Friday, January 7, 2011

சோனியா தி.மு.க.விரகி வைத்த செக்

கலைஞருக்கு சோனியா வைத்த “செக்” இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவரது சென்னை வருகையின்போது, 98வது அகில இந்திய அறிவியல் மாநாட்டை ஜனவரி 3ம் தேதி திறந்து வைத்தார். அதையொட்டி “அடையார் பூங்கா” என்ற கலைஞரின் கனவுத் திட்டத்தையும், திறந்து வைப்பார் என்று முதலில் அறிவித்திருந்தார்கள். அதில் பிரதமர், துணை முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கலந்துகொள்ளும் போது, திமுககாங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது என்பதாக தமிழக மக்களுக்கு அறிவித்துவிடலாம் என்ற கனவையும் சேர்த்தே முதல்வர் தாங்கிவந்தார். அந்தக் கனவிற்கும், கலைஞரின் கனவுத் திட்டத்திற்கும் ஒரு இடி வந்தது. மத்திய சுற்றுச்சூழல் இலாக்காவின் அனுமதி அடையாறு பூங்கா திட்டத்திற்கு இன்னமும் கிடைக்கவில்லை என்பது, பிரதமர் அலுவலகத்திற்கு சொல்லப்பட்டது. அதையொட்டி அந்தத் திறப்புவிழா நிகழ்ச்சியை பிரதமர் அலுவலகம் ரத்துசெய்தது. இந்த மாற்றம் யாரால் வந்தது என்று அறிவாலயம் ஆய்வு செய்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், எப்போதும் திமுக தலைமைக்கு எதிராகவே காய் நகர்த்துகிறார் என்பதாக திமுக எம்பிக்கள் தங்கள் தலைவரிடம் கோள் சொன்னார்கள். ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று திமுக தலைவர் ஆய்வு செய்தார். ராகுல்காந்தி தான், தனக்கெதிராக கருத்துக்களை பரப்புகிறார் என்பது காங்கிரஸ் தலைமை பற்றி கலைஞரின் கணிப்பு. அதனால், ராகுல்காந்தி கோஷ்டியைச் சேர்ந்தவர் தானே, ஜெய்ராம் ரமேஷ் என்று கருணாநிதி வினவினாராம். அதற்கு அவருக்கு வேண்டிய காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் எடுத்துச்சொன்ன செய்தி அறிவாலயம் தலைமையை அதிர்ச்சியடைய செய்ததாம். ஜெய்ராம் ரமேஷ் அன்னை சோனியா கோஷ்டியைச் சேர்ந்தவர் என்றும், ராகுல்காந்திக்கு அவர் மீது அத்தனை பிரியம் கிடையாது என்றும், அந்த திமுக தலைமைக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகர்கள் கூறிய விளக்கம்தான், திமுக தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அப்படியானால், சோனியா காந்தியே திமுகவிற்கு எதிராக காய் நகர்த்துகிறாரா என்ற கேள்வி அறிவாலயம் வட்டாரத்தில் இப்போது சுற்றி வருகிறது. கூட்டணியையும் உடைக்காமல், கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதாகவும் காட்டாமல் சோனியா விளையாடும் விளையாட்டை, திமுக தலைமை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளது. மன்மோகனுடன் நல்லுறவு இருப்பதாக நம்பிகொண்டு இருக்கும் தமிழக முதல்வர், அடையாறு பூங்கா திறப்புவிழா மறுக்கப்பட்டாலும், வருகைப் புரிந்த மன்மோகனுடன் இணைந்திருக்கும் படங்கள், தமிழக மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்பதில் கவனம் எடுத்தது. அதையொட்டியே, ஜனவரி 2ம் நாள் இரவில் முதல்வரும், பிரதமரும் நடத்திய சந்திப்பும், அறிவியல் மாநாட்டில் துணை முதல்வர், பிரதமருடன் கலந்துகொண்டதும் படங்களாக, காட்சிகளாக ஊடகங்களில் வந்துவிட்டது என்ற தற்காலிக அகமகிழ்வில் திமுக தலைமை இப்போது இருக்கிறது.

No comments:

Post a Comment