக்கங்களாக இருந்தாலும் அனைவரும் இந்த "பட்டினிபோரில்" கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளித்தது.

அன்ப்கு விவாதமான சில செய்திகளைப் பற்றி பேசியாக வேண்டும். கருணாநிதி தொடர்ந்து "மரண தண்டனையி" மூன்று தமிழர்களுக்கும் ரத்து செய்வதற்காக "சட்டமன்ற தீர்மானம்" போதாது என்றும், "அமைச்சரவை தீர்மானம் போட்டு அதை ஆளுநர்" மூலமாக கொடுத்தனுப்ப வேண்டும் என்றும் அடிக்கடி கூறிவருகிறார். அதனாலேயே நம்மில் சில "நண்பர்களுக்கு" அந்த விசயத்தில் ஒருவிதமான "குழப்பம்" ஏற்பட்டிக்ருக்கிறது. தமிழக முதல்வர் தங்களது சட்டமன்றத்தில் போட்ட "தீர்மானத்தை" அப்படியே "அமைச்சரவையில்" போடவ்பேண்டும் என்று நம்மில் பலர் விவாதிக்கிறார்கள். அதில் என்ன "புதிய" மாற்றத்தை வர்கள் "காணப்போகிறார்கள்?". "மரணதண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்க குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடுக்கப்பட்ட "தீர்மானத்தை" அப்படியே " மாநில "அமைச்சரவையில்" போடுவதாலும் அதே பலன்தானே?

சரி. இந்த "இடத்தில்" சட்டமனறம் உயர்ந்ததா? அல்லது "மாநில அமைச்சரவை" உய்ரந்ததா? என்று கேள்வி கேட்டால் இவர்கள் என்ன "பதில்" சொல்வார்கள்? சட்டமன்றம் "கூடியிருக்கும்" நேரங்களில்அமைச்சர்வையை விட, சட்டமன்றமே உயர்ந்தது என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? "கூடிய சட்டமன்றத்தில்" தீர்மானம் நிறைவேற்றியபோது, முழு மைச்சர்வையும் "இருந்ததா? இல்லையா?". முதல்வர் உட்பட முழு மைச்சர்வையும் அமர்ந்திருன்ஹ்டுதானே அந்த "சட்டமன்றத் தீர்மானம்" ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது? காங்கிரஸ் உறுப்பினரான "விஜயதரணியும்" அப்போது சட்டமன்றத்தில் அமர்ந்திருந்தாரே? சட்டமன்றம் "கூடாத" போதுதான் "அமைச்சரவை" உயரந்தது என்பதையும், "நாடாளுமன்றம்" கூடாத போதுதான், "மத்திய அமைச்சரவை" உயர்ந்தது என்பதும் இவர்களுக்கு புரியாமல் இருக்கிறதா? சட்டமனர்மும், நாடாளுமன்றமும் மட்டுமே "சட்டங்களை" இயற்ற முடியும் என்பதும் அதையே "மாநில அமைச்சரவையும், மத்திய அமைச்சரவையும்" சட்டங்களை இயற்ற 'அதிகாரம்" கிடையாது என்பதும் இவர்களுக்கு புரிய வேண்டாமா? அதனால் எது "கூடும்போது" அதிக அதிகாரம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஆனால் நமது "வலியுறுத்தல்" வேறு. அதாவது "ஒரு மாநில முதல்வருக்கே" தனது "மாநில மைச்சர்வையை" கூட்டி, அதன்மூலம், "மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக" குறைக்க "அதிகாரம்" இருக்கிறது என்பதுதான் நமது வாதம். அம்த "வாதத்தை" தமிழக முதல்வர் "மறுத்துவிட்டார்". அதாவது 2003 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட "ஒரு சுற்றறிக்கையை " சுட்டிக் காட்டி, 257 ஆம் பிரிவின் கீழ் "மத்திய அரசு" மாநிலங்களுக்கு அனுப்பிய அந்த சுற்றறிக்கைப் படி, "மாநிலங்களுக்கு அந்த விசயத்தில்" மீற உரிகையில்லை என்று அவர் கூறினார். இது அந்த சுற்றரிக்கைப்படி "சரிதான்". ஆனால் 'அரசியல் சட்டப்"படி சரியில்லை என்கிறோம் நாம். அதாவது "மரண தண்டனையைக் குறைக்க" மாநில அமைச்சரவைக்கு உள்ள உரிமையை, அதாவது "இறையாண்மை ஊரிமையை" இந்த சுற்றறிக்கை கூறும், "நிர்வாக அதிகாரம்" தஹ்டுக்க முடியாது என்பதே நமது வாதம்.இந்த வாதத்தை "பியு.சீ.எல். சார்பாக முதல்வருக்கு "எழுதிக்"கொடுத்து விட்டோம். ஆனாலும் "ஆலோசனை கூறும் அதிகாரிகள்" கூறுவதே எடுபடுகிறது.

தவிர "நம்மால்" இந்தியாவில் இதற்கு முன்பு " மாநில அரசு" தனது இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, 'மரண தண்டனையை" குறித்த "முன்னுதாரணத்தை" காட்ட முடியவில்லை. ஆனால் நாம் எல்லோரும் காட்டும் ஒரே உதாரணம் "ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் காலத்தில்" மரணதண்டனை ஆயுள்தண்டனையாக "எஸ்.ஏ.பாலன் "விசயத்தில் குறைத்ததைதான்.அப்போதுகூட, மாநில அரசு "தனது அதிகாரத்தை" பயன்படுத்தி "குறைக்கவில்லை".மாறாக "மத்திய அரசிடம் தனது வேண்டுகோளை" வைத்து. நாம் இந்த "உதாரணத்தை" வான் எட்டும் அளவு "கூவிய" பிற்பாடு, தமிழக முதல்வரும் அப்படியே, "மத்திய அரசிடம் கோருகின்ற தீர்மானத்தை" சட்டமன்றத்தில் போட்டு விட்டார். ஆகவே இது "ஏற்கனவே நடந்த ஒரு உதாரணத்தை" பின்பற்றிய செயல்தான். இவர்களுக்கு "புதிய முன் உதாரணத்தை" படைக்கும் "தைரியம் இல்லை".

இந்த "உண்மையை" செர்ரிப்பது எப்படி கடினமாக இருக்கும்? ஆனால் இன்று "அமைச்கார்வைதீர்மானம்" பற்றி பேசும் கருணாநிதி, அன்றே இந்த "மூன்று பேர்" தூக்கு விசயத்தில் "நிறைவேற்ற" சொல்லி எழுதிக் கொடுத்தவர் என்பதை "சௌகரியமாக" மறந்து விடுகிறர்கள். கருணாநிதி, 'கழியப் பெருமாளுக்கும், தியாகுவிற்கும்" மரணதன்டையை "குறைத்தவர்" என்று திரும்ப, திரும்ப இவர்கள் "கூவுகிறார்கள்". அந்த "உதாரணம்" எப்படி சரி? "குடியரசு தலைவர்" கருணை மனுவை "நிராகரித்த" பிறகு கருணன் இதி, கழியப் பெருமாளுக்கும், பிறருக்கும் "மரணதண்டனையை " குறைக்க வில்லை. குடியரசு தலைவரிடம் "செல்வதற்கு" முன்பே குறைத்து வெளியிட்டார். "குடியரசு தலிவறது" நிராகரிப்புக்கு "பிறகுதான்" மத்திய அரசின் அந்த 257 என்ற பிரிவு பற்றிய சுற்றறிக்கை பேசுகிறது. அதனால் "குடியரசு தலைவரின் நிராகரிப்புக்கு" முன்பு, அல்லது "பின்பு" என்று நாம் "தனித்தனியாக" ஆய்வு செய்யவேண்டும்.

பிற்போக்கு குணம் படைத்தவர் என்று "புகழ்" பெற்ற செல்வி.ஜெயலலிதா, இப்போது, "புதிய முன்மாதிரி" படைத்து "தானே" தண்டனைக் குறைக்க "தாயாராயில்லை". ஆனால் நாம் காட்டிய "ஏ.எம்.எஸ். முன்னாதரனத்தை" போல அல்லது பின்பற்றி "டில்லிக்கு அந்த வேலையை" தள்ளி விட்டுவிட்டார். முற்போக்கு ஈ.எம்..எஸ். உம அதைதான் செய்தார். ஆனால் இந்த அம்மா "ஈ.எம்.எஸ். ஐவிட ஒரு படி மேலே போய் சட்டமன்ற தீர்மானம்" போட்டிருக்கிறார். இந்தியாவில் ஒரு சட்டமன்றம் "ஒருவருக்கு மரண தண்டனையை" குறைக்க சொன்ன பிற்பாடும், "குடியரசு தலிவர்" அதை "நிராகரித்தார்" என்ற முன்னுதாரணமும் கிடையாது. ஆகவே அது நடக்காது. "தூக்கு தண்டனை" மூவருக்கும் "ரத்தானதுதான்". ஆனால் அதை "அதிகாரபூர்வமாக" அறிவிக்க கால தாமதம் ஆகலாம்.

Friday, September 30, 2011

வாச்சாத்தி "யாருக்கு" படிப்பினை?

இப்போது "பத்தொன்பது" ஆண்டுகள் கழித்து "நீதிமன்ற தீர்ப்பில்" 215 கொடுங்கோலர்களுக்கு "தண்டனை" வழங்கப்பட்டிருப்பதால், இது "காவல்துறை, வனஇலாகா,வருவாய்த்துறை" ஆகியவற்றின் "கொடூரர்களுக்கு" வழங்கப்பட்டிருக்கும் "படிப்பினை" என்று நாம் நினைத்தால் "ஏமாந்து" போவோம். 1992 ஆம் ஆண்டு நடந்த கதை சில ஏடுகளில் வெளியாகி உள்ளது. அதாவது "வனத்துறையை" சேர்ந்த "துரைமார்கள்" இரண்டு பிரிவுகளாக தங்களுக்குள் "வன சொத்தை" யார் களவாடுவது என்று போட்டுக் கொண்ட "போட்டியில்" அவர்களுக்கு தங்கள் "பிழைப்பிற்காக" ஒத்துழைப்பு கொடுத்த, அல்லது "உழைப்பை" விற்ற "அப்பாவி" மலைவாழ் மக்கள், அந்த "கொடூர" தாக்குதலில் "பலியாகிவிட்டனர்". இந்த செய்தி ஒரு ஆங்கில ஏட்டில் மட்டுமே வெளியாகி உள்ளது.

வன இலாகா ஊழியர்கள் "வழமையாகவேர்" வனச் சொத்துக்களை தங்கள் "தேவைக்காக " அழிப்பார்கள். அதற்காக அவர்களுக்கு "மரங்களை" வெட்டிக் கொடுக்க "மலை வாழ்மக்கள்" உதவி தேவைப்படும். அப்படி "கூலி வாங்காத உழைப்பை" செய்து கொடுத்தால்தான் நம் மக்களான அந்த "மலைவாழ் மக்களுக்கு" தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக " உடைந்த மரங்களையோ", "மரத் துண்டுகளையோ", சிறிய துகள்களையோ, எடுத்து செல்ல அந்த "வன இலாகா அதிகாரிகள்" அனுமதிப்பார்கள். இது வனப்பகுதிகளில் நடக்கும் "அன்றாட" நிகழ்வு. அப்படிப்பட்ட நிகழ்வுகளில், சில நேரங்களில், "மேலதிகாரிகள்" வருகையை ஒட்டி, வன இலாகா அதிகாரிகள் "நல்லவர்களைப்" போல "மலைவாழ்மக்கள்" மீது "பழியைப்" போட்டு தப்பித்துக் கொள்வதும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுதான்.

இதுபோன்ற ஒன்று அப்போதும் நடந்துள்ளது. ஆனால் அந்த சூழலில், "வீரப்பனை" பிடிப்பதாக சொல்லிக் கொண்டு, அதற்காக ஒரு "கூட்டு நடவடிக்கை குழுவை" கர்நாடகா மாநில காவல்துறையும், தமிழ்நாட்டு காவல்துறையும் "ஏற்பாடு" செய்து, அதன்மூலம் " சேலம், தருமபுரி, கோவை, ஈரோடு" மாவட்டங்களில் "அட்டூழியம்" செய்து வந்தனர். அதற்கு "தமிழ்நாட்டு" காவல்துறை அதிகாரி, தேவாரம் 'தலைமை"ஏற்றிருந்தார். "வாச்சாத்தி" கிராமம் "தருமபுரி" மாவட்டத்தில் இருப்பதால், "நக்சல்பாரி" நடமாட்டம் என்ற "பயத்தில்" ஆள்வோர் அலறிக் கொண்டு "திரிந்ததால்" தேவாரம் என்ற ஒரு பெரும் "வீரர்" அங்கே "துப்பாகியுடன்" நடமாட வேண்டும் என்று ஆளும்வர்க்கம் விரும்பியது. இந்த "மாபெரும் வீரர்" கதை "தனி" கதை. என்றுமே எந்த "நக்சல்பாரி புரட்சியாளரையோ" அல்லது "வீரப்பன்" ஆட்களையோ "நேரில்" சந்திக்க "துப்பில்லாமல்" மலைவாழ் மக்கள் மத்தியில் "ஆடுமேய்க்கும்" சிறுவர்களை பிடித்து "சுட்டுக் கொள்வதில்" ஒரு "அசகாய சூரன்" இந்த தேவாரம் என்பது "எம்.ஜி.ஆர். உட்பட" யாருக்கும் தெரியாத செய்தி.

அப்படிப்பட்ட "தேவ்பாரம்" மலைவாழ் பெண்களை "பாலியல் பலாத்காரம்" செய்வதை "தஹ்டுக்காத" ஒரு "ஜீவராசி". ஒரே "சாதியாக" அந்த விசயத்தில் இந்த "காவல்துறை, வனத்துறை, வருவாய்துறை அதிகாரிகள்" இருந்ததால்தான் இப்போது சில "அய்.எப்.எஸ்."அதிகாரிகளும் இந்த "கொடுன்குற்றத்தில்" மாட்டி "தண்டனை" பெற்றுள்ளார்கள். ஆகவே இது "பத்தொன்பது" ஆண்டுகள் கழித்து அரசும், நீதிமன்றமும் "இர்னகி" வந்து கொடுத்த " மனப்போர்வமான தீர்ப்பு" அல்ல. மாறாக 'இதுபோன்ற" கொடுமைகள்தான் "மேற்கு வங்கத்திலும்", "ஜார்கண்டிலும், சட்டிச்கரிலும், ஒரிசாவிலும்" மாவோவாதிகள் "பழங்குடிகள்" மத்தியில் "ஆழமான" விதைகளை போடுவதற்கு உதவின என்பதை உணர்ந்த "ஆளும்வர்க்கம்" இறங்கி வந்து "நல்லவர்"போல வேஷம் போட "கொடுத்துள்ள" ஒரு தீர்ப்பு.

அதானால் இன்றைய "இந்திய சூழலில்" ஆளும்வர்க்கத்தின் "அச்சத்தால்" அவ்ந்துள்ள "தீர்ப்பை" நாம் கொண்டாட வேட்னிய அவசியமில்லை. ஆனால் அதிலிருந்து நாம் "படிப்பினைகளை" கற்றுக் கொள்ள வேண்டும். "வெண்மணி படுகொலைகளுக்கு" இதே நீதிமன்றங்கள் தான் "கொடியவனுக்கு விடுதலை" என்ற தீர்ப்பை கொடுத்தன. அப்போது "பன்னிரண்டு" ஆண்டுகள் கழித்து, "நக்சல்பாரி இயக்கமான விநோத்மிஸ்ரா கட்சி" தலைமையில் "கொடியவன் கோபால கிருஷ்ணனநாயுடுவிற்கு " புரட்சியாளர்கள் "தண்டனை" நிறைவ்டேரியத்தை இந்த நாடு மறந்திருக்கவில்லை. நாம் மறந்தாலும் "எதிரிகள்" அதை மறக்கவில்லை. அதேபோல "புரட்சியாளர்களுக்கு" ஒரு வாய்ப்பு கொடுக்காமல் "தானே" தண்டிப்பதுபோல "பாசாங்கு" செய்யும் தீர்ப்புதான் என்றால், "தொடர்ந்து" எம்,ஆற "தமிழ்மக்கள்" தயாராக இல்லை என்பதை நிரூபிக்க நாம் எழவேண்டும்.

அன்றாட நிகழ்வில் தொடங்கி, அடிப்படை நிகழ்வுகள் எதுவானாலும், 'ஒடுக்கப்பட்ட" சமூகங்களை 'அடக்க" மட்டும்தான் இந்த ஆயுதம் தாங்கிய அனைத்து "படைகளும்" இருக்கின்றன. ஆகவே "ஒடுக்கப்பட்ட மக்களுக்கான" ஆயுதம் தாங்கிய படைகள் "உருவாகாமல்" எதையும் இன்றைய நீதிமனரண்களால் மட்டுமே "பிடுங்க" முடியாது என்பதை "வரலாற்று" சுவடுகளாவது நமக்கு "கற்றுக்" கொடுக்கட்டும்.

Thursday, September 29, 2011

"அன்னையர் முன்னணி" அறுதியிட்டது இன்று.

மூன்று தமிழர் உயிர் காக்கும் முயற்சியாக " மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு" ஒழுங்கு செய்து வரும் "தொடர் பட்டினிப் போராட்டம்" இன்று பேராசிரியர் சரஸ்வதி தலைமையிலான "அன்னையர் முன்னணி"யால் நடத்தப்பட்டது. பேராசிரியரின் அழைப்பை ஏற்று, பல்வேறு பெண்கள் அமைப்புகளின் "பங்களிப்புடன்" சிறப்பாக நடைபெற்றது. அதில் "மக்கள் மன்றம்" ஒரு முக்கிய பங்களிப்பை, தனது "முப்பத்தைந்து பெண்களுடன்" செளுத்ஹ்டியது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மன்றத்தின், ஜெசி, மகேஷ், மகா, மேகலா, உமா,சிறுவன் பகத்சிங்,நாத்திகன், மற்றும் பல கிராமப்புற பெண்களுடன் "கலந்து" கொண்டது அனைவரையும் ஈர்த்தது.

கலந்துகொண்ட ஆர்வலர்கள், "பேச்சாளர்களாக" மாறி உரைகளை நிகழ்த்தினர். அமைப்பு சார தொழிலாளர் சங்கத்தின் கெத்சி, தனது தோழியர்கள் பத்து பேருடன் வந்து கலந்து கொண்டார். அற்புதம்மாள், பத்மா,மணிமேகலை, அகிலா, சரோஜா, அஜிதா, ஒவியா, கீதா போன்ற பெண் தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர். இடையில் அருகே இருந்த அரங்கில், "மரணதண்டனை" பற்றிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. செங்கொடி இறுதி ஊர்வல திரைப்படமும் காண்பதற்கு "உருக்கமாக" காட்டப்பட்டது.

அன்னையர் முன்னணி "தொன்னூறின் " தொடக்கங்களில் தமிழ்நாட்டின் தெருக்களில் முழங்கிய முழக்கங்கள் நினைவுக்கு வந்தன.ஈழத்தின் விடுதலைப் போரில் "வீரச்சாவடைந்த" கண்மணிகளின் "தாயார்கள்" ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை கண்டு மிரளாமல் " தெருவுக்கு" வந்து போராடிய "நிகழ்வுகள்" , அன்னையர் முன்னணியின் "பதாகையின்" கீழ்தானே நடத்தப்பட்டன என்ற நினைவுகள் நமது நெஞ்சில் ஒலித்தது. "தமிழீழத் தேசியத் தலைவரின்" போர்த்தந்திரங்களுக்கு "வலுவூட்டும்", "ஒத்துழைக்கும்" "உதவி செய்யும்" செயல்தந்திரன்களை, "வெகுமக்கள்" அரங்கில், "வீரச்சாவடைந்த" மாவீரர்களின் தாயார்கள் "அன்னையர் முன்னணி" மூலம்தான் நடைமுறைப்படுத்தினார்கள்.இன்று சென்னையில் "பட்டினிப்போர்" நடத்தியது, "தமிழ்நாட்டு அன்னையர் முன்னணி". இந்த "சிருபோறியே" தமிழ்பெண்கள் மத்தியில் "பெரும் காட்டு தீயென" படரட்டும். தமிழ்ப்பெண்களின் வீர முழக்கங்களை இந்த நாடு கேட்க, "வீராங்கனைகளை" உருவாக்கட்டும்.

Wednesday, September 28, 2011

முதல் போர்குற்றவாளியின் "குற்றப்பட்டியல்"

நமக்கு தெரிந்த அளவில், அந்த "போர்க்குற்றவாளி" வட இந்தியாவிலிருந்து வந்திருந்தாலும், தமிழ்நாட்டு "அய்.பி.எஸ். அதிகாரியின்"மகளை திருமணம் செய்தார்.பிறகு இவரது "கொடுமை" தாங்க முடியாமல் "மனைவி" சித்தரவதைகளுக்கு "விடை" கொடுக்க, விலகி நின்றார். மாமியார் காங்கிரஸ் கட்சியில் நின்று "ச.ம.உ." ஆனார். இது "பெண்களுக்கு எதிராக" அய்யா செய்திருக்கும் "முதல் குற்றம்".

ஆண்டு:-1996 . அய்யா "மணிமுத்தாறு ஆயுதப் படையின்" தலைவராக இருந்தார். தூத்துக்குடியில் மீனவர் கோரிக்கைகளுக்கான "சாலை மறியல்" நடந்தது. அப்போது "துணை ஆட்சித் தலைவராக" இருந்த டாக்டர். ராதாகிரூஷ்ணனின் பேரன் இப்போது கூப்பிட்டாலும் "சாட்சி" கூறுவார். அந்த "சப்-கலெக்டர் " மாட்டிக்கொண்டார் என்பதே அப்போது "காவல்துறையின்" குற்றச்சாட்டு. ஆனால் "மீனவர்கள்தான்" தன்னை காப்பாற்றினார்கள் என்று "அந்த சப்-கலெக்டர்" கூறினார். அதற்குள் "தேவாரம்" வழக்கம் போல உத்தரவிட்டார். ராஜெஷ்தாஸ் "மீனவர்கள் மீது" சுட்டார். நிராயுதபாணியான மீனவ இளைஞர் "குண்டடி" பட்டு செத்தார். நாடு சாலையில், இறந்த தன் தபியின் உடலை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அண்ணன்காரன் "ராஜெஷ்டாசை" நோக்கி கேள்வி கேட்கிறான். அவர் "அண்ணன்காரனின்" நெற்றியில் தனது "துப்பாக்கியால்" குறி பார்த்து "சுட்டுக் கொல்கிறார்" இது "இரண்டாவது" குற்றச்சாட்டு.

ஆண்டு:- 1997 . சட்டமன்ற உறப்பினர் டாக்டர். கிருஷ்ணசாமி "தேனீ மாவட்டம்" செல்கிறார். அங்கே ராஜெஷ்டாச்தான் அப்போது "மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்". "கண்டமனூர்" ஊரில் உள்ள "தேவர் சிலையை" அகற்ற கிருஷ்ணசாமி வருகிறார் என்று சொல்லி திடீரென "எஸ்.பி. ராஜெஷ்தாஸ் " கிருஷ்ணாசாமியை அதிகாலை 'தேனீ விடுதியில்" இருந்து வெளியே வரும்போது "கைது" செய்கிறார். தென்மாவட்டங்கள் எங்கும் "பேருந்துகள்" நிருத்தபடுகின்றன. கோவில்பட்டி அருகே " ரயில்வண்டி" நிறுத்தப்படுகிறது.". நாடே 'அல்லோல, கல்லோல" படுகிறது. தேனியிலிருந்து "இரபத்தாறு" கிலோமீட்டர் தூரத்தில் உள்ள "கண்டமநூருக்கு" கிருஷ்ணசாமி போக வேண்டிய தேவையே இல்லை என்ற "வாதம்" போராட்டக்காரர்களால் முன்வைக்கப்படுகிறது. ஏற்கனவே கண்டமநூருக்கு "எட்டுகிலோமேட்டர்" அருகே உள்ள கிராமத்திற்கு சென்று விட்டுத்தான் முந்திய நாளே "கிருஷ்ணசாமி" தேனிக்கு "திரும்பி" வந்துள்ளார் என்பது நிரூபிக்கப்படுகிறது. அந்த "ஆதாரங்களை" பெற்றவர் அன்றைய "புலனாய்வுதுறை துணைத்தலைமை அதிகாரியும், இன்றைய காவல்துறைத் தலைவருமான" பெரிய அதிகாரி.அது "மூன்றாவது குற்றம்".

மறுநாளே இந்த "உண்மைகள்" முதல்வர் கலிஞர் வசம் "கொண்டுசெல்லப்படுகின்றன". அன்றைய "உளவுத்துறை தலைவர்" அலெக்சாண்டர் "ராஜெஷ்டாசை" தொலைபேசியில் திட்டுகிறார். "பச்சை பனியன் " பொட்டுக் கொண்டு ஏன் கிருஷ்ணசாமியை கைது செய்தாய்? என்று கேட்கிறார். "உடுப்பு" போட்டுக்கொண்டு வேலை செய்ய தயாரில்லையா? என்று வினவ்புகிறார்.இவாறு கடமையை செய்ய மறுக்கும் "ராஜெஷ்தாஸ்" செய்தது " நான்காம்" குற்றம். உன் வீட்டு முன்பு "காவல் அரண்" போட்டு "தடுப்பு" வைத்திருகிராயாமே? என்று மீண்டும் அலெக்சாண்டர் திட்டுகிறார். அதிலிருந்து "உள்ளூர் உளவுத்துறையில்" மேலே செய்திகளை சொல்லும் அதிகாரிகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று ராஜெஷ்தாஸ் "கற்றுக் கொளகிறார்".

அடுத்து மீண்டும் தூத்துக்குடிக்கு "ராஜெஷ்தாஸ் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக" மாற்றப்ப்டுகிறார்.அப்போது அந்த நகரில், 'பசுபதிபாண்டியன்" வசித்த தெருவில், அவரது சகோதரர், "வின்சென்ட்" என்ற "நகராட்சி உறுப்பினர்" காவல்துறையின் "காவலில்" மரணமடைகிறார். அவரை "கொன்றது" எஸ்.அய். ராமகிருஷ்ணன் என்பதை மக்கள் 'குற்றமாக" சொல்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பு, "பஞ்சாயத்து" நடக்கிறது. கொலைகார ராமகிருஷ்ணனை "எஸ்.பி.ராஜெஷ்தாஸ் " நியாயப்படுத்துகிறார். அவர் "காசு" வாங்காதவர் என்கிறார். அப்போது "மனித உரிமையாளர்கள்" அடித்துக் கொள்ளும் "மனித உரிமை மீறல்" காசு வாங்குவதை விட மோசமான "ஊழல்" என்று பதில் கொடுக்கிறார்கள். ராஜெஷ்தாஸ் "பத்தி சொள்ளவழியிலாமல்" மௌனமாகிறார். அது அவர் செய்த "ஐந்தாவது" குற்றம்.

இப்போது "இம்மானுவேல் சேகரன்" நினைவு நாள் வருகிறது என்று "வன்முறை" செய்ய தயார் ஆகிறார். திட்டமிட்டு "ஜான்பாண்டியனை" நெல்லையிலேயே " தனது தென்மண்டல அய்.ஜி. பதவியை" பயன்படுத்தி தடுக்கிறார்.வன்முறையை எதிர்பார்த்து "டி.அய்.ஜி.அய். தயார்"செய்கிறார். அதை மேலிடத்திற்கு "சொல்லவிடாமல்" பரமக்குடியில் "உளவுத்துறை எஸ்.அய். யாக இருந்த சுபாஷ் என்பவரை" உச்சுப்புளிக்கு மாற்றுகிறார். "துப்பாக்கி சூடு" முடியும்வரை சென்னையில் உள்ள " உள்துறை செயலாளருக்கு"செய்தியை சொல்லவிடாமல் தடுக்கிறார். சென்னையில் உள்ள "உளவுத்துறைக்கும், டி.ஜி.பி.க்கும் " செய்தி போகவிடாமல் தடுக்கிறார். இந்த "குற்றவாளி" செய்தது தேவேந்திரகுல மக்கள் மீதான "போர்குற்றம்" அல்லாமல் "வேறென்ன?"..

.

"போர்" அறிவித்துள்ளார்களா " அதிகாரிகள்?".

பரமக்குடியில் நடந்த "இனப் படுகொலை" ஏதோ சாதாரணமாக "காவல் துறை" நடத்தும் "அழக்கமான" படுகொலைகளை ஒத்தது அல்ல. "தேவேந்திர குல வேளாளர்" மக்கள் ஒரு "போர்குணமிக்க உழவர் படை". அந்த போர்குணமிக்க "உழவர்கள்" தமிழ்நாட்டில் இருக்கும் "உழவர் கூட்டத்திலேயே" முன்னோடிகளான உழைக்கும் மக்கள். தமிழர் திருவிழா என்று "பொங்கல்"நாளை கொண்டாடும் வழக்கமே, அது " அறுவடைத் திருநாள்" என்பதால்தான். அந்த அறுவடைத் திருநாளுக்கு "யாருக்கு" நன்றி சொல்லவேண்டும் என்று தமிழர்கள் எண்ணும் போதெல்லாம் "உழவர்களுக்கு " என்று பதில் வரும். அத்தகைய "உழவர்களில்", நிலமற்றவர், சிறு நிலம் உடையவர், நடுத்தர விவசாயி, பணக்கார விவாசாயி என்ற வகைகள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த "தேவேந்திர குல வேளாளர்கள்" எனப்படுவோர், "உழைக்கும் விவசாயிகளாவர்". அதாவது அவர்கள் "சிறு, நடுத்தர, பணக்கார விவசாயிகளின்" பிரிவுகளில் வருவார்கள். அவர்களில் "நிலமற்றவர்கள்" இருந்தாலும், அனேகமாக " சிறிய அளவு நிலம் வைத்திருக்கும்" விவசாயிகள் "அதிகமாகவே" இருப்பார்கள்.


அப்படிப்பட்ட "ஒரு போர்குணமிக்க" விவசாயிகளுடன் "நீ" மோதுகிறாய் என்பதை, சம்பந்தப்பட்ட "அதிகாரிகளுக்கும்", அவர்களைப் பாதுகாக்கும் "அரசுக்கும்", அந்த மக்களின் "வாக்குகள்" மூலம் "ஆட்சிக்கு" வந்திருக்கும் கட்சிக்கும் நாம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய "உழைக்கும் விவசாயிகளின்" உழைப்பால் தானே "உன்னுடைய" வீட்டில் "அரிசி" உலையில் வேகவைக்கப்படுகிறது? இந்த கேள்வியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாம் கேட்க வேண்டும். "உழவன் சேற்றில் கால் வைக்காவிட்டால்", நீ "சோற்றில் கை வைக்க முடியாது" என்று வீர வசனம் பேசும் "ஏ,தமிழகமே" நீ பரமக்குடி துப்பாக்கி சூட்டில் எழு பேர் அன்னிய்யயமாக "படுகொலை " செய்யப்ப்பட்ட போது எங்கே போயிருந்தாய்? விவசாயத்தை பாதுகாக்கும் ஒரு "படையை" நீ புறக்கணித்தால் "நாளை" சோறு, தண்ணீ இல்லாமல் அலையமாட்டையா? மானங்கெட்டவன் மட்டுமே இன்னமும் "நிம்மதியாக" தூங்குவான். மரமண்டை மட்டும்தான் "மனித உரிமையை" சிந்திக்காமல் இருப்பான். இப்போது "அரசுக்கும், தேவேந்த்ரகுல மக்களுக்கும்" நடக்கும் "போரில்" நீ எந்தப் பக்கம்?



நிலம் "சார்ந்த" உழைப்பு, அதனால் வரும் "சுயம் சார்ந்த" நினைப்பு, அதனால் வரும் "சுய மரியாதை" இருப்பு, அதனால் "எழும்" "வீரமிகு" விறைப்பு, அத்தனையும் கொண்ட ஒரு "உழவர் குடியிடம்" விளையாடுகிறாய்? மண்ணில் நிற்பவன், "மண்ணுக்கு சொந்தக்காரன்". "வந்தேறிக்கூட்டம்" கையில் "துவக்கு" இருப்பதால், "காக்கை, குருவியை" சுடுவதுபோல, "எத்தனை நாள்" சுட்டுவிடும்? பார்ப்போமா? இதுதான் அன்று, "வெள்ளையன்" வேட்டைக்காடாக "தமிழ்மண்ணை" ஆக நினைத்தபோது, வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு ஒரு "தளபதியை" மாவீரன் "சுந்தரலிங்க குடும்பன்" தனியாகவே "படை" நடத்தினான். தன் மாமன் மகள் "வடிவுடன்" வெள்ளைக்காரனின் "ஆயுதக் கிடங்கில்" வெடியாகி "எரித்து" அழித்தான். அவன் "முதல் தற்கொலைப்படை போராளியாக" இன்று வரை பாராட்டப்படுகிறான். அந்த " முதல் கரும்புலியின்" வாரிசுகள்தான் இப்போது, "தேவேந்திர குல" மக்களாக "பரிணமிக்கிறார்கள்". எண்ணிப்பார்க்க வேண்டாமா? சிவகங்கை சீமையை ஆண்ட " வேலு நாச்சியார்" படையில் வெள்ளையனை எத்ரித்து, களம் புகுந்து, "வீரச்சாவை" எட்டிய " பெண் கரும்புலி" யார்? அவர் "குயிலி" என்ற தேவேந்திர குல வீர மங்கை. தெரியுமா உனக்கு என்று அந்த "சின்னப் புத்தி" அதிகாரிகளை கேட்காமல் இருக்க முடியுமா?


தென் மண்டல "அய்.ஜி. ராஜேஷ் தாஸ்" இந்த 'அருவெறுக்கும் போரின்" முதல் குற்றவாளி. ராமநாதபுரம் டி.அய்.ஜி. என்ற "சந்தீப் மிட்டல்" இந்த "போர்குற்றத்தின்" இரண்டாவது குற்றவாளி. அவர்களுக்கு "எடுப்பு வேலை" செய்த "செந்தில் வேலன்" மூன்றாவது குற்றவாளி. இந்த "போர்குற்றவாளிகளை" கூண்டிலேற்றாமல், எந்த "மனித உரிமையும்" தமிழ்நாட்டில் "மயிரைக் கூட" பிடுங்க முடியாது. இப்போது அதிகாரிகள் அறிவித்திருக்கும் "போரை" எத்ரிகொள்ள மக்கள் "தயார்". எந்த அளவுக்கு உங்கள் நாட்டின் 'அரசியல் சட்டமும், ஜனநாயகமும்" தயார் என்பதை "வெளியே" வந்து அரசியல் கட்சிகள் கூறட்டும். இனி நாமும் "வேடிக்கை" பார்பவர்களாக இருந்தால் "கூண்டோடு " அழிந்து விடுவோம்.