Friday, June 3, 2011

தலைவர் பிறந்த நாளில், தொண்டர்கள் ஆவேசம்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரின் 88 ஆவது பிறந்த நாளில், காலையில் " அன்னா சதுக்கத்தில்" கூடிய திமுக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் ஆத்திரத்தோடு அளவளாவிக் கொண்டது, " கழகத்தை அழிக்கத் துணிந்த தயாநிதி சகோக்கள் பற்றித்தான்" என்றி அந்த திமுக பிரமுகர் கூறினார். தாங்கள் உயிரினும் மேலாக வளர்த்த கழகத்தை, எங்கிருந்தோ வந்து உள்ளே நுழைந்து, தயாநிதி மாறன் மூத்த திமுக முன்னோடிகளுக்கு இருந்த இடத்தை பிடித்து, தலைவரிடம் அக்கறை உள்ள திமுக போல நடித்து, அதன்மூலம் " மத்திய அமைச்சர்" பொறுப்பையும் வாங்கி விட்டார் என்று அங்கலாய்த்தனர்.


கலைஞரின் மருமகன் முரசொலி மாறன் மீது கழக உடன்பிறப்புகளுக்கு அதிகமான மரியாதை உண்டு. அதைப் பயன்படுத்தி, அவரது மகன் என்ற பெயரில் இந்த கடைந்தெடுத்த வியாபாரி கழகத்திற்குள் நுழைந்து விட்டார் என்றும் கூறினர். கழகத்திற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யாத இந்த கலா-தயா சகோக்கள் உள்ளே நுழைந்து, மத்திய அமைச்சரவையை பெற்றதனால் அவர்கள் டில்லிக்கு செல்லப் பிள்ளை ஆகிவிட்டனர் என்றனர். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த " தொலைத் தொடர்பு " அமைச்சகத்தை அடம்பிடித்து வாங்கிக் கொண்டபோதுகூட எங்களுக்கு அந்த " தந்திரம்" புரியவில்லை என்கின்றனர். தாங்கள் நுகர்ந்து பார்த்து கண்டுபிடித்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் கூடத் தலைவருக்கு மிகத் தாமதமாகத் தான் தெரிந்து இருக்கிறது என்றனர். திமுக " இந்தி எதிர்ப்பு" போரில் ஈடுபட்டதனால், அதன் ஒவ்வொரு தீவிர உறுப்பினரும் " இந்தி மொழிப் பாடம்" கற்காமலேயே இருப்பார்கள். ஆனால் எங்கோ போய் தான் மட்டும் இந்தி பாடம் கற்றுக் கொண்டு வந்துவிட்ட " தயாநிதி" அதன்மூலம் டில்லி தலைவர்கள் மத்தியில் சரளமாக பேசுவதும், பழகுவதும் செய்து " தான்தான் திமுக" என்பதுபோல ஒரு பாவலா கட்டிவந்திருக்கிறார் என்றும் குற்றம் சாடினர்.


தலைவர் பிறந்த நாளில் " உடன்பிறப்புகளின்" ஆதங்கம் இப்படித்தான் வெளிப்பட்டது. அதனால் தயாநிதிக்கும், ஆ.ராஜாவிற்கு வந்த சிறை வரவேண்டும் என்றும், சரத்குமார் ரெட்டி நிலையில் இருக்கும் கலாநிதிக்கு சரத் நிலை வரவேண்டும் என்றும், கலாநிதி மனைவி காவேரிக்கு, கணிம்ழிக்கு கிடைத்த நிலை கிடைக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டி நின்றனர். இது அந்த வரலாற்று தடங்கள் கொண்ட கழகத்தின் பாதையில் ஒரு பெரும் " அதிர்ச்சியாகத்தான்" இருந்தது

Thursday, June 2, 2011

சபாஷ். சரியான போட்டி. நீயா? நானா? யார் திஹார் சிறையில்?

மன்னர் குடும்பம் " ராஜா ராஜா சோழனின்" வாரிசாம். உண்மை. உண்மை. ஏன் என்றால் ராஜா ராஜா சோழன் எந்த வகையிலும் நல்லவன் கிடையாது. பெண்களை இழிவுபடுத்த, " பொட்டுக் கட்டுதலை" கொண்டுவந்தவன். தலித்களை இழிவு படுத்த அவர்களது " நிலங்களை பறித்தான்". 'அந்தணர்களை வளர்த்துவிட" அவர்களுக்கு "பிரும்ம தேசத்தையும் ", " சதுர்வேத மங்கலத்தையும்" கைமேல் கொடுத்தான்/ அந்த ராஜா ராஜா சோழனின் வாரிசாக தன்னை வரித்துக்கொண்டவர்களுக்கு, இதே போல ராஜராஜசோழனின் குணங்கள் இருக்கத்தானே செயயும்?

இப்போது அந்த இளைய அரசரின் அன்பு மருமகன் "தயா" தனது மாமா ஸ்டாலினை தூக்கி பிடித்து வந்தவர், தானே வசமான பொறியில் சிக்கிக்கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழலில், 2004 முதல் 2007 வரை " தயாநிதி மாறன்" தான் அந்த " தோளைத் தொடர்பு அமைச்சகத்திற்கு" அமைச்சராக இருந்தவர்." ஆகவே அப்போது நடந்த அனைத்து ஊழகளுக்கும் பொறுப்பு அவர்தான். 2001 ஆம் ஆண்டு விற்கப்பட்ட அதே விலைக்கு, நான்கு ஆண்டுகள் கழித்தும் கொடுப்பது என்பது, " வளர்ந்துள்ள சந்தையின் தன்மையை " கணக்கில் எடுக்காமல், வாங்குகின்ற "தனியாருக்கு " பெருத்த லாபத்தையும், அரசுக்கு பெருத்த நட்டத்தையும் ஏற்படுத்த முனைவது ஆகும்.


அப்படிப்பட்ட ஒரு " கடுமையான ஊழலை" செய்த " தயா" 2007 ஆம் ஆண்டு தனது பதவி பறிப்புக்கு பிறகு, தனது அமைச்சரவையை கைப்பற்றிய தனது " தாத்தாவின்" ஆளான " ஆ.ராஜாவை" பூத்துக் கொடுப்பதற்காகவே தனது சொந்த அச்சு ஊடகமான " தினகரனில்" மற்றும் தனது சொந்த காட்சி ஊடகமான " சன் டி.வி.யில்" ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று அன்றாடம் வெளியிட்டு அந்த விஷயத்தை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார். அதேபோல இப்போது " ஸ்பெக்ட்ரம் ஊழலில்" ஆ.ராஜாவும், கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் சிக்கி சிறைக்கு சென்றபோது, அகமகிழ்ந்து, தனது அரசியல் போட்டியாளர், வணிக போட்டியாளர், மைச்சர் பதவி போட்டியாளர் ஆகியோர் மாட்டிவிட்டார்களே என்று அதிகமாக மகிழ்ந்தவரும் இவரே.


அதனால்தான் " கலைஞர் டி.வி.யில்" மேலாண்மை இயக்குனராக இருந்த " சரத் குமார் ரெட்டியை" , அவரது முதலாளிகளில் ஒருவரான " மு.க. அழகிரி" சிறையில் பார்க்க சென்ற போது, இப்போது அழகிரியின் நண்பர் போல நடித்துவரும், தயாநிதி உடன் சென்றதால், சிறைக்குள் கொடுத்துவிட்ட மனுவில் உள்ள பெயர்களை பார்த்த சரத்குமார் ரெட்டி, " இத்தனைக்கும் காரணமான தயாநிதியை சந்திக்க மாட்டேன்" என்று கூறிவிட்டதால், அழகிரி மாத்திரமே உள்ளே ச்நேறு பார்ஹ்து வந்த கதை வெளியே வந்து விட்டது.


இப்போது " தெஹெல்கா" வெளியிட்ட பெரிய கட்டுரையும், அடுத்து " டைம்ஸ் நொவ்" , "ஹெட்லைன்ஸ் டுடே ", "சீ.ஏன்.ஏன்.-ஐ.பி.ஏன்." போன்ற காட்சிஊடகங்கள் நாடெங்கும், உலகமெங்கும் வெளியிட்ட செய்திகள், அனைத்தையுமே கொடுத்தது " சீ.பி.ஐ." தான் என தெரிய வந்துள்ளது. எப்போது உச்சநீதி மன்றம் 2001 இலிருந்து,ஸ்பெக்ட்ரம்விற்பனை பற்றிய விசாரணையை நடத்துங்கள் என்று கூறியதோ, அன்றிலிருந்தே , " தயாநிதி காலத்து" விவகாரங்களும் சீ.பி.ஐ.யால் விசாரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது என்று இப்போது வெளி வ்ந்திருக்கிறது.


"ஏர்செல்" நிறுவனம் சிவசங்கரனிடம் இருந்தது. இந்த " சிவசங்கரன்" தயாவின் அப்பாவான முரசொலி மாறனின் " காய் நகர்த்தலுக்கு" இணங்கி சென்றவர். அவர் " ஸ்டேர்லிங் கம்ப்யுடர் " என்ற பிரபல நிறுவனத்தை வைத்திருந்தவர் என்பது அனைவரும் அறிந்த பழைய கதை. முரசொலி மாறன் " வணிகத் துறை " அமைச்சராக இருந்த போது, சில சித்து விளையாட்டுக்களை செய்தார். தமிழ்நாட்டில் " நாடார் சமூகம்" தனது கடுமையான உழைப்பால் வணிகத்தில், " பனியாக்கள், செட்டியார்கள்" எட்ட முடியாத ஒருஉயர் நிலையை எட்டி இருந்தது.அதனால் தனக்காக ஒரு வங்கியையே உருவாகியது.


அந்த வங்கிதான் " தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி". அந்த வங்கியின் பண்குதாரர்களுக்குள் எழும்பிய முரண்பாட்டை, " வணிக அமைச்சர்" கவனித்தார். அதை வசப்படுத்த நினைத்தார். தனக்கு நெருக்கமான " வட இந்திய முதலாளிகளுக்கு" அதாவது " சிந்தி முதலாளிகளுக்கு" அந்த "சுயம்பு தமிழர்" வங்கியை தாரை வார்த்து கொடுக்க திட்டமிட்டார். தனது வணிக தந்திரங்களுக்கு " நாடார் சமூகத்தின் " சுயசார்பு பொருளாதார வளர்ச்சி" தடையாக இருக்கும் என்று " முரசொலி மாறன்" எண்ணியிருந்திருக்கிறார். அதனால்தான் " வட இந்திய வணிகர்களிடம்" சுயமாக எழுந்துள்ள ஒரு தமிழர் வங்கியை ஒப்படைக்க முடிவு செய்தார். அதற்காக அவர் " சிவசங்கரனை" பயன்படுத்திக் கொண்டார்.


" ஸ்டேர்லிங் சிவசங்கரன்" அன்றே மாறனின் சதிக்கு பலியாகி விட்டார். அதன் பிறகு " நாடார் சமூகமே" எழுந்து " தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை" மீட்க போராடிய போது, " முரசொலி மாறனே" இடைத்தரகராக வந்து அதை தீர்த்து வைத்தார். அதே சிவசங்கரன், " தயாநிதியின் அமைச்சரவை காலத்தில்" ஏர்செல் நிறுவனம் மூலம், மகன் மாறனிடம் வருகிறார். ஏர்செல் நிறுவனத்திற்கு " பல வடநாட்டு நகர்களில் இணைப்பு" கேட்கிறார். தந்தையின் கையாளுதல்களுக்கு, ஒத்துழைத்த சிவசங்கரனை, மகன் கைகழுவ திட்டமிட்டார்.


ஏர்செல் என்ற பெரிய நிறுவனம் தயாவின் கண்ணை உறுத்தியது. அதை வேறு பெரிய வெளிநாட்டு முதலாளிக்கு விற்றால் அதில் " பங்கு" கிடைக்குமே என்று எண்ணினார். தந்து அமைச்சர் பதவியை பயன்படுத்தி என்ன செயலாம் என மகன் சிந்தித்தார். அப்பன் ஒரு " தமிழர் சமூகம்" பொருளாதார ரீதியாக எழுந்து நிற்பதை உடைத்தவர். மகன் ஒரு தனிநபர் " தமிழ் முதலாளி" வைத்திருக்கும் பெரிய நிறுவனத்தை காலி செய்ய திட்டமிட்டவர். " தயா" தனது நண்பரான மலேசியாவின் " அஸ்ட்ரோ" காட்சி ஊடக வலைப்பின்னலை வைத்திருக்கும் " அனந்த கிரிஷ்ணனுக்கு" உதவி செய்து அதில் பங்கு எடுக்க எண்ணினார்.

அனந்தகிரிஷ்நனோ வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு பங்குகள் நமது " தொலை தொடர்பில் " 24 விழுக்காடுதான் இருக்கலாம்..அப்போது நிதி மைச்சராக இருந்த தனது நண்பர் " ப.சிதம்பரத்திடம்" ஆலோசனை கேட்கிறார் தயா. சிதம்பரமும் அன்றைய பிரதமர் மன்மோகனுக்கு விருப்பமான " அந்நிய நிதி முதலீட்டை" கூட்டுவது என்பது பொருத்தமாக இருக்கும் எனவும், ஆலோசனை தந்து " நிதி அமைச்சகத்திலிருந்து" அதற்கு அனுமதியையும் வழங்கியிருக்கிறார். இவாறு அதில் ஒரு " கூட்டு கொள்ளை" நடந்திருக்கிறது.


வெறும் 800 கோடிக்கு ஏர்செல் தந்து பங்குகளை விற்க " தயாநிதி" நிர்ப்பந்தம் செய்திருக்கிறார். அந்த ரகசிய செய்தியை இப்போது சீ.பி.ஐ. அதிகாரிகளிடம் அவரே கூறிவிட்டார். பங்குகளை வாங்கியதோ " அஸ்ட்ரோ அனந்தகிரிஷ்ணனின்" இன்னொரு நிறுவனமான " மாக்சிஸ்". அதை வாங்கிய ஆஸ்ட்ரோ தனக்கு "இந்தியா முழுவதும் இணைப்புகள் வேண்டும்" என்று தொலை தொடர்பு அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டது.உடனடியாக் அதை தயா வழங்கினார். அதர்கு பதில் சில காலம் கழித்து, " சன் டிரெக்ட் " நிறுவனத்துக்கு அந்த "மாக்சிஸ்" ஒரு பெரும் தொகையை அதாவது " 725 கோடியை மூலதனமாக கொடுத்தது.


இது ஊழல் இல்லையா என்பதே இப்போது கேள்வி. எப்படியோ இந்த ஊழலில் ஒரு " தமிழின விரோதப் போக்கும்" தொடர்ந்து அந்த குறிப்பிட்ட மாறன் குடும்பத்தாரால் செய்யப்பட்டது என்பது புரியப்படவேண்டும். அதன் பிறகே " தமிழ் முதலாளிகளாக" எழுகின்ற நாடார் சமூகத்தின் பிரதிநிதியாக " ராஜாத்தியும், கனிமொழியும்" தோன்றுகிறார்களே என்ற ஆத்திரத்தில் அவர்களையும் அழிக்க தனது நச்சு ஆயுதங்களை அந்த " குடும்பம்" பயன்படுததியது. எல்லாமே இப்போது " பூமராங்" என்று திருப்பி அடிக்கிறது. சோனியா கைவிட்டு விட்ட நிலையில், சீ.பி.ஐ. தாய்வை மட்டுமா உள்ளே தள்ளும்? கலாவும், மனிவியும் என்ன ஆவார்கள்?

Wednesday, June 1, 2011

சிங்கள வணிகர்களின் கைக்கூலியா கருணா?

வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் பகுதிகளில், சிங்களவன் குடியேற்றம் எப்படி சரி? தமிழர் பகுதி கடைகளை சிங்களவன் ஆக்கிரமிப்பு செய்வது எப்படி முறை? நல்லூர் முருகன் கோவிலில் கூட , வணிகம் செய்ய சிங்களவன் நுழையலாமா? இது தமிழரின் வாழ்வியல், பண்பாட்டு, நடைமுறைகளுக்கு ஆபத்தல்லவா? கோவிலை புனிதமாக என்னும் தமிழரின் பண்பாட்டிற்கு இழுக்கு அல்லவா? இப்படி உலகத் தமிழர் அனைவரும் குரல் எழுப்பும் வேளையில், ஒரு துரோகியின் குரல் மட்டும் வேறுபட்டு கேட்கிறது.


கொழும்பு நகரில் இதுவரை தொண்ணூறு விழுக்காடு தமிழ் முஸ்லிம்கள் வணிகம் செய்து வந்தனர். போருக்கு பிறகு சிங்களம் அந்த முஸ்லிம் தமிழர்களை விரட்டி விட்டு, சிங்கள வணிகர்களால் நிரப்பி வருகிறது. இப்போது கொழும்பு நகரில் அறுபது விழுக்காடுதான் முஸ்லிம் தமிழர்கள் வணிகம் செய்கிறார்கள். இதை எதிர்த்து தமிழர்கள் குரல் கொடுத்தால், அதற்கு விரோதமாக ஒரு தமிழர் துரோகி, குரல் எழுகிறது. அந்த குரல், "கொழும்பில் தமிழர்கள் வணிகம் செயயலாம் என்றால், வடக்கில் ஏன் சிங்களர்கள் வணிகம் செய்யக்கூடாது" என்று வினவுகிறதாம். அந்த பெரிய துரோகக் குரலுக்கு சொந்தக்காரர்தான் " கருணா " என்ற துரோகி.

ஒன்று செய்யலாம். வடக்கு கிழக்கிலிருந்து சிங்களர்களை கருணாவே விரட்டிவிடு. கொழும்பிலிருந்தும் தமிழர்களை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். சரிதானே. உன் இனத்துடன் வாழை முடியாது என்பதற்காகத்தானே விடுதலை கேட்கிறோம்.

தன்வினை தன்னைசுடும். ஓட்டப்பம் வீட்டைசுடும்--அறிவாலயம் முனகல்.

நாலாவது வன்னிப்போரை நடத்துவதிலும், தமிழினத்தை அழிப்பதிலும் அவர்களுக்குள் இணைப்பு இருந்தது. ஆனால் அதன்பிறகு, அவர்கள் தங்களுக்குள்ளே "பனிப்போர்" நடத்தத் தொடங்கினர்.அதுவே " பழிப்போர் " ஆக மாறியது. ஒருவரை ஒருவர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தாக்கிக் கொண்டனர். குடும்பக் கழகத்திற்குள்ளே இந்த" கூத்து " நடந்தது. குடுமத் தலைவர் அவ்வப்போது, "பலியாடுகளுக்கு" வக்காலத்து வாங்கி வந்தார்." பலியாடுகள் " இரண்டும், " பட்டி" யில் அடைக்கப்பட்டன. " ஆடுகளைப் பார்க்க " ஊடக பெருச்சாளிகள், தங்கள் குடும்ப " ஓநாய்களை" அனுப்பி வைத்தன. ஓநாய்களும் பறந்து சென்று அங்கே " பட்டியிலிருக்கும் " ஆடுகளை, அதிலும் பெண் ஆட்டை பார்த்து, பார்த்து கண்ணீர் விட்டன.

மனதிற்குள் " பலியாடுகள் மூன்றும்" பழிவாங்கிய பெருச்சாளிகளை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தன. "சமயம் உங்களுக்கும் வரத்த்தானே செய்யும்" என்று பலியாடுகளும், தாய் ஆடும் கருவிக் கொண்டன. "பாரம்பரிய முதலாளி" விடுவதாய் இல்லை. எழு ஆண்டுகளுக்கு முன்னால் " இளைய பெருச்சாளி" இலாக்க வாங்கியபோது, போட்டியில் தோற்றத்தை மறந்து விடவில்லை அந்த முதலாளி. அதை அந்த " குடும்பத் தலைவரிடம்" போட்டுக் கொடுத்துத் தானே இலாகாவையே பறிக்க முடிந்தது. இப்போது தனக்கு பொருள் குவித்தவர்கள் " பலி ஆடுகளாக" " பட்டி" யில் அடைக்கப் பட்டதற்கு " பழி வங்க" அந்த "பாரம்பரிய முதலாளி" காய் நகர்த்த மாட்டாரா?

வசமாக மாட்டிக் கொண்டனர் " பெருச்சாளி சகோதரர்கள்". எல்லா ஊடகங்களிலும் "எச்சரிக்கை மணி" அடித்து விட்டார்கள். அடுத்து " பெருச்சாளி சகோக்களுக்கும்" தலைநகரிலேயே " பட்டி" தயாராகி விடும். இது மேலிடக் கட்டளையாம். இவர்கள்தானே " நாலு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் " அச்சிலும், காட்சியிலும்" அமப்லப்படுத்தியவர்கள். அதன்மூலம் " போட்டியாளர்களை " முதல் பலி" கொடுக்க ஏற்பாடு செய்தவர்கள். இப்போது, " ஆட்டை கடித்து, மாட்டை அக்டித்து, மனிதனை" கடிக்க அந்த மேலிடம் வருகிறதே. " வினை விதைத்தவன் வினை அறுப்பான்" " திணை விதைத்தவன் திணை அறுப்பான்" பட்டினத்தார் சொன்னார்- " ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" இதுதான் இப்போது " அறிவாலயத்தின் அகமகிழ்வு"

Tuesday, May 31, 2011

ரணில் என்ன டில்லியின் அணிலா?

அணில் அன்றைய காலத்தில் ராமர் பெருமானுகாக, இந்திய--இலங்கை பாலம் போட, மணல் துகள்களை முதுகில் எடுத்துச் சென்றதாம். இது ராமாயணக் கதை. இந்தியாவை ஆளும் வட இந்தியர்களுக்கும், தமிழ் ஆன்மீகப் பெரு மக்களுக்கும், நம்பிக்கை புராணம். அதனால் " சிங்களம்" அத்தகைய கதை தனது நாளுக்கு பயன்படும் என்றால் பயன்படுத்தத்தானே செய்யும்? ரணில் விக்கிரமசிங்கே முன்னாள் இலங்கலையின் பிரதமர். இந்நாள் இலங்கலையின் எதிர்க் கட்சித் தலைவர். அவர் "இனவெரிப்போரை நடத்திய" மஹிந்த ராஜபக்சேவை எதிர்த்து டேஹ்ர்தலில் களம் கண்டவர். ஆனாலும் மகிந்தாவுடன் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் " சிங்களம்" வெல்ல வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்.


அந்த ரணில் இந்தியா வந்துள்ளார். டில்லி செல்வடஹ்ர்கு முன்பு செனைஒயில் இரவு வந்து இறங்குகிறார். விமான நிலையத்திலேயே நேர்காணல் கொடுக்கிறார். அதற்கான ஆவசியம் யாருக்கும் தெரியாது. அதில் " ராஜபக்சேவை போர் குற்றவாலி என கூண்டிலேற்ற முடியாது" என்று " கொளுத்திப் போட்டுவிட்டு" போய்விடுகிறார் அது பற்றி எரியும் என்பது அவரது எண்ணம். " இலங்கை தமிழர்களது மறு குடியமற்ப்புக்கு, இந்தியா உதவப் போகிறது" என்ற மாயையும் மீண்டும் அரங்கேற்றினார். முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பேன் என்றார். டில்லி செல்கிறேன் என்றார். ரணிளது நடவடிக்கைகள், இலங்கையில் அவரது நடவடிக்கைகளைக் காட்டிலும் மோசமா ஒன்றாக தெரிகிறது. இலங்கையில் அவர் கட்டாயமாக மகிந்தா அரசாங்கத்திற்கு எதிராக பேசவேண்டும். அப்போதுதான் எதிர்க் கட்சி என்ற அந்தஸ்து அங்கே கிடைக்கும். தவிர அங்கே ராஜபக்சே அணிலது நண்பர் பொன்சேகாவை கைது செய்து சிறையில் வைத்துள்ளார்.


அதனால் ரணில் இந்திய அரசு பேசச் சொன்னதை எல்லாம் இலங்கையில் பேச முடியுமோ என்னவோ, இந்தியாவில் பேசலாம் என்பதால்தானோ என்னவோ, சென்னை விமான நிலையத்தில் இறங்கியவுடன் பேசியிருக்கிறார். இன்று அதிகாலை டில்லி செல்பவர் என் இரவிலேயே விமான நிலையத்தில் ஊடகவியலாலட்களிடம் பேச வேண்டும்? அதுவும் தமிழ் மக்கள் "ராஜபக்சேவிற்கு போர் குற்ற விசாரணை நடக்கப்போகிறது" என்று நம்பிக்க் கொடிருக்கும் வேளையில் பேச வேண்டும்? அந்தப் பேச்சில் என் " தமிழ்மக்களின் அந்த நம்பிக்கையை உடைக்கும் ரீதியில் பேச வேண்டும்? ஏதோ சட்ட விளக்கத்தை அளிப்பதுபோல, " அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில்" ராஜபக்சேவை கூடிலேற்ற முடியாது ஏறு என் சொல்லவேண்டும்? அதுவும் ஒரு " அனைத்து நாட்டு விதியை " சுட்டிக் காட்டி என் சொல்லவேண்டும்?

அனைத்து நாட்டு நீதிமனரத்திர்கான" அனைத்து நாட்டு ஒப்பந்தத்தில் இலங்கை கைஎழுத்துய் போடவில்லை என்பது, இப்போது சொல்வதால், ராஜபக்சேவை காப்பாற்றுகிறோம் என்பது ரணிலுக்கு தெரியாதா? அப்படியிருந்தும் தனது எதிரி ராஜபக்சேவை காப்பாற்ற என் அப்படி பேச வேண்டும்? இவாறு ராஜபக்சேவை காப்பாற்றும் நோக்கம் இந்திய அரசுக்கு மட்டுமே இருக்கிறது. அதனால் இந்திய அரசுதான் ரணிலுக்கு இந்த வசனத்தை சொல்லிக் கொடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அதன்மூலம் இந்திய அரசு, தமிழகச் சூழலில் எழும்பியிருக்கும் ஒரு நம்பிக்கையான " ராஜபக்சே கூடிலேற்றப் படுவார்? எண்பதை சிதைப்பதற்கு உதவும் என்று மத்திய அரசு நினைக்கலாம். அதன்மூலம் அத்தகைய முழக்கத்தை எழுப்பிய செல்வி.ஜெயலலிதாவை திசை திருப்பி அவர் கேட்ட, " அனைத்து நாட்டு நீதிவிசாரணை மூலம் மத்திய அரசு தன்னை நிரூபிக்க வேண்டும்" என்ற முழக்கத்திளிருந்து தமிழக முதல்வரை திசை திருப்பிவிடலாம்.


மேற்கண்ட முயற்சிகள் அணிலை அடையாளம் காட்டிவிட்டன. டில்லிக்கு அணில் எப்போதுமே விசுவாசமான ஆள் என்பதில் சந்தேகமில்லை. டில்லியில் இரண்டு நாள் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில் செல்வி.ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடுக்க அழைக்கப் பட்டுள்ளார் என்று தெரிகிறது. அணில் கூறிய, " அனைத்து நாச்ட்டு குற்றவியல் நீதிமன்றம்" ஒப்பந்தந்த்தில் இலக்கை கையெழுத்துப் போடவில்லைதான். கையழுத்துப் போடாத ஒரு நாடு தான் அந்த குற்றங்களை ஏற்றுக் கொண்டு, தானகவே ஒரு நீதிவிசாரனைக்கும் வரலாம். இலங்கை அப்படி வராது என்பது அறிந்த செய்தி. அலல்து ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளேயே அந்த குற்றங்களுக்கான விசாரனையி நடத்துகிறேன் என்று கூறலாம். அதை இலங்கை கூறிவிட்டது. அதை உலக நாடுகள் நம்புவதை இல்லை.



ஐ.சீ.சீ. என்ற " அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம்" ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்துப் போடவில்லை. ஆனால் " ஐ.நா. சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தை" அது கையெழுத்துப் போட்டுள்ளது. அதை " ஐ.சீ.எ. சீ." என்ற அந்த ஒப்பந்தத்தில் கையழுத்துப் போட்ட இலங்கை அதிலேயே குற்றம் சாட்டப் படலாம். அதுபோல, ஐ.சீ.எக.சோ.க.ரை. என்ற, " அனைத்து நாட்டு பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்" என்ற ஒப்பந்த்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. அதைவைத்து, " இனச் சுத்திகரிப்பு" செய்யும் அரசை குற்றம் சாட்டலாம். பவுத்த பண்பாடுகளை, சைவ பண்பாடுகளின் மீது திணிப்பதை குற்றம் சாட்டலாம்.ஆகவே ஒன்றில் தப்பினாலும், இன்னொன்றில் பிடிபடலாம். தவிர, ஐ.சீ. சீ.பொ ரை" என்ற " அனைத்து நாட்டு குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், " சுய நிர்ணய உரிமை பற்றி" பேசுகிறது. அதுவே " தமழர் உரிமைகளை மீட்டெடுக்க உதவ" முடியும்.


அதேசமயம் தமிழக முதல்வர் ஜெயலலிதா " இன அழிப்பில் ஈடுபட்டதாக மத்திய அரசு மீது ஒரு சந்தேகம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. அதை வலுப்பெறச் செய்கிற பாணியில் மத்திய அரசு செயல்படக் கூடாது " என்று கூறியுள்ளார். " ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு கூண்டிலேற்ற மத்திய அரசு முயலவேண்டும்" என்று கூறியுள்ளார். அதற்காக " பொருளாதார தடைகளையும் கூட இலங்கை மீது விதிக்கலாம்" என்றும் கூறியுள்ளார். இவை எல்லாமே, மேற்கண்ட இலங்கை கைஎழுதிட்டுள்ள , ஒப்பந்தங்களின் மூலமாக செய்யமுடியும். ஆகவே " குற்றம் இழைத்த இந்தியா அரசே, நீ உன் முகத்தை மாற்றி அமைத்துக் கொள்" என்று ஜெயலலிதா டில்லியை கேட்பதுபோல உள்ளது. ஆகவே அவர் இந்த ரணில் மூலம் டில்லி செய்ய நினைக்கும் " அணில் வேலையால்? பதிக்கப் படுவாரா என்று தெரிய வில்லை. இந்தய ராசும், இலங்கை அரசும் செய்யும் " தமிழர் விரோத சாதிப் பாலம்" கட்ட ரணில் ஒரு அணில் போல அனுப்பப் பட்டுள்ளாரா?

Saturday, May 28, 2011

முள்ளிவாய்க்கால் ஆவிகள் மு.க.வை சுற்றுமா? அறிவாலயம் அலறல்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு படுகொலைகளை நடத்தி, இரண்டாண்டுகள் கழிந்து விட்டன. நிராயுத பாணியான தமிழர்களை, " போராளிகள்" என்று ராஜபக்சே அவ்ர்நிக்கும் போதே, அவர்களை படுகொலை செய்வதற்காகத்தான் அப்படி சொல்கிறான் என்று தமிழ்நாட்டில் இருந்த பி.யு.சீ.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகம் கூறியது. அதேபோல உடனடியாக மனித உரிமை கண்காணிப்பு என்ற ஆசியா அளவிலான ஆர்வலர்கள் கூறினார்கள். இவையெல்லாம் தமிழ்நாடு அரசின் செவிகளுக்கு கேட்காமல் இல்லை. அனைத்தையும் கேள்விப்பட்டும், டில்லிக்காரர்களிடம் அதுபற்றி கேட்கவில்லை. மாறாக எங்கள் கழகத்திற்கு எவ்வளவு அமைச்சரவை தருவீர்கள்? எந்த, எந்த அமைச்சரவை தருவீர்கள்? என்று மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தோம் என்று இப்போது அறிவாலயம் எண்ணிப் பார்க்கிறது.

மனித உரிமையாளர்கள் கூறியபடியே ராஜபக்சே அப்பாவி தமிழர்களை, நிராயுத பாணியான முதியவர்களை, குழந்தைகளை, பெண்டிரை, வரிசையாக படுகொலை செய்தான். உலக அரங்கில் போர்களில் தடை செய்யப்பட்டுள்ள, " கொத்துக் குண்டுகளை" தமழ் மக்கள் மீது எறிந்தான். பயன்படுத்தவே கூடாத " ரசாயன குண்டுகளை" தமிழரை அழிக்க மட்டும் பயன்படுத்தினான். இந்த சிங்க கொடியவனின் கர்ண கொடூரமான " இன அழிப்பு" போரை கண்டு கொள்ளாமல், காங்கிரஸ் அரசிடம் வாதாடி, நமது " குடும்பத்திற்கு" எந்த, எந்த அமைச்சரவையை ஒதுக்குவார்கள் என்றே எனிஒம் என்று இப்போது அந்த குடும்பத் தலிவன் எண்ணிப் பார்க்கிறார்.

" கொள்ளை அடிப்பதற்கு" தகுந்த அமைச்சரவையை பெற்றுவிடத் துடித்த அப்பனும், மகளும், இப்போது அதுபற்றி எண்ணிப் பார்க்க நேரம் கிடைத்துள்ளது. இரண்டாண்டுகளுக்குல்லேயே அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்து விட்டது. என் என்றால் "ஊருக்குதான் உபதேசம் உனக்கில்லையடா" என்ற மொழிப்படி, பகுத்தறிவு பேசுவதும், பெரியார் பேசுவதும் தொண்டர்களை, தமிழர்களை ஏமாற்றத்தானே தவிற, தான் பின்பற்ற அல்ல, தனது குடும்பம் பின்பற்ற அல்ல என்று தெளிவாக அந்த குடும்பத் தலைவன் இருந்தார். அதனால்தான் இன்று, அதே " முள்ளிவாய்க்கால் படுகொலை நாளான" மே 18 கடந்து இரண்டே நாளில் இருபதாம் நாள், தனது மகள் " கனிமொழி" க்கு கைது நடவடிக்கை வந்தவுடன் ஆடிப்போய் விட்டார் அந்த "பகுத்தறிவு பகலவன்" இது " ஆவிகளின் ஆட்டம்தான்" என்று அறிவாலத்தார் அலற வழி வகுத்தது.


அதே நாளில் , இன்னொரு நிகழ்வு. ஜாபர் செட் என்ற ஒரு பெரும் அதிகாரி. அந்த மனிதர் இந்த உளவுத் துறை அதிகாரி, தமிழ்நாட்டில் " முட்டை ரவி, மணல் மேடு சங்கர், குற நடராஜ்" போன்ற பல கைதிகளை " மோதல் சாவுகள் " என்ற பெயரில் படுகொலைகள செய்தவர். அதே " ரத்த வெறியோடு" ராஜபக்சே செயல்படும்போது, இவர் தனது கூட்டாளியை அங்கே இனம் கண்டுகொண்டார். முள்ளிவாய்க்கால் ப்டுகொளைகளை அரங்கேற்றிய இந்திய அரசின் ஆலோசகர்களான " எம்.கே.நாராயணனும், சிவசங்கர் மேநோனும்" இந்த ரத்த வெறியில் நேரடி பங்குதாரர்கள் என்பதால், அவர்களது கைப்பாவையாக இந்த ஜாபர் செட் மாறினார். இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு தமிழ்நாட்டில் எதிரொலி வரக் கூடாதே என்று சிரமப்பட்டு, அதை அடக்கி ராஜபக்சே-கலைஞர்-சோனியா கும்பலிடம் நற்பெயர் பெற்றுக் கொண்டவர் இந்த ஜாபர் செட்.


ஜாபரின் கனவுகளை பொய்யாக்க " முத்துக் குமார்" உயிராயுதம் ஏந்தினார். அதனால் ஏற்படப்போகும் கிளர்ச்சியையும் அடக்குவதில் ஜாபர் வென்றார். அதற்காக இலங்கையின் "ஹம்சாவிடம்" பெறுவதை பெற்றுக் கொண்டாலும், தமிழ்நாட்டில் அதன் பலன் களை எதிர்பார்த்து நின்றவர்.அந்த "கொடிய ஜபருக்கும்" புதிய ஆட்சியல் கிடைத்த " மாற்றல் உத்தரவு" அதே மே 18 இல் தான் அரங்கேறியது.அதனால் " மஞ்சள் துண்டு வகையறாக்களுக்கு" கிலி பிடிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது வேண்டுமானால், " ஆண்டவனே, உனக்கு கண்ணே இல்லையா" என்று மஞ்சள் துண்டுகளை தூற எறிந்திருக்கலாம். ஆனால் என் இந்த குறிப்பிட்டா நாள் " மகளுக்கும், ஜபருக்கும்" ஒரே மாதிரி திருப்பி அடிக்கிறது என்று அந்த "குடும்பம்" கலங்காமல் இல்லை. ஏற்கச்னவே குசும்பமே பகுத்தறிவு பேசுபவரை புறந்தள்ளி, கோவிலுக்கு சென்று வந்த கதைகளும், திருவாரூர் கோவில்களுக்கு விசேடங்களை செய்து வந்த கதைகளும் ஏராளமாக இருக்க இப்போது மட்டும் இந்த குறிப்பிட்ட நாள் நின்று அடிக்கிறது என்று என்ன மாட்டார்களா என்ன?
.

இதை " அறிவாலயத்தின்" மொழிகளில் சொல்;லப் போனால், " முள்ளிவாய்க்கால் ஆவிகள்" நின்று அடிக்கிறது. துரத்தி, துரத்தி அடிக்கிறது என்றுதான் எண்ணுகிரார்கலாம். சரியான பகுத்தறிவு குடும்பம் அய்யா.

நளினி மூன்றெழுத்து, கனிமொழி நாலெழுத்து.

கனிமொழிக்கு " பிணை" விடுதலை வேண்டும் என்பது இன்று அவரது வழக்கறிஞரும், அதற்கான வியாக்கியானம் செய்யும் களிஞரும் எடுத்து வைக்கும் வாதங்களை சற்று கவனியுங்கள்." கனிமொழி ஒரு பெண்"" கனிமொழி படித்தவர்" " கனிமொழியின் மகன் சிறிய வயது கொண்ட ஆதித்யா." "மகனை கவனிக்க தாய் வெளியே இருக்க வேண்டும்" " கனிமொழி பொது வாழ்க்கையில் பல நன்மைகளை மக்களுக்கு செய்துவருபவர்." இத்தனை காரணங்களை கண்கலங்கி பேசுகிறார் கலைஞர்.


இதே கலைஞர் தமிழக முதல்வராக இருக்கும் போது, " நளினி விடுதலை" பற்றி மக்கள் மத்தியல் ஆர்வலர்கள் கூச்சல் போட்டார்கள். கலைஞர் அதுபற்றி தனக்கு சம்பந்தம் இல்லததுபோல நடந்துகொண்டார். நளினி தன்னை விடுவிக்கும்படியும், தான் சிறை புகுந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன என்பதையும் சொல்லி வேண்டுகிறார். அவரது " மரண தண்டனை"கூட சோனியா மனது வைத்து எழுத்டியதால் " ஆயுள் தணடனையாக" குறைக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டு ஆயுள் தண்டனை கைத்டியகா இருக்கும் நளினியை விடுவிக்க வேண்டியது மாநில அரசு. நன்னடத்தை காரணமாக சிறைத்துரையின் அப்பிப்பிராயத்தை பெற்று, மாநில முதல்வர் அவரை விடுதலை செய்யலாம். ஆனால் அவரை கலைஞர் விடுதலை செய்யவில்லை.

" நளினி ஒரு பெண்", " நளினி சிறையிலேயே மேலும் படித்தவர்" " நளினி தனது தாயின் மூலம் ஒரு செவிலியர் வாழ்கை எவ்வளவு சமூக சிந்தனைகளை பெற்றிருப்பார்? நளினிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆதிரை அவரது பெயர். அப்பாவும், அம்மாவும் அவருக்கு வெளியே இல்லை. சிறையில் இருவரும் இருக்கிறார்கள். நளினியின் நிலைமை கனிமொழி நிலைமையை விட கொடியது. கனிமொழிக்காவது மகன்தான். நளினிக்கு மகள். இந்த நிலையில் நளினியின் நிலைமை, கனிமொழியின் நிலையை விட கொடியது. ம்தல்வராய் இருந்த கலைஞர் கைக்கு அந்த ஆவணம் வந்த பொது, அவர் நளினிக்கு விடுதலை கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். நளினி மூன்றேழுத்துதானே, கனிமொழி நாலெழுத்து என்று நினைக்கிறாரோ..