கீழ வெண்மணி கிராமம், 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் உலகம் முழுவதும் ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்தது. செழுமையான விவசாயத்தை கட்டிக்காத்துவந்த உழவர் பருன்குடி மக்களான தாழ்த்தப்பட்ட விவசாயக்கூளிகளை சுரண்டி கொழுத்துவந்த ஆதிக்க சாதி வெறி கொண்ட பண்ணையார்களின் சங்கத்தலைவன் கோபாலக்ருஷ்ண நாயுடு, காவல்துறையுடன் சேர்ந்துகொண்டு அறுவடைக்கு அதிகக்கூலி கேட்ட அந்த அடிமட்ட ஏழை மக்களை விரட்டி, வெண்மணி கிராமத்திலேயே ஒரு குடிசைக்குள் தள்ளி கதவை தாளிட்டு அவர்களது வாழ்க்கைக்கும் தாளிட்டுவிட்டான். அனைத்து கூலி மக்களும் அவன் வைத்த வெந்தீயில் எரிந்து சாம்பலாயினர். அந்த கொடூரக்காட்சியை பார்த்துகொண்டு கைகள் தேர்தல்களால் கட்டப்பட்டநிலையில் மார்க்சிஸ்ட் கட்சி கண்ணீர் விட்டது. அந்த மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக இப்போது கீழ்வேள்ளூர் தொகுதியில் ஒரு மகாலிங்கம் நிற்கிறார்.
கீழ வெண்மணியை கொண்ட இந்த கீழ்வெள்ளூர் தொகுதி புதிதாக சமீபத்திய தொகுதி மறுபரிசீலனையில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி. அதுவும் தலித் இனத்திற்கான ஒதுக்கீட்டு தொகுதி. கீழ வன்மைநீல் நடந்த கொடூரக்கொளைகளுக்கு எதுவும் செய்யமுடியாமல் சாபிடாமல் மட்டுமே இருந்த முதல்வர்தான் திமுகவின் முதல் முதல்வரான அண்ணாதுரை. அந்த திமுக சார்பாக இப்போது அந்த தொகுதியில் அமைச்சர் மதிவாணன் நிற்கிறார். அந்நாள் வெண்மணி படுகொலையை நினைவு படுத்தி நிற்கின்ற இளம் பெண் மாணவி தேவகி அனைவராலும் கவனிக்கப்படுகிறார். ஏன் என்றால் அவர் மட்டுமே வெண்மணி படுகொலைகள் பற்றி பேசக்கூடியவராக இருக்கிறார். இனி இப்படி கொடுமைகள் நடைபெறாவண்ணம் தடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்து தனது தேர்தல் பயணத்தை அந்த இளம் பெண் துவக்கியிருக்கிறார்.
ஆட்சியாளர்களும், நீதிமன்றமும், மார்க்சிஸ்ட் கட்சியும் படுகொலைகளுக்கு தீர்ப்பு எழுதாத ஒரு சூழலில், நக்சல்பாரி இயக்கம் அந்த படுகொலைகள் நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து கொடியவன் கோபாலக்ருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது. அந்த அழித்தொழிப்பை நடத்திய சி.பி.ஐ.-எம்.எல்.. இயக்கத்தை அன்று வினோத் மிஸ்ரா தலைமை தாங்கினார். அந்த அழித்தொழிப்பை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தோழர்களில் ஒருவர் கண்ணையன் என்ற ராமசாமி. அந்த ராமசாமியின் தம்பி மகள்தான் இந்த தேவகி என்ற சுயேச்சை வேட்பாளர்.
இந்த சுயேச்சை வேட்பாளர் தேவகி, மயிலாடுதுறை ஏ.வி.எம். கல்லூரியில் எம்.ஏ.படிக்கும் மாணவி. பறையர் நல பேரவையின் தலைவர்.அவருக்கு "பள்ளர் நல பேரவை" "சக்கிலியர் நல பேரவை"ஆகியவை ஆதரவு தருகின்றன.இன்றைய தேர்தல் போட்டியில் இப்படி ஒரு சமூக கொடுமையை மையப்படுத்தி பரப்புரை செய்வது பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் கோபலக்ருஷ்ண நாயுடுவின் படுகொலைக்கு காரணமானவர் என்றும், தலைமை தாங்கியவர் என்றும் காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்ட வெண்மணி குமரன் என்ற சுப்பிரமணியன் இந்த தேர்தல் களத்தில் " தேவகி" க்கு ஆதரவாக இறங்கியுள்ளார் என்ற செய்தி செவிமடுக்கவே மகிழ்ச்சியை தருகிறது.
Friday, April 1, 2011
ராஜபக்சே வருகையால் திமுக கூட்டணிக்குள் குழப்பமா?
மும்பையில் உலக மட்டைப்பந்து விளையாட்டு போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற நாளை தயார் ஆகிவருகிறது. அது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் ஆன ஆட்டம். ஆகவே அதை பெருமையாக இருபுறமும் நினைப்பார்கள். பாவம் தமிழர்கள். இந்த ஆட்டத்திற்கு, மகிந்தாவை இந்திய அரசு அழைத்திவிட்டது. அவரும் வருகிறார். தமிழின அழிப்பில் அறுபதாயிரம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மும்பை வருகிறான். அடஹ்ர்கு ஏற்பாடு செய்யும் இந்திய அரசு இலங்கை அரசத்தலைவர் மகிந்தாவுடன், இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல்தான் அமரவேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
இது பிரதமர் மன்மோகனை காப்பாற்றி தமிழ்நாற்ற்டு தேர்தலில் வரை இறக்கிவிட ஒரு திட்டமா என்று விளங்கவில்லை. ஆனாலும் பிரதமரும், அன்னை சோனியாவும், இளைய பட்டத்தரசர் ராகுலும், மும்பை செல்லாமல் இருக்கமுடியாது. மகிந்தாவை காணாமல் உறக்கம் வராது. அவருடன் கைகுலுக்காமல் இருக்க மாட்டார்கள். அந்த ரத்தக்கறை படிந்த கைகள் இவர்களது கைகளில் படியாமல் இருக்காது. அந்த ரத்தக்கைகளுடன் சோனியாவும், ராகுலும் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். அந்த ரத்தம் படிந்த, தமிழரின் ரத்தம் படிந்த கரங்களை பற்றாமல் எங்கள் ஊர் தாத்தா, மூத்த அரசியல்வியாதி இருக்கமாட்டார்.
மும்பையில் கொலைகாரன் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எங்கு பார்த்தாலும் ராணுவம் வளம் வருகிறது.அடஹ்னால் இனமான உணர்வுள்ள தமிழர்கள், வழமையாக ஆர்ப்பாட்டம் நடத்தும் { காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் நடத்த இருக்கும் அனுமத்திக்கப்பட்ட இடம்} விக்டோரியா டவர் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர் உணர்வாளர்கள் என்ன செய்வார்கள்?
தமிழர்களின் ரத்தத்தில் இத்தனை விசேசம் இருக்கிறதா என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்கவேண்டும். அதேநேரம் வைகோ தனது படை, பட்டரன்களை அதிமுக தோல்விக்கு வேலை செய்ய கட்டளையிட்டுள்ளார். அதை அப்படியே தொண்டர்களும் பின்பற்றுவர். திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வேலை செய்யும்படி வைகோ கொடுத்த உத்தரவால் மதிமுக தொண்டன் சமீபத்தில் நிலை குலைந்துவிட்டார்கள்.ராஜபக்சே வரவை திமுக வரவேற்கட்டும். பாமக, விசிக,இரண்டும் இரண்ட்டாட்டில் ஒராடு போல விழிக்கிரார்
இது பிரதமர் மன்மோகனை காப்பாற்றி தமிழ்நாற்ற்டு தேர்தலில் வரை இறக்கிவிட ஒரு திட்டமா என்று விளங்கவில்லை. ஆனாலும் பிரதமரும், அன்னை சோனியாவும், இளைய பட்டத்தரசர் ராகுலும், மும்பை செல்லாமல் இருக்கமுடியாது. மகிந்தாவை காணாமல் உறக்கம் வராது. அவருடன் கைகுலுக்காமல் இருக்க மாட்டார்கள். அந்த ரத்தக்கறை படிந்த கைகள் இவர்களது கைகளில் படியாமல் இருக்காது. அந்த ரத்தக்கைகளுடன் சோனியாவும், ராகுலும் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். அந்த ரத்தம் படிந்த, தமிழரின் ரத்தம் படிந்த கரங்களை பற்றாமல் எங்கள் ஊர் தாத்தா, மூத்த அரசியல்வியாதி இருக்கமாட்டார்.
மும்பையில் கொலைகாரன் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எங்கு பார்த்தாலும் ராணுவம் வளம் வருகிறது.அடஹ்னால் இனமான உணர்வுள்ள தமிழர்கள், வழமையாக ஆர்ப்பாட்டம் நடத்தும் { காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் நடத்த இருக்கும் அனுமத்திக்கப்பட்ட இடம்} விக்டோரியா டவர் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர் உணர்வாளர்கள் என்ன செய்வார்கள்?
தமிழர்களின் ரத்தத்தில் இத்தனை விசேசம் இருக்கிறதா என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்கவேண்டும். அதேநேரம் வைகோ தனது படை, பட்டரன்களை அதிமுக தோல்விக்கு வேலை செய்ய கட்டளையிட்டுள்ளார். அதை அப்படியே தொண்டர்களும் பின்பற்றுவர். திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வேலை செய்யும்படி வைகோ கொடுத்த உத்தரவால் மதிமுக தொண்டன் சமீபத்தில் நிலை குலைந்துவிட்டார்கள்.ராஜபக்சே வரவை திமுக வரவேற்கட்டும். பாமக, விசிக,இரண்டும் இரண்ட்டாட்டில் ஒராடு போல விழிக்கிரார்
ஜெயலலிதாவை சந்தித்த முஸ்லிம் தலைவர்கள்
இன்று மதியம் இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர்கள் எஸ்.எம்.பாக்கர், முனீர், சித்திக், இக்பால், அந்தோணியப்பா,ஆகியோர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இருபுறமும் அகமகிழ்வுடன் வரவேற்றுக்கொண்டனர். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு அவர்கள் நன்றி சொல்ல, அதையும் தாண்டி முஸ்லிம்கள் பிரச்னைக்கு இந்திய தௌஹித்துகள் கூறியவற்றை செல்வி.ஜெயலலிதா ஆர்வமாக கேட்டார். பொது விசயங்கள் பற்றியும் பேசினர்.
ஜே கூட்டணிக்கு அமோக ஆடஹரவு மக்கள் மத்தியில் இருப்பதாக இருபுறமும் பரிமாறிக்கொண்டார்கள். போகிற [போக்கை பார்த்தால் அதிமுக கூட்டணி முக்கால் வாசி தொகுதிகளையும் கைப்பற்றிவிடும் போலிருக்கிறதே?
ஜே கூட்டணிக்கு அமோக ஆடஹரவு மக்கள் மத்தியில் இருப்பதாக இருபுறமும் பரிமாறிக்கொண்டார்கள். போகிற [போக்கை பார்த்தால் அதிமுக கூட்டணி முக்கால் வாசி தொகுதிகளையும் கைப்பற்றிவிடும் போலிருக்கிறதே?
Wednesday, March 30, 2011
புலிகள் மீதான தடையை நீக்கு--சென்னையில் கையெழுத்து இயக்கம்.
இன்று மாலை நான்கு மணியிலிருந்து எழு மணிவரை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நெருக்கடியான பொக்குவரத்து பகுதியில் "புலிகள் மீதான தடையை நீக்கு" என்ற பெரிய எழுத்துக்கள் கொண்ட பதாகையுடன் கையெழுத்து இயக்கம் சிறப்பாக நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் முன்முயர்ச்சியில் நடத்தப்பட்ட இந்த இயக்கம் தடை பல கடந்து நடந்ததுதான் வரவேற்கத் தக்கது மூன்று மாதங்களுக்கு முன்பே இத்தகைய ஒரு கையெழுத்து இயக்கத்தை பகிரங்கமாக நடத்த இயக்குனர் புகழேந்தி கருணாநிதி அரசின் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்து கொல்லப்பட்ட சு.பா.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்ப்பா எழுதிய தமிழக முதல்வரின் தலைமையிலான காவல்துறை அதற்கு அனுமதி மறுத்திருந்தது.
அந்த நிலையிலும் விடாப்பிடியாக புகழேந்தி அதே கையெழுத்து இயக்கத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடத்தினார். அது சிறப்பாக பல தமிழர்களின் பங்களிப்போடு நடந்தேறியது. அதற்காக சென்னை பத்திர்கையாளர் மன்றத்திடம் கேள்வி கேட்டது கருணாநிதியின் காவல்துறை. அதன்பிறகு அனுமதி மறுக்கப்பட்ட சைதை பனகல் மாளிகையிலேயே நடத்த உயர்நீதிமன்றம் சென்று நீதி கேட்டார் புகழேந்தி. அந்த வழக்கு நீதிமன்றத்தின் வழமைப்படி தாமதமாக எடுக்கப்பட்டு, கடந்த பத்து நாட்கள் முன்பு தீர்ப்பாக வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதியரசர் சந்துரு, தடை செய்யப்ப்பட்ட விடுதலைப் புலிகள் பற்றி பேசலாம் என்றும் ஆதரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் பொடா வழக்கில் தீர்ப்பு கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டி, இதுபோன்று விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோருவது ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டதுதான் என்று ஒரு சிறப்பான தீர்ப்பை கூறி, அதற்க்கான காவல்துர அனுமதியை அதே இடமான சைதை பனகல் மாளிகை அருகே கொடுக்க வேண்டும் என்றும் மார்ச் 30 ஆம் நாள் மாலை நான்கு மணியிலிருந்து எழு மணி வரை வழங்குமாறும் கூறிவிட்டார்.
இந்த வரலாற்று தீர்ப்பை அமுல்படுத்தி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், பெரியார் திராவிடக் கழக தொண்டர்களின் உதவியுடன், நாற்ப்பது அடிக்கு மூன்றடி என்ற அளவில் ஒரு பெரும் பதாகையை உருவாக்கி அதை நடைபாதையையே நிரப்பும் அளவுக்கு நிறுத்திவைத்து, அதில் துணியில் அனைவரும் கையெழுத்து போடும்படி ஏற்பாடு செய்து அதற்க்கான எழுத்தாணிகளையும் தயார்செய்து, அங்கே நின்று மிகச்சிறப்பாக செய்தார்கள். "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு" என்ற அந்த முழக்கம் வருவோர், போவோர் அனைவரையும் கவரும் வண்ணம் கருப்பு எழுத்துக்களால் தடியாக பொறிக்கப்பட்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்ட வண்ணம் இருந்தனர். எல்லோர் சட்டையிலும் அதே வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகள் குத்தப்பட்டிருந்தன.
பழ.நெடுமாறன், ஓவியர் வீர சந்தானம், பேராசிரியர் சரஸ்வதி, விடுதலை ராஜேந்திரன், திரை கவிஞர் தாமரை, தியாகு, நாம் தமிழர் இயக்கத்தின் சாகுல் ஹமீது, ஊடகவியலாளர்கள், மீனவர் சங்க மகேஷ், புரட்சிகர இளைஞர் கழகத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், மதிமுகவினர், தமிழர் அமைப்புக்களைச்செர்ந்தோர், மே பதினேழு இயக்க திருமுருகன், தெ.சீ.சு.மணி, டேவிட் பெரியார், ஸ்டாலின் ராஜா, பாரதி தமிழன், ஏகலைவன்[ஊடகத்தார்] , பல பெண் தோழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள், ஆதவன், போன்ற பல தோழர்களின் கையெழுத்துக்கள் அங்கே பதிவு செய்யப்பட்டன. இடையில் வீரசந்தானம் முழக்கங்களை எழுப்பினார். அதில்"தடையை நீக்கு, தடையை நீக்கு. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு" என்பதாக எழுந்த முழக்கங்கள் வானைப் பிளந்தன. இவ்வாறு தமிழ்கூறும் நல்லுலகில் தமிழ்நாட்டின் தலைநகரில் ஒரு ஜனநாயாக குறளை எழுப்புவதற்கு நீதிமன்றம் சென்று திரும்பினால்தான் சுதந்திரம் கிடைக்கும் என்ற நிலை உலகுக்கு அம்பலமானது..
அந்த நிலையிலும் விடாப்பிடியாக புகழேந்தி அதே கையெழுத்து இயக்கத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடத்தினார். அது சிறப்பாக பல தமிழர்களின் பங்களிப்போடு நடந்தேறியது. அதற்காக சென்னை பத்திர்கையாளர் மன்றத்திடம் கேள்வி கேட்டது கருணாநிதியின் காவல்துறை. அதன்பிறகு அனுமதி மறுக்கப்பட்ட சைதை பனகல் மாளிகையிலேயே நடத்த உயர்நீதிமன்றம் சென்று நீதி கேட்டார் புகழேந்தி. அந்த வழக்கு நீதிமன்றத்தின் வழமைப்படி தாமதமாக எடுக்கப்பட்டு, கடந்த பத்து நாட்கள் முன்பு தீர்ப்பாக வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதியரசர் சந்துரு, தடை செய்யப்ப்பட்ட விடுதலைப் புலிகள் பற்றி பேசலாம் என்றும் ஆதரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் பொடா வழக்கில் தீர்ப்பு கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டி, இதுபோன்று விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோருவது ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டதுதான் என்று ஒரு சிறப்பான தீர்ப்பை கூறி, அதற்க்கான காவல்துர அனுமதியை அதே இடமான சைதை பனகல் மாளிகை அருகே கொடுக்க வேண்டும் என்றும் மார்ச் 30 ஆம் நாள் மாலை நான்கு மணியிலிருந்து எழு மணி வரை வழங்குமாறும் கூறிவிட்டார்.
இந்த வரலாற்று தீர்ப்பை அமுல்படுத்தி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், பெரியார் திராவிடக் கழக தொண்டர்களின் உதவியுடன், நாற்ப்பது அடிக்கு மூன்றடி என்ற அளவில் ஒரு பெரும் பதாகையை உருவாக்கி அதை நடைபாதையையே நிரப்பும் அளவுக்கு நிறுத்திவைத்து, அதில் துணியில் அனைவரும் கையெழுத்து போடும்படி ஏற்பாடு செய்து அதற்க்கான எழுத்தாணிகளையும் தயார்செய்து, அங்கே நின்று மிகச்சிறப்பாக செய்தார்கள். "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு" என்ற அந்த முழக்கம் வருவோர், போவோர் அனைவரையும் கவரும் வண்ணம் கருப்பு எழுத்துக்களால் தடியாக பொறிக்கப்பட்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்ட வண்ணம் இருந்தனர். எல்லோர் சட்டையிலும் அதே வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகள் குத்தப்பட்டிருந்தன.
பழ.நெடுமாறன், ஓவியர் வீர சந்தானம், பேராசிரியர் சரஸ்வதி, விடுதலை ராஜேந்திரன், திரை கவிஞர் தாமரை, தியாகு, நாம் தமிழர் இயக்கத்தின் சாகுல் ஹமீது, ஊடகவியலாளர்கள், மீனவர் சங்க மகேஷ், புரட்சிகர இளைஞர் கழகத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், மதிமுகவினர், தமிழர் அமைப்புக்களைச்செர்ந்தோர், மே பதினேழு இயக்க திருமுருகன், தெ.சீ.சு.மணி, டேவிட் பெரியார், ஸ்டாலின் ராஜா, பாரதி தமிழன், ஏகலைவன்[ஊடகத்தார்] , பல பெண் தோழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள், ஆதவன், போன்ற பல தோழர்களின் கையெழுத்துக்கள் அங்கே பதிவு செய்யப்பட்டன. இடையில் வீரசந்தானம் முழக்கங்களை எழுப்பினார். அதில்"தடையை நீக்கு, தடையை நீக்கு. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு" என்பதாக எழுந்த முழக்கங்கள் வானைப் பிளந்தன. இவ்வாறு தமிழ்கூறும் நல்லுலகில் தமிழ்நாட்டின் தலைநகரில் ஒரு ஜனநாயாக குறளை எழுப்புவதற்கு நீதிமன்றம் சென்று திரும்பினால்தான் சுதந்திரம் கிடைக்கும் என்ற நிலை உலகுக்கு அம்பலமானது..
Tuesday, March 29, 2011
மதிமுக தொண்டர் குரல் வைகோவிற்கு கேட்குமா?
வைகோ ஜெயலலிதா மீது உள்ள கோபத்தால் அதிமுகவை தோற்கடிக்க கங்கணம் கட்டுவதாக செய்திகள் வரும்போது, அதற்கு ஏற்றார்போல அவரது மனச்சாட்சி என்று அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத்தும் தினமலர், ஜூனியர் விகடன் என மறைமுகமாக இதே கருத்தை நேர்கானல்களாக கொடுத்துவருவதும் மதிமுக தொண்டர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இதே விஷயத்தை வேறு கோணத்தில் காண்கிறார்கள்.
அதிமுக ஆட்சி வந்தால் அவர்களது குறி முழுவதும் திமுகவை அழிப்பதிலேயே இருக்கும். அப்பது அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசுபவர் வைகோவாக மட்டுமே இருப்பார். ஆனால் திமுக ஆட்சி வந்துவிட்டால் அவர்கள் உடனடியாக மதிமுக கட்சியின் தொண்டர்களையும் தலைவர்களையும் இழுத்துப்போடும் வேலையையே பார்ப்பார்கள். அதனால் மதிமுக அழியும். ஆகவே திமுக வை ஆடஹ்ரிப்பது எந்த வகையிலும் மதிமுகவிற்கு சாதகமான ஒன்று அல்ல. இவ்வாறு அவர்கள் கருதுகிறார்கள். வைகோ காதுகளுக்கு இந்த செய்தி செல்லுமா?
அதிமுக ஆட்சி வந்தால் அவர்களது குறி முழுவதும் திமுகவை அழிப்பதிலேயே இருக்கும். அப்பது அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசுபவர் வைகோவாக மட்டுமே இருப்பார். ஆனால் திமுக ஆட்சி வந்துவிட்டால் அவர்கள் உடனடியாக மதிமுக கட்சியின் தொண்டர்களையும் தலைவர்களையும் இழுத்துப்போடும் வேலையையே பார்ப்பார்கள். அதனால் மதிமுக அழியும். ஆகவே திமுக வை ஆடஹ்ரிப்பது எந்த வகையிலும் மதிமுகவிற்கு சாதகமான ஒன்று அல்ல. இவ்வாறு அவர்கள் கருதுகிறார்கள். வைகோ காதுகளுக்கு இந்த செய்தி செல்லுமா?
திமுக தொண்டரின் மனச்சாட்சி.
சென்னையில் தென்சென்னை தொடர்ந்து திமுக தோற்கும் இடமாக மாறிவருவது திமுக தொண்டர்கள் மத்தியல் கவலை அளித்துவருகிறது. ஏற்கனவே தென் சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதி, அவ்வப்போது அதிமுக வசம் சென்று விடுவதில் அவர்கள் கோபத்தில் உள்ளனர். தென் சென்னையின் நாடாளுமன்ற தொகுதியும் அதிமுக வசம் சென்றுவிட்டதே என்ற கவலையும் அவர்களுக்கு உண்டு. மயிலாப்பூர் தொகுதியில் இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைவர் கொடுத்துவீட்டரே என்று அவர்கள் வ்ருந்தி வருகிறார்கள். ஏற்கனவே மயிலாப்பூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி உறப்பினர்களின் தொகுதிகளில், பதின்மூன்றில் ஐந்தை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்ததற்கே மனச் சங்கடத்தில் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.
இப்போது ஆயிரம் கலாட்ட செய்து அதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு தானே கடைசியில் வேட்பாளராக நின்றது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது சொனியாஅவையே ஏமாற்றிய தங்கபாலு தந்திரம் என்றுதான் திமுக தொண்டர்கள் எண்ணுகிறார்கள். அதேசமயம் தங்கள் கட்சியான திமுகவை மீண்டும் எப்படி இந்த தொகுதியில் வலுப்படுத்துவது என்று சிந்திக்கிறார்கள். காங்கிரஸ் இந்த முறை வெற்றி பெற்றால் மயிலை தொகுதி நிரந்தரமாக காங்கிரஸ் தொகுதியாக போய்விடும் என்று அச்சப்படுகிறார்கள்.
திமுகவில் தான்தான் வேட்பாளராக அடுத்தமுறை வரவேண்டும் என்று எண்ணுபவர்களும், தான்தான் அடுத்தமுறை வேடப்பலராக ஆவோம் என்று எண்ணுபவர்களும் நிறைய இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருமே தொகுதியை நிரந்தரமாக காங்கிரஸ் கையில் கொடுத்துவிட தயாராயில்லை. அதற்காகவே காங்கிரஸ் கட்சி இந்த முறை தோற்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இது ஒரு திமுக தொண்டர் கூறிய மனச்சாட்சி வாக்குமூலம்.
இப்போது ஆயிரம் கலாட்ட செய்து அதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு தானே கடைசியில் வேட்பாளராக நின்றது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது சொனியாஅவையே ஏமாற்றிய தங்கபாலு தந்திரம் என்றுதான் திமுக தொண்டர்கள் எண்ணுகிறார்கள். அதேசமயம் தங்கள் கட்சியான திமுகவை மீண்டும் எப்படி இந்த தொகுதியில் வலுப்படுத்துவது என்று சிந்திக்கிறார்கள். காங்கிரஸ் இந்த முறை வெற்றி பெற்றால் மயிலை தொகுதி நிரந்தரமாக காங்கிரஸ் தொகுதியாக போய்விடும் என்று அச்சப்படுகிறார்கள்.
திமுகவில் தான்தான் வேட்பாளராக அடுத்தமுறை வரவேண்டும் என்று எண்ணுபவர்களும், தான்தான் அடுத்தமுறை வேடப்பலராக ஆவோம் என்று எண்ணுபவர்களும் நிறைய இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருமே தொகுதியை நிரந்தரமாக காங்கிரஸ் கையில் கொடுத்துவிட தயாராயில்லை. அதற்காகவே காங்கிரஸ் கட்சி இந்த முறை தோற்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இது ஒரு திமுக தொண்டர் கூறிய மனச்சாட்சி வாக்குமூலம்.
வைகோவின் தேர்தல் புறக்கணிப்புக்கு அர்த்தம் என்ன?
வைகோ தான் அங்கம் வகித்த அதிமுக கூட்டணியில் சரியான பங்கு கொடுககவில்லை என்ற மனக்குறைக்கு பிறகு வெளியேறினார் எனபதும், அதையொட்டி தேர்தல் புறக்கணிப்பு என்று அவர் அறிவித்ததாக ஊடகங்களில் வந்ததும் நமக்கு தெரியும்.. ஆனால் அவர் அவரது கட்சியின் தீர்மானத்தில், மதிமுக தேர்தலில் இந்தமுறை போட்டியிடப்போவதில்லை என்றுதான் தெரிவித்திருந்தார்.அப்போதும் பலர் வருத்தப்பட்டது என்னவென்றால், மதிமுக தனித்து போட்டியிட்டிருக்கலாமே என்பதுதான். அதற்கும் வைகோ பதில் கூறியிருந்தார். அதாவது அப்படி தனித்து போட்டியிட்டிருந்தால், திமுக--காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து எதிர்க்கட்சி கூட்டணியின் வாக்குகளை பிளவு படுத்துவதற்க்காக நிற்பதாக அபாண்டமாக பழி சுமத்தி விடுவார்கள் என்று அறிவித்தார்.
வைகோவின் அந்த வாக்குவாதம் நமக்கும் ஏற்புடையதாக இருந்தது. இப்போது புதிய செய்தி மக்களை குழப்ப வந்திருக்கிறது. வைகோ தனது கட்சிக்காரர்களிடம் வேறுவிதமான வழிகாட்டலை கொடுப்பதாகவும், அது அதிமுக கூட்டணியின் அல்லது அதிமுக கட்ச்சியின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதர்க்காக திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதற்காக அதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் தொகுதிகளில் கூட அதிமுகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறும் அவர் வழிகாட்டல் கொடுக்கிறார் என்பதே அந்த அதிர்ச்சி செய்தி.இதி நம்பகமாக இல்லை எனபதுதான் நமக்கு வைகோ மீது உள்ள பற்று காட்டுகிறது.
ஆனால் வருகின்ற செய்தி என்னவென்றால், கோவை பகுதியில் வைகோ கொடுத்த வழிகாட்டல்படி, அதிமுகவை தோற்கடிக்க திமுக வேட்பாளரான கண்ணப்பனை ஆதரிக்க சொல்லியிருக்கிறார் என்றும், அதை அங்குள்ள மதிமுக கட்சிக்காரர்கள் எதிர்கிறார்கள் என்றும் கூறுகிறர்கள். அதாவது கண்ணப்பன் மதிமுக கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு திமுக சென்றவர் என்றும் அவரை எப்படி ஆதரிக்க முடியும் என்றும் கேட்கிறார்களாம். அப்படியானால் காங்கிரஸ் கட்சி துரோகம் செய்ததால், தமிழர்கள் அதை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியது என்னாயிற்று? பார்வதியம்மாளின் சாம்பலை கரைக்க முன்னிற்கும் வைகோ எப்படி அந்தம்மாளின் சிகிச்சைக்கு கூட வழிகொடுக்காத திமுக, காங்கிரஸ் கட்சிகளை ஆதரித்து அதேநேரம் செயல்படுத்த உத்தரவிடமுடியும்? அப்படி வைகோ செய்திருப்பார் என்று நாம் நம்ப வில்லை.
தமிழீழ தேசியத்தாய் பார்வ்தி அம்மாளின் சாம்பலை சென்னையில் மட்டுமின்றி, குமரியிலும், கரைக்க முற்படும் வைகோ எப்படி அந்த சாம்பலுக்கு துரோகம் செய்த கருணாநிதியையும், சோனியாவையும் ஆடஹ்ரிக்க முடியும்? நடக்கவே நடக்காது என்பதே நமது வாதம். வைகோவிற்கு இப்போது ஜெயலலிதாதான் முதல் எதிராக டேஹ்ரிகிறார் என்றும், ஆகவே இது நடந்திருக்கும் என்றும் கூறுவோரிடம் நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்த காங்கிரஸ் தலைமையை எப்படி வைகோ ஆதரிக்க சொல்லமுடியும்? இன ழிப்பு போரை நடத்தியது இந்திய அரசுதான் என்று அறிவித்த வைகோ எப்படி அதை மாற்றி எழுத தனது அணிகளுக்கே கூறமுடியும்? அதிமுகவிற்கு நாம் யார் என்று காட்டவேண்டும் என்றால், அதற்கு அவர்களை பல இடங்களிலும் தோற்கடித்து காட்டுவதே சிறந்த வழி என்றி அவர் கூறியதாக கூறுகிறார்கள். அப்படி கூறியிருந்தால் அதை எப்படி மதிமுக தொண்டர்கள் ஏற்பார்கள்?
வைகோ தான் பார்வதியம்மாள் சாம்பலை எடுத்க்துக்கொண்டு அமெரிக்கா செல்வதாக அந்த தகவல்கள் கூறும்போது அவர் எப்படி தேர்தலில் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பார் என்பதே நமது கேள்வி.இது திமுக தலைவரின் கெட்டிக்காரத்தனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிழையான முத்திரை குத்த்டுதலா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த சந்தேகங்கள் தீர தமிழின அழிப்புக்கு துணை நின்ற காங்கிரஸ்-திமுக கூட்டணியை தோற்கடிக்க கூறி வைகோ அறிவிக்கவேண்டும் என்று கூறுவோரும் உண்டு. அதைத்தான் சீமான் உறுதிபட கூறுகிறாரே? அப்படிப்பட்ட கொள்கையில் ஊறி எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வைகோவும் தொண்டர்கள், மதிமுக கட்சிக்காரர்கள் உடனடியாக சீமானின் கட்சிக்குதாவிவிட மாட்டார்களா?
வைகோவின் அந்த வாக்குவாதம் நமக்கும் ஏற்புடையதாக இருந்தது. இப்போது புதிய செய்தி மக்களை குழப்ப வந்திருக்கிறது. வைகோ தனது கட்சிக்காரர்களிடம் வேறுவிதமான வழிகாட்டலை கொடுப்பதாகவும், அது அதிமுக கூட்டணியின் அல்லது அதிமுக கட்ச்சியின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதர்க்காக திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதற்காக அதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் தொகுதிகளில் கூட அதிமுகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறும் அவர் வழிகாட்டல் கொடுக்கிறார் என்பதே அந்த அதிர்ச்சி செய்தி.இதி நம்பகமாக இல்லை எனபதுதான் நமக்கு வைகோ மீது உள்ள பற்று காட்டுகிறது.
ஆனால் வருகின்ற செய்தி என்னவென்றால், கோவை பகுதியில் வைகோ கொடுத்த வழிகாட்டல்படி, அதிமுகவை தோற்கடிக்க திமுக வேட்பாளரான கண்ணப்பனை ஆதரிக்க சொல்லியிருக்கிறார் என்றும், அதை அங்குள்ள மதிமுக கட்சிக்காரர்கள் எதிர்கிறார்கள் என்றும் கூறுகிறர்கள். அதாவது கண்ணப்பன் மதிமுக கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு திமுக சென்றவர் என்றும் அவரை எப்படி ஆதரிக்க முடியும் என்றும் கேட்கிறார்களாம். அப்படியானால் காங்கிரஸ் கட்சி துரோகம் செய்ததால், தமிழர்கள் அதை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியது என்னாயிற்று? பார்வதியம்மாளின் சாம்பலை கரைக்க முன்னிற்கும் வைகோ எப்படி அந்தம்மாளின் சிகிச்சைக்கு கூட வழிகொடுக்காத திமுக, காங்கிரஸ் கட்சிகளை ஆதரித்து அதேநேரம் செயல்படுத்த உத்தரவிடமுடியும்? அப்படி வைகோ செய்திருப்பார் என்று நாம் நம்ப வில்லை.
தமிழீழ தேசியத்தாய் பார்வ்தி அம்மாளின் சாம்பலை சென்னையில் மட்டுமின்றி, குமரியிலும், கரைக்க முற்படும் வைகோ எப்படி அந்த சாம்பலுக்கு துரோகம் செய்த கருணாநிதியையும், சோனியாவையும் ஆடஹ்ரிக்க முடியும்? நடக்கவே நடக்காது என்பதே நமது வாதம். வைகோவிற்கு இப்போது ஜெயலலிதாதான் முதல் எதிராக டேஹ்ரிகிறார் என்றும், ஆகவே இது நடந்திருக்கும் என்றும் கூறுவோரிடம் நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்த காங்கிரஸ் தலைமையை எப்படி வைகோ ஆதரிக்க சொல்லமுடியும்? இன ழிப்பு போரை நடத்தியது இந்திய அரசுதான் என்று அறிவித்த வைகோ எப்படி அதை மாற்றி எழுத தனது அணிகளுக்கே கூறமுடியும்? அதிமுகவிற்கு நாம் யார் என்று காட்டவேண்டும் என்றால், அதற்கு அவர்களை பல இடங்களிலும் தோற்கடித்து காட்டுவதே சிறந்த வழி என்றி அவர் கூறியதாக கூறுகிறார்கள். அப்படி கூறியிருந்தால் அதை எப்படி மதிமுக தொண்டர்கள் ஏற்பார்கள்?
வைகோ தான் பார்வதியம்மாள் சாம்பலை எடுத்க்துக்கொண்டு அமெரிக்கா செல்வதாக அந்த தகவல்கள் கூறும்போது அவர் எப்படி தேர்தலில் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பார் என்பதே நமது கேள்வி.இது திமுக தலைவரின் கெட்டிக்காரத்தனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிழையான முத்திரை குத்த்டுதலா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த சந்தேகங்கள் தீர தமிழின அழிப்புக்கு துணை நின்ற காங்கிரஸ்-திமுக கூட்டணியை தோற்கடிக்க கூறி வைகோ அறிவிக்கவேண்டும் என்று கூறுவோரும் உண்டு. அதைத்தான் சீமான் உறுதிபட கூறுகிறாரே? அப்படிப்பட்ட கொள்கையில் ஊறி எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வைகோவும் தொண்டர்கள், மதிமுக கட்சிக்காரர்கள் உடனடியாக சீமானின் கட்சிக்குதாவிவிட மாட்டார்களா?
Subscribe to:
Posts (Atom)
