Friday, January 7, 2011

தமிழ்ப் பெண்ணுக்கெதிராக

தமிழ்ப் பெண்ணுக்கெதிராகதமிழ்ப் பெண்ணை நிறுத்திய ராஜபக்சே
யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் 2010 டிசம்பர் 18ம் தேதி சனிக்கிழமை நடக்கவிருந்த மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கு நடக்கவிடாமல், கடைசி நேரத்தில் 17ம் தேதி வெள்ளிக்கிழமை அனுமதியை ரத்து செய்துவிட்டார் யாழ்ப்பாண நகர மேயர் யோகேஸ்வரி பற்குணம். மே 19க்குப் பிறகு; வடக்கு கிழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம்; என்ன விலை? யார் முன்னேறினார்கள்? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்துவதற்காக கருத்தரங்கு எற்பாட்டாளர்களான கொழும்பு நகரைச் சேர்ந்த ஷெரின் சேவியர் தலைமையிலான ஹோம் ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் எனும் அமைப்பும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிந்தனைக் கூடம் எனும் அமைப்பினரும் டிசம்பர் 3ம் தேதியை அந்த மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பேரா.எஸ்.கே.சிற்றம்பலம், பேரா.வி.பி.சிவநாதன், அரசுசாரா நிறுவனங்கள் குழுமத்தின் செயலாளர் அருட்திரு. ஜே.செல்வராஜா, சி.எஸ்.ஐ.முன்னாள் பிஷப் அருட்திரு.டாக்டர்.எஸ்.ஜெபனேசன், பேரா. எஸ்.கிருஷ்ணராஜா, மட்டக்களப்பு உளத்தியல் நிபுணர் டாக்டர் கடம்பநாதன், டாக்டர் முரளி வள்ளிப்புரநாதன், பேரா.எம்.சின்னதம்பி, பேரா.ஆர்.சிவசந்திரன். எஸ்.ரவீந்திரன், சுடர் ஒளி மற்றும் உதயம் இதழ்களின் முன்னாள் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் வெரைட் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நிஷான் டி மெல் ஆகிய கல்வியாளர்களும் பிரபலங்களும் அந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதாக இருந்தனர். தன்னுடைய ஊழியர்கள் கூட்டத்தை அந்த நாளில் அந்த மண்டபத்தில் நடத்த வேண்டியிருப்பதால், இந்தக் கருத்தரங்குக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது என மேயர் யோகேஸ்வரி பற்குணம் கூறினார். ஆனால், இலங்கையின் அதிகார மட்டத்திலிருந்து வந்த அதிகாரத்துடன் கூடிய வாய்மொழி வலியுறுத்தலால் தான், மேயர் அனுமதியை ரத்து செய்தார் என்று விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment