Friday, June 10, 2011

திமுகவை விட்டு மன்னர் குடும்பம் விலக வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லையே?

திமுக ஒரு இலட்சியத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதாகத்தான் அண்ணாவால் அறிவிக்கப்பட்டது. அதை நம்பித் தான் தமிழ்நாட்டு மக்களும் அந்த திமுகவை இந்நாள் வரையில் ஆட்சிக்கு கொண்டுவருகிறார்கள். எதிர்கட்சியாக அல்லது எதிரி கட்சியாக ஆக்கினாலும் திமுகவை தமிழ்நாட்டு மக்கள் ஏதோ ஒரு லட்சியம் கொண்ட கட்சி என்பதாக எண்ணுகிறார்கள். அவரகளது எண்ணத்தில் மண் விழும்படி இப்போது கலைஞர் அந்த கட்சியை இழுத்துச் சென்றுள்ளார். இன்று அது அவரது " குடும்ப கட்சி" என்பதாக ஆகிவிட்டது.


அவர்களது குடும்பத்தினர் அவரது அறிவுரைப்படி செய்த " ஊழல்களால்" அந்த கழகம் இப்போது தோல்வி அடைந்தது மட்டுமின்றி, தலைமையில் உள்ள ஒவ்வொரு அமைச்சராக சிறைக்கு செல்லும் அளவு, திமுகவின் "மரியாதை" கேவலப்பட்ட்டு வருகிறது. இது உண்மையான "திமுக உடன்பிறப்புகள்" செரிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர்கள் கழகத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல தயாராய் இருக்கிறார்கள். கலைஞரும், அவரது குடும்பத்தாரும் கழகத்திலிருந்து விலகிக் கொண்டு, கழகத்தை " அண்ணாவின் உணமையான உடன்பிறப்புகள் " கைகளில் ஒப்படைக்க தயாரா? இதுவே அவர்களது வாதம்.

Thursday, June 9, 2011

திமுக இனி தமிழருக்கான கட்சி இல்லையா?

ஜூன் எட்டாம் நாள் ஒரு " காலகட்டம்" முற்றுப் பெற்றது. அதாவது திமுக என்ற கட்சி, மு.க. தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருந்த கட்சி, " தமிழர்களுக்காக, தமிழர் நலனுக்காக," செயல்படுகிறது என்ற மாயை, பல பத்தாண்டுகளாக இருந்துவந்த "மாயை" 2009 ஆம் ஆண்டு வன்னியில் நான்காவது போர் தோற்கடிக்கப் பட்ட நேரத்திலேயே, " அம்பலமாகி" இருந்தாலும், உலகத் தமிழர்கள் அந்த திமுக தலைவரை " போர்க் குற்றவாளி பட்டியலில்" சேர்த்திருந்தாலும், மிச்ச, சொச்சம் இருந்த " தமிழின எச்சங்கள்" அந்த எண்பத்தெட்டு வயது முதியவர் மீது இருந்துவந்தது. அதுவும் இந்த நாளில் " முழுமையாக நீக்கப்பட்டு விட்டது" இனி திமுக தலைமையை " தமிழர் நலனுக்கானது" என்று எவராவது இந்த பூமிப் பந்தில் " தனது நாக்கை போட்டு சொல்ல முடியாது"


தமிழின அழிப்பு போரை நடத்திய " ராஜபக்சே கும்பலை" ஐ.நா. சபை "போர்குற்றவாளிகள்" என்று அறிவிக்க, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற " தீர்மானம்" , தமிழக சட்ட மன்றத்தில், "ஏகமனதாக" நிறைவேற்றப் பட்டது. இது ஒரு " வரலாற்று தீர்மானம்" . தோற்றத்தில் இந்த "தீர்மானம்" ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க, அரசியல் உரிமையை அறுதியிட, தமிழர் விரோதிகளை தண்டிக்க, எனபது போல தோற்றமளிக்கிறது. ஆனால் இது உண்மையில் " தமிழ்நாட்டு மக்களது மானத்தைகாப்பதர்கான" தீர்மானம். ஏன் என்றால் " கருணாநிதி ஆட்சி, ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதை வேடிக்கைபார்த்ததால், ஈழத் தமிழர் மீதான போரை இந்திய பேரரசு நடத்தியபோது, உடன் சென்றதால், ராஜபக்சே உடன் கை குலுக்கியதால், ராஜபக்சேவை நியாயப் படுத்தியதால், ராஜபக்சேவை இந்திய அரசு அனைத்து நாட்டு அரங்கில் காப்பாற்றிய போது,மவுனம் சாதித்ததால், ஈழரைக் கோடி தமிழ் மக்களின் மானமும் கப்பலேறியிருந்தது"



உலகெங்கும் இருக்கும் பல தமிழ் உணர்வாளர்கள், " துரோகி கருணாநிதி இருக்கும் தமிழ்நாட்டு மண்ணில் காலடி எடுத்து வைக்க மாட்டோம்" என்று உருதியாகாரிவித்து இருந்தார்கள். அவர்களது உணர்வுகளை புரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்கள் , இந்த தேர்தலில் அந்த "கருணாநிதிக்கும் அவரது குமபலை சேர்ந்த ஒவ்வொரு கட்சிக்கும் "கல்தா "கொடுத்து இருந்தார்கள்" அதன் எதிரொலியே இந்த " தீர்மானம்" அகவே இது " தமிழ்நாட்டு மக்களின்" மானத்தை காப்பதற்கான தீர்மானம். அதே சமயம் இந்த " தீர்மானம்" இன்று அகில உலக அரங்கிலே நடக்கும் " தமிழர் விடுதலை அரசியல் போராட்டத்திற்கான" . ஒரு " போர் பிரகடனம்" எதிரை "போர் குற்றவாளி என அறிவிக்க சொல்வதும் " ஒரு " போர் பிரகடனம் தானே"

Tuesday, June 7, 2011

"ஜெ" ஐ ஏமாற்ற ராஜபக்சேயின் புதிய தூதர்.

தமிழ்நாட்டில் மக்கள் எல்லாம் " போர் குற்றவாளிகளுக்கு" எதிராக வழங்கிய தீர்ப்பால் " ஜெர்யலலிதா" பதிவுக்கு வந்துவிட்டார் எனபது ராஜபக்சேவிற்கு முதல் அடியாக இருந்தது. அப்போதும் டில்லி மீது நம்பிக்கை வைத்து கொழும்பு காய் நகர்த்தியது. ஆனால் தில்லியோ எப்படியாவது " ஜெயலிதாவை நண்பராகிக் கொள்ளுங்கள்" என்று அறிவுரை சொன்னது. அடஹ்ர்குப் பின் எடுக்கும் பல முயற்சிகளும் கொழும்பிற்கு வெற்றியைத் தரவில்லை. தனது புதிய " காய் நகர்த்தலுக்கு" ஆள் தேடி அலைந்தது.

இப்போது " மிலிந்த மோர்கோடு" என்ற ஒரு நபரை கண்டுபிடித்துள்ளது. அவர் இப்போது ராஜபக்சேவின் "மூத்த ஆலோசகராக" பொறுப்பேற்றுள்ளார். அந்த " மிலிந்த" ஏற்கனவே "ஐக்கிய தேசிய கட்சியின்" வெளிவிவகார அமைச்சராக இருந்தவர். அதாவது " ரணில் விக்கிரம சின்காவின்" வலது கரமாக இருந்தவர். அது மட்டுமின்றி பில் கிளிண்டனின் மனைவியின் சகோதரியை மணமுடித்தவர். இப்படிப்பட்ட ஒரு அரை அமெரிக்கா ஆளை ஏன் பிடித்தார் மகிந்தா? இத "மிலிந்த" உலக அளவில் பிரபல அரசியல் தூதராம். அமெரிக்காவின் " டைம்ஸ்" ஏட்டின் உலகத்தலைவர் என்ற பெருமையை பெற்றவராம். எதையும் சாதிப்பதில் வல்லவராம்.

அந்த " மிலிந்த" இப்போது " சந்திரபாபு நாயுடுவை" பிடித்துவிட்டாராம். அவர் மூலம் " ஜெயலலிதாவிடம்" நேரம் பெற்று சந்திக்க ஏற்பாடு செய்கிறாராம். அதற்கு ஏமாறுபவர் என தமிழக முதல்வரை இவர்கள் நினைத்து விட்டார்கள். இந்த " மலிந்த" "நேசனல் டிரஸ்ட் " என்ற நிறுவன முதலாளி. இவர் பேசி, பேசியே அடுத்தவர்களை இனங்கவைப்பதில் வல்லவர் என்பது ராஜபக்சேவின் கணக்கு. ஆனால் " தமிழக மக்களின் இன உணர்வை புரிந்துள்ள ஜெயலளித்ஜா இதற்கு இணங்கப் போவது இல்லை" அப்படி இனஅகினால் அதைப்வைத்து தமிழ் மக்கள் உணர்வுகளை கலைஞர் பயன்படுத்திவிடுவார் எனபது கூடவா ஜெயலலிதாவிற்கு புரியாது?

இந்திய அரசின் செயலால் சிக்கிக் கொண்டார் ராஜபக்சே.

இலங்கை அதிபர் மாளிகை செய்யும் அனைத்து செட்டைகளையும் பொறுத்துக் கொண்டிருக்க இப்போது இந்திய அரசின் தலைமை தயாராக இல்லை. ஏற்கனவே சில, பல விசயங்களில் இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும் முரண்பட்டு முற்றி வருகிறது. இந்திய அரசு கேட்கும் ஒவ்வொரு ஒப்பந்தந்தையும் அப்படியே கொடுக்க இலங்கை தயாரில்லை. சீனாவிற்கு இலங்கை அரசு கொடுக்கும் ஒவ்வொரு ஒப்பந்தமும் இந்திய அரசுக்கு உடன்பாடாக இல்லை.சமீ[பத்தில் இந்திய அரசு அறிவித்த " ஈழத்தமிழருக்கு அதாவது போரில் இடம் பெயர்ந்தவர்களுக்கு, இந்திய அரசின் உதவியுடன் அவரவர் இடங்களில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம்" அபப்டியே நடுத்தெருவில் நிற்கிறது. அதற்கு காரணம் இலங்கை அரசு அந்த வீடு கட்டிக்கொடுக்கும் "அரசு சாரா நிறுவனத்திடம்" இந்திய அரசு நேரடியாக நிதியைக் கொடுக்க கூடாது என்றும், தன் வழியே தான் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னது இந்திய அரசை நிலை குலையச் செய்துவிட்டது.

மன்னார். திரிகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களில் அங்குள்ள " அரசு பிரதிநிதிகள்" [ கவர்மென்ட் ஏஜெண்டுகள்] இடங்களை அடையாளம் காட்டிய பிறகும் அந்த வேலை தொடங்காமலேயே நிற்கிறது. இவையெல்லாம் இலங்கை அரசின் கடும் பிடிவாதத்தால் என்று இந்திய அரசு நினைக்கிறது. அதேபோல பல வணிக ஏற்பாடுகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. "பிடிபட்ட போராளிகளை, சரணடைந்த போராளிகளை விடுதலை செய்வதிலோ, இடம் பெயர்ந்த தமிழ் மக்களை அவர்களது சொந்த பகுதிகளுக்கு குடியமர்த்துவதிலோ எந்த வித முன்னேற்றமும் இல்லை என்பது இந்திய அரசை எரிச்சலூட்ட வைத்திருக்கிறது. அதுதவிர " ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் மீது ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க" அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தும் போது, இந்திய அரசும் ராஜபக்சேக்கு ஆதரவாக இல்லை எனபது இலங்கை அரசை கொபத்த்ஜிற்கு உள்ளாகியுள்ளது.


இத்தகைய சூழலில், கே.பி. மூலம் ஒரு நேர்காணலை ராஜபக்சே அரசு இந்திய ஊடகங்களிலேயே கொடுப்பதும், அதில் ராஜீவ் கொலை [பற்றி கண்டபடி கே.பி.பேசுவதும், இந்திய அரசுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. ஏற்கனவே கே.பி.யை எங்களிடம் ஒப்படையின்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த இந்திய அரசு இப்போது அடஹ்ற்கான காய் நகர்த்தலை தொடங்கி விட்டது. அனைத்து நாட்டு அரங்கில் " இன்டர்போல்" மூலம் தேடப்படும் " கே.பி. யின் சிவப்பு ஓரங்கட்டும் அறிக்கை" யை { ரெட் கார்னர் ரிப்போர்ட்} இந்திய அரசு இப்போது இலங்கை அரசுக்கு அனுப்பி உள்ளது. அதற்கு " கே.பி. எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை" என இலங்கை அரசு பொய் சொல்ல முடியாது. ஏன் என்றால் " கே.பி. நேர்காணலை இந்திய ஊடகத்திற்கு சமீபத்தில் ஏற்பாடு செய்தது இலங்கை அதிபர் மாளிகைதான்" என்ற உண்மை ஊரறிந்த உணமையாக இருக்கிறது. அவசரத்தில் தமிழக முதல்வரை நெருக்கும் எண்ணத்தோடு அத்தைகைய நேர்காணலை, இலங்கை அதிபர் மாளிகை ஏற்பாடு செய்திருந்தது. இ[பொது அதனாலேயே மாட்டிக்கொண்டது.


இப்போது இலங்கை அதிபரின் நேரடி கண்காணிப்பில் உள்ள " அமளி மாளிகையில்" பசில் ராஜபக்சே பொறுப்பில் கே.பி. இருப்பது தெரிந்துவிட்டதால், ராஜபக்சே வசமாக சிக்கிக் கொண்டார். அதனாலேயே இப்போது அனுப்பப்பட்டுள்ள இன்டர்போல் அறிக்கைக்கு " கே.பி.ஐ இந்தியா கையில் ஒப்படிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் ராஜபக்சே இருக்கிறார்" அதனால் வருகிற பதினாறாம் நாள் இலங்கை செல்லும் சிவசங்கர் மேநோனும், நிரூபமா ராவும் இதுபோன்ற பல சிக்கல்களை பேச இருக்கின்றனர்.,

Friday, June 3, 2011

இந்தி வெறியன், ஊழலை எதிர்க்க முடியாது.

"யோகா குரு" என்பதாக அழைக்கப்படும் " ராம்தேவ்" இப்போது " பட்டினிப் போராட்ட பூச்சாண்டி" காட்டி, இந்திய மக்களையே " ஊடகங்கள் " மூலம் ஈர்க்கப் பார்க்கிறார். இங்கே " நாடு மாபெரும் ஊழல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் " அதற்கு மாற்று தேட வேண்டிய கட்டாயம் ஆள்வோருக்கு ஏற்பட்டு உள்ளது. நாட்டு மக்களது உணர்வுகளை மதிக்காத அரசாங்கம் என்ற வப்பெயரைப் பெறுவதற்கு இந்திய அரசு தயாராக இல்லை. ஏன் என்றால் " ஊடகங்கள்" வளர்ந்துள்ள இன்றைய சூழலில், இந்திய மக்களது உணர்வுகள் மத்திய அரசால் சரியாக எதிரோளிக்கப்பட வில்லை என்று உலக சமூகம் எண்ணினால், இந்தியாவிற்கு கொடுக்கப்படும் நிதி உதவிகள் தடைப்படும் என்ற அச்சம் மத்திய அரசிற்கு உள்ளது.


அதனால்தான் " காங்கிரசில் ஒரு சாராரும்" அதேபோல இங்கே தொடர் சுரண்டலில் ஈடுபட்டுவரும் " கார்பரேட்களும்" இந்த " ஊழல் விவகாரத்தை" தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அதாவது இந்திய மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள். அதற்காக " தயார்" செய்யப்பட்டவர்தான் " அன்னா ஹசாரே" என்று கூறினார்கள். அவரும் " சோனியாவால் " ஆசிர்வதிக்கப்பட்டார். ஆனால் அவரை பா.ஜ.க. கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது " ராம்தேவ்" கிளம்பி இருக்கிறார். நடுத்தர மக்களாக உள்ள பல இந்துக்கள் அவரை நம்பி களத்தில் குதிக்கிறார்கள். அதுவே அவரது பலம். அதைக்கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது.அதனால்தான் மொத்த அமைச்சர்கள் அவர் பின்னால் ஓடுகிறார்கள். ஆனால் " திக்விஜய் சிங் " கடுமையாக அந்த ராம்தேவை அம்பலப்படுத்துகிறார்.


ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., போன்ற இந்துத்துவா சக்திகள் " பாபா ராம்தேவை" ஆதரிக்க தொடங்கியவுடன், காங்கிரஸ், திக்விஜய் டிங் மூலம் ராம்தேவை விமர்சிக்க சொல்கிறது. அவரும், " ராம்தேவ் ஒன்று சந்நியாசியாக இருக்க வேண்டும். அல்லது அரசியலுக்கு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். " ராம்தேவ் ஒரு சந்நியாசி போல இல்லாமல் ஏன் நிறைய கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துக்கொண்டுள்ளார்? " என்று திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவ் தனக்கு வரும் வருமானங்கள் எங்கிருந்து வந்தன என்றும் எவ்வளவு வந்தன என்றும் பகிரங்கமாக தெரிவிக்க தயாரா? என்றும் திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவை ஒரு வியாபாரி என்று டிக்விஜைசிங் கூறிவிட்டார்.



இந்த நேரத்தில் ராம்தேவ் கூறியுள்ள கோரிக்கைகளில், " ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். அதை திக்விஜய் சிங் என்ற " இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ்காரர்" தெளிவாக மறுக்கிறார். இந்தியாவில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் பல இருக்கின்றன என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார். இந்தியாவில், தமிழ்நாடு உட்பட, தென்னிந்தியா முழுவதும் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா, அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், போன்ற பல்வேறு மாநிலங்களில் " இந்தி மொழி" மக்களால் பேசப்படும் மொழி அல்ல. இந்த உண்மை " ராம்தேவ்" போன்ற " கோடீஸ்வர சந்நியாசிகளுக்கு" தெரியாமல் இருக்கலாம். அங்கே ஒரு தமிழ்நாட்டின் திருச்ச்சியைச்சேர்ந்த உதவியாளர், " கொவிந்தாச்ச்காரியார்" இருக்கிறாரே, அவருக்கும் தெரியாதா? எப்படி ஒரு " இந்தி வெறியன்" ஊழலை ஒழிக்க போராட முடியும்?

யாருடன் " கூடா நட்பு" யாருக்கு " கேடாய் முடியும்"?

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி கலைஞருக்கு இன்று பிறந்த நாள். அவர் அதையொட்டி சில சீரிய கருத்துக்களை அறிவித்துள்ளார். அதில் " அரசியல் மறுமலர்ச்சிக்காக உழைக்கும் தொண்டர்கள், கூடா நட்பு, கேடாய் விளையும் எண்பதை உணரவேண்டும்" என்று அப்போது கலைஞர் அறிவித்தார்.
இன்று அவருக்கு " பிறந்த நாள்" கலைஞர் " திருவாரூர்" வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.இன்று தமிழக ஆளுநர் உரை சட்டமன்றத்தில் நடந்தது. ச.ம.உ.வான கலைஞர் சட்டப்பேரவை சென்றிருந்தால், தோல்வியையும் மறந்து ஆளுநருடன் கை குலுக்கி இருந்தால், முதல்வர் ஜெயலலிதாவே அவருக்கு " பிறந்த நாள்" வாழ்த்து சொல்லும் நிர்ப்பந்தம் வந்திருக்கும். அதை கலைஞர் ஏனோ செய்யவில்லை.


அப்படி தமிழக சட்டப்பேரவைக்கு " ஆரோக்கியமான சூழல்" ஒன்று உருவாவதைக்கூட "கூடா நட்பு" என்று அவர் எண்ணிவிட்டாரோ, என எண்ணிவிட வேண்டாம். " கனிமொழி" க்கு இப்படி ஒரு ஆலோசனையை கலைஞர் வழங்கி இருக்கிறாரோ என்றும் எண்ணிவிட முடியாது. ஏன் என்றால் கனிமொழி சிக்கியிருக்கும் "கலைஞர் டிவி "யின் பங்கு,பண விவகாரத்தில், " தான்தான் கனிமொழியை வற்ப்புறுத்தி, பங்குதாரர் ஆக்கினேன்" என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். ஆகவே " தான் பெற்ற அனுபவத்தை பிறருக்கு" புரிய வைக்க கைஞர் கூறும் " படிப்பினை" யாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொண்டால், " தயாநிதி மாறனைக் கொண்டுவந்து அரசவையிலே அமரவைத்து" எண்பதை கூடா நட்பு என்று அவர் கூறியிருக்கலாம். அதைவிட " காங்கிரஸ் கட்சியை நம்பி" வைத்துக்கொண்ட உறவு, கூட்டணி, நட்பு என்பது இப்போது சீ.பி.ஐ. பெயரில், நிர்ப்பந்தம், குற்றச்சாட்டு, சதி, கைது, சிறை, என்று தொடர் தொல்லைகளாக வருகிறதே, அதனால் தமிழ் மக்கள் மத்தியிலும் கடுமையான கேட்ட பெயர் வாங்க வேண்டி இருக்கிறதே என்று அவர் எண்ணியிருக்கலாம்.


"காங்கிரஸ் உடன் கூடா நட்பு" இப்போது திமுக வை " நடுத்தெருவிற்கு" கொண்டுவந்து நிறுத்தி விட்டதே என எண்ணித்தான் கலைஞர் கூறியிருக்க வேண்டும். அது " கேடாய் முடியும்" என்றும் கூறிவிட்டார். இன்று தனது பிறந்த நாளில், டில்லி சென்று " கனிமொழியை" சந்திக்கலாம் என்றும், " கணிம்ழி\ஹிக்கு" இன்று பிணை தரும் தீர்ப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்ட கூற்றுக்கள் உண்மையல்ல என்று ஆன பிறகு, அது அதாவது " காங்கிரஸ் நட்பு என்ற கூடா நட்பு" இப்போது திமுக விற்கும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் " கேடாய் முடிந்துவிட்டது" என்பதைத்தான் அவர் குறிப்பிடுகிறார் எனப் புரிகிறது.

தலைவர் பிறந்த நாளில், தொண்டர்கள் ஆவேசம்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரின் 88 ஆவது பிறந்த நாளில், காலையில் " அன்னா சதுக்கத்தில்" கூடிய திமுக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் ஆத்திரத்தோடு அளவளாவிக் கொண்டது, " கழகத்தை அழிக்கத் துணிந்த தயாநிதி சகோக்கள் பற்றித்தான்" என்றி அந்த திமுக பிரமுகர் கூறினார். தாங்கள் உயிரினும் மேலாக வளர்த்த கழகத்தை, எங்கிருந்தோ வந்து உள்ளே நுழைந்து, தயாநிதி மாறன் மூத்த திமுக முன்னோடிகளுக்கு இருந்த இடத்தை பிடித்து, தலைவரிடம் அக்கறை உள்ள திமுக போல நடித்து, அதன்மூலம் " மத்திய அமைச்சர்" பொறுப்பையும் வாங்கி விட்டார் என்று அங்கலாய்த்தனர்.


கலைஞரின் மருமகன் முரசொலி மாறன் மீது கழக உடன்பிறப்புகளுக்கு அதிகமான மரியாதை உண்டு. அதைப் பயன்படுத்தி, அவரது மகன் என்ற பெயரில் இந்த கடைந்தெடுத்த வியாபாரி கழகத்திற்குள் நுழைந்து விட்டார் என்றும் கூறினர். கழகத்திற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யாத இந்த கலா-தயா சகோக்கள் உள்ளே நுழைந்து, மத்திய அமைச்சரவையை பெற்றதனால் அவர்கள் டில்லிக்கு செல்லப் பிள்ளை ஆகிவிட்டனர் என்றனர். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த " தொலைத் தொடர்பு " அமைச்சகத்தை அடம்பிடித்து வாங்கிக் கொண்டபோதுகூட எங்களுக்கு அந்த " தந்திரம்" புரியவில்லை என்கின்றனர். தாங்கள் நுகர்ந்து பார்த்து கண்டுபிடித்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் கூடத் தலைவருக்கு மிகத் தாமதமாகத் தான் தெரிந்து இருக்கிறது என்றனர். திமுக " இந்தி எதிர்ப்பு" போரில் ஈடுபட்டதனால், அதன் ஒவ்வொரு தீவிர உறுப்பினரும் " இந்தி மொழிப் பாடம்" கற்காமலேயே இருப்பார்கள். ஆனால் எங்கோ போய் தான் மட்டும் இந்தி பாடம் கற்றுக் கொண்டு வந்துவிட்ட " தயாநிதி" அதன்மூலம் டில்லி தலைவர்கள் மத்தியில் சரளமாக பேசுவதும், பழகுவதும் செய்து " தான்தான் திமுக" என்பதுபோல ஒரு பாவலா கட்டிவந்திருக்கிறார் என்றும் குற்றம் சாடினர்.


தலைவர் பிறந்த நாளில் " உடன்பிறப்புகளின்" ஆதங்கம் இப்படித்தான் வெளிப்பட்டது. அதனால் தயாநிதிக்கும், ஆ.ராஜாவிற்கு வந்த சிறை வரவேண்டும் என்றும், சரத்குமார் ரெட்டி நிலையில் இருக்கும் கலாநிதிக்கு சரத் நிலை வரவேண்டும் என்றும், கலாநிதி மனைவி காவேரிக்கு, கணிம்ழிக்கு கிடைத்த நிலை கிடைக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டி நின்றனர். இது அந்த வரலாற்று தடங்கள் கொண்ட கழகத்தின் பாதையில் ஒரு பெரும் " அதிர்ச்சியாகத்தான்" இருந்தது