Friday, January 7, 2011

13 நாளாக கடலில் தவித்த சென்னை மீனவர்கள்

10 நாளாக கடலில் தவித்த சென்னை மீனவர்கள்மத்திய அரசு படையின் அலட்சியம் கடந்த 4.12.2010 அன்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து காலை கூN02 ஊகீஆஇ412 என்ற மீன்பிடி ஃபைபர் படகு ரமேஷ், ராஜேஷ், ஜெயக்குமார், தேசப்பன் ஆகிய நான்கு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்பொழுது அவர்கள் சென்ற ஃபைபர் படகின் இன்ஜின் பழுதாகி அவர்களால் சரிசெய்ய முடியாமல் நடுக்கடலில் செய்வது அறியாது தங்களுக்கு உதவிபுரிய அருகில் எந்த படகும் இல்லாததாலும், தங்கள் கைபேசி தொடர்புகொள்ள முடியாத தூரத்திற்கு நீர் ஓட்டத்தின் காரணமாக ஃபைபர் படகு இழுத்து செல்லப்பட்டதால், யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தங்கள் படகில் அருந்த நங்கூரத்தை இட்டனர். ஆனால் கடலின் ஆழம் அதிகமாக இருந்ததால் காற்றின் வேகம், நீரின் ஓட்டம், திடீரென்று வீசிய புயல் போன்ற காரணங்களால் அவர்கள் செலுத்திய நங்கூரம் திடீரென்று அறுந்து சென்றுவிட்டது. தாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தங்களுடைய தொழில் அனுபவத்தைக் கொண்டு தங்கள் படகின் இன்ஜினைக் கயிற்றில் கட்டி தண்ணீரில் இறக்கினார்கள். அதிகமாக வீசிய புயலால் இன்ஜினும் அறுந்து சென்றுவிட்டது. உடனே தங்களை காப்பாற்ற யாரவது வருவார்கள் என்ற நிலையில் தங்களுடைய படகிலேயே வீசிய புயலில் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு அமர்ந்து இருந்தனர். படகானது சென்னையில் இருந்து தெற்கு நோக்கி கடல் நீரோட்டத்தின் காரணமாக ஆழ்கடலில் சென்று கொண்டு இருந்தது. தாங்கள் எடுத்துச் சென்ற உணவுகள் ஒரிரு நாட்கள் மட்டுமே இருந்தன. அதன்பிறகு தங்களை பாதுகாத்துக்கொள்ள கடல்நீரின் (உப்பு நீர்) குடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். 14.12.2010 அன்று காலை இலங்கை நாட்டிற்கு நேர் எதிரே ஆழ்கடலில் டியூனா மீன்பிடித்துக் கொண்டிருந்த தூண்டில் விசைப்படகு ஒன்று தொழில் செய்துகொண்டு இருந்ததை அறிந்து தங்களால் முடிந்தவரை தங்கள் கை வசம் இருந்த துணி மற்றும் கைகளால் அசைத்து அழுகுரலை எழுப்பி அவர்களின் பார்வை தங்கள் மேல் படும்படி செய்தனர். அந்த விசைப்படகு அவர்களைக் காப்பாற்றியது. அவ்விசைப்படகு நீர் கொழும்பின் துறைமுகத்தின் விசைப்படகு வெர்னால்டு ஃபர்னான்டோவுக்கு சொந்தமானது. அந்த விசைப்படகு அவர்களை காப்பாற்றியதும், சென்னையில் உள்ள அவர் நண்பர் தயாளனிடம் தொலைபேசியில் தகவல் கொடுக்கப்பட்டு, அதன் பிறகு அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், மீன்வளத்துறை அமைச்சருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. படகு காணாமல்போன, டிசம்பர் 14ம் தேதியே மத்திய அரசின் கடலோர காவல்படைக்கு தெரியப்படுத்தியும், அவர்கள் எந்தவொரு தீவிர முயற்சியும் எடுக்காமல் ஹெலிகாப்டரில் தாங்கள் தேடியதாகக் கணக்கு எழுதி வைத்துவிட்டு, வழக்கம்போல் தமிழ் மீனவர்களின் நெருக்கடிக்கு பாராமுகம் காட்டிவிட்டனர். இதனாலேயே, சென்னை மீனவர்களுக்கு மத்திய அரசின் மீது எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது என்று இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் தயாளன் ஆத்திரத்தோடு கூறினார். மேற்படி காணாமல்போன விசைப்படகு திருக்கோணமலை என்ற துறைமுகத்திற்கு 17.12.2010 அன்று காலை சென்றடைந்தது. அதன் பிறகு இலங்கை கடற்படையால் அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட்டு அவர்கள் தற்சமயம் இலங்கையில் இருக்கிறார்கள். இந்திய மீனவர் சங்கத்தலைவர் தயாளன், தனக்கு தெரிந்த நண்பர்கள் இலங்கையிலுள்ள நீர் கொழும்பில் இருப்பதனால், அவர்களை தொடர்புகொண்டு காணாமல் போனவர்கள் பற்றி கேட்டறிய முடிந்தது. தமிழக அரசாலோ, மத்திய அரசாலோ என்ன முடிந்தது?

No comments:

Post a Comment