இன்று [ 02 -04 -2011 ] மாலை 6 -30 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சனை கிராமத்தில் வைத்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமியின் மகன் கரு.மாணிக்கம் தலைமையில் வந்த மூன்று கார்கள் மூன்று லட்சம் ரூபாயுடன் பிடிபட்டன. அதை பாஜக வேட்பாளர் நேரில் பார்த்திருக்கிறார். உயர் மட்ட காவல்துறையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆனா அதற்குள் அந்த மாவட்டத்தில் சுற்றுலா செய்யும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதில் தலையிட்டு பிடிபட்டவர்களை விடுதலை செய்யவைத்துள்ளார்.
அதன்பிறகு தேர்தல் ஆணையம் ஊடகத்தாரிடம் புது கஹையை சொல்லியிருக்கிறார்கள். அந்த கதையில் ஒரு கார் பிடிபட்டதாகவும் அதில் துண்டுகள் மட்டுமே இருந்ததாகவும் அதில் வேட்பாளர் மகன் கரு.மாணிக்கம் இல்லை என்றும், பொய் செய்தியை கூறமுடியும் என்றால் சிதம்பரத்தின் தலையீடு எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் நேர்மையாக தேர்தல் நடத்தக்கூடாது என்பதில் இருக்கிறது என புரிய முடியும். ஏற்கனவே சிதம்பரம் இன்று சிவகங்கை மாவட்டத்தில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஒரு ஆலோசனையி ஊடகங்களுக்கு மிரட்டலுடன் கூறியுள்ளார். தேர்தல் என்றால் திருமண வீடு போல இருக்க வேண்டும் என்றும், அதில் திருவிழா களை கட்டவேண்டும் என்றும், சுவர் எழுத்து, சுவரொட்டி, கொடிகள் தோரணங்கள் ஆகியவற்றை தெர்தலானையம் தடுக்க கூடாது என்று கூறிவிட்டு, இந்த விசயத்தில் ஊடகங்கள் தேர்தல் ஆணையத்தை எத்ரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கே.ஆர்.ராமசாமி ஏற்கனவே ஊஞ்சனைகிராமத்தில் 1980 ஐந்து தலித் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த கரிய.மாணிக்க அமபலத்தின் மகன். மற்றும் தொடர்ந்து "நாடு" என்ற பெயரில் சாதி ஆதிக்கத்தை அங்கு தலைமைதாங்கி வருபவர். அவருக்கு எப்போதும் உதவியாக இருக்கும் ஊஞ்சனை ராமசாமி என்பவர், தான் சைக்கள நடராஜனுக்கு நெருக்கம் என்று கூறி கொண்டு, அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமிக்கு அனைத்து வேலைகளையும் செய்துவருபவர்.அதிமுக சார்பாக ஒரு கள்ளர் சமூகத்தினரான சோலை.பழநிச்ச்காமியை அங்கே நிருத்தியிருந்தும் கூட, இந்த ஊஞ்சனை ராமசாமி போன்றோர் கே.ஆர்.ராமசாமியையே தங்கள் சமூக தலைவராக பார்க்கிறார்கள்.
இப்போது திமுகவிற்கு பணப்பட்டுவாடா விசயத்தில் தடை செய்ய முயலும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அதை செய்ய முற்படவில்லையே என்று திமுகவினர் கூட கேட்கிறார்கள். வருகிற ஐந்தாம் நாள் சோனியா வந்தபிறகு, ராகுலும் தமிழக தேர்தலுக்கு தங்கள் கூட்டணிக்கு ஆடஹ்ரவு கேட்டு வந்த பிறகு, தேர்தல் ஆணையம் இதே நேர்மையுடன் நடந்துகொள்ளுமா? அப்படி நடக்க காங்கிரஸ் தலைமை அனுமதிக்குமா? சிதம்பரத்தின் தலையீடு தனது சொந்த மாவட்டத்தில் தொடங்கி விட்டதே?
Saturday, April 2, 2011
மும்பையில் காவல்துறை கெடுபிடி.
.
இலங்கையில் தமிழின அழிப்பை கொடூரமாக செய்த அரச தலைவர் ராஜபக்சேவை பாதுகாக்க மும்பை காவல்துறை வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியுள்ளது. நேற்றிரவே தான் திருப்பதி மலையில் தங்க இருப்பதாக பொய் தகவலை கொடுத்த ராஜபக்சே, அது இன்று ஆங்கில ஏடுகளில் வெளிவர செய்துவிட்டு, அதேசமயம் மும்பைக்கு நேற்று இரவே வந்திறங்கி ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டான். அது மாத்திரமின்றி ராஜபக்சேவை பாதுகாக்க மும்பை காவல்துறை எடுத்துக்கொண்ட செயல்பாடுகள் கணக்கில் அடங்கா.
நூறு மீட்டர் தூரத்திற்கு முன்னூறு காவலர்களை மும்பை காவல்துறை போட்டு அராஜகமான மிரட்டலை செய்தது. அவை அனைத்துமே இந்திய மத்திய அரசின் வழிகாட்டலில் செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிதம்பரம் என்ற துரோகம் செய்ய அஞ்சாத ஒரு தமிழனின் நேரடி ஏற்பாட்டில் மத்திய அரசின் உள்துறை செய்த வேலை என்று தெரிய வருகிறது. முதலில் வந்த செய்தியான விமான நிலையத்தில் தமிழர்களின் எதிர்ப்பு என்ற செய்தி தவறானது என்றும், உணர்ச்சி வசப்பட்ட தமிழர்கள் பொய் செய்த்கிகளை தரவேண்டாம் என்றும் நாமும் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த கெடுபிடிகளுக்கு மத்தியில் மும்பை தமிழர் அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து அந்தேரி என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் முன்னூறு பேராக கூடி ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது அதையும் மும்பை காவல்துறை தடுத்து விரட்டி விட்டது. அதன் பின், மும்பை தமிழ் சங்க கட்டிடம் முன்பு அனைவரும் மீண்டும் கூடி சிறப்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
கொடியவன் ராஜபக்சேவுக்கு வால்பிடிக்கும் காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா அரசையும் , மத்திய அரசையும் கண்டித்து தமிழர்கள் விழிப்புடன் இருக்க இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டன
இலங்கையில் தமிழின அழிப்பை கொடூரமாக செய்த அரச தலைவர் ராஜபக்சேவை பாதுகாக்க மும்பை காவல்துறை வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியுள்ளது. நேற்றிரவே தான் திருப்பதி மலையில் தங்க இருப்பதாக பொய் தகவலை கொடுத்த ராஜபக்சே, அது இன்று ஆங்கில ஏடுகளில் வெளிவர செய்துவிட்டு, அதேசமயம் மும்பைக்கு நேற்று இரவே வந்திறங்கி ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டான். அது மாத்திரமின்றி ராஜபக்சேவை பாதுகாக்க மும்பை காவல்துறை எடுத்துக்கொண்ட செயல்பாடுகள் கணக்கில் அடங்கா.
நூறு மீட்டர் தூரத்திற்கு முன்னூறு காவலர்களை மும்பை காவல்துறை போட்டு அராஜகமான மிரட்டலை செய்தது. அவை அனைத்துமே இந்திய மத்திய அரசின் வழிகாட்டலில் செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிதம்பரம் என்ற துரோகம் செய்ய அஞ்சாத ஒரு தமிழனின் நேரடி ஏற்பாட்டில் மத்திய அரசின் உள்துறை செய்த வேலை என்று தெரிய வருகிறது. முதலில் வந்த செய்தியான விமான நிலையத்தில் தமிழர்களின் எதிர்ப்பு என்ற செய்தி தவறானது என்றும், உணர்ச்சி வசப்பட்ட தமிழர்கள் பொய் செய்த்கிகளை தரவேண்டாம் என்றும் நாமும் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த கெடுபிடிகளுக்கு மத்தியில் மும்பை தமிழர் அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து அந்தேரி என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் முன்னூறு பேராக கூடி ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது அதையும் மும்பை காவல்துறை தடுத்து விரட்டி விட்டது. அதன் பின், மும்பை தமிழ் சங்க கட்டிடம் முன்பு அனைவரும் மீண்டும் கூடி சிறப்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
கொடியவன் ராஜபக்சேவுக்கு வால்பிடிக்கும் காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா அரசையும் , மத்திய அரசையும் கண்டித்து தமிழர்கள் விழிப்புடன் இருக்க இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டன
இந்திய சாமிக்கு அல்வா கொடுத்த ராஜபக்சே
ரத்தகறையோடு ராஜபக்சே திருப்பதி வந்தான். அங்குள்ள சாமியிடம் வேண்டிக்கொண்டான். போர்குற்றத்தில் பிடிப்பட கூடாது என வேண்டியிருபான். அங்குள்ள சாமி இந்திய சாமிதானே. அதனிடமே அவன் சிங்களம் இந்தியாவை மட்டை பந்து போட்டியில் வெல்லவேண்டும் என வேண்டியுல்லான். அப்படியானால் இந்திய ஆசாமிகளை போலவே இந்திய சாமிகளுக்கும் மானம் கிடையாதா?
ஆனால் இந்திய புரட்சியாளர்களுக்கு மானம் உண்டே? அதனால்தான் அந்த ரத்தகரை பிடித்த ராஜபக்சே அந்த திருப்பதி மலையை இட்டு கீஹி இறங்காமல் இரவும் திருப்பதி மலையிலேயே தங்கினானாம். அவன் ஒரு மனன்கேட்டவேன் என்றால், அவனுக்கு அழைப்பு விடுத்த இந்திய அரசும், அவனுக்கு பாதுகாப்பு கொடுத்த இந்திய அரசாங்கமும் மானம் கெட்டதுதானே?
ஆனால் இந்திய புரட்சியாளர்களுக்கு மானம் உண்டே? அதனால்தான் அந்த ரத்தகரை பிடித்த ராஜபக்சே அந்த திருப்பதி மலையை இட்டு கீஹி இறங்காமல் இரவும் திருப்பதி மலையிலேயே தங்கினானாம். அவன் ஒரு மனன்கேட்டவேன் என்றால், அவனுக்கு அழைப்பு விடுத்த இந்திய அரசும், அவனுக்கு பாதுகாப்பு கொடுத்த இந்திய அரசாங்கமும் மானம் கெட்டதுதானே?
Friday, April 1, 2011
டில்லியே பதில் சொல்
1974 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நாட்டுடன் டேவிஸ் க்ளப் போட்டி நடப்பதாக இருந்தது. அப்பது தென்னாபிரிக்காவை ஆண்டு வந்தது வெள்ளை இனவெறியர்கள். அவர்களை எதிர்த்து நெல்சன் மாண்டலே தலைமையில் " ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" ஆடுதப்போராட்டம் போராடி வந்தது. அந்த கறுப்பர்களின் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்த இந்திய அரசு அந்த டேவிஸ் க்ளப் போட்டியில் கலந்துகொள்ள மாட்டோமென அறிவித்தது.
அதேபோல இப்போது சிங்கள இனவெறி ஆரசு தமிழர்களை இன அழிப்பு செய்து வருகிறது. தமிழர்கள் நேரடியாக இந்தியாவிற்கு சம்பந்தப்பட்டவர்கள். ஆனாலும் இந்திய அரசு நெல்சன் மண்டலேவிற்கு கொடுத்த ஆதரவு போல அல்லாமல் இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு நடத்திய இன அழிப்பு போருக்கு எதிராக போராடிய பூகள் அமைப்பை ஆதரிக்காமல் அழிக்கவே உதவியது. அதுமட்டுமின்றி இப்போது அந்த இலங்கை தமிழின அழிப்பை நடத்திய சிங்கள செரியன் ராஜபக்சேக்கு சிகப்பு கம்பளம் விரித்து மும்பையில் நடக்கும் போட்டியில் கலந்து கொளிறது.வெட்க கேடு. வெட்க கேடு
அதேபோல இப்போது சிங்கள இனவெறி ஆரசு தமிழர்களை இன அழிப்பு செய்து வருகிறது. தமிழர்கள் நேரடியாக இந்தியாவிற்கு சம்பந்தப்பட்டவர்கள். ஆனாலும் இந்திய அரசு நெல்சன் மண்டலேவிற்கு கொடுத்த ஆதரவு போல அல்லாமல் இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு நடத்திய இன அழிப்பு போருக்கு எதிராக போராடிய பூகள் அமைப்பை ஆதரிக்காமல் அழிக்கவே உதவியது. அதுமட்டுமின்றி இப்போது அந்த இலங்கை தமிழின அழிப்பை நடத்திய சிங்கள செரியன் ராஜபக்சேக்கு சிகப்பு கம்பளம் விரித்து மும்பையில் நடக்கும் போட்டியில் கலந்து கொளிறது.வெட்க கேடு. வெட்க கேடு
கீழவெண்மணியின் 44 தியாகிகள் நினைவு தேர்தலில் மீண்டும் எழுகிறது.
கீழ வெண்மணி கிராமம், 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் உலகம் முழுவதும் ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்தது. செழுமையான விவசாயத்தை கட்டிக்காத்துவந்த உழவர் பருன்குடி மக்களான தாழ்த்தப்பட்ட விவசாயக்கூளிகளை சுரண்டி கொழுத்துவந்த ஆதிக்க சாதி வெறி கொண்ட பண்ணையார்களின் சங்கத்தலைவன் கோபாலக்ருஷ்ண நாயுடு, காவல்துறையுடன் சேர்ந்துகொண்டு அறுவடைக்கு அதிகக்கூலி கேட்ட அந்த அடிமட்ட ஏழை மக்களை விரட்டி, வெண்மணி கிராமத்திலேயே ஒரு குடிசைக்குள் தள்ளி கதவை தாளிட்டு அவர்களது வாழ்க்கைக்கும் தாளிட்டுவிட்டான். அனைத்து கூலி மக்களும் அவன் வைத்த வெந்தீயில் எரிந்து சாம்பலாயினர். அந்த கொடூரக்காட்சியை பார்த்துகொண்டு கைகள் தேர்தல்களால் கட்டப்பட்டநிலையில் மார்க்சிஸ்ட் கட்சி கண்ணீர் விட்டது. அந்த மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக இப்போது கீழ்வேள்ளூர் தொகுதியில் ஒரு மகாலிங்கம் நிற்கிறார்.
கீழ வெண்மணியை கொண்ட இந்த கீழ்வெள்ளூர் தொகுதி புதிதாக சமீபத்திய தொகுதி மறுபரிசீலனையில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி. அதுவும் தலித் இனத்திற்கான ஒதுக்கீட்டு தொகுதி. கீழ வன்மைநீல் நடந்த கொடூரக்கொளைகளுக்கு எதுவும் செய்யமுடியாமல் சாபிடாமல் மட்டுமே இருந்த முதல்வர்தான் திமுகவின் முதல் முதல்வரான அண்ணாதுரை. அந்த திமுக சார்பாக இப்போது அந்த தொகுதியில் அமைச்சர் மதிவாணன் நிற்கிறார். அந்நாள் வெண்மணி படுகொலையை நினைவு படுத்தி நிற்கின்ற இளம் பெண் மாணவி தேவகி அனைவராலும் கவனிக்கப்படுகிறார். ஏன் என்றால் அவர் மட்டுமே வெண்மணி படுகொலைகள் பற்றி பேசக்கூடியவராக இருக்கிறார். இனி இப்படி கொடுமைகள் நடைபெறாவண்ணம் தடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்து தனது தேர்தல் பயணத்தை அந்த இளம் பெண் துவக்கியிருக்கிறார்.
ஆட்சியாளர்களும், நீதிமன்றமும், மார்க்சிஸ்ட் கட்சியும் படுகொலைகளுக்கு தீர்ப்பு எழுதாத ஒரு சூழலில், நக்சல்பாரி இயக்கம் அந்த படுகொலைகள் நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து கொடியவன் கோபாலக்ருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது. அந்த அழித்தொழிப்பை நடத்திய சி.பி.ஐ.-எம்.எல்.. இயக்கத்தை அன்று வினோத் மிஸ்ரா தலைமை தாங்கினார். அந்த அழித்தொழிப்பை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தோழர்களில் ஒருவர் கண்ணையன் என்ற ராமசாமி. அந்த ராமசாமியின் தம்பி மகள்தான் இந்த தேவகி என்ற சுயேச்சை வேட்பாளர்.
இந்த சுயேச்சை வேட்பாளர் தேவகி, மயிலாடுதுறை ஏ.வி.எம். கல்லூரியில் எம்.ஏ.படிக்கும் மாணவி. பறையர் நல பேரவையின் தலைவர்.அவருக்கு "பள்ளர் நல பேரவை" "சக்கிலியர் நல பேரவை"ஆகியவை ஆதரவு தருகின்றன.இன்றைய தேர்தல் போட்டியில் இப்படி ஒரு சமூக கொடுமையை மையப்படுத்தி பரப்புரை செய்வது பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் கோபலக்ருஷ்ண நாயுடுவின் படுகொலைக்கு காரணமானவர் என்றும், தலைமை தாங்கியவர் என்றும் காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்ட வெண்மணி குமரன் என்ற சுப்பிரமணியன் இந்த தேர்தல் களத்தில் " தேவகி" க்கு ஆதரவாக இறங்கியுள்ளார் என்ற செய்தி செவிமடுக்கவே மகிழ்ச்சியை தருகிறது.
கீழ வெண்மணியை கொண்ட இந்த கீழ்வெள்ளூர் தொகுதி புதிதாக சமீபத்திய தொகுதி மறுபரிசீலனையில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி. அதுவும் தலித் இனத்திற்கான ஒதுக்கீட்டு தொகுதி. கீழ வன்மைநீல் நடந்த கொடூரக்கொளைகளுக்கு எதுவும் செய்யமுடியாமல் சாபிடாமல் மட்டுமே இருந்த முதல்வர்தான் திமுகவின் முதல் முதல்வரான அண்ணாதுரை. அந்த திமுக சார்பாக இப்போது அந்த தொகுதியில் அமைச்சர் மதிவாணன் நிற்கிறார். அந்நாள் வெண்மணி படுகொலையை நினைவு படுத்தி நிற்கின்ற இளம் பெண் மாணவி தேவகி அனைவராலும் கவனிக்கப்படுகிறார். ஏன் என்றால் அவர் மட்டுமே வெண்மணி படுகொலைகள் பற்றி பேசக்கூடியவராக இருக்கிறார். இனி இப்படி கொடுமைகள் நடைபெறாவண்ணம் தடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்து தனது தேர்தல் பயணத்தை அந்த இளம் பெண் துவக்கியிருக்கிறார்.
ஆட்சியாளர்களும், நீதிமன்றமும், மார்க்சிஸ்ட் கட்சியும் படுகொலைகளுக்கு தீர்ப்பு எழுதாத ஒரு சூழலில், நக்சல்பாரி இயக்கம் அந்த படுகொலைகள் நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து கொடியவன் கோபாலக்ருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது. அந்த அழித்தொழிப்பை நடத்திய சி.பி.ஐ.-எம்.எல்.. இயக்கத்தை அன்று வினோத் மிஸ்ரா தலைமை தாங்கினார். அந்த அழித்தொழிப்பை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தோழர்களில் ஒருவர் கண்ணையன் என்ற ராமசாமி. அந்த ராமசாமியின் தம்பி மகள்தான் இந்த தேவகி என்ற சுயேச்சை வேட்பாளர்.
இந்த சுயேச்சை வேட்பாளர் தேவகி, மயிலாடுதுறை ஏ.வி.எம். கல்லூரியில் எம்.ஏ.படிக்கும் மாணவி. பறையர் நல பேரவையின் தலைவர்.அவருக்கு "பள்ளர் நல பேரவை" "சக்கிலியர் நல பேரவை"ஆகியவை ஆதரவு தருகின்றன.இன்றைய தேர்தல் போட்டியில் இப்படி ஒரு சமூக கொடுமையை மையப்படுத்தி பரப்புரை செய்வது பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் கோபலக்ருஷ்ண நாயுடுவின் படுகொலைக்கு காரணமானவர் என்றும், தலைமை தாங்கியவர் என்றும் காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்ட வெண்மணி குமரன் என்ற சுப்பிரமணியன் இந்த தேர்தல் களத்தில் " தேவகி" க்கு ஆதரவாக இறங்கியுள்ளார் என்ற செய்தி செவிமடுக்கவே மகிழ்ச்சியை தருகிறது.
ராஜபக்சே வருகையால் திமுக கூட்டணிக்குள் குழப்பமா?
மும்பையில் உலக மட்டைப்பந்து விளையாட்டு போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற நாளை தயார் ஆகிவருகிறது. அது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் ஆன ஆட்டம். ஆகவே அதை பெருமையாக இருபுறமும் நினைப்பார்கள். பாவம் தமிழர்கள். இந்த ஆட்டத்திற்கு, மகிந்தாவை இந்திய அரசு அழைத்திவிட்டது. அவரும் வருகிறார். தமிழின அழிப்பில் அறுபதாயிரம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மும்பை வருகிறான். அடஹ்ர்கு ஏற்பாடு செய்யும் இந்திய அரசு இலங்கை அரசத்தலைவர் மகிந்தாவுடன், இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல்தான் அமரவேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
இது பிரதமர் மன்மோகனை காப்பாற்றி தமிழ்நாற்ற்டு தேர்தலில் வரை இறக்கிவிட ஒரு திட்டமா என்று விளங்கவில்லை. ஆனாலும் பிரதமரும், அன்னை சோனியாவும், இளைய பட்டத்தரசர் ராகுலும், மும்பை செல்லாமல் இருக்கமுடியாது. மகிந்தாவை காணாமல் உறக்கம் வராது. அவருடன் கைகுலுக்காமல் இருக்க மாட்டார்கள். அந்த ரத்தக்கறை படிந்த கைகள் இவர்களது கைகளில் படியாமல் இருக்காது. அந்த ரத்தக்கைகளுடன் சோனியாவும், ராகுலும் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். அந்த ரத்தம் படிந்த, தமிழரின் ரத்தம் படிந்த கரங்களை பற்றாமல் எங்கள் ஊர் தாத்தா, மூத்த அரசியல்வியாதி இருக்கமாட்டார்.
மும்பையில் கொலைகாரன் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எங்கு பார்த்தாலும் ராணுவம் வளம் வருகிறது.அடஹ்னால் இனமான உணர்வுள்ள தமிழர்கள், வழமையாக ஆர்ப்பாட்டம் நடத்தும் { காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் நடத்த இருக்கும் அனுமத்திக்கப்பட்ட இடம்} விக்டோரியா டவர் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர் உணர்வாளர்கள் என்ன செய்வார்கள்?
தமிழர்களின் ரத்தத்தில் இத்தனை விசேசம் இருக்கிறதா என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்கவேண்டும். அதேநேரம் வைகோ தனது படை, பட்டரன்களை அதிமுக தோல்விக்கு வேலை செய்ய கட்டளையிட்டுள்ளார். அதை அப்படியே தொண்டர்களும் பின்பற்றுவர். திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வேலை செய்யும்படி வைகோ கொடுத்த உத்தரவால் மதிமுக தொண்டன் சமீபத்தில் நிலை குலைந்துவிட்டார்கள்.ராஜபக்சே வரவை திமுக வரவேற்கட்டும். பாமக, விசிக,இரண்டும் இரண்ட்டாட்டில் ஒராடு போல விழிக்கிரார்
இது பிரதமர் மன்மோகனை காப்பாற்றி தமிழ்நாற்ற்டு தேர்தலில் வரை இறக்கிவிட ஒரு திட்டமா என்று விளங்கவில்லை. ஆனாலும் பிரதமரும், அன்னை சோனியாவும், இளைய பட்டத்தரசர் ராகுலும், மும்பை செல்லாமல் இருக்கமுடியாது. மகிந்தாவை காணாமல் உறக்கம் வராது. அவருடன் கைகுலுக்காமல் இருக்க மாட்டார்கள். அந்த ரத்தக்கறை படிந்த கைகள் இவர்களது கைகளில் படியாமல் இருக்காது. அந்த ரத்தக்கைகளுடன் சோனியாவும், ராகுலும் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். அந்த ரத்தம் படிந்த, தமிழரின் ரத்தம் படிந்த கரங்களை பற்றாமல் எங்கள் ஊர் தாத்தா, மூத்த அரசியல்வியாதி இருக்கமாட்டார்.
மும்பையில் கொலைகாரன் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எங்கு பார்த்தாலும் ராணுவம் வளம் வருகிறது.அடஹ்னால் இனமான உணர்வுள்ள தமிழர்கள், வழமையாக ஆர்ப்பாட்டம் நடத்தும் { காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் நடத்த இருக்கும் அனுமத்திக்கப்பட்ட இடம்} விக்டோரியா டவர் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர் உணர்வாளர்கள் என்ன செய்வார்கள்?
தமிழர்களின் ரத்தத்தில் இத்தனை விசேசம் இருக்கிறதா என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்கவேண்டும். அதேநேரம் வைகோ தனது படை, பட்டரன்களை அதிமுக தோல்விக்கு வேலை செய்ய கட்டளையிட்டுள்ளார். அதை அப்படியே தொண்டர்களும் பின்பற்றுவர். திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வேலை செய்யும்படி வைகோ கொடுத்த உத்தரவால் மதிமுக தொண்டன் சமீபத்தில் நிலை குலைந்துவிட்டார்கள்.ராஜபக்சே வரவை திமுக வரவேற்கட்டும். பாமக, விசிக,இரண்டும் இரண்ட்டாட்டில் ஒராடு போல விழிக்கிரார்
ஜெயலலிதாவை சந்தித்த முஸ்லிம் தலைவர்கள்
இன்று மதியம் இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர்கள் எஸ்.எம்.பாக்கர், முனீர், சித்திக், இக்பால், அந்தோணியப்பா,ஆகியோர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இருபுறமும் அகமகிழ்வுடன் வரவேற்றுக்கொண்டனர். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு அவர்கள் நன்றி சொல்ல, அதையும் தாண்டி முஸ்லிம்கள் பிரச்னைக்கு இந்திய தௌஹித்துகள் கூறியவற்றை செல்வி.ஜெயலலிதா ஆர்வமாக கேட்டார். பொது விசயங்கள் பற்றியும் பேசினர்.
ஜே கூட்டணிக்கு அமோக ஆடஹரவு மக்கள் மத்தியில் இருப்பதாக இருபுறமும் பரிமாறிக்கொண்டார்கள். போகிற [போக்கை பார்த்தால் அதிமுக கூட்டணி முக்கால் வாசி தொகுதிகளையும் கைப்பற்றிவிடும் போலிருக்கிறதே?
ஜே கூட்டணிக்கு அமோக ஆடஹரவு மக்கள் மத்தியில் இருப்பதாக இருபுறமும் பரிமாறிக்கொண்டார்கள். போகிற [போக்கை பார்த்தால் அதிமுக கூட்டணி முக்கால் வாசி தொகுதிகளையும் கைப்பற்றிவிடும் போலிருக்கிறதே?
Subscribe to:
Posts (Atom)
