Friday, January 7, 2011

பொய் சொன்னார் முதல்வர்?

பிரதமரை சந்தித்து விட்டு வந்த கருணாநிதியை சந்தித்த ஊடகத்தாரை அவர் எப்படி ஏமாற்றினார் என்பது ஒரு பெரிய கதை. ஆண்டின் மூன்றாம் நாள் காலையில் ஆளுநர் மாளிகையில் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியே வந்த முதல்வர் கருணாநிதி, தான் முந்திய நாள் ஏன் பிரதமருடன் ஒப்புக்கொண்ட சந்திப்பை ரத்து செய்தார் என்ற கேள்விக்கு, தான் ஒரு கூட்டத்தில் இருந்ததாகவும், அதில் பேச்சாளர்கள் பட்டியல் அதிக நீளமாக இருந்ததாகவும் அதனால் தான் அங்கிருந்து பிரதமரை வரவேற்கவும் சரி, அவரை சந்தித்து பேசவும் சரி செல்லமுடியவில்லை என்று ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளார். வைரமுத்துவின் ஆயிரம் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி பேசி முடிக்கும்போது ஆண்டின் இரண்டாம் நாள் இரவு ஏழரை மணி. விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க முதல்வர் செல்ல வேண்டிய மரபுவழி பணி என்பது இரவு ஏழே முக்காலுக்கு. வைரமுத்து விழா நடந்த லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து விமான நிலையம் செல்ல முதல்வரின் வாகன வரிசைக்கு ஐந்து நிமிடம்தான் எடுக்கும். அதன்பிறகு பிரதமர் ஆளுநர் மாளிகைக்கு வந்தபிறகு முதல்வர் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்ப்பட்ட நேரம் எட்டே காலில் இருந்து எட்டே முக்கால் வரை. அந்த ஆளுநர் மாளிகைக்கும் லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து செல்ல ஐந்து நிமிடம் கூட எடுக்காது. ஆகவே கருணாநிதி திட்டமிட்டு இரண்டு சந்திப்புகளையும் தவிர்த்திருப்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது.ஆனாலும் தனது திடீர் முடிவால் கூட்டணியும் பாதிக்கும், ஆட்சியையும் பாதிக்கும் என்று அறிவுரை கூறிய மகனின் கருத்தை ஏற்று தனது முடிவை மறுபரிசீலனை செய்த கருணாநிதிதான் அடுத்த நாள் அதாவது ஆண்டின் மூன்றாம் நாள் பிரதமரை ஆளுநர் மாளிகையில் சந்தித்திருக்கிறார். அதை அப்படியே ஊடகத்தாரிடம் மறைக்க முயன்று தோற்றுப்போனார் என்பதுதான் அன்று நடந்த கூத்து. இரவு முழுவதும் தெருக்கூத்து நடக்கும் என்று சென்னை சங்கமம் பற்றி அறிவித்த மகளின் சொல்லை, அன்று இரவே ஒரு சிறிய தெருக்கூத்தை நடத்தி கான்பித்திவிட்டார் போலிருக்கிறது அவரது தந்தை.

3 comments:

Anonymous said...

உடல்நலம் சரியில்லை என்று அறிக்கை வெளியிட்டது ஒரு தமாஷ்

Anonymous said...

பத்தி பிரித்து போடவும் வோர்டு வெரிஃபிகேசனை நீக்கி விடவும் கமெண்ட் பொட முடியவில்லை..settings-comments-word verification -off

nesan said...

kavithaiku pooi azhaku

Post a Comment