Friday, January 7, 2011

இலங்கையை,

முன்னர் தென்ஆப்ரிக்கா எவ்வாறு நிறவெறி நாடாக இருந்ததோ அதேபோல, இப்போது இலங்கை சிங்களபௌத்த இனவெறி நாடாக இருக்கிறது. கடந்த ஆண்டு முடிவடைந்த உள்நாட்டு போரில் இலங்கை அரசு பல்வேறு போர்க் குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளதாகவும் அவற்றை சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் உலகம் முழுக்க வலுத்து வருகின்றன. அதனால் கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாட்டுக் குழுவான, ஐ.சி.சியும், பி.சி.சி.ஐயும் நடத்துகின்ற கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாய்ப்பளிக்கக்கூடாது. மேலும், 20/20யில் இணைந்துள்ள கிரிக்கெட் அணிகள் இலங்கை ஆட்டக்காரர்களையும் அதில் சேர்த்து கொள்ளக்கூடாது. தென்ஆப்ரிக்க வெள்ளையர் அரசு நிறவெறிக் கொள்கையைக் கடைபிடித்து அந்நாட்டின் பூர்வீக குடிகளான, கருப்பின மக்களை ஒடுக்கியதுபோல, இப்போது இலங்கை அரசு ஈழத்தமிழர்களை ஒடுக்கி வருகிறது. 30 ஆண்டுகாலமாக நடந்து வந்த போரில், சிங்கள அரசுப்படைகளால் 1 லட்சம் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் மட்டுமே 30 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் போருக்கு பிறகு, 3 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தோராக முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மறு குடியமர்த்தல் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை. மேலும், 14 ஆயிரம் இளைஞர்கள் புலிகள் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், சிங்கள அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் இளைஞர்களைப் பற்றி எந்தத் தகவலுமில்லை. 2009ம் ஆண்டு நடந்த போர்க் குற்றங்கள் பற்றியும் இப்போது சிங்கள அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென உலக சமூகம் கோரிக்கை விடுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் ஆயத்த ஆடைகளுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நிறுத்திவிட்டது. இந்தச் சூழலில் கிரிக்கெட் அமைப்புகள் இந்தப் புத்தாண்டில் இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழின ஆர்வலர்கள் பரப்புரை தொடங்கி விட்டனர்.

No comments:

Post a Comment